சனி, 20 டிசம்பர், 2014

Siddha Medicine of Bhrigu Guru Pooja by Agathiar thru Nandi


For the Bhrigu Guru-Pooja on 2nd January-2015 following is the Nandi on Medicine per Agasthiar Vaaku

2nd January - பிருகு குரு பூசைக்காக நந்திதேவர், அகத்தியரின் மருந்து வாக்கு அருளல். அனைவரும் வந்து மருந்தாகிய அமிர்தத்தை உட்கொள்ள அழைகின்றோம்



 


 
ஓங்கவே பிரிகுமுனி ஆசியும் தான் 
ஒரு சேர சித்தர்களின் ஆசியும் உண்டு 
பாங்குடனே கைபாகங்கள் செய் பாகங்கள் 
பக்குவமாய் காட்டுவித்தோம் மருந்தின் அளவை 
 
அளவுபடி என்சகமாம் சகத்திரம் குன்றா 
அழகான கமலமது திண்ணத் தொப்ப 
நாளதனில் கும்பமுனி வாக்கு சொல்ல 
நலமுடைய மரகதமும் மொட்டு விட்டு 
 
விட்டதொரு இதழ்தானே சிதைத்து சுண்ணம்
விதிப்படியே எண்மரக்கால் இரண்டும் நெல்லி 
தாட்டிகமாய் விதைசுத்தி சுண்ணம் ஆக்கி 
தஞ்சமென பலமளவு தூக்களவு 
 
அளவுமுறை பிடிநூறாம் அளவில் வாணி 
அத்துடனே இயற்கையதாம் மதுர பண்டம் 
தெள்ளவே சர்க்கரையும் தாள வெல்லம் 
தகும் அழகாய் ஓர் பகுதி கலவை செய்து 
 
செய்துமே மூன்றுப்படி அளவில் நெய்யும் 
சேர்த்துமே நலம் மதுரமது இத்துடனே 
மெய்யாக குரு மிளகும் சுக்குசுண்ணம் 
மருந்தான அரத்தையுடன் சீரகம் சீர் 
 
சீர்படுத்தி சுகந்தவேர் நீரிநோடும் 
சிவசிவமே குளிகைநலம் மழலையற்கே 
நேர்த்திபட பாகுவகை உயர்வாய் கூட்டி 
நல்விதமாய் ஒர்படிக்கு மேலாய் குளிகை 
 
மேலான ஓர்பகுதி நீரும் நன்று 
மங்கலமாய் குருவிழா பொலிவும் காண 
நிலத்தோர்கள் அதிசயிக்க வண்ணம் அப்பா 
நிர்மலமாய் சமதர்ம நியதி படி

வெள்ளி, 17 அக்டோபர், 2014

Naadi readings on -குரு பிருகு-மகரிஷி-திருவிழா (2015)-Jan2nd   maruderi


இந்த பிருகு மகரிஷி குரு திருவிழா (2015) சித்தரிஷிகள் ஆசி

Guru Bhrigu Maharishi is an amsam of Rudhran, Perumal and Brahma. It is very rare to see a siddhaguru who is associated with all Tri-moorthy. This blogs covers on what Lord Nandidevar, Suga Brahmar, Aghora Veerabhandra, Brahma-Saraswathi and Veda Vyasar have to say about Gurumuni Bhrigu nathar and the Pooja day (Rohini of Dhanur - 2nd Jan-2015). We believe all of you will reach there on this day after seeing the messages of great sages below. 



காட்டவே ஈசனார் தன் குணத்தில்
  குருவாக அவதரிப்பார் பிருகு அம்சம்
சூட்சமாய் மன மாயை களிப்பும் நீங்கி
  சுக மளிக்க ஏகாந்த மார்கம் ஒன்றே

Thus Easunaar (Lord Shiva) with his characteristics
    Takes avatar of guru as Bhrigu Amsam
Using Sookshma helps us win  mind maya and desire
    And provide bliss with Ekantha maarga   -------- Lord Nandi


ஞானமதின் நிலை தொட்ட பிரம்ம மைந்தன்
   ஞாலமதில் தனது புகழ் பரிமளிக்க
வாணியவள் அம்சம்தாய் எழந்து அருளி
    வாகீஸ்வரி தன் மைந்தன் பொருட்டாசி 

