வியாழன், 25 டிசம்பர், 2025

சிவ மகத்துவம்



*பேரின்பம் நல்கும் எம்பெருமானே* 


மாணிக்கவாசகர் சிவப்பரம்பொருளைக் கசிந்துருகப் பாடுகிறார்;  சிவனே இறைவன் எனப் போற்றிப் புகழ்ந்தேத்துகிறார். 


*ஈசன் அடி போற்றி!* 

*எந்தை அடி போற்றி!* 


தமக்குத் தந்தையும் தலைவனுமான சிவபெருமானே எல்லா உயிர்க்கும் தந்தையும் தலைவனும் ஆவான் எனத் தெளிவுபட எடுத்துரைக்கிறார். 


சிவனன்றிப் பிறதெய்வத்தை வணங்கி வழிபடுபவரைக் கண்டு அஞ்சுகிறார். 


உயிர்க்குச் சிவபெருமான் ஒருவனே கடவுள் என மணிவாசகர் ஓதியுணர்த்த காரணம் என்ன? 


நாம் (உயிர்) ஏன் சிவபெருமானை மட்டுமே கடவுளாகக் கொள்ள வேண்டும்? 


*ஏனெனில் சிவபெருமான் ஒருவனே உயிர்க்கு நீங்காத பேரின்பம் (முத்தி) நல்க வல்லவன்!* 


*ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!* 


சிவப்பரம்பொருள் நிலையான மெய்ப்பொருள்.


உயிரும் என்றும் உள்ள பொருள். 


அநாதி கேவலத்தில் ஆணவ அழுத்தத்தினால் உயிர் முழு அறியாமையில் இருந்தது.  அறியாமையைத் தவிர வேறொன்றும் துளியும் அறிய முடியாத நிலை. 


என்று உயிரோ அன்றே ஆணவம் உடனிருந்ததால் உயிர்க்கு ஏற்பட்ட துன்பநிலை. 


*பேராது நின்ற பெருங்கருணை பேராறே!* 


இயற்கையிலேயே அறிவு, இச்சை, செயல் உடைய உயிர் அறியாமையில் கிடக்கும் நிலைகண்டு சிவபெருமான் அவ் உயிர் அறிவு பெற்று அறியாமை நீங்கும் வண்ணம் அவ் உயிர்க்காக ஐந்தொழில் ஆற்றுகிறான். 


*ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் *அருள்தருவாய்* 

*போக்குவாய் என்னைப்* *புகுவிப்பாய் நின்தொழும்பின்* 


உயிர்க்கு அறிவு ஏற்பட வேண்டுமாயின் அஃது செயல்பட வேண்டும்.  உயிர் செயல்பட அதற்குண்டான நிலை பெற வேண்டும்.


பெருமான் உயிர்க்குத் தனு, கரணம், புவனம், போகம் ஆகியவற்றைப் படைத்துக் கொடுக்கின்றான். 


அவன் படைத்தவற்றைக் கொண்டு உயிர் குறிப்பிட்ட காலம் செயல்படும் வரை காத்தபடி இருக்கின்றான். 


இவ்வாறாக உயிருக்காகப் படைத்துக் காத்தவற்றை  அழிக்கின்றான். 


படைக்கப்பட்ட சடப்பொருளைக் கொண்டு வினை நுகரும் உயிர் பக்குவம் பெறும் பொருட்டுப் பெருமான் உயிரை உலகியலில் ஆழ்த்தச் செய்வான். தன்னை உயிர்க்குக் காட்டாது/ உயிர் உணரா வண்ணம் மறைத்துக் கொள்வான். இஃது அவனின் மறைத்தல் தொழில்.


இவ்வாறாகப் பல பிறப்புகளில் பக்குவப்பட்டுப் பெருமான் திருவருள் சார்ந்த உயிர்க்கு நீங்காதப் பேரின்பமாகிய திருவடி இன்பத்தை (முத்தி) நல்குவான். இஃது பெருமானின் அருளல் தொழிலாகும். 


இவ்வாறாக உயிர் பொருட்டுச் சிவபெருமான் ஆற்றுகின்ற ஐந்தொழிலும் அருட்செயலே! 


அநாதியே கேவலத்தில் ஆணவப் பிடியில் அல்லலுற்ற உயிரைச் சகலநிலைக்குக் (உயிரின் தற்போதைய நிலை) கொண்டு வந்த பெருமான்,  உயிர்களைச் சுத்த நிலை (உயிர் திருவருள் சார்ந்த நிலை) வரை இட்டுச் செல்லாமலா போவான்? 


