வியாழன், 27 மே, 2021


1.சூரியன்
                  
                  காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.
சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.

    திக்கு - கிழக்கு
    அதிதேவதை - அக்னி
    ப்ரத்யதி தேவதை - ருத்திரன்
    தலம் - சூரியனார் கோவில்
    நிறம் - சிவப்பு
    வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
    தானியம் - கோதுமை
    மலர் - செந்தாமரை , எருக்கு
    வஸ்திரம் - சிவப்பு
    ரத்தினம் - மாணிக்கம்
    அன்னம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்

2.சந்திரன்
              
                பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.
கடக ராசிக்கு அதிபதி.

    திக்கு -தென்கிழக்கு
    அதிதேவதை - ஜலம்
    ப்ரத்யதி தேவதை - கௌரி
    தலம் - திருப்பதி
    நிறம் - வெள்ளை
    வாகனம் - வெள்ளைக் குதிரை
    தானியம் - நெல்
    மலர் - வெள்ளை அரளி
    வஸ்திரம் - வெள்ளாடை
    ரத்தினம் - முத்து
    அன்னம் - தயிர் சாதம்

3 .  அங்காரகன் (செவ்வாய்)

                    இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர்.
மேஷம் , விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.

    திக்கு -தெற்கு
    அதிதேவதை - நிலமகள்
    ப்ரத்யதி தேவதை - க்ஷேத்திரபாலகர்
    தலம் - வைத்தீசுவரன் கோவில்
    நிறம் - சிவப்பு
    வாகனம் - ஆட்டுக்கிடா
    தானியம் - துவரை
    மலர் - செண்பகப்பூ, சிவப்பு அரளி
    வஸ்திரம் - சிவப்பு ஆடை
    ரத்தினம் - பவளம்
    அன்னம் - துவரம் பருப்பு பொடி சாதம்

4.புதன்

                   இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.
மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி

    திக்கு - வட கிழக்கு
    அதிதேவதை - விஷ்ணு
    ப்ரத்யதி தேவதை - நாராயணன்
    தலம் - மதுரை
    நிறம் - வெளிர் பச்சை
    வாகனம் - குதிரை
    தானியம் - பச்சைப் பயறு 
    மலர் - வெண்காந்தள்
    வஸ்திரம் - வெண்ணிற ஆடை
    ரத்தினம் - மரகதம்
    அன்னம் - பாசிப்பருப்பு பொடி சாதம்

5.குரு

             இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர்.
தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி.

    திக்கு - வடக்கு
    அதிதேவதை - பிரம்மா
    ப்ரத்யதி தேவதை - இந்திரன்
    தலம் - திருச்செந்தூர் 
    நிறம் - மஞ்சள்
    வாகனம் - மீனம்
    தானியம் - கடலை 
    வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை
    ரத்தினம் - புஷ்பராகம்
    அன்னம் - கடலைப்  பொடி சாதம் , சுண்டல்.

6.சுக்கிரன்

             இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர். சுபர். ரிஷபம்,
துலாம் ராசிகளுக்கு அதிபதி.

    திக்கு - கிழக்கு
    அதிதேவதை - இந்திராணி
    ப்ரத்யதி தேவதை - இந்திர மருத்துவன்
    தலம் - ஸ்ரீரங்கம்
    வாகனம் - முதலை
    தானியம் - மொச்சை
    மலர் - வெண் தாமரை
    வஸ்திரம் - வெள்ளாடை
    ரத்தினம் - வைரம்
    அன்னம் - மொச்சைப் பொடி சாதம் .

7.சனி

             இவர் சூரியனுடைய குமாரர். பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.
மகரம் , கும்பம் ராசிகளுக்கு அதிபதி.

    திக்கு - மேற்கு
    அதிதேவதை - யமன்
    ப்ரத்யதி தேவதை - பிரஜாபதி
    தலம் - திருநள்ளாறு
    நிறம் - கருமை
    வாகனம் - காகம்
    தானியம் - எள்
    மலர் - கருங்குவளை, வன்னி
    வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
    ரத்தினம் - நீலம்
    அன்னம் - எள்ளுப்பொடி சாதம்

8.ராகு

            இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப் படுபவர்.

    திக்கு - தென் மேற்கு
    அதிதேவதை - பசு
    ப்ரத்யதி தேவதை - பாம்பு
    தலம் - காளத்தி 
    நிறம் - கருமை
    வாகனம் - நீல சிம்மம்
    தானியம் - உளுந்து
    மலர் - மந்தாரை
    வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
    ரத்தினம் - கோமேதகம் 
    அன்னம் - உளுத்தம்பருப்புப்பொடி சாதம்

9.கேது

          இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும் , செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.

    திக்கு - வட மேற்கு
    அதிதேவதை - சித்திரகுப்தன்
    ப்ரத்யதி தேவதை - பிரமன்
    தலம் - காளத்தி 
    நிறம் - செம்மை
    வாகனம் - கழுகு
    தானியம் - கொள்ளு
    மலர் - செவ்வல்லி
    வஸ்திரம் - பல நிற ஆடை
    ரத்தினம் - வைடூரியம்
    அன்னம் - கொள்ளுப்பொடி சாதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.