ஞாயிறு, 12 அக்டோபர், 2014

கரும்புள்ளி பயிற்சி
கரும்புள்ளி பயிற்சி மிக குறைந்த எண்ணிக்கையுடைய மனிதர்களால் மட்டுமே செய்யப்படுகிறது.
இப்பயிற்சியில் நம்முடைய உயிராற்றல் சக்தி செலவாகிறது
இப்பயிற்சி ஒருவரை அவருடைய விருப்பம் இல்லாமல் தன்னுடைய விருப்பத்திற்கு இணங்க வைப்பதற்காகவும் மற்றவர்களை வைத்து தன்னுடைய காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் மற்றவர்களை தனக்கு அடிமையாக வேலை வாங்குவதற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது
இது பிளாக் மேஜிக் விச் கிராப்ட் போன்ற செயல்கள் செய்பவர்களின் ஆரம்ப நிலை பயிற்சியாக இருந்து வருகிறது மனிதர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வர பிளாக் மேஜிக் விச் கிராப்ட் போன்ற பலன்கள் உடனே கிடைத்து விடுகிறது
இந்த பயிற்சியை செய்பவர்கள் சக்தி அவர்கள் உள்ளேயே இருக்கும் வெளியே சென்று இயங்காது கரும்புள்ளி பயிற்சி மூலம் கிடைத்த சக்தியை சோதனை செய்ய பல்வேறு பரிசோதனை முறைகள் உள்ளன
கரும்புள்ளி பயிற்சியின் ரகசியத்தை கீழ்க்கண்டவாறு சொல்லலாம்
மந்திரம் என்பது கரும்புள்ளி பயிற்சி அட்டை
யந்திரம் என்பது பயிற்சி செய்பவர்
தந்திரம் என்பது தான் சூட்சுமம்
கரும்புள்ளி பயிற்சி செய்வதால் கீழ்க்கண்ட மாற்றங்கள் ஏற்படுகிறது
கரும்புள்ளி பயிற்சி செய்பவர்கள் உடலில் எதிர்மறை சக்திகள் அதிகரிக்கும் மனது எப்பொழுதும் வருத்தமுடன் இருப்பது போலவே தோன்றும் கவலையாக இருப்பதற்குரிய அறிகுறிகள் முகத்தில் தோன்றும்;
கரும்புள்ளி பயிற்சி செய்பவர்கள் சாலையில் நடந்து செல்லும் போதும் வீட்டில் சில நடவடிக்கைகளில் ஈடுபடும் போதும் அடிக்கடி தவறி விழுந்து விடுவார்கள் சிறுசிறு விபத்துக்கள் கூட ஏற்பட சந்தர்ப்பங்கள் உண்டு
குடும்பத்தில் இருந்து கொண்டு இந்த பயிற்சியை செய்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது
கரும்புள்ளி அட்டை செய்யும் விதம்
1 பாஸ்போர்ட் கார்ட் அளவு உள்ள ஒரு வௌளை அட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும்
2 அதன் மையத்தில் ஒரு 25 பைசா வைத்து அதனைச் சுற்றி ஒரு வட்டம் வரைய வேண்டும்
3 வரையப்பட்ட அந்த 25 பைசா வட்டத்திற்குள் கருப்பு நிற மையினால் வர்ணம் அடிக்க வேண்டும்
கரும்புள்ளி பயிற்சி செய்வதற்கு உரிய கரும்புள்ளி அட்டை தயாராகி விட்டது
கரும்புள்ளி பயிற்சி செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை
1 கரும்புள்ளி பயிற்சியை அதிகாலை 03.00 மணியிலிருந்து 08.00 மணிக்குள் செய்ய வேண்டும்
2 அதிகாலை 03.00 மணியிலிருந்து 05.00 மணிக்குள் செய்வது உத்தமம்
3 அதிகாலை 08.00 மணிக்கு மேல் கண்டிப்பாக கரும்புள்ளி பயிற்சி செய்யக் கூடாது
4 கரும்புள்ளி பயிற்சியை தனியாக அமர்ந்து தனி அறைக்குள் தான் செய்ய வேண்டும்
5 கரும்புள்ளி பயிற்சி செய்பவர்கள் பயிற்சியை ஆரம்பிப்பதற்கு முன் தன்னைச் சுற்றி காப்பு மந்திரம் போட்டுக் கொள்ள வேண்டும்
6 காப்பு மந்திரம் தெரியாதவர்கள் திக்கு கட்டு உடல்கட்டு போன்ற கட்டு மந்திரங்களை தன்னைச் சுற்றி கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும்