Guru in peak of gnana is Brahma's son
   for his fame to grow with Vividness
Ascends as Saraswathi's amsam
   The Vageeswari who blesses her son (Bhrigu)   ----Brahma-Saraswathi 

வாக்கு இயம்ப பூரணமாய் மகிழ்ச்சி கொண்டு
   வேதமதின் வித்தான வம்ச மூத்தோன்
மிக்கவே கலிதர்மம் காக்க மீண்டும்
   மார்கமதை அருளிசெய்த பிதாமகன் தான்

With complete happiness I (Suga-brahma Rishi ) express my verses
  On the eldest of sages (Bhrigu) the seed of Vedha
Has come again to guard dharma of Kaliyuga
   Who shows us the-path as Pithamagan (father for paths)   -    Suga-brahma Rishi

தான் என்ற  மனம் இயற்றும் சூச்சமத்தை
தாரணியில் முன்னுணர்ந்த எண்ணம் முதலாய்
தன் சிந்தை அறிந்து அபயம் அளிக்கும்
தச பிறப்பும் அவதாரம் கொண்ட மாலோன்

The mind that builds ego and vanity
   with thoughts filled for ages and births
He (Bhrigu) blesses us with ability to deal without fear
  The ten births avatar of lord Maalan  (Thirumal)  -  Suga-brahma Rishi

மாலனின் அம்சமாய் நின்ற சோதி
   மாதவத்தோர் ஏற்றும் தீர்க்க ஞானி
கலியதில் அவலத்தை வேர் அறுக்கும்
   குருபிதாவை அந்நாளில் வணங்கி நிற்போம்

 As Maalan's Amsam one who stood as Jyothi
   Revered sages too pay obeisance to this strong Gnani (Bhrigu)
 Who in Kaliyuga removes the roots of pains and sins
   On gurupuja (2nd Jan-2015) O' father of paths we pay respects to you . - Suga-brahma Rishi     
வணங்கியே அகோரனும் வீர பத்ரன்
   வாக்கதுவே அமரத்தோர் லோகம் தன்னில்
விண்ணமில்லா நடந்ததையே சிந்தித்து ஓங்கி
   விதி தர்மம் மாறாத குருமுனி என்றார்

With respect Aghora Veerabhadharan
   verses from the planes of Heavens
recall the incidents with great deep thinking and understanding
  the Gurumuni who never deviates from Dharma  -   Aghora Veerabhadharan

குருமுனியே வேத தர்ம நியதிப்படி
   குரு தட்சணை  ஈந்தோர்க்கு வாக்கு மாறா
வருத்தங்கள் சோதனைகள் சபம் வந்தாலும்
   வாக்கு அதனை மாறாத சப்தவரிஷி தான்

Gurumuni per dharma of Vedas
  Doesn't deviate from his word after taking Guru dakshna
Regardless of pains, tests and curses he is
  The Saptharishi who doesn't go back on his words  -   Aghora Veerabhadharan


தானென்ற அகந்தைக்கும் இணக்கம் காட்டி
   தக்கனென்ற அகங்காரம் தர்க்கம் தன்னை
மேன்மையுள்ள ஈசனின் பெருமை தன்னை
   முடிவில்லா பெருவழியை காட்டி வித்தார்

Who cajoles ego and vanity initially
   With thakkan which is the pride and vanity
helped show the truth and power of Easwaran
   via which he showed endless divine-path to all  -   Aghora Veerabhadharan
  

காட்டிவித்த அருள் கருணை ரிசியுமாவார்
   குருநிமித்தம் எல்லை வந்து ஆசி ஈவார்
சூட்சமங்கள் நிறைந்ததொரு பாரதத்தை
   சுகமாக செப்பியதோர் வியாசரும் தான்

A Benign rishi who showed this path
   as guru comes to boundary to bless all  -  Aghora Veerabhadharan
(i.e.,The Aghora Veerabhadra temple of hanumantapuram is close to Bhrigu Kudil- Maruderi) 

The Mahabharata which is filled with Sookshma
   who recited it with tranquility says


