ஞாயிறு, 20 அக்டோபர், 2019

1)சொல் பிறந்தவிடமெங்கே முப்பா ழெங்கே!
துவார பாலரெங்கே முதற் பாழெங்கே!
நல்ல சங்கு நதியெங்கே வைகுந்த மெங்கே!
நாரணனும் ஆலிலை மேல் படுத்ததெங்கே!
அல்லல் படும் ஐம்பூத மொடுக்க மெங்கே!
ஆறைந்து யிதழ்ரெண்டு முளைத்த தெங்கே!
சொல்ல வல்லாருண்டானா லவரை நாமும்!
தொழுது குருவெனப் பணிந்து வணங்கலாமே!


(2)உந்தியெனும் நிலையெங்கும் அறுகோண மெங்கே!
ஓங்கார நிலையெங்கே உற்றவி டமுமெங்கே! 
மந்திரமுஞ் சாஸ்திரமும் பிறந்த தெங்கே!
மறை நாலும் விரித்த வயன் தானுமெங்கே!
முந்தி வரும் கணபதியும் பிறந்த தெங்கே!
முக்கோண முனை யெங்கே அடிதா னெங்கே!
இந்தவகைப் பொருளறிந்து சொல்வார் தம்மை!
இறைவனென்றே கருதி யியம் பலாமே!


(3)பற்பதத்தில் பொங்கி வரும் வழிதானெங்கே!
பரிந்து முறை கொண்டு நின்ற அறிவுமெங்கே!
உற்பனமாங் கருநின்று விளைந்த தெங்கே!
யொருபாதம் தூக்கி நின்ற வடையாள மெங்கே!
தற்பரமா யாகிநின்ற நிலைதா னெங்கே!
சர்வ வுயிராய் எடுத்த சிவனு மெங்கே!
இப்பொருளை அறிந்துரைக்கும் பெரியோர் தம்மை
இறைவ னென்றே கருதி யியம்பலாமே!


(4)அடிமுடியும் நடுவான நிலையு மெங்கே!
அறுசுவையும் கொண்டொ ழித்தவிடமு மெங்கே!
வடிவான வைந்தலை மாணிக்க மெங்கே!
வரையான வூமை யென்னும் எழுத்து மெங்கே!
இடமாக ஆடி நின்ற பாத மெங்கே!
அடைவாயிப் பொருளறிந்து சொல்வார் தம்மை
அடி தொழுது குருவென்று நம்பலாமே!


(5)சற்குருவும் சந்நிதியு மான தெங்கே!
சாகாத காலெங்கே வேகாத் தலையுமெங்கே!
முப் பொருளுமொரு பொருளாய் நின்ற தெங்கே!
முனையெங்கே தலையெங்கே முகமும் மெங்கே!
நற்கமலமா யிரத்தெட் டிதழு மெங்கே!
நாலு கையொரு பாதமான தெங்கே!
இப்பொருளை அறிந்துரைக்கும் பெரியோர் தம்மை
இறைவ னென்றே கருதி யியம்பலாமே!


(6)நஞ்சணிந்தான் முகந்தா னைந்து மெங்கே!
ஞானக் கண் மற்றக்கண் மூன்று மெங்கே!
அஞ்ச வுயிர்தனைக் கெடுக்கும் யேமனெங்கே!
ஆயிரங் கண்ணி ந்திரனார் தாமுமெங்கே!
பஞ்சறிவால் நின்ற பராசக்தி யெங்கே!
பதினாலு லோகமெனு மதுதா னெங்கே!
வஞ்சமற பொருளறிந்து சொல் வாராகில்
வணங்கி குருபர னென்று வாழ்த்தலாமே!


(7)நகை பிறந்த விடமெங்கே!கோபமெங்கே!
நர மேழா நரகமான தெங்கே!
திகைத்து மறந்திடமெங்கே நினைப்பு மெங்கே!
தீராத குறைவந்து சூழ்ந்த தெங்கே! 
பகைத்த விடந்தா னெங்கே!ஒழுக்கமெங்கே!
பகலிரவு யிருந்த இடந்தா னெங்கே!
வகை பொருளை அறிந்துரைக்கும் பெரியோர்தம்மை
வணங்கி குருபர னென்று வாழ்த்தலாமே!


(8)ஆறுகால் முகமாறு மான தெங்கே!
அறுபத்து நாலுகலை நின்ற தெங்கே!
சீருகால் பன்னிரண்டில் கழிந்த தெங்கே!
செத்திடமுஞ் சாகாதி ருந்திடமு மெங்கே!
பூருவ நீயிருந்துவந்து பிறந்திடந் தானுமெங்கே!
புந்திதனில் அம்பத்தோர் அச்சரமு மெங்கே!
வேறு பொருளுரையா துள்ளபடியே சொல்வார்
மெல்லடியிலே பணிந்து மெலிய லாமே!


(9)ஆதியிற் சந்திரனும் பிறந்த தெங்கே!
அவரொடுங்கி நிற்குமது விடமு மெங்கே!
சாதிபல ஒன்றாகக் கண்ட தெங்கே!
சத்தி சிவமென்று பிரியாத தெங்கே!
ஓதி உணர்ந்த பூசைமறந்த தெங்கே!
வுச்சிட்ட நிட்டத்தே விடமு மெங்கே!
சோதிபோல் ஞானமொழி பெற்ற பேர்கள்
சொல்லிய தெல்லா முடலில் சொல்லுவாறே!


(10)இருள்பிறந்த விடமெங்கே ஒடுக்கிட மெங்கே!
இரண்டு திரிசங்கு நின்றவிடமு மெங்கே!
அருள்பிறந்து பாடிநின்ற விடமு மெங்கே!
அறுத்தடைத்த வாசலொன்று கண்ட தெங்கே!
திருபிறந்த விடமெங்கே எழுகிணறு மெங்கே!
திருக் கிணற்றை யிறைக்கின்ற யேத்தமெங்கே!
விருப்ப முடனடுக்கு நிலைப் போதகத்தை
விளம்பினோம் மெய்ஞான அறிவுள் ளோர்க்கே!

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.