ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

ஸ்ரீ இராமதேவர்
வளங்கண்டு குருவினுட வன்மை கண்டு
மகத்தான சிவசக்தி பூசை செய்து
நலங்கொண்டு சஞ்சார சமாதி கொண்டேன்
நன்மையுடன் அஷ்டதிசை சுற்றும் போது
தலங்கண்டேன் அத்தலத்தின்நாதம் கண்டேன்
தாயான மனோன்மணியாள் தன்மை பெற்றேன்
உளம்கனிய மனோன்மணியாள் வாவாஎன்று
உண்மை என்ற பொருள் ஈந்தாள் உருபெற்றேனே

உருவான பொருளறிந்து உண்மை பெற்றேன்
உண்மையுடன் வாராம தேவா என்றாள்
கருவான கரு குருவும் மெனக்கேஈந்தாள்
கைபாகம் முறைபாகம் கணக்கின் பாகம்
செம்மையுடன் நன்றாகசெப்பினாளே
குருவான குருவருளால்ஆத்தாள் என்னை
கூப்பிட்டுக் காப்பிட்டுக் குறி சொன்னாளே-இராமதேவர் வைத்திய காவியம்
இவர் குருநாதர் புலத்தியர்
நவிளுவோம் புலத்தியர் தன் கடாட்சத்தாலே
நாமுரைத்த பாசைஎல்லாம் நளினமாக
அவிலுவோம் ஆதியந்தம்யோக சித்தி
அருளுகிறோம் குருவமுத அனுகிரதால் –இராமதேவர் பரி பாஷை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.