*உயிர் பேரின்ப நிலை எய்தும் வரை பெருமான்* *உயிர்க்கு இடையறாது* *ஐந்தொழில் ஆற்றிய வண்ணமே இருப்பான்!* 


*எல்லா உயிர்க்கும் முத்தி நிச்சயம் உண்டு!!!* 


உயிர்க்கு இத்தகு பெருங்கருணையும் பேரிரக்கமும் காட்டும் பெருமானைக் கடவுளாகக் கொள்ளாமல் மற்றோர் தெய்வத்தைக் கடவுளாகக் கொள்வது எங்ஙனம் பொருந்தும்??!


*ஏகபெருமானை எண்ணத்தில் இருத்தி* *பிறவிப் பெருங்கடல் நீந்தி* *பேரின்பமென்னும்  கரை சேர்வோம்!!!* 


*அவனியில் புகுந்தெம்மை ஆட்கொள்ள வல்லாய் ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே!* 


கருதற்கினிய பெருங்கருணையாளனைக் கண்டு மகிழ கதிரவன் காரிருளைப் போக்கிவிட்டான்!


திருப்பள்ளியெழுச்சி 


பாடல் 10


*புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள்நாம்* 

*போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி* 

*சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று* *நோக்கித்* 

*திருப்பெருந் துறையுறை* *வாய்திரு மாலாம்* 

*அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்* 

*படவும்நின் அலர்ந்தமெய்க்*

*கருணையும் நீயும்* 

*அவனியிற் புகுந்தெமை* *ஆட்கொள்ள வல்லாய்* 

*ஆரமுதே பள்ளி* *எழுந்தருளாயே.* 


பொழிப்புரை :


திருப்பெருந்துறையில் வீற்றிருப்பவனே! திருமாலாகிய அவன், பூமியில் சென்று பிறவாமையினால் யாம் வீணாகவே நாளைக் கழிக்கின்றோம்; இந்தப் பூமியானது சிவபெருமான் நாம் உய்யும்படி அடிமை கொள்கின்ற இடமென்று பார்த்து விருப்பத்தை அடையவும், பிரமன் ஆசைப்படவும் அர்ச்சிக்கவும் உனது பரந்த உண்மையான திருவருட்சத்தியும், நீயுமாகப் பூமியில் எழுந்தருளி வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே! அருமையான அமுதம் போன்றவனே! திருப்பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.


சிவசிவ

சித்தமருத்துவ கவி

 சித்த மருத்துவம் பாடல் இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் , 

இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும், 


இப்பாடல் 

அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது


சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்

    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

 

மூளைக்கு வல்லாரை

  முடிவளர நீலிநெல்லி

ஈளைக்கு முசுமுசுக்கை

   எலும்பிற்கு இளம்பிரண்டை


பல்லுக்கு வேலாலன்

  பசிக்குசீ  ரகமிஞ்சி

கல்லீரலுக்கு  கரிசாலை

  காமாலைக்கு கீழாநெல்லி


கண்ணுக்கு நந்தியாவட்டை

  காதுக்கு சுக்குமருள்

தொண்டைக்கு அக்கரகாரம்

  தோலுக்கு அருகுவேம்பு


நரம்பிற்கு அமுக்குரான்

  நாசிக்கு நொச்சிதும்பை

உரத்திற்கு  முருங்கைப்பூ

ஊதலுக்கு நீர்முள்ளி


முகத்திற்கு சந்தனநெய் 

  மூட்டுக்கு முடக்கறுத்தான் 

அகத்திற்கு  மருதம்பட்டை

  அம்மைக்கு வேம்புமஞ்சள்


உடலுக்கு  எள்ளெண்ணை

  உணர்ச்சிக்கு  நிலப்பனை

குடலுக்கு ஆமணக்கு

   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே


கருப்பைக்கு அசோகுபட்டை

  களைப்பிற்கு சீந்திலுப்பு

குருதிக்கு அத்திப்பழம்

  குரலுக்கு  தேன்மிளகே!


விந்திற்கு ஓரிதழ்தாமரை

  வெள்ளைக்கு கற்றாழை

சிந்தைக்கு  தாமரைப்பூ

  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை


 கக்குவானுக்கு வசம்புத்தூள்

  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                           

விக்கலுக்கு மயிலிறகு

   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி


நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்

  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்

வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ  

   வெட்டைக்கு சிறுசெருப்படையே 


தீப்புண்ணா குங்கிலியவெண்ணை

  சீழ்காதுக்கு நிலவேம்பு

நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்

   நஞ்செதிர்க்க அவரிஎட்டி 


குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்

    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்

பெரும்பாட்டிற்கு அத்திநாவல்

  பெருவயிறுக்கு மூக்கிரட்டை


கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்

  கழிச்சலுக்கு தயிர்சுண்டை 

அக்கிக்கு வெண்பூசனை

  ஆண்மைக்கு பூனைக்காலி


வெண்படைக்கு பூவரசு கார்போகி

   விதைநோயா கழற்சிவிதை 

புண்படைக்கு புங்கன்சீமையகத்தி

  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு


கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்

  கரும்படை வெட்பாலைசிரட்டை

கால்சொறிக்குவெங்காரபனிநீர்

  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே


உடல்பெருக்க உளுந்துஎள்ளு

   உளம்மயக்க கஞ்சாகள்ளு

உடல்இளைக்க தேன்கொள்ளு

   உடல் மறக்க இலங்கநெய்யே


அருந்தமிழர் வாழ்வியலில்

  அன்றாடம்சிறுபிணிக்கு

அருமருந்தாய் வழங்கியதை

  அறிந்தவரை உரைத்தேனே!!