தான் இயம்ப கலிமாந்தர் போற்றும் வண்ணம்
   தேசமதில் உண்டாகும் மறைப்பு ஞானம்
துன்பங்கள் துட்டரால் மிலேச்சர் தன்னால்
   தோன்றும் வினை அகற்றிடவே மாந்தர்க்கு ஆசி

Says in a way the people of Kaliyuga deeply praise
   When on world the Gnana gets hidden and
When good ones suffer from dangerous people and criminals
  He blesses and removes these Karma with ease                    --   Veda Vyasa


ஆசிபட பேரொளியில் பிறந்த வரே
    அகம்புறம் சோம ஒளி ததும்பி நின்ற
மாசில்லா திருஞான குன்றே உந்தன்
    மலரடியை போற்றுகின்றோம் என்று செப்பி

 O' the one born of supreme light with blessings
    filled inside-out in full with the gracious light of Soma (Moon)
As flawless mount peak of great Gnana
    my obeisance to lotus feet - thou shall we say      --   Veda Vyasa


செப்பியே ஒளியேற்ற கிரக சுடர்கள்
     சங்கமித்து அணுக்குள்ளும் ஆடும் அய்யன்
இப்பிறவி சித்தரேல்லாம் ஓர் ஒளியில் தோன்றி
     ஏகாந்தநிலை ஆடல் கண்டோர் எல்லாம்

Say and light Agandam then unites Jyothi radiance of nine planets
   Together in Agandan and inside Atom dances the Ayyan (Natrajar)
The Siddhas all join together in this Aganda Jyothi
   who get to see this dance go to Ekaantha state --   Veda Vyasa


எல்லோர்க்கும் சன்மார்க்க நிதி ஒப்பாய்
     இருளென்ற நிலை போக்கி குருவின் தீட்சை
ஆல் போல தழைத்து ஒங்க அருளும் செய்தார்
     அப்பனே ஆசிரம நியதி சொல்வோம்

To all who have darshan of this Jyothi is equal to Sanmaarga nithi (true margam)
   That drives out darkness with Deeksha (Deetchai) of Guru
The blessings is to grow and have rooted growth like Banyan tree
   Now let me tell about Rules of Ashram ---- --   Veda Vyasa


தொட்டதொரு இருடிவர்க்க மூத்த ஆசான்
    தரணியிலே யுகசேவை தொடங்க வேண்டி
ஆட்கொண்ட மானச சீவன் நிற்கும்
    அதிசிறப்பாய் சித்தம் கொண்டார்

The eldest sage (Bhrigu Maharishi) of Irudis
    In this world to start his service in Kaliyuga
Comes and Stands in Maanasa seevan  (In Maruderi)
  Who has made his chittam exceptional for this place  -  Guru Nandidevar

