சனி, 1 பிப்ரவரி, 2025
திருமூலர் சூனிய சம்பாஷணை
பூசணி பூவும் மஞ்சள் வர்ணம் ஒரு ஞானம் விழிப்புணர்வு
திருமந்திரம்.2868.
”வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது
தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.”
இதை அப்படியே பொருள் கொண்டால்” தோட்டத்தில் புழுதியைத் தோண்டினேன். அக்குழியில் கத்தரிக்காய்(வழுதல்) விதை விதைத்தேன்.அதிலிருந்து பாகற்கொடி படர்ந்தது.அதில் பூசணி பூத்தது.அதைக் கண்ட,அங்கிருந்த தோட்டக் குடிகளெல்லாம் பயந்து,தம் சிறு தெய்வங்களைத் தொழுது கொண்டு ஓடினார்கள்.அதன் பின் அக்கொடி யில் வாழைக்கனி முற்றிலுமாகப் பழுத்தது”
இதன் பொருள் ஓரளவுக்கு சொல்ல முடிந்தால்
இங்கு தோட்டம் என்பது நமது உணர்வாகிய நெஞ்சக் கமலம். புழுதியைத் தோண்டுத லாவது,அவ்வுணர்வுகளைப் பயந்து வரும் தத்துவங்களின் இயல்பை ஆராய்ந்து காணுதல்.வழுதலை வித்திடல் என்பது ஐந்தெழுத்தை உள் ஊன்றி நிறுத்துதல்.பாகல் என்பது நிலையில்லாப் பொருள்களில் பற்றற்று இருத்தல்.பூசனி பூத்தது என்பது திருவருள் விளக்கம்.தோட்டக் குடிகள் என்பது நம் அஞ்ஞானம்.வாழை பழுத்தது என்பது இறை அருட்பேறு
விவசாய நிகழ்வுகளை குறித்து ஒப்பீடு செய்து திருகுறள் திருமந்திரம் போன்ற உயர் அறம் மறைநூல்களும் உபதேசம் செய்வதை கொண்டு விவசாயம் ஞானம் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது என்பதை அறிந்து கொள்ளலாம்
குரு அருளால் தெறிந்ததை பகிர்ந்து கொள்கிறோம் இதில் ஆயாசம் இருப்பினும் தெறிவிக்காலாம்
பதிவு எல்லாம் குரு பரம்பரையின் அடிநாதம் இதற்கு சகல உரிமைகளும் குருபாதங்களுக்கே சமர்ப்பணம்
வசந்த பஞ்சமி
வணக்கம் 02.02.2025 வசந்த பஞ்சமி இது மங்களம் தருகின்ற வசந்த காலத்தை வரவேற்பு செய்யும் நன்னாள்
தைதிங்களில் பூசணி பரங்கி செடிகள் காலையில் மஞ்சள் நிற பூ பூத்து காய்க்கும் பீர்க்கங் செடிகள் மாலையில் பூத்து பனிகாலத்தில் இவைகள் காய்க்க தொடங்கும் மஞ்சள் கிழங்ககள் அறுவடை முடியும்
பாடுபட்ட வெள்ளாமை நெல்மணி குவியலாக கிடக்கும்
நன்கு விளைந்த நெல்மணி கதிர்கள் தலை சாய்ந்து தங்கம் நிறம் கொண்டு எங்கும் மஞ்சளாக தங்க நிறமாக காட்சி தருவதை தொல்குடிகள் தங்கள் மகிழ்ச்சி கொண்டாட்டமாய் பூமா தேவி சரஸ்வதி புவனேஸ்வரி க்கு பொங்கலிட்டு மகிழ்வர் சிறு குழந்தைகளுக்கு மஞ்சள் நிற ஆடையுடுத்தி ஈரம் தரும் வாலை சரஸ்வதியை போற்றுவதும் வீதிகளில் மஞ்சள் நீரை ஊற்றி களித்து மகிழ்வர் இது காணும் பொங்கல் முதலே தொடங்கும்
கன்னி பொங்கல் என்பதே தொல்குடி வழக்காடல்
லசந்த பஞ்சமி வராகி தேவியின் சூழ்ச்சம வழிபாடு இந்த பூமியை தாங்கும் வராக துணை ஆனதனால் நமது முன்னோர்கள் மஞ்சள் நீராட்டலை கடவுளுக்கும் கன்னியர் சடங்கிலும் செய்தார்கள்
வராகி வழிபாடு தொல்குடி மக்கள் மிகவும் நுணுக்கமாக கையாண்டு உள்ளனர்.