திங்கள், 8 டிசம்பர், 2025

அகத்தியர் பஜனை பாடல்கள்

 சித்தர் நாயகன் ;  தமிழ் பித்த சேவகன்

சக்தி தாயவள் ; ப்ரிய பக்த பாலகன்
அத்தி மா முகன் ; வினை தீர்த்தமானவன்
தீர்த்த மாமலை ; திவ்ய ஆர்த்தி மங்களன்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்

கர்மத்தின் பலன் என் கனவில் சொன்னவன்
புண்யமாய் நிலம் இங்கு தானம் கொண்டவன்
என்னுடன் இரு என்று சொன்ன மன்னவன்
உன்னை கைவிடேன் என்று என்னில் நின்றவன்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்

தொலைந்த ஆவினம் தனை மீட்டு வருபவன்
தோஷம் நீங்கவே வழி காட்டி தருபவன்
குழந்தை வேண்டுவோர் மனை மழலை ஆனவன்
குழந்தை வேலவன் உபதேசமானவன்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்

ஆன மாமலை அடி அடக்கி ஆண்டவன்
வான மாமலை பதி வாழும் வாமனன்
ஊனமானுடம் உணவூட்டும் தாயவன்
தாணுமாலயன் தந்த பொதிகை நாயகன்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்

உச்சி வேளையில் உரையாடும் அச்சுதன்
சச்சிதானந்தம் ஆனா ஷண்முகன் சிவன்
சித்தர்கள் கணம் புடை சூழ வந்தவன்
பக்தர்கள் மனம் உரை மாய பக்குவன்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்

பச்சை முண்டுடன் திகழ் பத்ம பூஷணன்
இச்சையின் படி வரம் நல்கும் ஈஸ்வரன்
சப்த மண்டலம் தொழும் ஸ்வஸ்தி வாசகன்
சயன ஈஸ்வரன் தீர்த்த மலையில் வாழ்பவன்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்

உப்பு தேகத்தை காய கற்பம் செய்பவன்
ஒப்பிலாததோர் தூய வாழ்வு தருபவன்
அற்புதங்களாம் அருள் ஆற்றல் உள்ளவன்
பொற்பதம் தொழும் அடியார்க்கு நல்லவன்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்

அருணன் சந்திரன் அவன் அக்னி நேத்திரம்
அன்பர் அனைவரும் அகஸ்த்ய கோத்திரம்
வருண பாலகன் கொடை வைத்ய சாஸ்திரம்
வாழ்க வாழ்கவே அகஸ்தியர் வாழும் ஆஸ்ரமம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்
குருவடி சரணம் அகஸ்தியர் திருவடி சரணம்

அம் அகஸ்தீசா
உம் அகஸ்தீசா
மம் அகஸ்தீசா
நம் அகஸ்தீசா
மம் அகஸ்தீசா
சிம் அகஸ்தீசா
வம் அகஸ்தீசா
யம் அகஸ்தீசா
ஓம் அகத்தீஸ்வராய
ஓம் அகத்தீஸ்வராய
ஓம் அகத்தீஸ்வராய
ஓம் அகத்தீஸ்வராய....   சிவாய நம ஓம்

சனி, 22 நவம்பர், 2025

இராம சந்திரமூர்த்தி அனுமன் மந்திரங்கள்

 


ராமரின் மந்திரங்கள்|

 ஸ்ரீ ராமர் காயத்ரி

ராமரின் மந்திரங்கள்:

ஸ்ரீ ராமா என சொன்னாலே வாழ்க்கை வளம் பெற்று செல்வ செழிப்பு உண்டாகும். இவ்வளவு ஏன், இராமாயணத்தை முழுமையாக படிக்காமல் போனாலும், ராம் என்ற இரண்டெழுத்து மந்திரத்தை உச்சரித்தாலே ஆணவம், காமம், பேராசை ஆகியவை எல்லாம் அழிந்து அன்பும், அறிவும் பெருகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமரின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்:
ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ

பொருள்:
இந்த மந்திரம் ஸ்ரீ ராமனின் பல்வேறு பெயர்களை பிரதிபலிக்கின்றது. ராமனை புகழும் இந்த மந்திரம் மிக மங்களகரமாந்து. தாய் சீதா தேவியின் கணவனான் ராமனின் பெயர் சொன்னாலே இன்பத்தை வாரி வழங்குவார்.

