வியாழன், 4 ஜூலை, 2019

ஞான சூரிய குரவஞ்சி


பரம்பரை வழியாய் வந்த பதமதைப் பற்றி மோன
வரமதை நல்கும் கவிக்கு வான் பொருள் தானே காப்பாய்
உரமாகி நின்று உயிர்க்கும் ஒளிமய உச்சிக்கனலே
சிரமதன் காப்பு ஞான சூரிய கவிக்கும் இதுவே

சற்குரு மேன்மைக்கு சாட்சி அருளும் என் குருவே
அந்த அற்புதம் சொல்லிட அட்சரம் இல்லை என் சிஷ்யா
அப்புறம் எப்படி ஆதி அறிவதென் குருவே
அந்த செப்படி வித்தைக்கு சென்மம் எடுக்கணும் சிஷ்யா
சென்மம் எடுப்பதை செப்புவதாரெந்தன் குருவே
உன்றன் கன்மபலன் அந்த கற்பக்குழியறை சிஷ்யா
கற்பத்தில் வந்தது கர்மத்தினாலோ என்குருவே
அந்த மர்மத்தை சொல்வதே மாமறையானது சிஷ்யா
மாமறைநூலில் மறைந்ததை சொல்க என்குருவே
அந்த பூமறைதான் இந்த பூமியும் வானமும் சிஷ்யா
பூவெனச்சொல்லிடும் பொக்கிஷம் காட்டும் என்குருவே
ஞானப்பாவினை பார்வை பதித்திடக்காணும் என் சிஷ்யா
பார்வையில் எப்படி பக்குவம் தோன்றிடும் குருவே
அந்த சீர் சொல்லும் சூரிய குருவஞ்சி கேளடா சிஷ்யா
சூரிய குருவஞ்சி சொல்லியதாரெந்தன் குருவே
உன்றன் சூரியச்சந்திர சோதியின் நாதமே சிஷ்யா
சோதிக்குள் நாதத்து சூட்சுமம் சொல்க என்குருவே
அந்தசேதிக்கு முன்உன்றன் செம்பொருள் சொல்கின்றேன் சிஷ்யா
செம்பொருள் சொல்லி என்சித்தம் தெளியவை குருவே
அந்த ஐம்பூத வண்ணத்து அற்புதம் கேளென்றன் சிஷ்யா
வண்ணத்தைச்சொல்லி என்வாசலைக் காட்டும் என்குருவே
உன்றன் எண்ணத்தில் ஊறிய ஈரொளியானது சிஷ்யா
ஈரொளியாகிய இன்பம் உணர்த்துக குருவே
அது பேரொளியாகிய பிரம்மப் பிரகாசமே சிஷ்யா
பிரமத்தில் வைத்துயர் பிரம்மோபதேசம் தா குருவே
அந்த பிரமக்கலை இரு கண்மணியானதே சிஷ்யா
கண்மணி பிரமம் என்றானது எப்படி குருவே
அது விண்மணி சூத்திர வேதஒளிமையம் சிஷ்யா
வேதஒளிமைய மேன்மை அருள்க என்குருவே
அது நாதம் உணர்ந்தபின் நன்கு விளங்கிடும் சிஷ்யா
நாதமயத்தினை நல்கிடவேண்டும் என் குருவே
ஞானப் பாதத்தை பார்த்திரு பக்குவம் தோன்றிடும் சிஷ்யா
பாதத்தில் நாதத்தை பார்ப்பது எப்படி குருவே
அது போதத்தில் ஊறிய ஞானசுகமயம் சிஷ்யா
நாதக்கலை என்னும் நற்கலை சொல்க என்குருவே
அது நாதவிந்து நின்ற ஒளிமய தீட்ஷையே சிஷ்யா
ஒளிமய தீட்ஷையுள் நாதம் விளங்குமா குருவே
தீட்ஷை ஒளியுள்ஒளிந்துள்ள ஒளியின் உயிர்நிலை சிஷ்யா
ஒளியின் உயிர்நிலை உன்னதம் காட்டும் என்குருவே
அது ஒளிஒளி மையத்து உட்கனல் ரகசியம் சிஷ்யா
உட்கனல் என்பதன் உண்மை உரைத்தருள் குருவே
அது கட்செவியாகிய கண்மணி தீண்டலே சிஷ்யா
தீண்டிடும்போதுயர் நாதம் விளங்குமா குருவே