முக்கியமாக விவசாய தொல்குடி மக்கள் ஒவ்வொரு பூசைகாலத்திலும் மஞ்சளை தொட்டு பூசைகளை தொடங்கி உள்ளனர்
வீட்டில் உள்ள நிலைகதவுகளில் மஞ்சள் தடவுவது
கன்னியர் பூப்புகாலம்
கற்ப காலத்தில் வளையல் காப்பு காலம்
குழந்தை பிறந்த பதினாறு நாட்கள்
அம்மை போன்ற காலங்களிலும்
திருமண சடங்கு எல்லாவற்றிலும் இந்த மஞ்சளை தொட்டு வரும் பழக்கம் உள்ளது
ஆக சித்தர்கள் கொண்டு வந்த விசேஷ மஞ்சளை ஒரு வசந்த வரவேற்பு ஒரு மகிழ்ச்சி தரும் காலங்களில் காப்பு செய்து கொண்டது தொல்குடி மரபு
மஞ்சள் தங்கத்திற்கு ஈடான பொருள் என கருதியது நம் முன்னோர்கள் மரபு
இந்த வசந்த பஞ்சமியில் மஞ்சளை தொட்டு வழிபாடு செய்து நன்மையை வரவேற்போம்.
: நெல்லும் மஞ்சளும் அறுவடை ஆகும் நாளில் வீட்டில் ஐஸ்வர்யத்திற்கு கொஞ்சம் வாங்கி வீடுகளில் வைப்பது ஒரு ஐஸ்வர்யமே
தங்கம் வாங்குதை பிரபல படுத்துவார்கள் ஆனால் எல்லோரும் தங்கம் வாங்க இயலாது
ஆக எளிமையாக மஞ்சளை கிழங்கு வாங்கி வைக்கலாம்
நெல் ஒருபடி முதல் ஒரு மரக்கால் வரை வாங்கி பூஜை அறையில் வைக்கலாம் இது ஒரு உயிர் விதை ஆற்றல்
தொல்குடி மக்கள் தங்கள் விவசாயத்திற்கு உரிய விதை நெல்லை காயவைத்து வைக்கோல் கோட்டைகட்டி சாணம் மெழுகி பாது காப்பார்கள் ஆக நித்யமாக தான்யம் வீட்டில் இருந்து கொண்டே இருக்கும்
மஞ்சளை அந்தந்த நேரத்தில் அரைத்து பயன்படுத்துவதே நல்லது
அதன் வாசனையே மருத்துவ குணங்கள் உடையது
அதுபோல் குளியலுக்கும் உரசி தேய்து குளித்து வருவதே நல்ல பலன்
ஆக கடைகளில் கலப்பட மஞ்சள் பொடியை தவிர்த்து மஞ்சள் பொடியை கைபாகமாக செய்வது நல்லது
மஞ்சள் கிழங்கு வகையை சார்ந்தது இதை பதியம் இட்டு வளர்க்கமுடியும்
மஞ்சளை சித்தர்கள் உலகத்திலிருந்து கொண்டு வந்து இங்கு பதியம் இட்டார்கள் என்று குருமரபு கூறுகிறது
வாழை மஞ்சள் கருணை கிழங்கு இன்னும் பிற உயர்ந்த கிழங்கு வகைகளை சித்தர்கள் கொண்டு வந்து பதியம் இட்டனர் என்பதே குரு மரபு செய்தி
நமக்கு பயன் படும் என்று ஆதி சித்தர்கள் தொல்குடி மக்கள் கொண்டு வந்த கிழங்கு மற்றும் உண்ணும் உணவு விதைகளை சேகரிக்க மறந்து போனதும் அவலமே
வழிபாடு ஒரு இயற்கை பாதுகாப்பு நன்றி நவில்தல் பெரியோர்கள் மரபை பேணுதல் அவர்கள் காட்டிய வழியில் ஆயிரமாயிரம் ரகசியம் உள் பொதிந்து இருக்கும் ஆக தொல்குடி மரபை உள்வாங்கி பயன் பெருவோம்
யார் விதைகளை தந்தவரோ அதை விளைவித்து உணவாக்கி தந்தவரோ அவர்களுக்கு வணக்கங்கள்
யார் கிழங்குகளையும் மூலிகைகளையும் கொண்டு வந்து இட்டு வளர்த்து காத்து நமக்களித்தனரோ அவர்களுக்கு வணக்கங்கள்