கரும்புள்ளி பயிற்சி முறை 1
1 முதலில் கரும்புள்ளி அட்டையை தரையில் சுவரில் சாய்த்து வைத்துக் கொள்ள வேண்டும்
2 கரும்புள்ளி அட்டையிலிருந்து 1 அடி அல்லது ஒன்றரை அடி துhரம் தள்ளி அமர்ந்து கொள்ள வேண்டும்
3 கரும்புள்ளி அட்டையை தொடர்ந்து 2 நிமிடங்கள் கண்ணை இமைக்காமல் கரும்புள்ளியை மட்டுமே பார்க்க வேண்டும்
4 பிறகு கண்ணை மூடி உடலின் உள்ளே கவனிக்க வேண்டும்
5 மேற்கண்ட செயல்முறையை மூன்று முறை அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்
கரும்புள்ளி பயிற்சி முறை 2
1 முதலில் கரும்புள்ளி அட்டையை தரையில் சுவரில் சாய்த்து வைத்துக் கொள்ள வேண்டும்
2 கரும்புள்ளி அட்டையிலிருந்து 1 அடி அல்லது ஒன்றரை அடி துhரம் தள்ளி அமர்ந்து கொள்ள வேண்டும்
3 தியானம் தெரிந்தவர்கள் நெற்றிக்கண்ணில் தனது நினைவை செலுத்த வேண்டும் நெற்றிக் கண்ணில் உறுத்தல் வரும் வரை காத்திருக்க வேண்டும்
4 பிறகு கரும்புள்ளி அட்டையை தொடர்ந்து 20 நிமிடங்கள் கண்ணை இமைக்காமல் கரும்புள்ளியை பார்க்க வேண்டும்
5 கண்ணை மூடி உடலின் உள்ளே கவனிக்க வேண்டும் அவ்வாறு கவனிக்கும் போது நெற்றிக்கண்ணில் மனதை நிறுத்தி உள்ளே கவனிக்க வேண்டும்
கரும்புள்ளி பயிற்சி உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக செய்யப்பட்டாலும் அதில் உள்ள சிறந்த இரண்டு முறைகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது
இந்த பயிற்சியை தொடர்ந்து செய்துவர நமது உடலில் சக்தி படிப்படியாக உயர்ந்து கொண்டே இருக்கும் வளர்ந்த சக்தியை ஒவ்வொரு படிநிலையிலும் பரிசோதனை செய்ய சில செயல்முறைகள் உள்ளன
முதல் படிநிலையில் அடைந்த சக்தியை சோதனை செய்ய கீழ்க்கண்ட பரிசோதனையை செய்து பார்க்கலாம்
சோதனை முறை
நாம் பேருந்திலோ இரயிலிலோ பயணம் செய்கிறோம் அவ்வாறு பயணம் செய்யும் போது நமக்கு முன்னால் முதுகை காட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும் ஒருவரை எடுத்துக் கொள்ள வேண்டும்
அவருடைய முதுகு பக்கத்தை தொடர்ந்து பார்த்து நம்மை திரும்பி பார்க்க வேண்டும் என்று தொடர்ந்து நமது மனதுக்குள் சொல்லி வர வேண்டும் அவ்வாறு தொடர்ந்து சொல்லி வரும்பொழுது அவர் திரும்பி நம்மை பார்ப்பார்
இச் சோதனை முதல் படிநிலையில் வளர்ந்த சக்தியை அறிவதற்காக பயன்படுத்தப்படுகிறது
இதனைத் தொடர்ந்து பல்வேறு நிலைகளுக்கான பல்வேறு சோதனைகள் உள்ளன
கரும்புள்ளி பயிற்சி முறை தவறானவர்களால் தவறான காரியத்திற்கு பயன்படுத்தப்படுவதால் மற்ற சோதனை முறைகள் மறைபொருளாக வைக்கப்பட்டிருக்கிறது
மனித இனம் வளம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அளிக்கப்பட்ட பல்வேறு பயிற்சி முறைகள் தவறாக பயன் படுத்தப் பட்ட காரணத்தால் பல்வேறு பயிற்சி முறைகள் மறைபொருளாக வைக்கப் பட்டிருக்கிறது என்பதை மட்டும் தெரிந்து கொள்வோம்
அறிந்து கொண்ட பயிற்சி முறைகளை நல்ல காரியத்திற்காக மட்டுமே பயன்படுத்துவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.