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

ஒரு மஹா மூலிகை ( கீழாநெல்லி )
கீழா நெல்லி ( PHYLLANTHUS – NIRURI )
இந்தக் கீழா நெல்லி இலைக்குக் கீழ் காய் காய்ப்பதால் கீழ்காய் நெல்லி என்றழைக்கப்பட்டு பின்னாளில் கீழ் வாய் நெல்லி என்றும் கீழா நெல்லி என்றும் அழைக்கப்படுகிறது.
இது அஷ்ட கர்ம மூலிகைகளில் ஒன்று.இது மாந்தீரீக கர்மங்களில் மையோட்டம் பார்க்கும் போது வெற்றிலையில் கீழாநெல்லிச் சாறு பூசி அஞ்சனம் தடவிப் பார்க்க ஈரேழு பதினான்கு லோகங்களையும் காணலாம்.
மேலும் யாராவது கர்ப்பிணிப் பெண்கள் நம் வீட்டில் இருந்தால் அவர்கள் பெயரை ஒரு மஞ்சள் தடவிய துண்டுச் சீட்டில் எழுதி மஞ்சள் நூலில் கட்டி அவர்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று கீழா நெல்லி செடிக்கு காப்பு கட்டி தூப தீபம் காட்டி பூஜை செய்து அப்படியே விட்டு வைக்க வேண்டும்.பிறகு அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி எடுக்கும் போது அந்த கீழா நெல்லிச் செடியை நசி மசி என்று மந்திரம் சொல்லி தண்ணீர் ஊற்றி வேர் அறாமல் பிடுங்கி எடுத்து வந்து அந்தப் பெண்ணின் இடது கால் பெரு விரலில் கீழாநெல்லி வேர் படும்படி கட்ட சுகப் பிரசவம் ஆகும்.
பல்வலித்தால் காலையில் கீழா நெல்லியை வேருடன் பிடுங்கி தலைகீழாய் வேர் மேலும் இலைப் பகுதி கீழுமாக நட்டு வைத்து ,மாலையில் மீண்டும் அதை நேராய் நட்டு வைக்க பல்வலி குணமாகும் என்று மூலிகை ஜால ரத்தினம் கூறுகிறது .
மஞ்சள் காமாலைக்கு கீழா நெல்லியையும் , சின்ன வெங்காயம் , சீரகம் , அரைத்து மோரில் கொடுக்க , மூன்று நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும் . இதே மருந்தை பாராசிட்டமால் போட்டு கல்லீரலும் மண்ணீரலும் கெட்டுப் போன நிலையில் இருப்பவர்கள் சாப்பிட்டால் கல்லீரல் மண்ணீரல் வீக்கங்கள் சரியாகி நலம் பெறுவர்.
கிராமத்தில் ஒரு பேச்சு வழக்கில் சொல்வார்கள்.“எனக்கு இந்த கொடுமையான விடயத்தைக் கேட்கும் போது என்னுடைய ஈரக் கொலையெல்லாம் பதறுகிறது “ என்பார்கள். அதாவது அதிர்ச்சி , கவலை , பயம் இவற்றில் ஈரக்கொலை என்றழைக்கப்படும் கல்லீரலும் மண்ணீரலும் பாதிக்கப்படுகின்றன. இவற்றை சர்வ சாதாரணமாக சரி செய்யும் கீழா நெல்லி ஒரு அற்புத மூலிகை.
சீதமதி பித்த விடஞ் செவ்விழியி னோய்க் கூட்டம்
பூதமொடு பேயிரத்தப் போக்குகளும் -பூதலத்துட்
டாழ்வாய்ப் பணிந்தேகுந் தப்பாது நற்புலத்துக்
கீழ்வா யெனு நெல்லிக்கே!
- குணபாடம் -
கீழா நெல்லிக் குணந்தான் கேளாய் மது மேகந்
தாழாக்கா மாலைகளைச் சண்ணுந்தா – தேனழலுந்
தொக்கினனலுந் தொலைக்குந் தொன்மேகம் போக்கிவிடுத்
தக்கவிர ணங்கெடுக்குந் தான்.
