ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

வணக்கம் அகத்தியர் அடியார்களுக்கும் அனைத்துசித்தர்   அடியார்களுக்கும்அனந்த கோடி நமஸ்காரம் .காலதீபிகம் (காலத்தைபற்றியவெளிச்சம் )பலஆராய்ச்சிகள்கட்டுரைகள் ஆன்மிக தகவல்கள், இசை ,விவசாயம் ,மற்றும் பொது தகவல்களை  தரும் ஒரு தகவல் சேவையாக மட்டும் பயன்பட்டு வந்தது .இது நாள் வரையில் பலவிதமான வேலை பளுவினாலும் அகத்தியரின் கட்டளை படி இணையத்தில் கவணம் செலுத்த முடியவில்லை

காலத்தின் ஓட்டத்தோடு பயணிக்க அகத்தியரின் ஆசி யும் உத்தரவும்கிட்டியதால் நிகழும் துர்முகி ஆண்டு சித்திரை மாதம் 11ம் (24-4-2016) முதல் அகத்தியரின் ஆணைப்படியும் பிருகுவின் ஆசியாலும் காலதீபிகம் இனி அறிய சித்தர்கள் வழியில் ஸ்ரீ அகத்தியர்  நந்தி பிருகு ஜீவ நாடி நிலையம் சார்பில் சித்தர்கள் சார்ந்த தகவல்களும் பாரம்பரிய ஆகமமும் நாடி தகவல்களை பகிரும் ஒரு தளமாக இருக்கும்

என் பார்வைக்கு அப்பாற்பட்ட தகலவல்கள் இனி  காலதீபிகத்தில் வராது


காலதீபிகம் பிருகு முனிவரின் ஆசிரமம் தொடர்பானது இல்லை .இதில் பதியப்படும் அனைத்து தகவல்களும் பிருகு ஜீவ நாடி நிலையத்தின் பதிவாகும் .இதுசம்பந்தம்மான அனைத்து தகவல் தொடர்பிற்கு bjnaadi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை பயன் கொள்ளலாம் .

தங்களின் எந்த வித ஆலோசனையும் ஏற்றுகொள்ளபடும் .-----------

ஓம் அகத்தீசாய நமக -ஓம் பிருகு தேவாய நமக -ஓம்நந்தி தேவாய நமக
என்றும் அகத்தியர் அடியான் -இராமையா-தாமரைசெல்வன்
          இன்பமே சூழ்க ---------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.