வெற்றியையும் மகிழ்ச்சியையும் தரும் மந்திரம்:
ஓம் க்லீம் நமோ பகவதயே ராமசந்திராய சகலஜன வஸ்யகராய ஸ்வாஹா

பொருள்:
பீஜ ஒலியால் ஆன இந்த மந்திரம் சொல்ல சொல்ல, காந்தத்தைப் போல நமக்கு வெற்றியும், மகிழ்ச்சியும் தேடி வரும். இதை சொல்லி வர உலக அமைதி உண்டாகும்.
ஸ்ரீ ராம மூல மந்திரம்
மிக எளிய ஆனால் சக்தி வாய்ந்த மந்திரம்:
“ஸ்ரீ ராம ஜெயம்”

இதன் பொருள் அனைவரும் அறிந்ததே, ராமருக்கே வெற்றி. நாம் ராமனை வேண்டி இந்த மந்திரத்தை சொன்னால் அமைதி, நம்பிக்கை, வெற்றி கிடைக்கும்.
இந்த மந்திரத்தை “ஓம் ஸ்ரீ ராமாய நமஹ: ” என்றும் கூறுவதுண்டு.
கோதண்ட ராம மந்திரம்

ஸ்ரீராம் ஜெய ராம் கோதண்ட ராமா
பொருள்:
கோதண்டம் என்றால் வில் என்று பொருள். வில்லை ஏந்திய ராமனின் பெயரை உடைய இந்த மந்திரத்தை சொல்லி வர நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்களை அழிக்கும்.  மந்திரம்.

ராம தாரக மந்திரம்
ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்

ஸ்ரீ ராமர் காயத்ரி

ஓம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம: ப்ரசோதயாத்

ராம தியான மந்திரம்

ஓம் ஆபதாம்பஹர்தாரம் தாதாராம் சர்வசம்பதாம்
லோகாபிராமம் ஸ்
ரீராமம் புயோ புயோ நமாம்யஹம்

| ராம பஜனை பாடல் வரிகள்

பகவான் ஸ்ரீ ராமரின் சிறப்பு மிக்க பக்தி பாடல் வரிகள் (Ramar Songs) இந்த பதிவில் உள்ளது…

ஆத்மா ராம ஆனந்த ரமண பாடல் வரிகள்

ஆத்மா ராம ஆனந்த ரமண
அச்சுத கேஷவ ஹரி நாராயண
பவ பய ஹரண வந்தித சரணா
ரகு குல பூஷன ராஜீவ லோசன
ஆதி நாராயண ஆனந்த ஷயன
சச்சிதானந்த ஸ்ரீ சத்ய நாராயண

ராம ராம ராம ராம ராம நாம  பாடல் வரிகள்

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத நாதன் தந்த நல்ல வேதமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத சங் கடங் கள் தூர ஓடுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத துயரம் யாவும் தூசு ஆகுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத நற் பலன் கள் வந்து சேருமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத நம்மைக் காக்கும் காவ லாகுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத கோடி நன்மை யாவும் கூடுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத இம்மை மறுமை இன்றி தீருமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத வாயு மைந்தன் அன்பு மீறுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத நெஞ்சம் பாடும் இன்ப கீதமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத உள்ளம் அன்பு வெள்ள மாகுமே



ராம பஜனை பாடல்கள் – Rama bhajans

ராம பஜனை பாடல்கள்

=============================

ஆத்மா ராம ஆனந்த ரமண

அச்சுத கேஷவ ஹரி நாராயண

பவ பய ஹரண வந்தித சரணா

ரகு குல பூஷன ராஜீவ லோசன

ஆதி நாராயண ஆனந்த ஷயன

சச்சிதானந்த ஸ்ரீ சத்ய நாராயண


================================


தசரத நந்தன ராம ராம்

தயா சாகர ராம ராம் (2)

பசுபதி ரஞ்சன ராம ராம்

பாபா விமோசன ராம ராம் (2)

லக்ஷ்மண சேவித்த ராம ராம்

லக்ஷ்மி மனோஹர ராம ராம் (2)

சூக்ஷ்மா ஸ்வரூப ராம ராம்

சுந்தரா வதன ராம ராம் (2)