அங்கு தீண்டிடதீண்டிட தீங்கனல் நாதமே சிஷ்யா
தீங்கனல் நாதத்தை தரிசிக்கும் தலமேது குருவே
அது பூக்குளமாகிய பொன்னொளி மையமே சிஷ்யா
ஒளிமையம் என்பது கண்மணியல்லவோ குருவே
அங்கு ஒளியென ஓங்கிய நாதத்தைப் பார்த்திரு சிஷ்யா
நாதத்தைப் பார்ப்பதா கேட்பதா சொல்க என்குருவே
ஞான நாதத்தைப் பார்ப்பதே நடுமணி சத்தியம் சிஷ்யா
கேட்கிற நாதத்தின் கேள்வி நிலை என்ன குருவே
செவி கேட்கும் புறநிலை கீழ்நிலை மாய்கையே சிஷ்யா
பார்க்கிற நாதத்தின் பரநிலை சொல்க என்குருவே
அது கூர்நெறி அகநிலை குருநிலை மாஅருள் சிஷ்யா
குருநிலை என்பதன் கூற்றை உணர்த்துக குருவே
உன்றன் கருநிலை காட்டிடும் காருண்யமாநிலை சிஷ்யா
காருண்யமானதன் காருண்யம் எதென்றன் குருவே
அது பூரண மௌனமனோண்மணி யானதென் சிஷ்யா
மௌனமனோண்மணி மௌன நிலை என்ன குருவே
அந்த மௌனத்துள் மௌனமாம் மோனமனோகரம் சிஷ்யா
மோனத்தின் நாதத்துள் மூழ்கும் நிலை சொல்க குருவே
அங்கு மோனமே நாதமாம் மோன தரிசனம் சிஷ்யா
மோன தரிசனம் கண்டபின் வேறென்ன குருவே
அந்த மோனமே முத்தியும் சித்தியு மாகுமென் சிஷ்யா
முத்தியும் சித்தியும் மூடமா வேடமா குருவே
உன்றன் புத்தியே முத்திக்கு வித்தென ஆனது சிஷ்யா
புத்தியே வித்தெனில் புத்திக்கு வித்தெது குருவே
அது அத்தனின் சித்த மென்றாகிய நாடகம் சிஷ்யா
சித்தம் அவனெனில் செய்வினை எப்படி குருவே
அவன் உத்திரவே உன்றன் நல்வினை தீவினை சிஷ்யா
நல்வினை தீவினை என்றனுக் கெப்படி குருவே
அந்த நல்லவன் ஆடிடும் நர்த்தன கூத்திது சிஷ்யா
கூத்தினை செய்திடும் கூத்தனக்கோ வினை குருவே
இந்த கூத்தை உணர்கின்ற கூர்நெறி கற்கவா சிஷ்யா
அவ்வினை பற்றிடா அறிவிற்கு அறிவருள் குருவே
இங்கு எவ்வினையானாலும் எனதல்ல தென்பதே சிஷ்யா
எப்படி சாத்தியம் இப்படி வாழ்வது குருவே
அந்த வெப்பு மணிமன்ற ஔசதம் கைகொள்க சிஷ்யா
உற்ற உடல் உள்ளம் உயிர் பிணி தீருமோ குருவே
ஞான பற்றற்ற மெய்கனல் பற்றிடு விட்டிடும் சிஷ்யா
ஓட்டை உடல் வந்த உன்னதம் சொல்லுக குருவே
இந்த கோட்டைக்குள் கோமகன் நின்று சுழன்றதால் சிஷ்யா
மண் இட்டு மூடிய பாண்ட மிதல்லவோ குருவே
இதில் பொன் இட்ட புண்ணிய பூரணம் உள்ளது சிஷ்யா
பூரணம் என்பதன் பூரணம் சொல்க என்குருவே
உடல் காரணம் கொண்டதன் காரியம் தானடா சிஷ்யா
நாற்ற உடலிற்குள் நாதன் இருப்பதேன் குருவே
உடல் மாற்றத்தில் மாறாத மாற்றம் அவன்தானே சிஷ்யா
மாறாமல் நின்ற மகத்துவம் சொல்க என்குருவே
அது கூறாமல் கூறிடும் கூர்மணி தீட்ஷையே சிஷ்யா
உடலுக்கா உயிருக்கா மனதுக்கா தீட்ஷை குருவே

