செவ்வாய், 31 மே, 2016

அருள்மிகு போகநாதர் குரு பூசை 03-6-2016-காலை10 am முதல் மாலை 6-௦௦pmவரை

அருள்மிகு போகநாதர் குரு பூசை



சித்தர் 5 வகை படுவர். அதில் இரசாயன மார்கத்தை தழுவி நின்ற சித்தர்களில் பிரதானமானவர் போகநாதர் பெருமான்.  மூலிகைகளை தாண்டி தாது (Minerals), உலோகங்கள் (Metals) மற்றும் பாஷாணம் (Poisons) கொண்டு பல உன்னத மருந்துகளை நம் முன் வைக்கின்றனர். என்றெல்லாம் கடினமான பிணிகள் மற்றும் நிலம் சார்ந்த துன்பங்கள் வருகின்றதோ அப்போதெல்லாம் போகர் பெருமானை பற்றி நிற்கவே பிருகு மகரிஷி மற்றும் அகத்திய மாமுனிவர் ஆசி உறைகின்றனர்.

முருகனுடைய தத்துவத்தை பிரதனாமாக வைத்து செல்லும் இந்த இரசாயன வகை சித்தர்களை ALCHEMIST என்று கூறுவது உண்டு. உலோகம் மற்றும் பாஷனத்தின் பர சூட்சுமத்தை அறிந்தவர்கள். இதனால் ஏக தத்துவத்தின் தன்மை கொண்டு ஓர் உலோகத்தை மற்றோர் உலோகமாய் மாற்றும் தன்மைகளை கண்டுபிடித்தனர். இதனை இரசவாதம் என்றும் கூறுவர்.

போகர் பெருமான் உயிகொல்லும்  கடுமையான நவபசாணத்தை சுத்தி செய்து, அதனை பல நோய் அகற்றும் மா மருந்தாக மாற்றினார். அதனை கொண்டே நவபாசாண முருகனை பழனியில் தோற்றுவித்தார். அந்த முருகனை அபிசேகம் செய்து வரும் பஞ்சமிர்தம், சந்தனம் மருந்தாக மாறி பல கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டு உள்ளது.

போகரும் கோரக்கரும் முருகனுடைய அகமார்க்க சூட்சுமத்தின் மிக தலையாய சித்தர்களாய் அகத்தியரின் மார்க்கம் பற்றி நின்றனர். தன்னுள் இருக்கும் அசுரனை அளித்து அழியா குமரனாய் வாழும் முறையே அது

போகரின் சீன (China) நாட்டு தொடர்பு அனைவரும் அறிந்ததே. பதிவுகள் அவரை Laozi Boyang என்று கூறுகின்றது. அவருடைய சீட வர்க்கம் (Yu) என்னும் புலிப்பாணி என்றும், Kong என்னும் கொங்கனவர் என்றும் கூறுகிறது.





ஸ்ரீ பிருகு அருள் நிலையம் –மருதேரி
அனைத்து சித்தர்கள் அடியார்களுக்கும் வணக்கம் நிகழும் துர்முகி வருஷம் வைகாசிமாதம் 21ம் திகதி வெள்ளிகிழமை பரணி நட்சத்திரம் 03-6-2016-காலை10 am முதல் மாலை  6-௦௦pmவரை ஸ்ரீ பிருகு மகரிஷி அருள் நிலையம் மருதேரியில் ஸ்ரீ போகர் சித்தர் எழுந்தருளி ஜோதி தரிசனம் தர சித்தம் கொண்டுள்ளார் என நந்தி தேவர் ஜீவ நாடியில் வாக்கு வந்துள்ளது .அது பொருட்டு சித்தர் அடியார்களும் சன்மார்க்க அன்பர்களும் கலந்துகொண்டு எல்லாம் வல்ல போக நாதரின் அருள் ஆசியும் சுப்பிரமணியரின் ஆசியும் கோரக்கரின் ஆசியும் ஸ்ரீ பிருகுமுநிவரின் அகண்ட ஜோதி தரிசனமும் பெற்று பயனடைய வேண்டுகிறோம் .அன்று உலக நலம் பொருட்டும் அடியார்களின் பிணி குறைகள் கர்ம நிலை தாக்கம் விலகும் பொருட்டும் அகத்திய முனிவரின் நவமூலிகை ராஜ அமிர்தாதி கூட்டு ஔஷதமும் சித்தர்கள் நாம உருக்கொண்டு கூட்டு பிராத்தனை செய்து வழங்க நந்தி தேவர் மற்றும் ஸ்ரீ பிருகு மகரிசியின் அருள் ஜீவ வாக்குப்படி நிகழுள்ள இப்புஜையில் கலந்துகொண்டு சித்தர்களின் பரிபூரண ஆசி பெற வேண்டுகிறோம்
-இங்கணம் ஸ்ரீ பிருகு அருள் நிலைய சமார்க்க அன்பர்கள் –மருதேரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.