சனி, 1 ஏப்ரல், 2023

அடியேனின் ஆறுமுக அந்தாதி ஓம் ஐயுங் கிலியும் சவ்வும் வித்தின் ஐக்கியமாம் நாதவிந்து கலாதீதமாய் தாயும் மகனும் உயிரும் உடலுமுமாய் தற்பர விளக்கமதில் எண்ணமும் செயலாக செயலாற்றும் வாலைபுத்திரா சங்கரன் சேயே சரவணபவா ஆறெழுத்து அறுமுகவா ஆயகலைகள் அறுபத்தி நான்கினையும் அணுவணுவாய் தேர்ந்த குரு ஒளியே குரு ஒளியே குணக்குன்றே கூர்வேலிறைவா குஞ்சரி மணாளா கந்தா கடம்பா சிவ நெருப்பில் உதித்து மால் நீரில் குளிர்ந்த நிர்மல பரப்பிரம்ம மூவித்துரு கரு ஆனவனே மூவித்தால் விளைந்தாறு இதழே முகமாகி முத்தேவர் குணமாக முளைத்தெழுந்த மூர்த்தியே தேவிசக்திவேலை தானேந்தி வல்லவனாய் தேவேந்திர மயிலேறும் தேவசேனா பதியே வருக வருக ஆறுமுகவா குமரா ஆணவமலமறுக்கும் அருளாளா வாலறிவா வாலய்யா செறுக்கருக்கும் செந்தில் ஆண்டவனே முருகா சேனை நாலாயிரம் பூதபடைசூழ வருக வருகவே வடிவேலும் மயிலுடனே வானம் கிடுகிடுக்க வஞ்சகர் நடுநடுங்க இருள் என்னும் மாயைகள் எதிர் நில்லாதோடிடவே ஏறுமயிலேறி ஆறுமுகவா தேவேந்திர படைசூழ வருகவே வருகவே உலகில் வளர்ந்திட்ட தீமையெல்லாம் அழிய வண்ணமயில் தோகைவிரித்து ஆடிவர சித்தர் குருவே வாலை குமரனே கந்தா கடம்பனே கதிர்வேல் முருகனே வருக [17/02, 10:43 pm] Vaalai thaai veedu: வருகவே வேலய்யா வல்அசுரரோடு போரிட்டு வெற்றி கொடி நாட்டி ஒருவனாய் சத்துருவை சம்ஹரித்த வேலா ஓங்காரத்தின் மூலக்கருவறிந்த சத்திவேலே வருக ரரவருகவே விண்ணும் மண்ணும் நலமுறவே வையமதில் தருமமெலாம் தழைத்தோங்க முருகா குருவென குகனென கூறறிவாளாலனாக குணகுன்றே அருளாட்சி செய்ய ஆறுமுகா வருகவே வருகவே வாலை மனோன்மணிக்கு சேயே வரமருளும் வடிவேலா வேத செந்தமிழின் குருவாயும் திருவாய் மலர்ந்தருளிய சுவாமிநாதா கூர்வடிவேலா குருமுனியின் தவகுருவே வருக வருகவே எனைகாக்க எதிரிகளின் வஞ்சகமும் சூழ்ச்சியும் சஞ்சலமாய் எமையணுகா பெருகும் நல்லருள் சூழும் ஒளியாளா சண்முகனே பேரானந்த பெருக்கே வாலறிவா வருக வருவாய் வாதபித்த கபபிணிக்கு வைத்திய நாதனுமாய் வழலை முப்பது வாய் குருமருந்தாய் பாஷாண செந்தூரம் சுண்ணமதாய் கற்பதாய் ஔஷத அம்ருதமுமாய் வருவாய் [17/02, 11:03 pm] Vaalai thaai veedu: வருவாய் பிறவி பெரும்பிணிக்கு அருமருந்தாய் வாக்கும் மனமும் கடந்த மன உன்மணி தத்துவமாய் கருஉருவான கன்னிவாலை திருக்குமரா காக்குகா என வேண்ட சேவல்கொடியேந்தி வருவாய் [ அருளாலா அற்புதம் செய்யும் ஆறுமுகவா வந்து ஆணையிடு அண்டசராசர பூதகணங்களுக்கு பெருகும் நலம் வாய்க்க பேதமையை தான்மாய்க்க பரமனின் மகனே பார்வதி சுதனே வருவாய் அய்யா [ சுதனே சுந்தரவதனே கோடிசூர்ய பிரகாச சூழ்ஒளியே சுகபர ஞானச்சுடரே வதனம் ஆறும் வாலறிவாய் வேல்துணையாய் வந்தெமை காப்பாய் வாலை திருக்குமரா [17: ஓம் சரவணபவனே சண்முகத்தரசே சாம்பவி புத்திரா சக்திவேலாயுதா பரவெளி தத்துவா சேய் கடவுள் பேரொளி கமலபாதச் சரணே : சரணென்று வந்து உமை சார்ந்த அடியவர்க்கு சத்ரு சம்ஹாரியாய் சதாகாலமும் காக்கும் பூரணபூத வேதாள இடும்பகண சேனையானே பொன்னடி சரணே பாதச்சரணே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.