கீழா நெல்லிக்கு ஆமக் கட்டு , அக்கினி , கீடவிஷம் , நேத்திர ரோகங்கள் ( கண் சம்பந்தமான ரோகங்கள் ) , பூத முதலிய சங்கை தோஷம் ( பேய் பிடித்தவர்கள் குணமாவார்கள் ), ரத்தாதி சாரம் , மதுப் பிரமேக மூத்திரம் ( சர்க்கரை வியாதி ) , காமாலை ( மஞ்சட்காமாலை ,ஊது காமாலை , மற்றும் பல காமாலைகளை குணமாக்கும் ) , சப்த தாது சுரம் , சரும தாது வெப்பம் , நாட்பட்ட மேகப் புண் ஆகிய இவை போகும் .
செய்கை:- மூத்திர வர்த்தனகாரி ( DIURETIC ) , சங்கோசனகாரி , சோபா நாசினி , சீதளகாரி.
கீழ்வாய் நெல்லிக் கற்கம்:- இதன் சமூலத்தை ( முழுச் செடியும் வேர் உட்பட ) அரைத்து ஒரு கொட்டைப் பாக்குப் பிரமாணம் பசுவின் பாலில் கலக்கிச் சாப்பிட்டு வர சோகை , காமாலை , பாண்டு , வாத பித்த ரோகங்கள் குணமாகும் .இரத்தம் அதிகப்படும்.கண் குளிரும் .
ஈரலில் எந்தெந்த மூலிகைகள் வேலை செய்யுமோ அவை கண்களிலும் வேலை செய்யும். எனவே கண் பார்வைக் குறைவையும் கீழா நெல்லி போக்கும்.காரணமற்ற கவலை கவலையில்லையே என்ற கவலை போன்றவை ஈரல் கெட்டுப் போன நிலையைக் காட்டுவன. அவற்றை இந்த கீழா நெல்லி போக்கும்.எனவே மனம் சம்பந்தமான விடயங்களில் மிக அற்புதமாக வேலை செய்யும்.
காமாலைக் கியாழம்:- கீழா நெல்லி , கரிசலாங்கண்ணி , பேய்ப் புடல் , வெண்மிளகு , சோம்பு , வில்வ வேர் , வகைக்குப் பலம் 1/4 வீதம் ( 8.75 கிராம் ) , வீதம் இடித்து ஒரு குடுவையில் போட்டு 1/2 படி தண்ணீர் விட்டு 1/16 படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு 30 மில்லி வீதம் 3 முதல் 5 நாட்கள் வரை உட்கொள்ள பாண்டு , சோகை , காமாலை முதலிய ரோகங்கள் போகும்.
உடலின் நோய்த் தொற்று நீக்கும் துளசி
எங்கும் எளிதாகக் கிடைக்கும் துளசி இலையில் மகத்துவங்கள் ஏராளம். ஆரோக்கியமாக வாழ துளசிச் இலையை தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் ஏதும் வராது. ஜீரண சக்தியும், நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.
துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் உடலில் ஏற்பட்ட படைச்சொரி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து சாப்பிட்டு வர வ...ேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.
வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்
சித்த மருத்துத்தில் பூவரசம் பூக்கள்
பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இர...ண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.
சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிடவேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது. மூட்டு வீக்கம் வயதான காலத்தில் மூட்டுப் பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சமஅளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, மூட்டு வீக்கங்கள் மேல் பூசிவர வீக்கம் குணமடையும்.

