வெள்ளி, 24 ஜூன், 2016

அருள்மிகு ரோமரிஷி குரு பூசை 1-7-2016-காலை 9:30 am முதல் மாலை 6-00 pm வரை @ MARUDERI


ரோமரிஷி பற்றி நந்திதேவர்



மாட்சிமையாய் அமைந்த தளம் வடிவுடையாதாய்
மதிப்பான ஞானகோட்டம் என்றும்

The place of pride with its beautiful shape (Vadivudai)- Thiruvotriyur
The Gnanacentre with Poise


என்றுமே சீவகலை அளிக்க வல்ல
இருடியரும் அத்தலத்தில் அரூப லிங்கம்
உன்னத சித்தனுமே உறைவிடம் தான்
உரைந்ததொரு ரோமரிஷி காலம் தன்னில்

With the ability to provide the secret of Seevan
The great siddhas(Irudi) are in Arroopam form (Formless)
is he place where this great Siddha dwells
The great Roma rishi during his period


தன்னிலே ரோமமகன் ஆரிய தேசத்தான்
தவம்கொண்டு ககன வழி லங்காபுரி
மேன்மையுள்ள கயிலை பருவதமும்
மேனி யதை மாற்றியோர் ஆத்மமாக

Is the one was a foreigner to this country
with his power of penance travelled above Srilanka (through air)
to see the great Kailash and Himalayas
Who turned his body and rests as Aathmam


ஆகவே நின்றதொரு கருவின் மூலம்
***************************************
ஜெகதொர்கள் அறியாது காத்து வந்தார்
சீர்பெற்ற கணிதமும் வான நியதியும்

Is the one who's Karu stood here
*************************
**************************
Is an expert on Maths and Astronomy


நியதியும் நுணுக்கமுடன் ஈந்தார் அப்போ
நிருவிகல்பம் பெற்ற தலம் ஒருயோசனை தூரம்
ஐயமில்லா சித்தர்பலர் நாடி வந்து
அடங்குமொரு எல்லையது சித்தன் காப்பு


Created even minute details and presented it to the world
From the place he took Nirvikalpam for a distance of an Yochana
attracts other siddhas to come to this place
and stake Samadhi which has its borders controlled by the great Siddha




ரோமரிஷி உறை  திருவொற்றியூர் அருகில் உள்ள  சீவ சித்தர் உறைவிடங்கள்




  1. பட்டினத்தார் 
  2. மயிலண்டவர் - அகத்தியர் சீடன் 
  3. பைரவ சித்தர் - பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் 
  4. அப்புடு சுவாமிகள் 
  5. சங்கரர் வம்சம் - கோவில் மாட வீதி 
  6. வீர ராகவர் 
  7. வாலை மஸ்தான் 
  8. பரஞ்சோதி மகான் (வண்ணாரப் பேட்டை)
  9. குணங்குடி மஸ்தான் சாகிப் ( தொண்டையார் பேட்டை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.