===============================


ராகவா சுந்தரா ராம ரகுவரா

பரம பாவனா ஹே ஜகத் வந்தன

பதிதோ தாரண பக்த பரயண

ராவண மர்த்தன விக்ன பஞ்சன

===============================

ரகுபதி ராகவா ராஜா ராம்

பதீத்த பாவனா சீதா ராம்

ரகுபதி ராகவா ராஜா ராம்

பதீத்த பாவனா சீதா ராம்

===============================


ராமா ராமா ராமா வென்று நாமம் சொல்லி

பாடணும் நாமம் சொல்லி பாடணும்

நாமம் சொல்லத் தெரியாவிட்டால் நல்லவரோடுசேரணும்

எண்ணி எண்ணிப் பார்க்கணும் ஏகாந்தமாய் இருக்கணும்

என்றும அவன் சொரூபத்தில் ஈடுபட்டே இருக்கணும்


கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்று பஜனை பண்ணி பார்க்கணும்

பஜனை பண்ணத் தெரியாவிட்டால் பக்தர்களோடு சேரணும்

விட்டல் விட்டல் விட்டல் என்று கையைத் தட்டி பாடணும்

கையைத் தட்டத் தெரியாவிட்டால் கவனம் வைத்து கேட்கணும்

=================================


ராம ராம ராம ராம ராம நாம தரகம்

ராம க்ருஷ்ண வாசுதேவ பக்தி முக்தி தாயகம்

ஜானகி மனோஹாரம் சர்வ லோக நாயகம்

சங்கராதி செவியா மான திவ்யா நாம கீர்த்தனம்


ராமச்சந்திர ரகுவீர ராமச்சந்திர ரன தீர

ராமச்சந்திர ரகு ராம ராமச்சந்திர பரந்தாமா

ராமச்சந்திர ரகு நாதா ராமச்சந்திர ஜகன் நாதா

ராமச்சந்திர மம பந்தோ ராமச்சந்திர தயா சிந்தோ

ராமச்சந்திர மம தெய்வம் ராமசந்திர குல தெய்வம்


ஓம் அயோத்தி அரசே போற்றி

ஓம் அருந்தவ பயனே போற்றி

ஓம் அச்சுதானந்த கோவிந்த போற்றி

ஓம் அளவிலா புகழுடையோய் போற்றி

ஓம் அபயம் அளிக்கும் விரதா போற்றி

ஓம் அறத்தின் நாயகனே போற்றி

ஓம் அன்பர் இதயம் உறைவோய் போற்றி

ஓம் அழகிய திருமுகத்தோய் போற்றி

ஓம் அழகு சீதாபதியே போற்றி

ஓம் அகிலமெல்லாம் காப்பாய் போற்றி

ஓம் அச்சம் அகற்றினாய் போற்றி

ஓம் அகலிகை சாபம் தீர்த்தாய் போற்றி

ஓம் அற்புத நாமா போற்றி

ஓம் அறிவுச்சுடரே போற்றி

ஓம் அளவிலா குணநிதியே போற்றி

ஓம் அன்புள்ள ஆரமுதே போற்றி

ஓம் அரக்கர்க்கு கூற்றே போற்றி

ஓம் அனுமன் அன்பனே போற்றி

ஓம் அன்பு கொண்டாய் போற்றி

ஓம் அனந்த கல்யாண குணா போற்றி

ஓம் அஸ்வமேத யாக பிரபுவே போற்றி

ஓம் ஆதித்தன் குலக்கொழுந்தே போற்றி

ஓம் ஆற்றல் படைத்தாய் போற்றி

ஓம் ஆதரவில்லார் புகலிடமே போற்றி

ஓம் ஆத்மசொரூபனே போற்றி

ஓம் ஆதிமூலமே போற்றி

ஓம் இளையவன் அண்ணலே போற்றி

ஓம் இன்சுவை மொழியே போற்றி

ஓம் இகபர சுகம் அளிப்பாய் போற்றி

ஓம் உண்மை வடிவமே போற்றி

ஓம் உத்தம வடிவே போற்றி

ஓம் உலகம் காக்கும் உறவே போற்றி

ஓம் ஊக்கம் தரும் சுடரே போற்றி

ஓம் ஊழி முதல்வா போற்றி

ஓம் எழில் நாயகனே போற்றி

ஓம் ஏழுலகம் காப்பவனே போற்றி

ஓம் ஏழு மரம் துளைத்தவனே போற்றி

ஓம் ஏக பாணப்பிரயோகா போற்றி

ஓம் ஏக பத்தினி விரதனே போற்றி

ஓம் ஐம்புலன் வென்றோய் போற்றி

ஓம் ஒப்பிலா ஒளியே போற்றி

ஓம் ஓம்கார தத்துவமே போற்றி

ஓம் ஓங்கி உலகளந்த அம்சமே போற்றி

ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி

ஓம் கருப்பொருளே போற்றி

ஓம் கரனை அழித்தோய் போற்றி

ஓம் காமகோடி ரூபனே போற்றி

ஓம் காமம் அழிப்பவனே போற்றி

ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி

ஓம் காலத்தின் வடிவே போற்றி

ஓம் காசி முக்தி நாமா போற்றி

ஓம் குரு பக்த ரத்தினமே போற்றி

ஓம் கோசலை மைந்தா போற்றி

ஓம் கோதண்ட பாணியே போற்றி

ஓம் சங்கடம் தீர்க்கும் சத்குருவே போற்றி

