சனி, 1 ஏப்ரல், 2023

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.

ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் 1.ப்ராத:ஸ்மராமி லலிதாவதநாரவிந்தம் பிம்பாதரம் ப்ருதுலமௌக்திக சோபிநாஸம்! ஆகர்ணதீர்க்க நயனம் மணி குண்டயாட்யம் மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்வலபாலதேசம் காலைவேலையில் ஸ்ரீ லலிதாதேவியின் முகமாகிய தாமரையை ஸ்மரிக்கிறேன். அது கோவைப்பழ மொத்த உதடுகளுடையதாயும், பெரிய முத்துக்களான மூக்குத்தியுடையதாயும், மாணிக்க குண்டங்களுடையதாயும், புன்முறுவல் உடையதாயும், கஸ்தூரி திலகத்தால் விளங்கும் நெற்றியுடையதாயுமுள்ளது. 2.ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்பவல்லீம் ரக்தாங்குலீயலஸதங்குலி பல்லவாட்யாம்! மாணிக்யஹேம வல்யாங்கதசோபமாநாம் புண்ட்ரேஷசாபகுஸுமேஷ§ஸ்ருணீர்ததாநாம்!! காலையில் ஸ்ரீலலிதாம்பிகையின் கல்பகக் கொடி போன்றகைகளை சேவிக்கிறேன். அது சிவந்த மோதிரம் மிளிரும் துளிர் போன்ற விரல்களுடையதாயும், மாணிக்கம் பதிந்த தங்க வளையல்களும், தோள்வளையும் கொண்டு விளங்குகின்றன. கரும்பு வில்லும், புஷ்ப பாணங்களும் ரம்பமும் அவற்றில் உள்ளன. 3.ப்ராதர் நமாமி லலிதாசரணாரவிந்தாம் பக்தேஷ்டதாந நிரதம் பவஸிந்துபோதம்! பத்மாஸநாதி ஸுரநாயக பூஜநீயம் பத்மாங்குச த்வஜஸுதர்சனலாஞ்சநாட்யம் II பக்தர்களின் இஷ்டஷ்டத்தை எப்பொழுதும் நல்குவதும் சம்ஸாரக்கடலைக் கடப்பதற்காக அமைவதும், பிரம்மதேவன் முதலிய தேவர்கள் வழிபடத் தக்கதும், தாமரை அங்குசம், கொடிசுதர்சனம் முதலிய இலச்சினை கொண்டதுமான ஸ்ரீலலிதாம்பிகையின் திருவடித்தாமரையை காலையில் வணங்குகின்றேன். 4.ப்ராத:ஸ்துவே பரசிவாம் லலிதாம்பவாநீம் த்ரய்யந்த வேத்ய விபவாம் கருணாநவத்யாம்! விச்வஸ்ய ஸ்ருஷ்டி விலயஸ்திதி ஹேது பூதாம் வித்யேச்வரீம் நிகம வாங்கமநஸாநிதூராம் II உபநிஷத்துக்களில் தெரிந்து தெளிய வேண்டிய மஹிமை கொண்டவளும், மாசற்ற கருணை பூண்டவளும், உலகத்தை படைக்கவும், காக்கவும், பிறகு லயமடையச் செய்பவளும், வேதங்களுக்கும், வாக்குகளுக்கும், மனதிற்கு அப்பாற்பட்டவளுமான பரசிவையான ஸ்ரீ லலிதாம்பிகையை காலையில் ஸ்தோத்திரம் செய்கிறேன் 5.ப்ராதர் வதாமிலலிதே தவபுண்ய நாம காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி I ஸ்ரீசாம்பவீதி ஜகதாம் ஜநநீபரேதி வாக்தேவதேதி வசஸா த்ரிபுரேச்வரீதி II ஹே லலிதாம்பிகே. உனது புண்யமான பெயரை காலையில் சொல்கிறேன். காமேச்வரி என்றும், கமாலா என்றும், மஹேச்வரீ என்றும், ஸ்ரீசாம்பவீ என்றும், உலகத்தின் உயரியதாய் என்றும், வாக் தேவதை என்றும், த்ரிபுராம்பிகை என்றும் அல்லவா அந்த பெயர்கள் அமைந்தன. 6.ய:ச்லோக பஞ்சகமிதம் லலிதாம்பிகாயா: ஸெளபாக்யதம் ஸுலலிதம்படதிப்ரபாதே I தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸந்நர் வித்யாம் ஸ்ரீயம் விமலஸெளக்ய மனந்தகீர்திம் II ஸ்ரீ லலிதாம்பிகையின் ஸ்தோத்திரமான இவ்வைந்து ஸ்லோகங்கள் வளமிக்க வாழ்வை கொடுப்பவை. மிக எளிதானவையுங் கூட - காலையில் படிப்பவருக்கு உடன் மகிழ்ச்சியுடன் கல்வி, செல்வம், குறைவற்ற சௌக்யம், புகழ் ஆகியவற்றை அருள்கிறாள். ஸ்ரீலலிதா பஞ்சரத்னம் முற்றிற்று.

ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம் அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவி ! ஸாவித்ரி நவயெளவனா ஸுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மி ப்ரதா சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !! (1) விளக்கம்: தாய், சாம்பவி, சந்த்ரமௌளி, அபலா, அபர்ணா, உமா, பார்வதி,காளி, ஹிமவானின் புதல்வி, சிவா, முக்கண்ணளான காத்யாயநீ, பைரவீ, சாவித்ரீ, புதுப்புது இளமைத்தோற்றம் உடையவர், சுபத்தைத் தருபவள், சாம்ராஜ்ய லக்ஷ்மியை அளிப்பவள். இவளே ஆத்ம ஸவரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆவாள். அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனி ஆனந்த ஸந்தாயிநீ வாணீ பல்லவ பாணி வேணு முரளீ கானப்ரியா லோலிநீ ! கல்யாணீ உடுராஜ பிம்பவதனா தூம்ராக்ஷ ஸம் ஹாரிணீ சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !! (2) விளக்கம்: இத்தாயே-மோஹிநீ தேவதை, மூவுல காளி, பேரானந்தம் தருபவள், சரஸ்வதி, இளந்தளிர் கைகள் கொண்டவள், புல்லாங்குழல் இசையை பிரியத்துடன் இசைத்து விளையாடுபவள். மங்களமானவள், சந்த்ர பிம்பம் போல் முகம் உள்ளவள். தூம்பராக்ஷனை வதம் செய்தவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆவாள். அம்பா நூபுர ரத்ன கங்கணதரீ கேயூர ஹாராவளீ ஜாதீ சம்பக வைஜயந்தி லஹரீ க்ரைவேயகை ரஞ்ஜிதா ! வீணா வேணு வினோத மண்டிதகரா வீராஸனா ஸம்ஸ்திதா சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !! (3) விளக்கம்: இத்தாயே ரத்னத்தால் ஆன சதங்கை, கை வளை, கழுத்தடிகை, பலவித ஹாரமாலைகள், ஜாதி, சம்பக மாலைகள், வைஜயந்தி மாலை, கழுத்து ஆபரணங்கள் ஆகியவைகளை அணிந்துள்ளாள். வீணை, புல்லாங்குழல் இவைகளை மீட்டும் திருக்கை கொண்டவள். வீராஸநத்தில் வீற்றிருப்பவள். இவளே ஆத்ம ஸ்வரூபிணீ, பரதேவதை பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள். அம்பா ரெளத்ரிணீ பத்ரகாளி பகளா ஜ்வாலாமுகீ வைஷ்ணவீ ப்ரஹ்மாணீ த்ரிபுராந்தகீ ஸுரநுதா தேதீப்ய மனோஜ்வலா! சாமுண்டாச்ரித ரஷபோக்ஷ ஜனநீ தாக்ஷாயணீ வல்லவீ சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !! (4) விளக்கம்: இந்தத் தாயானவள் ரௌத்ரிணீ, பத்ரகாளி, தீக்கொழுந்து எரியும் முகம் உள்ள பகலா, வைஷ்ணவி, ப்ரஹ்மாணீ தீரிபுராந்தகீ, தேவர்களால் வணங்கப் பெறுபவள், பளபளக்கும் ஒளிபடைத்தவள், சாமுண்டா, அண்டினவர்களை காப்பாற்றுபவள், அவர்களுக்கு பூஷ்டி அளிக்கும் தாய், தாக்ஷõயணீ, வல்லமை பொருந்தியவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள். அம்பா சூலதனு: குசாங்குசதரீ அர்த்தேந்து பிம்பாதரீ வாராஹீ மதுகைடப ப்ரசமனீ வாணீ ரமா ஸேவிதா ! மல்லாத் யாஸுர முக தைத்ய தமனீ மாஹேஸ்வரீ அம்பிகா சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !! (5) விளக்கம்: இந்தத் தாயாவனள் சூலம், வில், கதை, அங்குசம் ஆகியவைகளைத் தன் திருக்கைகளில் தரித்தவளாயும், தலையில் அர்த்த சந்த்ரனை உடையவளாகவும் இருப்பவள். வாராஹீ, மதுகைடபர்களை அழித்தவள். சரஸ்வதி, லக்ஷ்மீ இவர்களாலும் துதிக்கப் பெற்றவள், மல்லாதி