சனி, 11 அக்டோபர், 2014

செவ்வாய் தோஷ நிவர்த்திகள்,செவ்வாய் தோஷ பரிகாரங்கள்:
செவ்வாய் தோஷ நிவர்த்திகள்,
துவரை தானம்: உடைக்காமல் இருக்கும் முழுத்துவரையை சிகப்புத்துணியில்
பொட்டலம் கட்டிக் கொள்ள வேண்டும்.இவற்றுடன் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், வாழை
பழம் ஆகியவற்றையும் சேர்த்து கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.
செவ்வாய் தோஷ பரிகாரங்கள்:
வாழைப்பூத் தானம்:
ஒரு மரத்தில் இருக்கும் முழு வாழைப்பூவும் அதே மரத்தில் காய்த்த பழமும், அதே மரத்தில்
கிழக்கு நோக்கிய நுனி இலையையும் வெற்றிலை பாக்கும் மஞ்சள் துணியும் எடுத்துக் கொள்ள
வேண்டும். இவைகளை இலையில் வைத்து தானம் வாங்குபரை நடுவீட்டில் உட்காரவைத்து
தந்து விட வேண்டும்
செவ்வாய் தோஷம் பரிகாரம் செய்யதகுந்த காலம் எது? செய்யக்கூடாத காலம் எது?
பரிகார காலம்:
சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம் நீக்கும் பரிகாரங்களை கிருஷ்ண பட்சத்திலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம். செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி
என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில்பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.
பரிகாரம் செய்யகூடாத நேரம்:
ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள்
செய்யக்கூடாது. பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.
செவ்வாய் எந்த இடத்தில் இருந்தால் என்னன்ன பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு?
செவ்வாய் எந்த இடத்தில் இருந்தால் என்னன்ன பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு?
செவ்வாய் லக்னத்தில் இருந்தால் திருடர்களாலும், எதிரிகளாலும் இரத்த காயம் ஏற்படல்.
உடல் அளவில் ஏற்படும் கஷ்டங்களும் பாதிப்புகளும்,பெற்றோரிடம் பாசமின்மை,கண் நோய்,
தலையில் காயம்,நெருப்பில் கண்டம் ,சக்திமிகுந்த உடல் வியாதி, மூட சிந்தனை ,
சிறிய விஷயத்தை பெரிதாக எடுத்துகொள்ளுதல்,சுய நலம்,தற்புகழ்ச்சி முதலியன.
செவ்வாய் 2ல் இருந்தால் தனது பேச்சாலேயே பிரச்சனைகள் வரும். குடும்பம்
பொருளாதரங்களில் ஏற்படும் பிரச்சனைகள்.தாராளமனசு ,ஊதாரி செலவு ,கபடமற்ற
வெளிப்படையான மனம் ,பூர்விக சொத்துக்கள் சட்ட ரீதியாக பெறுதல் முதலியன
செவ்வாய் 3ல் இருந்தால் சகோதர வகையில் பிரச்சனை
செவ்வாய் 4ல் இருந்தால் சுக அளவில். குடும்ப சந்தோஷம் வாழ்க்கை வசதிகளில் பிரச்சனை,
மார்பு வலி ,இதய நோய் ,வாகன விபத்து , கல்வியில் மந்தம் ,உறவினர்
சந்தோஷமின்மை ,அரசியல் வெற்றி ,தாயாருடன் தகராறு ,சொந்த வீடு
ஆனாலும் மகிழ்ச்சியில்லாத நிலை முதலியன.
செவ்வாய் 5ல் இருந்தால் புத்திர பிரச்சனை கர்பம் கலைதல் தத்து புத்திரம்...
