வியாழன், 4 ஜூலை, 2019

ஸ்ரீ அகத்திய பெருமான் போற்றி

  ஓம் அகத்தீசாய நமஹ:

ஓம் சத்குருவே போற்றி
ஓம் குறுமுனியே போற்றி
ஓம் அகத்தீசா போற்றி
ஓம் ஒளிரூபமே போற்றி
ஓம் விபூதி பிரியரே போற்றி
ஓம் பொதிகை வேந்தே போற்றி
ஓம் இடரைக் களைவாய் போற்றி
ஓம் அருள் செய்பவரே போற்றி
ஓம் அட்டமா சித்தி அடைந்தவரே போற்றி
ஓம் தீபச்சுடரே போற்றி
ஓம் சிவ சக்தி பிரியரே போற்றீ
ஓம் குறுவடி மகனே போற்றி
ஓம் லோபமுத்திரை மணாளரே போற்றி
ஓம் அகத்தீயை அகற்றுபவரே போற்றி
ஓம் சொற்பெரிய புண்ணியரே போற்றி
ஓம் கமண்டலதாரியே போற்றி
ஓம் ஆறுமுகரின் சீடரே போற்றி
ஓம் செந்தமிழ் முனியே போற்றி
ஓம் கற்பனைக்கெட்டா அற்புதமே போற்றி
ஓம் ருத்ராட்ச விரும்பியே போற்றி
ஓம் காவி ஆடை தரித்தோய் போற்றி
ஓம் முற்றுணர்ந்த மூர்த்தியே போற்றி
ஓம் மறை நான்கும் அறிந்தோய் போற்றி
ஓம் ஆதி சக்தியின் அன்பா போற்றி
ஓம் வீடுபேறு அளிப்பாய் போற்றி
ஓம் ஞான ரூபமே போற்றி
ஓம் ஈடில்லா பெருமையரே போற்றி
ஓம் சருவாந்தர் யாமியே போற்றி
ஓம் காவேரி அன்னை கருவம் களைந்தோய் போற்றி
ஓம் தத்துவமானவரே போற்றி
ஓம் குற்றாலத்து பெருமகானே  போற்றி
ஓம் மங்களம் அளிப்பவரே போற்றி
ஓம் அண்டமாறும் வேந்தே போற்றி
ஓம் கருவம் அகற்றுபவரே போற்றி
ஓம் மந்திரத்தின் சொரூபமே போற்றி
ஓம் மாசற்ற மணியே போற்றி
ஓம் பிறவிப் பிணிக்கோர் மருந்தே போற்றி
ஓம் நற்கதி அருள்வாய் போற்றி
ஓம் நறுமண விரும்பியே போற்றி
ஓம் ஈசனுக்கொப்பானோய் போற்றி
ஓம் இனிமையுடையோய் போற்றி
ஓம் இன்சொல்லில் உறைபவரே போற்றி
ஓம் தயாளம் நிறைந்தவரே போற்றி
ஓம் தருமத்தின்  வடிவே போற்றி
ஓம் தன்னிகரில்லா புண்ணியா போற்றி
ஓம் கும்ப வடிவானவனே போற்றி
ஓம் நீதி வழங்குபவனே போற்றி
ஓம் சீவன்கள் துயர் களைவாய் போற்றி
ஓம் புகழுருவே போற்றி
ஓம் புலமைக்கு வித்தே போற்றி
ஓம் புன்முறுவல் முகத்தோய் போற்றி
ஓம் பரமானந்தமே போற்றி
ஓம் தில்லை நடனம் கண்டோய் போற்றி
ஓம் கரை கண்டோரே போற்றி
ஓம் எண்திக்கும் பணிந்தோரே போற்றி
ஓம் புலத்தியருக்கு ஆசி தந்தோய் போற்றி
ஓம் நல்வாழ்வு அளிப்போய் போற்றி
ஓம் பிரணவத்தில் கலந்தோய் போற்றி
ஓம் பகை பஞ்சம் முறிப்போரே போற்றி