அசுரர்களையும் மூகாசுரனையும் அழித்தவள். மாஹேச்வரீ, அம்பிகா, இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள். அம்பா ஸ்ருஷ்டி விநாச பாலனகரீ ஆர்யா விஸம் சோபிதா காயத்ரீ ப்ரணவாக்ஷராம் ருதரஸா பூர்ணாநு ஸந்தீக்ருதா ! ஓங்காரீ வினதா ஸுரார்ச்சிதபதா உத்தண்ட தைத்யாபஹா சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !! (6) விளக்கம்: இந்தத் தாயானவள் ஸ்ருஷ்டி-ஸ்திதி, சம்ஹாரங்களைச் செய்பவள் உயர்ந்தவளாக விளங்குபவள். காயத்ரீ, ப்ரணவம் (ஓங்கார எழுத்து) இவைகளின் அம்ருதரஸமானவள், ஓங்காரஸ்வரூபிணீ தேவதைகளால் வணங்கி அர்ச்சிக்கப்படும் திருவடியை உடையவள், அசுரர்களைக் கொல்வதில் முனைப்பாக இருப்பவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள். அம்பா சாஸ்வத ஆகமாதி வினுதா ஆர்யா மஹாதேவதா யா ப்ரஹ்மாதி பிபீலி காந்த ஜனனீ யா வை ஜகன்மோகினீ ! யா பஞ்ச ப்ரணவாதி ரேப ஜனனீ யா சித்கலா மாலினீ சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !! (7) விளக்கம்: இந்தத் தாயானவள் அழியாத தேவங்களால் போற்றப்பட்டவள். உயர்ந்த மஹாதேவதை, சதுர்முக ப்ரஹ்மா முதல் ஈ, எறும்பு வரை எல்லாவற்றையும் படைக்கும் ஜகந்மாதா ஆவாள். சகல ஜகத்தையும் மோஹிப்பிப் பவள். பஞ்சப்ரணவாதிகளை உண்டாக்குபவள், ÷ரபம் எனும் அக்ஷரத்துக்கு மூலமானவள் சித்கலா, மாலினி என்ற பெயர்கள் உடையவள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள். அம்பா பாலித பக்தராஜ தனிசம் அம்பாஷ்டகம் ய! படேத் அம்பாலோல கடாக்ஷ வீக்ஷ லலிதம் ஐஸ்வர்ய மவ்யாஹதம் ! அம்பா பாவன மந்த்ர ராஜபடானாத் தந்தேச மோக்ஷப்ரதா சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி !! (8) விளக்கம்: இந்தத் தாயானவள் பக்தர்களைக் காப்பதில் பற்றுள்ளவள். இவளைப் பற்றிய இந்த அம்பாஷ்டகத்தை எவன் படிக்கிறானோ அவன் அம்பாவின் லீலா விநோத கடைக்கண் பார்வைக்கு இலக்காகி உன்னதமான அழியா நற்செல்வங்களைப் பெறுவான்.மேலும் அம்பாளின் இந்த மந்த்ர ராஜத்தைப் படிப்பவனுக்கு மோக்ஷமளிப்பாள். இவளே ஆத்மஸ்வரூபிணீ, பரதேவதை, பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ ஆவாள் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தேவியைப் பற்றி 8 ஸ்லோகங்களும் அழியா செல்வம், அந்தஸ்து, புகழ், பதவி, நோயற்ற மங்களமான குடும்ப சுகவாழ்வு, உயர்கல்வி ஆகியவைகளை அளிக்கவல்லது. ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகத்தின் தலைப்பே எல்லா கடவுள்களுக்கும் ராணியானவள், சர்வ வல்லமை பொருந்தியவள், எல்லா இடத்திலும் வ்யாபித்துள்ளவள் என்று அறிவித்தாலும், எட்டு ஸ்லோகங்களும் அம்பா என்றே ஆரம்பிக்கின்றன. “அம்பா என்றால் தாய்”. எல்லா உலகுக்கும் தாய். அவ்விதமே ஒவ்வொரு ஸ்லோகத்தின் கடைசி பாதம் பார்வதி தேவியை, எல்லோருக்கும் மேம்பட்டவள், சேதாநாரூபீ, சர்வ ஐஸ்வர்யம் படைத்தவள், தேவதைகளுக்கு எல்லாம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி என்று கூறி முடிகிறது; உண்மையில் எல்லா ஸ்லோகங்களும் பார்வதி தேவியின் பல அவதாரங்களைக் குறிப்பவையே!