பூமியிலும் விதைகளிலும் ஈரத்தையும் சத்துக்களை தந்து வீரியமாய் முளைக்கும் அறிவை தந்த அந்த தெய்வங்களுக்கு வணக்கங்கள்
மலையில் பெய்யும் மழை கடலில் கலப்பதை ஆறு வெட்டி வாய்க்கால் வெட்டி பள்ளத்தில் நீரை நிறுத்தி வரப்பு கட்டி வேளாண்மை அறிவை தந்த வேந்தனுக்கும் தொல்குடி மக்களுக்கு வணக்கங்கள்
வசந்த காலத்தில் மஞ்சளும் வெள்ளையும் பல வர்ணமாக பூத்து குளுங்கும் செடிகொடிகளுக்கும்
பனி நிறைந்த வயல் வனத்திற்கும் வணக்கங்கள் இப்படி வசந்த காலத்தில் மனம் திறந்த வணக்கம் செய்வோம் மனதில் இலேசானவர்கள் ஆகுவோம்
சத்து மாவு தயாரிக்கும் முறை
சத்து மாவு தயாரிக்க
சத்து மாவு
தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்:
ராகி 2 கிலோ
சோளம் 2 கிலோ
கம்பு 2 கிலோ பாசிப்பயறு அரை கிலோ
கொள்ளு அரை கிலோ மக்காசோளம் 2 கிலோ பொட்டுக்கடலை ஒரு கிலோ
சோயா ஒரு கிலோ தினை அரை கிலோ , கருப்பு உளுந்து அரை கிலோ
சம்பா கோதுமை அரை கிலோ
பார்லி அரை கிலோ நிலக்கடலை அரை கிலோ
அவல் அரை கிலோ ஜவ்வரிசி அரை கிலோ
வெள்ளை எள்
100 கிராம்
கசகசா 50 கிராம்
ஏலம் 50 கிராம்
முந்திரி 50 கிராம் சாரப்பருப்பு 50 கிராம் பாதாம் 50 கிராம்
ஓமம் 50 கிராம்
சுக்கு 50 கிராம்
பிஸ்தா 50 கிராம் ஜாதிக்காய் 2 , மாசிக்காய் 2
ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு
இவற்றை வெயிலில் காயவைத்து வறுக்க வேண்டியதை மிதமாக வறுத்து அரைத்து வைத்து கொள்ளவும்
வள்ளல் பெருமான் துதி பா
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
திருத்தகு மார்ப நூறின் இதழ்த்தவி சேறி வாழ்த்த
திதிக்கொரு சேய ராக்கம் அதைத்தெறு நாகர்போற்று
மருத்தகு போது மாற்றி உருத்திகழ் பாத போற்றி
மறைத்தனி நாத போற்றி மதிப்பரு சோதிபோற்றி
கருத்தரு பாச நீக்கிக் கதித்தரு நேச போற்றி
கணக்கறு வாதர் பாழ்த்த கதற்றொழி மாறு காட்டி
அருத்தியின் நீச நேற்குன் அடிப்பணி போத வாக்கும்
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி (1)
கலிப்பகை நாச மாக்கக் கடிக்கமழ் பாத போற்றி
கலக்கற வாளுமாக்கிக் கழற்பணி யான வாற்றப்
புலப்பகை வீசி யேத்தும் இயற்றரும் ஈசபோற்றி
பொருப்புவில் நாணி பாப்பின் இசைத்துழல் சேர்வை
வாட்டிச்
சலிப்பறு மூவர் காக்க ஒருப்படு நீத போற்றி
சதுர்தச லோகம் ஆர்த்த தவத்தனி நாதபோற்றி
அலக்கணி லாத வாழ்க்கை அளித்தருள் ஆதிபோற்றி
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி (2)
மயக்குறு மூல நோய்க்கு மருத்தெனு மாசில் சீர்த்தி
வழுத்தறி யாத வோத்து மருட்கொடு நேடி யார்க்கப்
பயிர்ப்பதி லாது மூத்த பருக்கவல் சேரி வாழ்க்கை
பசைப்பில தாக வீழ்த்த எழுப்படை நாய் நேற்றுக்