ஓம் சத்ய விக்ரமனே போற்றி

ஓம் சரணாகத வத்சலா போற்றி

ஓம் சபரிக்கு மோட்சம் தந்தாய் போற்றி

ஓம் சொல் ஒன்று கொண்டாய் போற்றி

ஓம் சோலை அழகனே போற்றி

ஓம் சோகம் தீர்ப்பாய் போற்றி

ஓம் தசரதன் தவப்புதல்வா போற்றி

ஓம் தந்தை சொல் கேட்டாய் போற்றி

ஓம் தியாகமூர்த்தியே போற்றி

ஓம் நிலையானவனே போற்றி

ஓம் நித்ய மங்கள வைபவா போற்றி

ஓம் நீலமேக சியாமளனே போற்றி

ஓம் பங்கஜகண்ணனே போற்றி

ஓம் பரந்தாமா பாவநாசா போற்றி

ஓம் பத்துத்தலை அறுத்த பரம்பொருளே போற்றி

ஓம் பண்டரிநாதா விட்டலா போற்றி

ஓம் பரத்வாஜர் தொழும் பாதனே போற்றி

ஓம் பட்டாபிஷேக மூர்த்தியே போற்றி

ஓம் பரதனின் அண்ணனே போற்றி

ஓம் பாதுகை தந்தாய் போற்றி

ஓம் பிறவி அறுப்பாய் போற்றி

ஓம் மாசிலா மணியே போற்றி

ஓம் மாருதியின் பிரபுவே போற்றி

ஓம் மாதவச்செல்வமே போற்றி

ஓம் மா இருள் விலக்குவாய் போற்றி

ஓம் மாயமான் மாய்த்தாய் போற்றி

ஓம் மாயவாழ்வு முடிப்பாய் போற்றி

ஓம் முக்குணம் கடந்தோய் போற்றி

ஓம் முன்னைப்பரம்பொருளே போற்றி

ஓம் ரகு வம்ச நாயகா போற்றி

ஓம் லவகுசர் தந்தையே போற்றி

ஓம் வல்லமை கொண்டாய் போற்றி

ஓம் வாயுகுமாரன் இதயமே போற்றி

ஓம் வானரர்க்கு அருளினாய் போற்றி

ஓம் விண்ணவர் தெய்வமே போற்றி

ஓம் விஷயம் கடந்தவனே போற்றி

ஓம் விருப்பு வெறுப்பற்றவனே போற்றி

ஓம் விஜயராகவனே போற்றி

ஓம் விஸ்வாமித்திரர் வேள்வி காத்தாய் போற்றி

ஓம் வீபீஷணன் நண்பனே போற்றி

ஓம் வெற்றிக்கு ஒருவனே போற்றி

ஓம் வேண்டுவன ஈவாய் போற்றி

ஓம் வேடனொடும் ஐவரானாய் போற்றி

ஓம் வேத முதல்வா போற்றி

ஓம் வேந்தர் வேந்தா போற்றி

ஓம் வேதனை தீர்ப்பாய் போற்றி

ஓம் வேதம் தேடும் பாதனே போற்றி

ஓம் வேதாந்த சாரமே போற்றி

ஓம் வைகுண்ட வாசா போற்றி

ஓம் வைதேகி மணாளா போற்றி

ஓம் வையக பிரபுவே போற்றி

ஓம் வையகத்தை வாழ வைப்பாய் போற்றி

ஓம் ஸ்ரீசீதா லட்சுமண பரத சத்ருக்கன ஹனுமத் சமேத ராமச்சந்திர மூர்த்தியே போற்றி! போற்றி!





அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற தினமும் சொல்ல வேண்டிய ஆஞ்சநேயர் அருள் தரும் மந்திரங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஆஞ்சநேயர் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம் வருமாறு:-
ஸர்வ கல்யாண தாதாரம்
ஸர்வ வாபத்கந வாரகம்
அபார கருணா மூர்த்திம்
ஆஞ்ச நேயம் நமாம் யஹம்
தினமும் 21 முறை ‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்’ என்ற மந்திரத்தையும் கூறலாம்.
அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற தினமும் சொல்ல வேண்டிய மந்திரம் வருமாறு:-
ஸ்ரீராம தூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமத் பவ
ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூத
வாயு புத்திர நமோஸ்துதே
ஆஞ்சநேயரை வழிபட்டு கீழ்கண்ட சுலோகத்தை ஜெபித்தால் கெட்ட கனவுகள் பலிக்காது. சுலோகம் வருமாறு:-
புத்திர் பலம் யசோதை ரியம்
நிர்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம்ச
ஹனுமத் ஸ்மரணாத்பவேத்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து ‘ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோ நம’ என்ற மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.
 ஆஞ்சநேயர் 108 போற்றிகள்:
ஓம் அருளே போற்றி!
ஓம் அருளானந்தனே போற்றி!
ஓம் ஆனந்த வடிவே போற்றி!
ஓம் அருட்பெருஞ்ஜோதியே போற்றி