செவ்வாய் 6ல் இருந்தால் இரத்த சம்பந்தமான நோய் எதிரிகளால் தொல்லை
செவ்வாய் 7ல் இருந்தால் மனைவிகளால் ஏற்படும் பிரச்சனை.வாழ்க்கைத் துணை ,திருமணம் ,
மணவாழ்வு ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனை.குறுக்கு புத்தி,கோபம் ,சூதாட்ட ஆர்வம் ,
புத்திகூர்மை ,தைரியம் ,வாழ்க்கையில் போராட்டம் முதலியன
செவ்வாய் 8ல் இருந்தால் பாலின உறுப்புகளில் ஏற்படு்ம் பிரச்சனை .ஆயுள் குறைபாடு,
மாங்கல்யம் குறைபாடு,குறைவான எண்ணிக்கையில் வாரிசுகள்,உறவினர்களிடம்
வெறுப்பு ,இல்லற வாழ்வில் சண்டை சச்சரவு ,மூல நோய் முதலியன
செவ்வாய் 12ல் இருந்தால் பாலியல் மகிழ்ச்சி மற்றும் படுக்கை சுகம் ஆகியவற்றில் பிரச்சனை,
மனைவி இழப்பு ,சுய நலம் ,உஷ்ணநோய் ,வெறுப்புணர்ச்சி ,பணக்கஷ்டம் ,கொடூரகுணம்,
வீண் செலவுகள்,அறுவை சிகிச்சை, இளமையில் திருமணம்,விவாகரத்து முதலியன.
செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?
செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?
திருமண தடை, திருமண முயற்சி தோல்வி, திருப்தியில்லா மணவாழ்க்கை, வேற்றுமதத்தில்
மண முடித்து பிரிவினையாதல், பிறருடைய வாழ்க்கை துணைவரின் மேல் காதல் கொள்ளுதல்,
தகாத உறவு, சந்தேக குணம், இடைக்கால பிரிவு, மக்கட்பேரின்மை, மணமுறிவு
மணமக்களுக்குள் அன்பின்மை, ஒற்றுமை இன்மை, விட்டுகொடுத்தல் இல்லாத தன்மை,
முரட்டு பிடிவாதம், சந்ததி இன்மை, சுகமின்மை, ஒழுக்கமின்மை,இல்லற வாழ்க்கையின்
நன்மை அறியாமை, மாங்கல்ய பலமில்லாமை, ஆயுள் பலமின்மை,புத்திர தடை,
தத்து புத்திரம், கர்பம் கலைதல், அற்ப ஆயுள் புத்திரம் , புத்திர சோகம், தாமத புத்திரம்
முதலிய பிரச்சனைகள் செவ்வாய் கிரகத்தினால் ஏற்படலாம்
செவ்வாய் தோஷம் ஏற்படக் காரணம் என்ன?
செவ்வாய் தோஷம் ஏற்படக் காரணம் என்ன?
மனதாலும் உடலாலும் முற்பிறவிகளில் நாம் செய்யக்கூடிய பாவ செயல்களின் விளைவுகளே செவ்வாய் தோஷம் ஏற்படக் காரணமாகிறது. மற்றவர்களின் நலனை பாதிக்க கூடிய வகையில் நாம் செய்யும் செயல்கள் நமக்கு பின்பு பாப பலனாக வந்து சேர்கிறது. சுயநலமின்றி சமுதாய
நலனுக்காக நாம் செய்யும் சில செயல்கள் கூட தோஷங்களை ஏற்படுத்தலாம்.
செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் அல்லது செவ்வாய் தோஷ நிவர்த்தி:
செவ்வாய், மேஷம், விருச்சிகம், மகரம், இந்த ராசிகளில் ஏதேனும் ஒரு
இடத்திலிருந்தாலும் தோஷமில்லை.
செவ்வாய் 2மிடமாகி அது மிதுனமும், கன்னியும் ஆனால் தோஷமில்லை.
செவ்வாய் 4மிடமாகி அது மேஷம், விருச்சிகம் ஆனால் தோஷமில்லை.
செவ்வாய் 12மிடமாகி அது ரிஷபமும் துலாம் ஆனால் தோஷ மில்லை.
செவ்வாய் 7மிடமாகி இது மகரம் கடகம் ஆனால் தோஷமில்லை.
செவ்வாய் 8மிடமாகி இது தனுசும், மீனமும் ஆனால் தோஷமில்லை.
சிம்ம் கும்பம் செவ்வாய் இருந்தால் எந்த லக்னத்துக்கும் தோஷமில்லை
குருவும் செவ்வாய்ம் 10 டிகிரிக்குள் இருந்தால் தோஷம் இல்லை
சந்திரனும் செவ்வாய்யும் 10 டிகிரிக்குள் இருந்தால் தோஷம் இல்லை
புதனும், செவ்வாயும், சேர்ந்தாலும், பார்த்தாலும்,
குருவும், செவ்வாயும், சேர்ந்தாலும் பார்த்தாலும்,
சந்திரனும், செவ்வாயும், சேர்ந்தாலும் பார்த்தாலும்,தோஷம் கிடையாது.