கயக்குறு வேனே நாத்த கடைப்படு பேதை ஓர்க்கில்
கழற்கணி தாகு பேற்றை இனிப்பெறு நாளே நாக்கும்
அயர்ப்பறு சோதி போற்றி அவத்தொழில் நாச போற்றி
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி (3)
விதிக்குமு நூறு நாட்ட வனைக்கள வாத நோச்செய்
தெனக்குயர் பேற தாற்றல் வினைக்கொடு கால கூற்றுக்
கதத்தினி லேது நீத்தக் கணத்தினி லோடு கூட்டைக்
கதிக்கினி தாகி யேற்ற துணைக்கொளு மாறொ ரேற்ற
வதித்தனை ஓர்கி லாபொய் மடப்பிடி போலி யார்க்கு
மயக்குறு பேயனாற்று மதித்திற மேதுன் சீர்த்தி
அதிற்புகு மாற தாக்கிப் பதப்பணி சாலு மாக்க
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி (4)
துறைத்துறை நூல்கள் பார்த்துப் சுழற்படு கீடம் ஏய்ப்பத்
துடிப்புறு வேனை நோக்கித் துகட்கெட வாள தாக்கி
மறைச்சிர நேடியாற்ற அரற்றுறு மாறு காட்டி
மயர்ப்பறு மாசு போக்கி வளர்த்தருள் பாத போற்றி
சிறைப்படு மாய வாழ்க்கைத் திறத்துள மாலால் வீழ்த்துன்
திருப்பணி சாலு மாற்றப் பெறிற்குரு நாத போற்றி
அறத்துறை வாழ வாழ்த்து மவர்க்குற வாதி போற்றி
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி (5)
பழிப்பறு வேத வாக்கி னியற்கரு வாகி நோக்கு
பவர்க்கறி வாகி யோர்க்கு மொளித்தனி நாத போற்றி
யிழக்குழல் பேதை யாத்த புலைச்சிறு போத போற்றி
யிணைப்பரு பாத மேத்து மொழிற்பர போத போற்றி
விழுத்தொழின் மூவர் போற்று முதற்பொரு ளாதி போற்றி
விரைக்கழ லோது வார்க்குத் தனித்துணை யாதிபோற்றி
யழுக்கடை நாய் நேற்கு நடிப்பணி யாக வார்த்த
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி (6)
மலைத்தனி மாது சீர்த்த வினிப்புடை பாதி போற்றி
மணிப்பணி சூடி போற்றி மகத்தொழில் சாடி போற்றி
சலத்தவ மாது கூர்த்த தனிச்சடை யாள போற்றி
தவத்தர்கள் வாழ்வு போற்றி சகத்தொரு தாதை போற்றி
கொலைத்திகழ் சூல வேற்கைக் குருச்சுடர் மேவு நோக்கின்
குணக்கட லாதி போற்றி குகற்குய ராதி போற்றி
அலைப்படு நீல மார்த்த வணிகர்கள நாத போற்றி
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி (7)
கனித்தநல் வாரார் வாழ்த்து மறைப்பொரு தாள போற்றி
கலைத்தலை மேவு சீர்த்த கவித்தொளிர் பாத போற்றி
மனிதருள் போலி வேற்று வகைப்புகல் யாது நோற்பல்
மடக்கொடி பாதி போற்றி மறைக்குரு நாத போற்றி
துனிக்கிக லாதி போற்றி துணைத்துணை யாதி போற்றி
சுகக்கட லாதி போற்றி சொலற்கரி தாதி போற்றி
அனித்தமி லாத வாற்ற லளித்தரு ளாதி போற்றி
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி (8)
விடைத்தனி யேறு சூட்டு விறற்கொடி யாள போற்றி
மிகத்துரை கூறு மாந்தர் விடற்கரு வார போற்றி