ஓம் ஆகாச சஞ்சாரியே போற்றி!
ஓம் அனுமனே போற்றி!
ஓம் அஞ்சனைப் புதல்வனே போற்றி!
ஓம் ஆதி அந்தம் அல்லானே போற்றி!
ஓம் அந்தாதியே போற்றி!
ஓம் ஆகாச சஞ்சாரியே போற்றி!
ஓம் அனுமனே போற்றி!
ஓம் அஞ்சனைப் புதல்வனே போற்றி!
ஓம் ஆதி அந்தம் அல்லானே போற்றி!
ஓம் அந்தாதியே போற்றி!
ஓம் ஆக்கு அழிவு அற்றோனே போற்றி!
ஓம் அவினாசியே போற்றி!
ஓம் அரூபியே போற்றி!
ஓம் அசரீரியே போற்றி!
ஓம் ஆனந்தனே போற்றி!
ஓம் அறிவே போற்றி!
ஓம் அறலோனே போற்றி!
ஓம் அமைதியே போற்றி!
ஓம் அடக்கமே போற்றி!
ஓம் அமலனே போற்றி!
ஓம் அறம்பாவம் அற்றோனே போற்றி!
ஓம் அப்பனே போற்றி!
ஓம் அம்மையே போற்றி!
ஓம் அஞ்சினை வென்றவனே போற்றி!
ஓம் அஞ்சினைச் செல்வனே போற்றி
ஓம் ஆனந்த ஜோதியே போற்றி!
ஓம் ஆதாரமே போற்றி!
ஓம் அணுவே போற்றி!
ஓம் அணுவின் அணுவே போற்றி!
ஓம் அணுவின் ஆகர்ஷணமே போற்றி!
: ஓம் அண்டத்தின் ஆதாரமே போற்றி!
ஓம் ஆண்டத்தின் காவலனே போற்றி!
ஓம் ஆகுதியே போற்றி!
ஓம் அறிவுக் கனலே போற்றி!
ஓம் அருட்புனலே போற்றி!

ஓம் அகிலாண்ட நாயகனே போற்றி!
ஓம் அசங்கும் குண்டலதாரியே போற்றி!
ஓம் ஆவினன் அவதாரா போற்றி!
ஓம் அஞ்சு வண்ண நாயகா போற்றி!
ஓம் ஆதித்தன் சீடனே போற்றி
 ஓம் ஆசையிலாச் சீலனே போற்றி!
ஓம் அடக்கத்தின் அமைதியே போற்றி!
ஓம் அறத்தின் வடிவே போற்றி!
ஓம் அமிர்தவாணனே போற்றி!
ஓம் அருட்கவிதை சொல்வடிவே போற்றி!
ஓம் அறிவுச் சதுரனே போற்றி!
ஓம் அங்கத ப்ரியனே போற்றி!
ஓம் அனந்த புச்சனே போற்றி!
ஓம் ஆணைப் பணிவோனே போற்றி!
ஓம் ஆற்றலின் உறைவிடமே போற்றி
ஓம் அமர ஜாம்பவான் ப்ரியனே போற்றி!
ஓம் அச்சமற்ற வீரனே போற்றி!
ஓம் அலைக்கடல் கடந்தோனே போற்றி!
ஓம் ஆற்றலின் பேருருவே போற்றி!
ஓம் அரியின் சேவகனே போற்றி!
ஓம் அப்பொன்மலை வந்தித்த அருட்செல்வா போற்றி!
ஓம் ஆசானே போற்றி!
ஓம் அரக்கிவாய் அணுவாக போற்றி!
ஓம் நுழைந்தோனே போற்றி!
ஓம் அற்புதம் செய் விந்தனே போற்றி
ஓம் அந்நிழலரக்கியை மாய்த்தோனே போற்றி!
ஓம் அருந்தவசிகள் வாழ்த்தப் பெற்றோனே போற்றி!
ஓம் அரக்கி இலங்கிணியை ஒடுக்கியவா போற்றி!
ஓம் அஞ்சா நெஞ்சனே போற்றி!
ஓம் அட்டமா சித்திக்கு அதிபதியே போற்றி!
ஓம் அன்னையிடம் மோதிரம் அளித்த அன்பனே போற்றி!
ஓம் அன்னை சோகம் களைந்தோனே போற்றி!
ஓம் அளவிலா வடிவம் கொண்டோனே போற்றி!
ஓம் அசோகவனம் அழித்தோனே போற்றி!
ஓம் அசுரன் நமனே போற்றி!
ஓம் அக்சனை வதைத்தவா போற்றி!
ஓம் அயனாயுதத்திற்குக் கட்டுண்டவா போற்றி!
ஓம் அரக்கர்கோ ஆணவம் அடக்கியவா போற்றி!
ஓம் அத்தீவிற்குத் தீயிட்டவா போற்றி!
ஓம் அளப்பரியா ஆற்றலே போற்றி!
ஓம் ஆழி தாவிய தூதனே போற்றக
ஓம் அண்ணலிடம் சூடாமணி ஒப்பித்தவா போற்றி!
ஓம் அல்லல் தீர்க்கும் அன்பனே போற்றி!
ஓம் அளவற்ற அன்பே போற்றி!
ஓம் ஆராதனைத் தெய்வமே போற்றி
ஓம் அமர வாழ்வு பெற்றோனே போற்றி!
ஓம் அயனாகும் அரசே போற்றி!
ஓம் அபயம் அருள்வோனே போற்றி!
ஓம் அல்லல் களைவோனே போற்றி!
ஓம் அரும் பொருளே போற்றி!

