ஞாயிறு, 12 அக்டோபர், 2014

நம்மை சுற்றி கொட்டிக்கிடக்குது மருந்துகள்...!!!
என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.
தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடிபசலைக் கீரை.
இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ....
மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.
இதயத்தை பலப்படுத்தும் தாமரை.
தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல்.
இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி(ஓமவல்லி).
மூட்டுவலி குணமாக்கும் முட்டைகோஸ்.
நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.
மூல நோயை குணமாக்கும் சப்போட்டா பழம்.
வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை.
உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.
மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம்.
குடல்புண்ணை ஓடஓட விரட்டும் தடியங்காய்.
ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல்.
கான்சர் நோயை குணமாக்கும் சீதா பழம்.
மூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம்.
நீரிழிவு நோயை குணமாக்கும் முள்ளங்கி.
வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.
நீரிழிவு நோயை குணமாக்க வில்வம்.
ரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி.
மூட்டுவலி, ரத்த சோகை நீங்கும் திணைமாவு.
மார்பு சளி நீங்கும் சுண்டைக்காய்.
மதுரக்கீரை சாப்பிட்டால் கேன்சர் வராது.
சளி, ஆஸ்துமாவுக்கு ஆடாதொடை.
ஞாபகசக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை.
ரத்த அழுத்தத்தை குணமாக்கும் பசலைக்கீரை.
ரத்த சோகையை நீக்கும் பீட்ரூட்.
ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசி பழம்.
முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)
கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
மார்புசளி, இருமலை குணமாக்கும் தூதுவளை.
முகம் அழகுபெற திராட்சை பழம்.
அஜீரணத்தை போக்கும் புதினா.
“பிளட் சுகரை” விரட்டியடிக்கும் சர்க்கரை கொல்லி சிறுகுறிஞ்சான்.
பெண்களின் மாதவிலக்கு கோளாறுகளை சரிபடுத்தும் ஆவாரம்பூ.
மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”
சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.
தினசரி 1 ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம்.
முகப்பருவை போக்கும் அம்மான் பச்சரிசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.