கடற்கரி தாகி யார்த்த விடத்துண வாள போற்றி
கயற்கணி மாது சீர்த்த துணைப்பொரு ளாதி போற்றி
மடற்புனை தாம மார்த்த சடைப்பிறை யாள போற்றி
வடற்பதி வாண போற்றி மனத்துணை யாதி போற்றி
அடற்புடை சூல மாக்கொ ளழற்புனை கோல போற்றி
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி (9)
படைப்புடை வாண போற்றி பகைப்புர நாசபோற்றி
பணிப்புக ழாள ரேத்து பகுக்கரு சோதி போற்றி
தடப்புனல் சூடி போற்றி தவத்துற வாதி போற்றி
சகத்தொரு நாத போற்றி சகத்திர நாம போற்றி
வடற்பதி வாச போற்றி மணிக்கொளி யாதி போற்றி
வழக்காளர்கள் காண லாற்றில் வழுத்தரு தூய போற்றி
அடற்கரு கால நுக்க மழித்தருள் பாத போற்றி
அருட்பிர காச போற்றி அருட்பிர காச போற்றி (10)
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
கருங்குருவை காடி மற்றும் சம்பா அரிசி காடி ஒப்பீடு
கருங்குருவை காடியில் கால்சியம்
சோடியம் செரிவாய் இருப்பதும்
கருங்குருவை அரிசியில் ஆர்சானிக்
நிக்கல் தாமிரம் மற்றும் காட்மியம் சத்தாகி இருக்குமாம்
கருங்குருவை காடியில்
பாதரசம்
வெனடியம்
ஆர்சனிக்
நிக்கல்
தாமிரம்
காட்மியம்
பேரியம்
ஸ்ட்ரோண்டியம் இவைகள் உள்ளடக்கமா இருக்குமாம் இக்காடி ஒரு மருந்தை போன்று செயல்படுமாம்
கருங்குருவை காடியில் கன உலோகங்கள் இல்லை. சம்பா அரிசிக்கும் கருங்குருவை அரிசியில் பாஸ்பரஸ் உள்ளடக்கம் தவிர சில சத்து வேறுபாடு இருந்தாலும் கருங்குருவை ராஜா
சம்பா அரிசி காடியில்
இரும்பு ஆக்சைடு
கால்சியம் ஆக்சைடு
சல்பர் ஆக்சைடு
கார்பன் டை ஆக்சைடு இராசயண கூறுகளாய்
உள்ளதாம்
சம்பா அரிசி காடியில்
பாதரசம்
குரோமியம்
ஈயம்
தாமிரம்
கோபால்ட் ஆகிய ரசாயண கூறுகள் இருக்குமாம்
கருங்குருவை காடியில்
சிலிக்கான் ஆக்சைடு
அலுமினியம் ஆக்சைடு
இரும்பு ஆக்சைடு
மாங்கனீசு ஆக்சைடு
கால்சியம் ஆக்சைடு
சோடியம் கார்பனேட்டு
ஆகிய செரிவுகள் மூலமாக இருக்குமாம்
சம்பா அரிசி மற்றும் கருங்குருவை அரிசியில் பாஸ்பரஸ் உள்ளடக்கம் தவிர பொதுவாக சத்துக்கள் இருந்தாலும் கருங்குருவையே அரிசி களின் ராஜா
சுண்ணாம்பு சத்தான கால்சியம் கருங்குருவையில் அதிகமாக உள்ளதாம்[13/11/2024, 6:36 am] Thamaraiselvan Ramaiya: உணவு பயன்பாட்டிற்க்கான வினிகர் எனப்படும் காடி சூரிய ஒளி கொண்டு தயாரிக்க படும்
முப்பு மருத்துவ பயன்பாட்டிற்க்கான காடி மற்றும் கல்கம் இருட்டில் வைத்தே விளைவிக்க வேண்டும் என்று ஆயுர்வேத முறை சொல்கிறது
[13/11/2024, 6:41 am] Thamaraiselvan Ramaiya: கருங்குருவை காடி கலவையின் பகுப்பாய்வு. கன உலோககங்களை நீக்குவதற்கும் சித்த மருத்துகளில் பூநீரு பொடியில் (முப்பு) தனிமங்களை செறிவூட்டுவதற்கும் கருங்குருவை காடி நல்ல கரைப்பான் என்பதில் இது சுத்தஜலம் என்று அழைப்பதும் ராஜ நீர் என்ற சிறப்பையும் பெருகிறது