kundalini yogam

அது என்ன குண்டலினி..?
யோக மார்கத்தில் இருக்கும் ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்தவொரு வார்த்தையை உபயோகிக்காமல் இருக்க முடியாது. இந்து மதத்தில் மிக மு...க்கிய அங்கமாக “யோகம்” இருக்கிறது. அடிப்படையான உயிராற்றல் அல்லது உயிர் சக்தியை குண்டலினி என்பார்கள். யோகா மற்றும் தியானங்களில் திளைத்தவர்கள் அதன் சக்தியையும் மேன்மையையும் அறிவார்கள்.
இந்து மதத்தில் பாம்பு பெரும்பான்மையான இடங்களில் வணங்கப்படுகிறது. கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்களில் “சிலை”ப் படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம். ஒரு பாம்பு அசையாமல் இருக்கும்போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர வென்று ஓடும்போதுதான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினியும் இந்தப் பாம்பு போன்றதுதான். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும்போதுதான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்துவமும் நமக்குப் புரியும். குண்டலினியை எழுப்பினால் என்ன செய்ய முடியும் என்று சொல்வதற்கு முன் மனித உடலில் உள்ள ஆற்றல் மையங்களைப் பற்றிச் சொல்வது அவசியமாகிறது.
சாதாரணமாக மனிதன் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. அது என்ன உணவாக இருந்தாலும் அதிலுள்ள புரதம், கொழுப்பு எதுவாயுனும் இறுதியில் பிராண சக்தியாக மாற்றப்படுகிறது. இந்தப் பிராண சக்தியே வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. (விரிவாக இதை எழுதினால் மனித உடலியல் பற்றிய கட்டுரையாகிவிடும் என்பதனால் சுருக்கமாக முடித்துவிட்டேன்.)
இந்தப் பிராண சக்தி மனித உடலில் உள்ள சுமார் 70000 நாடிகள் வழியாகப் பாய்கிறது. இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு முக்கிய மைய நாடிகளில் இணைகிறது. இவற்றையே மனித உடலில் ஏழு சக்கரங்களாக சொல்லப்பட்டுள்ளது. இவையே ஆற்றல் மையங்கள். (கட்டுரையில் ஆற்றல் மையம் என்றாலும் சக்கரம் என்றாலும் ஒரே பொருளாகக் கருத வேண்டுகிறேன்.) இந்த ஏழு சக்கரங்கள்தான் ஒவ்வொரு மனிதனின் செயல்கள், சாதனைகள், சாதகங்கள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கின்றன. மனித உடலில் உள்ள இந்த ஏழு சக்கரங்களையும் ஒவ்வொன்றாகக் கீழிருந்து மேலாகக் காண்போம்.
முதலில் மூலாதாரம்.
இது பிறப்புறுப்புக்கும் ஆசன வாய்க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு அனுபவம் மற்றும் தகவல் சேகரிப்பு ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்ட நிலையில் உள்ள ஒரு மனிதன், உணவு, உறக்கத்தில் அதிக விருப்பம் கொண்டவனாக இருப்பான். இந்த மூலாதாரச் சக்கரம்தான் மனிதனின் வளர்ச்சிக்கு அடிப்படியான முக்கிய தூண்டு சக்தி ஆகும். இந்தச் சக்கரம் பஞ்ச பூதங்களில் நிலத்துக்கு நிகராகச் சொல்லப்படுகிறது.
இரண்டாவது சுவாதிஷ்டானம்.
இது பிறப்புறுப்புக்கு சற்று மேலாக அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு இன்பம் ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிக்க நாட்டம் கொள்வான். இந்தச் சக்கரம் நீர்த் தத்துவத்துக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.
மூன்றாவது மணிப்பூரகம்.
இது தொப்புளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு முயற்சி மற்றும் உழைப்பு ஆகும். மணிப்பூரகம் நன்கு தூண்டப்பட்ட மனிதன் கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான். இந்தச் சக்கரம் நெருப்புத் தத்துவத்தை பிரதிபலிக்கிறது.
நான்காவது அனாகதம்.
