சனி, 7 மே, 2016


பிருகு முனி - 







ஐயனை பற்றி தகவல்களை துணுக்குகளாக இங்கே நீங்கள் காணலாம். இதில் சில முக்கிய தகவல்கள் முன்பே வெளியே வராதவை..



பிருகு முனியின் தவ ஞான சீவ தளங்கள்

திருமால் வீற்று இருக்கும் திருப்பதி.- இத்தளம் முக்கிய சீவ தலமாக அமைகிறது

சுகபிரம்ம ரிஷி பிருகு முனியை குருவாக கொண்டவர். அவரே கீழ் கண்ட காயத்ரி மந்திரத்தை ஏற்றி உள்ளார்

"ஓம் சர்வதேவ ப்ரியாய வித்மஹே ஸ்ரீனிவாச சம்பவ காரணாய தீமஹி
தானோ ப்ரிஹு முனிச ப்ரசோதயாத்"

"Om sarvadeva Priyaya Vidmahe Srinivasa Sambhava Karanaaya Deemahi
Dhano Brihu Munisa Prachodayat"

"ஓம் சர்வதேவர்களுக்கும் ப்ரியமானவருமான சீனிவாச சம்பவத்திற்கு காரணமானவருமான
பிருகு முனியே என்னை ஆட்கொண்டு வழி நடத்துவீராக"

மேல்கண்ட காயத்ரியாலும் , புராணங்களை வைத்தும் சப்தகிரிகும் ப்ரிக்ஹுமுனிக்கு உள்ள தொடர்பயும்  புரிந்து கொள்ளலாம்


திருக்கள்ளில் -சிவா நந்தீஸ்வரர் ( வட மொழியில் - வஜிர வனம்)

கீழ் வரும் பாடல் பிருகு மகரிஷி வாழுந்து வழி பட்ட திருக்கள்ளில் என்ற இடத்தில இருந்து எடுக்கப்பட்டது. இந்த இடத்தில கள்ளி பூவை வைத்து பிருகு மகரிஷி லிங்கத்தை வணங்கியதால் திருக்கள்ளில் என்ற பெயர் பெற்றது.

தேவாதி தேவர்களும் பணிந்து ஏற்றும்
தற்பரமே கமலமதை பிருகு போற்றி
மூவாதி முதல்வனும் தேவர் மூவர்
முறை உணர்ந்த கோடி கண சித்தமுனிகள்
சித்தமுனிகள் சீவமாய் தரணி தன்னில்
முடிவில்லா வழிபட்ட தலத்தில் நின்ற
முனி வாக்காய் அருள் பாலித்த குருசாட்சியாய்
மகனுக்கு உரைப்பேன் சீவசாட்சி ஆசி உண்மை
............
ஞானம்எல்லாம் யாம் பெற்ற தலத்தில் இன்று
ஞான வாக்கு உனக்கு ஈந்தோம் காலம் இப்போ
ஊனம் என்ற நிலை அகற்றும் தலத்து ஈசனும்
உபய நந்தி ஈசனின் ஆசி காக்கும் "

பொருள் : சித்தர்கள் முனிகள் சீவமாய் வழிபட்ட மாபெரும் ஸ்தலம் இது. முனி வாக்கு அருள் கொடுத்த குருவாய் (தென்முக கடவுள்-குரு தட்சிணாமூர்த்தியால் இந்த இடத்தில தான் பிருகு முனிக்கு சோதிடம் என்னும்ஆருடம் கைவல்யம் ஆனது - என்று கோவிலில் உள்ள குறிப்பை உறுதி செய்கிறார் ). அதை தொடர்ந்து பிருகு ஆகிய தானும் ஒரு சில ஞானங்கள் பெற்ற தலம் திருக்கள்ளில் (திருக்கண்டலம்) என்று குறிபிடுகிறார். இங்கு இருக்கும் ஈசனுக்கு ஊனம் (குறைபாடு) என்ற நிலையை அகற்றும் வல்லமை உள்ளதாக சொல்கிறார். துணையாய் நந்தியும் ஊனம் அகற்றும் ஆசியை ஈசன் உடன் சேர்ந்து ஈந்து பக்தர்களை காத்து வருகிறார்.

திருநெல்வேலி நாங்குநெறி

ஹரி ஓம் என்னும் சூட்சமதொடு தொடர்புடைய ஒரு கோயில். இதன் தத்துவத்தை பிருகு முனி உணர்ந்த இடமாக இது உள்ளது

சுவாமி மலை - கும்பகோணம்


சென்னை அடுத்துள்ள திருநீர்மலை ,

இவ்விடம் பிருகு முனி 400 வருடம் தவம் இயற்றிய இடமாக தெரிகிறது

சென்னை அடுத்துள்ள வட திருமுல்லைவாயில்

இங்கு பிருகு முனி தவம் செய்து ரத்தினங்களை மழை போல் பொழிய செய்த இடம்

பருச் கச் - குஜராத் (நர்மதா அருகில்)

Bharuch also known as Broach, is the oldest city in Gujarat, situated at the mouth of the holy river Narmada. Bharuch is the administrative headquarters of Bharuch District and a municipality of more than 1,50,000 inhabitants. As Bharuch is a major seaport city, a number of trade activities have flourished here. Located between Vadodara and Surat, the city derived its name from ‘'Bhrigukachchha’' (Sanskrit: भृगुकच्छ), the residence of the great saint Bhrigu Rishi, which was later abridged to Bharuch

பல்லியா - உத்தர பிரதேசம் (கங்கை வழி அருகில்)

Ballia is also considered as a holy Hindu city. It has big and small temples. Bhrigu temple in Bhrigu Ashram is considered to be a famous temple where Bhrigu Muni was supposed to reside. Behind Bhrigu Ashram earlier River Ganga used to flow. Famous Dadri Mela (fair) is still held annually and people from all around the place come to visit it.

மன்னார்குடி ராஜகோபாலன்

பிருகு முனி இந்த இடத்தை ஆருடம் படி, ஜாதகத்தில் 5 ஆம் கட்டம் (புத்திர) சம்பந்த பட்ட சிக்கல்கள் நிவர்த்தி செய்ய உண்டாகிய ஸ்தலமாக தெரிகிறது. அது மட்டும் அல்லாமல் இங்கே ஒரு கல் தூனால் செய்யப்பட்ட துளசி மாடம் ( பிரமாண்டமாக) உள்ளது. இந்த இடத்தையும் பிருகு முனிவரின் சீவ தலமாக மன்னார்குடி மக்கள் பௌர்ணமி அன்று வணங்கி வருகின்றனர்

வைணவ திவ்யதேசங்கள் எல்லாம் (எப்படி பதஞ்சலி, வியாகரபாதர் நடராஜர் முன் நிற்பார்களோ சயனிக்கும் பெருமாள் பாதத்திலும், தலைமாட்டிலும் காணலாம் பிருகுமுனி மற்றும் மார்கேண்டேயரையும் பல தளங்களில் பார்க்கலாம்                 )thanks.18sithar bloks


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.