அந்த மடலுக்குள் மூன்றையும் ஒன்றாய் அமைப்பது சிஷ்யா
ஒன்றினுள் ஒன்றென ஒன்றிடும் ஒன்றெது குருவே
அந்த ஒன்றுதான் ஒளிமய உட்கனல் ஓர்மையே சிஷ்யா
காமகுடம் என கண்ட குடம் இதே குருவே
இது காமகுடமல்ல ஓமகுடமிதே சிஷ்யா
சாந்திதரும் சித்தி ஞான நிலையென்ன குருவே
தனல் ஏந்தும் இருவட்டப் பாதம் பிடித்திரு சிஷ்யா
பாதம் பிடித்தபின் வேதம் அடங்குமா குருவே
சர்வவேதம் அடங்கிடும் வெட்டவெளியிதே சிஷ்யா
வெட்டவெளி தனில் வட்டயிடம் எது குருவே
நான் தொட்ட இடந்தனை தொட்டு பணிந்திடு சிஷ்யா
தொட்டுத் தொடர்ந்திட தொல்லை அழியுமோ குருவே
உயிர் சுட்டபழச்சுவை சூழ்வினை தீர்ந்திடும் சிஷ்யா
சூழ்வினை தீர்ந்தபின் ஜீவன் நிலையென்ன குருவே
அது வாலறிவாகிய வானம் அடைந்திடும் சிஷ்யா
வானம் அடைந்தபின் சோதிநிலை என்ன குருவே
அது மோனமடைந்துமே மோட்ஷமதாகிடும் சிஷ்யா
மோட்ஷமதாகிய முக்து நிலை என்ன குருவே
உயிர்சாக்ஷி கடந்திடும் சர்வக்ஞரூபமே சிஷ்யா
சர்வக்ஞம் என்பது ரூபம்அரூபமா குருவே
அந்த தர்மநிலை இருமாநிலை அற்றதே சிஷ்யா
வெற்றிடமாகிய வெற்றி நிலை என்ன குருவே
ஒளி பற்றியும் பற்றிடா இருள்நிறைவேயது சிஷ்யா
இருள்பரிபூரணம் என்பது உண்மையா குருவே
இங்கு இருப்பது இருப்பென இருள்மயமாவது சிஷ்யா
ஒளிஒளி தாண்டிய உயிர் நினைப்பேதிங்கு குருவே
அது ஒளிஒளிக்கிடம்தரும் உன்னத இருளருள் சிஷ்யா
அண்டசராசரம் ஆளும் நினைப்பெது குருவே
அது அண்டம்பிண்டம் நின்ற ஆதியிருள்மயம் சிஷ்யா
எட்டெட்டு சூத்திரம் எட்டுவதெப்படி குருவே
உன்னை தொட்டிட்ட கேள்வியை விட்டிட கூடிடும் சிஷ்யா
ஆணவம் விட்டது ஆணவம் விட்டது குருவே
என்றன் மாணவன் நீயல்ல மாகுரு சாமியே சரணே
ஏக சமநிலை பெற்ற அதிசயம் சரணே
என்றன் தாகத்திற்கு தண்ணீர் ஞானகுருவஞ்சி சரணே
நீர் தந்த சூரிய குருவஞ்சி அமுதமே சரணே
இந்த சீர்தந்த செம்பொருள் சூரிய மெய்க்கவி சரணே
மாரண சாட்சிக்கு மெய்ப்பொருள் சாட்சியே சரணே
என்னை பூரணமாக்கிய பூரண பூவிதழ் சரணே
சற்குரு சாற்றிய சத்தியம் சத்தியம் சரணே

இங்கு உற்ற பிறவியின் மெய்ப்பயன் குருவஞ்சி சரணே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.