இது நெஞ்சுப் பகுதியில் அல்லது இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய குணங்கள் அன்பு மற்றும் படைப்பாற்றல் ஆகும். இது காற்று தத்துவத்தைக் குறிக்கிறது. (அன்பு என்றால் எல்லோரும் ஏன் நெஞ்சைத் தொடுகிறார்கள்? காதலைக் குறிக்க இதயம் ஏன் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது? சிந்திக்க நேர்கிறது.)
ஐந்தாவது விசுக்தி.
இது தொண்டைக் குழியில் அமைந்துள்ளது. ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும் இந்தச் சக்கரத்தின் முக்கிய ஆற்றல் தீமைகளை தடுத்து நிறுத்துவது ஆகும். (ஆலகால விஷம் அருந்திய சிவன் தொண்டையில் விஷம் தடுத்து நிறுத்தப்பட்டது விசுக்தி உச்ச நிலையில் தூண்டப்பட்டிருப்பதை குறிக்கவோ என்னவோ, யாருக்குத் தெரியும்?)
ஆறாவது ஆக்ஞை (அல்லது ஆக்கினை).
இது மனிதனின் புருவ மத்தியில் அமைந்துள்ளது. ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்படக் காரணமாக அமைவது இந்தச் சக்கரம்தான்.
இறுதியாக சஹஸ்ரஹாரம் (அல்லது துரியம்).
இது உச்சந்தலையில் அமைந்துள்ளது. தன்னிலை கடந்து ஆன்ம விடுதலையைக் கொடுத்து பேரானந்தத்தை அள்ளித் தருவது இந்தச் சக்கரம்தான். இந்தச் சக்கரம் தூண்டப்படுவது ஆயிரம் தாமரை ஒன்றாக மலர்வதைப் போல் சொல்லப்படுகிறது. (சிவபெருமானின் தலையில் பாம்பு இருப்பது தலையில் உள்ள சஹஸ்ரஹாரம் தூண்டப்பட்ட நிலையைக் குறிக்கவே.) (சக்கரங்களோடு சேர்த்து பஞ்சபூதத் தத்துவத்தை இங்கே விளக்க இயலாது. அதில் கேள்வி, குழப்பம் இருப்பின் பின்னாளில் விளக்கம் தரப்படும்.)
சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத்தூண்டப்படுவது இல்லை. பெரும்பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அரைகுறையாய் தூண்டப்பட்டிருப்பதிலேயே வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். வெகுசிலர்தான் நான்கு வரை வருகிறார்கள். ஏழு சக்கரங்களும் தூண்டப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம்.
இந்தக் குண்டலினியின் முக்கிய செயல்பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவதுதான். அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல குண்டலினியை எழுப்பி, சக்கரங்களைத் தூண்டும்போது மனிதனின் அளப்பறியா ஆற்றல் வெளிப்படுகிறது.
அது சரி, இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படி? அதை எழுப்ப மனிதனுக்குக் கிடைத்த அற்புதமான கருவிகள்தான் யோகாவும் தியானமும். பொதுவாகவே எல்லா யோகா மற்றும் தியானப் பயிற்சிகளும் கட்டுப்பாடற்ற ஐந்து புலன்கள், மனம் மற்றும் உணர்ச்சிகளை ஒரு நிலைக்குக் கொண்டு வர வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கொண்டு வரும்போது புலன்கள் தாண்டிய ஓர் அனுபவத்தை உணர வாய்ப்பாக அது அமைகிறது. இந்தவொரு அனுபவத்தை அடைவதே மனித வாழ்வின் இலட்சியம் என்று விவேகானந்தர் பல இடங்களில் குறிப்பிட்டதுண்டு. ‘ஆமாம், இதெல்லாம் என்ன பேச்சு? சாதரண வாழ்வுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?’ என்கிறீர்களா?
நீங்கள் பிறந்து இத்தனை வருட வாழ்வில் எப்பொழுதாவது, “நான் ஏன் பிறந்தேன்” என்று உங்களைக் கேட்டுக்கொண்டதுண்டா? கேட்டிருந்தால் பதில் கிடைத்ததா? கிடைத்த பதில் உண்மையில் முழுமையானதா? அப்பதில் முழுமை எனில் உங்கள் வாழ்வும் பரிபூரண சுகமாக முழுமையாக இருக்கும். ஆனால் பெரும்பான்மையோர்க்குக் கிடைக்கும் பதில் அறிவியலில் இருந்து கிடைத்த அரைகுறை பதிலாகத்தான் இருக்கும். அந்த பதில்கள் இம்மி அளவு கூட சுகத்தைத் தராது. ஏன் பிறந்தேன் என்பதே தெரியாமல் இருப்பதால்தான் ஏன் வாழ்கிறேன் என்று புரிவதில்லை. பெரும்பான்மை மக்கள் “பிறந்து விட்டேன்; அதனால் வாழ்கிறேன்” என்றுதான் வாழ்கிறார்கள். அதனால்தான் அவர்கள் வாழ்வை பரிபூரணமாக உணர்வதோ வாழ்வதோ இல்லை. (நீங்களும்தான்!!?)