தாரித்ர்யதஹனசிவஸ்தோத்ரம் விச்வேச்வராய நரகார்ணவதாரணாய கர்ணாம்ருதாய சசிசேகரதாரணாய | கர்பூரகாந்திதவளாய ஜடாதராய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||௧|| கௌரிப்ரியாய ரஜனீசகலாதராய காலாந்தகாய புஜகாதிபகங்கணாய | கங்காதராய கஜராஜவிமர்தநாய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||௨|| பக்திப்ரியாய பயரோகபயாபஹாய உக்ராய துர்கபவஸாகரதாரணாய | ஜ்யோதிர்மயாய குணநாமஸுந்ருத்யகாய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||௩|| சர்மாம்பராய சவபஸ்மவிலேபனாய பாலேக்ஷணாய மணிகுண்டலமண்டிதாய | மஞ்ஜீரபாதயுகளாய ஜடாதராய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||௪|| பஞ்சாநநாய பணிராஜவிபூஷணாய ஹேமாம்சுகாய புவநத்ரயமண்டிதாய | ஆனந்தபூமிவரதாய தமோமயாய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய || ௫|| பாநுப்ரியாய பவஸாகரதாரணாய காலாந்தகாய கமலாஸனபூஜிதாய | நேத்ரத்ரயாய சுபலக்ஷணலக்ஷிதாய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||௬|| ராமப்ரியாய ரகுநாதவரப்ரதாய நாகப்ரியாய நரகார்ணவதாரணாய | புண்யேஷு புண்யபரிதாய ஸுரார்ச்சிதாய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||௭|| முக்தேச்வராய பலதாய கணேச்வராய கீதப்ரியாய வ்ருஷபேச்வரவாஹனாய | மாதங்கசர்மவஸனாய மஹேச்வராய தாரித்ர்யது:கதஹனாய நம: சிவாய ||௮|| வஸிஷ்டேன க்ருதம் ஸ்தோத்ரம் ஸர்வரோகநிவாரணம் | ஸர்வஸம்பத்கரம் சீக்ரம் புத்ரபௌத்ராதிவர்தனம் | த்ரிஸந்த்யம் ய: படேந்நித்யம் ஸ ஹி ஸ்வர்கமவாப்நுயாத் ||௯||

அடியேனின் ஆறுமுக அந்தாதி ஓம் ஐயுங் கிலியும் சவ்வும் வித்தின் ஐக்கியமாம் நாதவிந்து கலாதீதமாய் தாயும் மகனும் உயிரும் உடலுமுமாய் தற்பர விளக்கமதில் எண்ணமும் செயலாக செயலாற்றும் வாலைபுத்திரா சங்கரன் சேயே சரவணபவா ஆறெழுத்து அறுமுகவா ஆயகலைகள் அறுபத்தி நான்கினையும் அணுவணுவாய் தேர்ந்த குரு ஒளியே குரு ஒளியே குணக்குன்றே கூர்வேலிறைவா குஞ்சரி மணாளா கந்தா கடம்பா சிவ நெருப்பில் உதித்து மால் நீரில் குளிர்ந்த நிர்மல பரப்பிரம்ம மூவித்துரு கரு ஆனவனே மூவித்தால் விளைந்தாறு இதழே முகமாகி முத்தேவர் குணமாக முளைத்தெழுந்த மூர்த்தியே தேவிசக்திவேலை தானேந்தி வல்லவனாய் தேவேந்திர மயிலேறும் தேவசேனா பதியே வருக வருக ஆறுமுகவா குமரா ஆணவமலமறுக்கும் அருளாளா வாலறிவா வாலய்யா செறுக்கருக்கும் செந்தில் ஆண்டவனே முருகா சேனை நாலாயிரம் பூதபடைசூழ வருக வருகவே வடிவேலும் மயிலுடனே வானம் கிடுகிடுக்க வஞ்சகர் நடுநடுங்க இருள் என்னும் மாயைகள் எதிர் நில்லாதோடிடவே ஏறுமயிலேறி ஆறுமுகவா தேவேந்திர படைசூழ வருகவே வருகவே உலகில் வளர்ந்திட்ட தீமையெல்லாம் அழிய வண்ணமயில் தோகைவிரித்து ஆடிவர சித்தர் குருவே வாலை குமரனே கந்தா கடம்பனே கதிர்வேல் முருகனே வருக [17/02, 10:43 pm] Vaalai thaai veedu: வருகவே வேலய்யா வல்அசுரரோடு போரிட்டு வெற்றி கொடி நாட்டி ஒருவனாய் சத்துருவை சம்ஹரித்த வேலா ஓங்காரத்தின் மூலக்கருவறிந்த சத்திவேலே வருக ரரவருகவே விண்ணும் மண்ணும் நலமுறவே வையமதில் தருமமெலாம் தழைத்தோங்க முருகா குருவென குகனென கூறறிவாளாலனாக குணகுன்றே அருளாட்சி செய்ய ஆறுமுகா வருகவே வருகவே வாலை மனோன்மணிக்கு சேயே வரமருளும் வடிவேலா வேத செந்தமிழின் குருவாயும் திருவாய் மலர்ந்தருளிய சுவாமிநாதா கூர்வடிவேலா குருமுனியின் தவகுருவே