ஓம் அயோத்தி நிவாஸனே போற்றி!
ஓம் ஆபத் பாந்தவனே போற்றி!
ஓம் அனாத இரட்சகனே போற்றி!
ஓம் அபார கருணாமூர்த்தியே போற்றி!
ஓம் அபய வரதனே போற்றி
[29/11, 5:03 am] bjnaadi: ஓம் அருளும் திருவடியே போற்றி!
ஓம் அரியின் வாகனமானவனே போற்றி!
ஓம் அரியின் அடியோனே போற்றி!
ஓம் அஞ்சலி அந்தணனே போற்றி!

ஓம் ஆன்மாவின் உட்பொருளே போற்றி!
ஓம் அகமெலாம் நிறைந்திருக்கும் அமுதே போற்றி!
ஓம் அமுதாகி இனிக்கும் அற்புதமே போற்றி!
ஓம் அனுபூதியே போற்றி

ஓம் அருளும் தெய்வமே அனுமனே போற்றி!
ஓம் அண்ணலின் அரியணை போற்றி!
ஓம் அமர்ந்தோனே ஆஞ்சநேயனே போற்றி போற்றி!!
அனுமன்  தமிழ் துதி
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்


நிகழும் மங்களகரமான விசுவாவசு வருஷம் கார்த்திகை மாதம் 15ம் தேதி திங்கள் கிழமை 01.12.2025  வளர்பிறை ஸர்வ ஏகாதசி கூடிய சுபயோக சுபதினத்தில்  காலை 09.to 10.30க்குள் ராமசந்திர மூர்த்தி மற்றும் ஆஞ்சனேயர் ஸ்வாமிக்கு அஷ்டபந்தன பிரதிஷ்டை செய்ய குருவின் ஆசி உத்தரவாகி உள்ளது. அன்றைய தினம் கொள்ளிட காவிரி தீர்த்தங்களை கொண்டு மங்களாசன துதியும்  அபிஷேகமும் நடைபெறும் என்பதனை வாலைதாய் ஆசியோடு தெறிவித்து கொள்கிறோம்

வாலைதாய் வீடு
விளந்தை



அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற தினமும் சொல்ல வேண்டிய ஆஞ்சநேயர் அருள் தரும் மந்திரங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஆஞ்சநேயர் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம் வருமாறு:-
ஸர்வ கல்யாண தாதாரம்
ஸர்வ வாபத்கந வாரகம்
அபார கருணா மூர்த்திம்
ஆஞ்ச நேயம் நமாம் யஹம்
தினமும் 21 முறை ‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்’ என்ற மந்திரத்தையும் கூறலாம்.
அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற தினமும் சொல்ல வேண்டிய மந்திரம் வருமாறு:-
ஸ்ரீராம தூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமத் பவ
ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூத
வாயு புத்திர நமோஸ்துதே
ஆஞ்சநேயரை வழிபட்டு கீழ்கண்ட சுலோகத்தை ஜெபித்தால் கெட்ட கனவுகள் பலிக்காது. சுலோகம் வருமாறு:-
புத்திர் பலம் யசோதை ரியம்
நிர்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம்ச
ஹனுமத் ஸ்மரணாத்பவேத்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து ‘ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோ நம’ என்ற மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.

ரர 




சிவ மகத்துவம்

*பேரின்பம் நல்கும் எம்பெருமானே*  மாணிக்கவாசகர் சிவப்பரம்பொருளைக் கசிந்துருகப் பாடுகிறார்;  சிவனே இறைவன் எனப் போற்றிப் புகழ்ந்தேத்துகிறார்.  ...