இப்படியெல்லாம் பார்க்கையில் 5 சதவீத மக்களுக்குதான் செவ்வாய்தோஷம் இருக்கும் என தெரிகிறது.
செ‌வ்வா‌ய் தோஷ‌ம்! சரியான விளக்கம்!
நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின் அமைப்பு, அது செல்லும் வேகம் , அது உற்பத்தியாகும் திறன், எந்தந்த உடல் உறுப்புகளுக்கு எவ்வளவு இரத்தம் செல்லும் என்பன பற்றிய விவரங்களை முழுமையாக அறிவிப்பது ஜாதகத்திலிருக்கும் செவ்வாய்தான்.
ஒரு ஜாதகத்திலே செவ்வாய்தோஷம் இருக்கிறது என்று சொன்னால் அவருக்கு இரத்தம் எங்கு, எந்தமாதிரி செல்கிறது என்பதை வைத்து இவருக்கு இது எந்த மாதிரி விளைவுகளை உருவாக்கும் என்பதை கண்டு அதற்கு பொருத்தமான இணையை தேர்வு செய்வது வழக்கமாகும்.
உதாரமாக பாலின உறுப்புகளுக்கு அதிகளவில் இரத்தம் செல்லும்போது காமஉணர்வு அதிகமாக இருக்கும். காம விளையாட்டும் அதிகமிருக்கும் எனவே அதற்கு சமமான ஜோடி சேர்த்தால்தான் அவரது மனம்
வேறுநபரை நாடாது. கணவன் மனைவி ஒற்றுமையும் நன்றாக இருக்கும். . இப்படியாக ஒவ்வொரு உறுப்புக்கும் எவ்வளவு இரத்தம் செல்கிறது. அங்கு என்னபடியான விளைவை ஏற்படுத்துகிறது என்பது விவரங்களை ஜாதகத்தில்
இருக்கும் செவ்வாயை வைத்து அறியலாம்.
செவ்வாய் ராகு சேர்கையில் மோசமான சூழ்நிலையில் பிற்நதிருப்பார்கள்
செவ்வாய் கேது சனி சேர்க்கையில் பிறக்கும் போது தகுந்த உதவிகள் கிடைத்திருக்காது. செவ்வாயுடன் சூரியன் குரு சேர்க்கையில் பெரியோர்களின் ஆசிகளுடனான சூழ்நிலை அவர்கள் பிறந்தபோது இருக்கும். இப்படி பல... விஷயங்களையும் அறிய வைப்பது செவ்வாய்தான்
பொதுவாக ஒருவரது வாழ்கையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களையும், பிரச்சனைகளையும் அறிய உதவுவது, எட்டாமிடமாகும். எட்டுக்குடயவனின்
திசா, புக்தி மற்றும் அதில் அமர்ந்துள்ள கிரகங்களின் திசா, புக்தி போன்றவை நடைபெறும்போது ஜாதகருக்கு பிரச்சனைகளும், சங்கடங்களும் பெருமளவில் ஏற்படும்
ஜென்ம லக்னத்தில் எட்டுக்குடையவர் இருந்திடப் பிறந்தவருக்குப் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும். மனத தளர்ச்சியும், சோர்வும் ஏற்படும் இருக்கும். ஏதாவது ஒன்று ஏற்பட்டு ஜாதகரது நிம்மதியைக் கெடுத்து, வருத்தப்பட வைத்துவிடும்.
தன் குடும்ப வாக்குஸ்தானம் என்னும் இரண்டாம்பவதில் எட்டுகுரியவர் இருந்தால்,தொழில் அல்லது உத்தியோகத்தில் பிரச்சனைகள் தலைதூக்கிக் கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து ஜாதகர் அதை விட்டு விலகி, வேறொரு தொழில் அல்லது உத்தியோகத்துக்கு அலையும்படி நேரும.
எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாகுறை ஏற்பட்டு பணத்துக்காக அலயநேரிடும். குடும்பத்தில் நிம்மதியிருக்காது.அவரசு பேச்சே
மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரும்.