பிறந்ததே ஏன் என்று தெரியாமல் இருப்பதால்தான் வாழ்கையை பற்றி ஒன்றும் புரிவதில்லை. சரி, பிறந்தது ஏன் என்று தெரிவதில்லை. இறுதி நிலையாவது தெளிவாகத் தெரிந்தால்தானே அதற்காக முயற்சி செய்து அதை அடைந்து வாழ்வை பரிபூரணமாக்க முடியும். இறுதி நிலை என்ன என்றாவது தெரிந்து நீங்கள் அதை அடைய முயற்சி செய்ததுண்டா? ஆதியும் (பிறப்புக்கு முன்) புரியவில்லை, அந்தமும் (இறப்புக்கு பின்) புரியவில்லை. அப்புறம் எப்படி இடைப்பட்ட வாழ்வைப் புரிந்துகொள்ள முடியும். பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உள்ளதை அறிவதே ஆன்மிகம். இதைத் தவிர வேறு எதுவும் ஆன்மிகம் ஆகாது. நீங்கள் வேறு எதிலாவது ஈடுபட்டிருந்தால் அது ஆன்மீகப் பாதைக்கான முயற்சியாகவோ / அல்லது படி நிலைகளாகவோ இருக்கலாம். உங்களுடைய இந்தக் கேள்விகளுக்கெல்லாம் யாரோ ஒருவர் பதில் சொல்லி உங்களுக்குப் புரியவைக்க முடியாது. அப்படி முயன்றால் நீங்கள் அதை வெறுமனே நம்ப முடியும் அல்லது கட்டுக்கதை என்று உதறித் தள்ளத்தான் முடியும். இந்தக் கேள்விகளுக்கு விடையுமாய் வாழ்வை பரிபூரணமாக்கும் அருமருந்தாய் மேற்சொன்ன புலன்கள் தாண்டிய அனுபவம் இருக்கும். சாதரண மனிதனுக்கும் இது சாத்தியமே. தேவை முயற்சி மட்டுமே. அதற்கான வழிமுறை குண்டலினியை எழுப்புவதே. கருவிகள் யோகாவும் தியானமும். சாதாரண வாழ்வுக்கு இது மிகத் தொலைவானது அல்ல. மிக நெருங்கியதே. அத்தகையதொரு புலன்கள் தாண்டிய அனுபவம் உங்கள் மொத்த வாழ்வையும் வேறொரு பரிமாணத்தில், பரிபூரணமான ஒன்றை அடித்தளமாகக் கொண்டு நகர்த்திச் செல்லும். இந்த, புலன்கள் தாண்டிய நிலையே, “யோகம்”. இந்த யோக நிலையையே ஆன்ம விடுதலை, ஜீவன் முக்தி, இறையோடு கலத்தல், தன்னை உணர்தல் என்று பலரும் பலவாறாகச் சொல்கிறார்கள்.
சாதரண வாழ்வுக்கு இது நெருங்கியதே என்று சொல்லியாகிவிட்டது. அது எப்படி என்றும் சொல்லி விடுகிறேன். நம் வாழ்வில் எதை அடைவதாயினும் நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்றை வைத்துத்தான் அடைய முடியும். இல்லாத ஒன்றை வைத்து எதையும் அடைய முடியாது. நம்மிடம் என்ன உள்ளது? உடல் உள்ளது, மனம் உள்ளது, உணர்ச்சி உள்ளது, எல்லாவற்றிற்கும் மேலாக உயிர் சக்தி உள்ளது. இந்த நான்கில் ஏதாவது ஒன்றின் மூலமாகத்தான் நாம் எந்தொவொரு செயலும் (கர்மா) செய்ய முடியும்.
உங்கள் உடலைப் பயன்படுத்தி செயல் செய்து யோக நிலையை அடைவது கர்ம யோகம். உங்கள் மனதைப் பயன்படுத்தி அல்லது புத்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது ஞான யோகம். உங்கள் உணர்ச்சியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது பக்தி யோகம். உங்கள் உயிர்ச் சக்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது கிரியா யோகம்.
இந்த நான்கு யோக முறைகளில் ஏதாவது ஒரு முறையில் யோக நிலையை அடைவோர் சமூத்தோடு இணைத்து இருப்பதை விரும்புவதில்லை. ஆனால் இவை நான்கையும் சரியான அளவில் கலந்து பயிற்சி பெறுபவர் சமூகத்தில் இருந்தே யோக நிலையை அடையலாம். இந்த நான்கையும் கலந்து கொடுப்பது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசப்படும். அதற்குதான், “குரு” என்பவர் தேவை. ஆக, யோக நிலை என்பது சமூக வாழ்வைத் துறந்தால்தான் அடைய முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம்.
இந்தத் தருணத்தில் யோகப் பயிற்சியை எளிமையாக வகுத்து, தொகுத்து, உலகுக்கு அளித்த யோகாவின் தந்தையாம் பதஞ்சலி முனியை வணங்கி கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

சீரடி சாய் நாதர் ஆயிரம் போற்றி

சீரடி சாய் நாதர் ஆயிரம் தத்துவ நாமம் தத்துவ சஹஸ்ரநாமம் – போற்றி (பகுதி 1) ஓம் சாயிநாதா போற்றி ஓம் ஓம் சத்குருநாதா போற்றி ஓம் ஓம் கருணை...