வருக வருகவே எனைகாக்க எதிரிகளின் வஞ்சகமும் சூழ்ச்சியும் சஞ்சலமாய் எமையணுகா பெருகும் நல்லருள் சூழும் ஒளியாளா சண்முகனே பேரானந்த பெருக்கே வாலறிவா வருக வருவாய் வாதபித்த கபபிணிக்கு வைத்திய நாதனுமாய் வழலை முப்பது வாய் குருமருந்தாய் பாஷாண செந்தூரம் சுண்ணமதாய் கற்பதாய் ஔஷத அம்ருதமுமாய் வருவாய் [17/02, 11:03 pm] Vaalai thaai veedu: வருவாய் பிறவி பெரும்பிணிக்கு அருமருந்தாய் வாக்கும் மனமும் கடந்த மன உன்மணி தத்துவமாய் கருஉருவான கன்னிவாலை திருக்குமரா காக்குகா என வேண்ட சேவல்கொடியேந்தி வருவாய் [ அருளாலா அற்புதம் செய்யும் ஆறுமுகவா வந்து ஆணையிடு அண்டசராசர பூதகணங்களுக்கு பெருகும் நலம் வாய்க்க பேதமையை தான்மாய்க்க பரமனின் மகனே பார்வதி சுதனே வருவாய் அய்யா [ சுதனே சுந்தரவதனே கோடிசூர்ய பிரகாச சூழ்ஒளியே சுகபர ஞானச்சுடரே வதனம் ஆறும் வாலறிவாய் வேல்துணையாய் வந்தெமை காப்பாய் வாலை திருக்குமரா [17: ஓம் சரவணபவனே சண்முகத்தரசே சாம்பவி புத்திரா சக்திவேலாயுதா பரவெளி தத்துவா சேய் கடவுள் பேரொளி கமலபாதச் சரணே : சரணென்று வந்து உமை சார்ந்த அடியவர்க்கு சத்ரு சம்ஹாரியாய் சதாகாலமும் காக்கும் பூரணபூத வேதாள இடும்பகண சேனையானே பொன்னடி சரணே பாதச்சரணே

நட்சத்திர காயத்திரி மந்திரங்கள்அசுவினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் கிருத்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் ரோகிணி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத் மிருகசீரிஷம் ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத் திருவாதிரை ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத் புனர்பூசம் ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத் பூசம் ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத் ஆயில்யம் ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத் மகம் ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத் பூரம் ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத் உத்திரம் ஓம் மஹாபகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத் அஸ்தம் ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத் சித்திரை ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத் சுவாதி ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத் விசாகம் ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத் அனுஷம் ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத் கேட்டை ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத் மூலம் ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத் பூராடம் ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத் உத்திராடம் ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத் திருவோணம் ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத் அவிட்டம் ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத் சதயம் ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத் பூரட்டாதி ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத் உத்திரட்டாதி ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத் ரேவதி ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.