மூன்றாமிடத்தில் எட்டுக்குரியவர் இருக்கப் பிறந்தவர் சகோதர, சகோதரிகளுடன் சுமுகமான உறவு இல்லாதபடியும், கடுமையான சொற்க்களைப் பேசி, மற்றவர்களின் வெறுப்புக்கு ஆளாகும் நிலையை
யும் தரும்.
4மிடத்தில் 8 க்குரியவர் இருந்தால் தகப்பனார் தேடி வைத்தசொத்தை அழிப்பவராகவும், குழந்தைகளுடன் கருது வேறுபாடு கொள்பவராகவும்,
மனை, வீடு, வாகனம் இவைகளில் பிரச்சனை எதிர்கொள்பவராகவும் இருப்பார்
5மிடத்தில் 8க்குரியவர் இருந்தால் நிலையில்லாத புத்தியும், நிதானமில்லாத போக்கும், அரசாங்கத்தால் தொல்லையும், தரம் குறைந்தவர்களுடன் தொடர்பும் அதனால் அடிக்கடி பிரச்சனைகளைச் சந்திப்பதுமாக இருக்கும்
6மிடத்தில் 8க்குரியவர் இருந்தால் மற்றவர்களுடன் மனக்கசப்பும் , அடிக்கடி சண்டை சச்சரவுக்கு ஆளாகுதலும் நேரிடும்.
எட்டுகுரியவருடன் சுக்கிரன் மற்றும் சனி இருந்தால் ஜாதகருக்கு அடிக்கடி நோய்ஏற்படும்
7மிடத்தில் 8க்குரியவர் இருந்தால் ஒழுக்கமில்லாதவர்களுடன் தொடர்பும், ஆசன வாயில் நோய்த் தொல்லையும் வரும். எட்டுக்குரியவர் அசுபர்களுடன் சேர்ந்து ஏழாமிடத்தில் இருந்தால் பெண்களால் பிரச்சனைகள் ஏற்படும். . செவ்வாய் எட்டுக்குரியவருடன் சேர்ந்து இந்த பாவத்தில் இருந்தால் ஜாதகர் அமைதியாகவும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து போராடுபவராகவும் இருப்பார்.
எட்டுக்குரியவர் எட்டிலேயே இருந்தால் ஜாதகருக்கு நிறைந்த ஆயுளும் அதிகமான நிலபுலன்களும், மற்றவர்களால் அறிய முடியாத ரகசிய விவகாரங்களில் ஈடுபடுபவராகவும் ஜாதகர் இருப்பார்.
பாக்கியஸ்தானம் என்னும் ஒன்பதாமிடத்தில் எட்டுக்குரியவர் இருந்தால் ஜாதகருக்கு தகப்பனாருடன் சுமூகமான உறவிருக்காது. முன்னோர்களின் சாபம் இவரது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையிடும். மனதில்
எப்போதும் ஏதாவது குழப்பமும், தேவையற்ற பயமும் இருக்கும். இவருடன் நீண்டகாலம் யாரும் பழக மாட்டார்கள். தொழிலில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டபடி இருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது.
அடிக்கடி தொழில்அல்லது உத்யோகத்தை விட்டு விட்டு வேற தொழில் அல்லது வேலை தேடும் அவல நிலைக்கு ஆளாக நேரிடும்.
ஜாதகத்தில் எட்டுக்குரியவர் பத்தாம் பாவத்தில் இருந்தால்
வேலையில் இருப்பவர்கள் பணிபுரியும் இடத்தில் அவமானங்களும்,
வேலைப்பளு, ஊதியக்குறைவு, மரியாதைக் குறைவு போன்ற அதிருப்தியான பலன்களை அதிகம் சந்திப்பர்.
லாபஸ்தானத்தில் எட்டுக்குரியவர் இருந்தால் அவர் ஈட்டும் வருமானம் பல வழிகளிலும் கரைந்து காணாமல் போய்விடும். இவரது உழைப்பை பலரும் உறிஞ்சி பயனடைவர். பிள்ளைகளால் மனக்கசப்பும் அதிருப்தியும் இருக்கும்.
பன்னிரண்டாமிடத்தில் எட்டுக்குரியவர் நின்றிட்டால், வேலையில் கெட்டிக்காரனாக இருந்தாலும் விருப்பம் இல்லாமல் வேலை செய்வது, இல்லாவிட்டால் மனம் போனபடி சுற்றுவது அல்லது முடங்கிக் கிடப்பது என்று தன் விருப்பப்படி நடந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.