ஓம நீதி வழி நிற்போரே போற்றி
ஓம் விந்தியனின் கருவமழித்தோய் போற்றி
ஓம் பார்வதி யுமை பர நேசரே போற்றி
ஓம் பரிதி நிகர் ஒளியே போற்றி
ஓம் இசையில் இலங்கை வேந்தனை வென்றோய் போற்றி
ஓம் வாதத்தில் வென்றோய் போற்றி
ஓம் வாதாபியை சீரணமாக்கி அழித்தோய் போற்றி
ஓம் கலைமகளின் அருள் பெற்றோய் போற்றி
ஓம் ஆதித்ய இருதயம் உரைத்தோய் போற்றி
ஓம் புத்துணர்வு அளிக்கும் சொல்லே போற்றி
ஓம் காளியுமை ஆசி பெற்றோய் போற்றி
ஓம் தந்தையும் தாயுமானோய் போற்றி
ஓம் ஆதி ரூபமே ஆனாய் போற்றி
ஓம் எளியோருக்கும் எளியோரே போற்றி
ஓம் அடியார்க்கு அருள்வாய் போற்றி
ஓம் வல்லமை படைத்தவரே போற்றி
ஓம் பாண்டி நாட்டில் தமிழ் வளர்த்தோய் போற்றி
ஓம் சோதிட ஆசனாகியோய் போற்றி
ஓம் சச்சிதானந்தம் அருள்வாய் போற்றி
ஓம் நெஞ்சில் நீக்கமற நிறைந்தோய் போற்றி
ஓம் தஞ்சமடைந்தோரை காப்பாய் போற்றி
ஓம் வித்தையின் கடலே போற்றி
ஓம் காட்சிக்கினியோய் போற்றி
ஓம் கரும்பின் சுவையே போற்றி
ஓம் நற்சுகம் தருவோய் போற்றி
ஓம் சிற்சபை கண்டோய் போற்றி
ஓம் யீர்நவத்தில் முதல்வனே போற்றி
ஓம் நித்ய செல்வம் அளிப்போய் போற்றி
ஓம் பிறவிப் பிணி அறுப்போய் போற்றி
ஓம் சிவதத்துவம் மலரச் செய்தோய் போற்றி
ஓம் தன்னடக்கம் பெற்றோய் போற்றி
ஓம் நன்னெறி உரைத்திட்டோய் போற்றி
ஓம் மருத்துவ மாமணியே போற்றி
ஓம் பஞ்சாட்சர ரூபமே போற்றி
ஓம் பரிவு காட்டுபவரே போற்றி
ஓம் சுந்தர நல்மனத்தோய் போற்றி
ஓம் நீள் முடி தரித்தோய் போற்றி
ஓம் வெற்றியை அருள்வோய் போற்றி
ஓம் தீட்சிதம் அருள்வோய் போற்றி
ஓம் மகிமையை அருள்வோய் போற்றி
ஓம் அன்பே சிவம் என கண்டோய் போற்றி
ஓம் சாந்தத்தை அளிப்பாய் போற்றி
ஒம் எல்லையில்லா கருணையே போற்றி
ஓம் யுகங்கள் பல கண்டாய் போற்றி
ஓம் தேவரும் வணங்கும் தேவே போற்றி
ஓம் பெரு வழி அருள்வோய் போற்றி
ஓம் அல்லல் அறுப்போய் போற்றி
ஓம் அருட்பெருந்தீயே போற்றி
ஓம் அமுதே ஆனாய் போற்றி
ஓம் ஒன்றே பல் பொருள் ஆனாய் போற்றி
ஓம் இன்பதுன்பம் கடந்தோய் போற்றி
ஓம் நித்யமடைந்தாய் போற்றி
ஓம் அகத்தியர் அன்னை லோபாமித்ரை திருவடிகள் போற்றி போற்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.