[13/11/2024, 6:43 am] Thamaraiselvan Ramaiya: நோய்களை குணப்படுத்தும் மருந்து சிகிச்சைக்கு திறன் மற்றும் பாதுகாப்பை மேம் படுத்துகிறது
காடி கையிருப்பு ஒரு துரித மருந்து தயாரிப்பிற்கு முன் ஆயத்தமாகுமாம்
[13/11/2024, 6:46 am] Thamaraiselvan Ramaiya: காடியில் உள்ள நல் சத்துக்கள் பூநீரு பொடியில் ஊடுருவி பூநீரு பொடியில் உள்ள சத்துக்களை வீரியம் நிறைந்த ஒரு ராஜ மருந்தாக மாற்றம் செய்யும் கிரியா ஊக்கியாக செயல்படும்போது கருங்குருவை காடி ஒரு அயனி
[13/11/2024, 7:15 am] Thamaraiselvan Ramaiya: கரியாகிய கார்பன் கூறு உடைய கருங்குருவை அரிசியில் நீரில் உள்ள ஆக்ஸிஜன் பெருக்கி கரியமில வாயுவை வெளியேற்றி நீரில் உள்ள ஆக்ஸிஜன் நிறைந்த ஒரு நீராக இருப்பதே காடி தூய்மையான பிரணவம்
[13/11/2024, 7:19 am] Thamaraiselvan Ramaiya: ஹை ட்டரஜன் ஹரி வடிவான மூலம் நீர்மம்
ஆக்ஸிஜன் காற்று வடிவான பராசக்தி
நீர் அரி விஷ்ணு
அரி சக்தி ஒரே அம்சமான சகோதரர் சகோதரி..... நாராயண. நாராயணி
[13/11/2024, 7:20 am] Thamaraiselvan Ramaiya: நாரா. அயணி நீரை உருவாக்கும் காற்று பராசக்தி அதுவும் கொற்றவை எனப்படும் நாராயணி
[13/11/2024, 7:21 am] Thamaraiselvan Ramaiya: இங்கே நீரை படைக்கும் காற்று ஆதி கொற்றவை துர்க்கை
[13/11/2024, 7:21 am] Thamaraiselvan Ramaiya: துர்க்கை இல்லையேல் நீரின்றி பாலைஆகும் என்ற கருத்து உடன்படுகிறது
[13/11/2024, 7:22 am] Thamaraiselvan Ramaiya: கருப்பி எனப்படும் கொற்றவை ராமெட்டிரியல் என்பது
[13/11/2024, 7:24 am] Thamaraiselvan Ramaiya: நீரான நாராயணன் அயணி வடிவாக்கி வாலை வடிவாக்கி பின் தூய கமலாத்மிகா ஆகி ஸ்ரீ லட்சுமி ஆன தூய பிரணவம் ஆக்குவது ஹரி சம்பவம்
[13/11/2024, 7:26 am] Thamaraiselvan Ramaiya: தூய காடியில் பிரவணம் எனும் பிராண சக்தி செரிவு
[13/11/2024, 7:27 am] Thamaraiselvan Ramaiya: அது மூக்கில் அல்லது செவியில் விட்டால் கூட ஆவியாகி உடலில் உள்ள ஜீவ சத்துக்களை உயிர் பெற செய்யும் சஞ்சீவினி
[13/11/2024, 7:32 am] Thamaraiselvan Ramaiya: மூலபொருள் துர்க்கை துர்க்கை தரும் மூல பொருளை வாலை வடித்து தூய்மை ஆக்கி தன்வந்திரி மாலவன் கையில் தருவது
[13/11/2024, 7:33 am] Thamaraiselvan Ramaiya: இங்கே மருந்தாக்க சக்திகள் கொற்றவை வாலை . தன்வந்திரி மருந்தை கையாண்டு தரும் மருத்துவ பிடகன்
கொற்றவை வாலை தன்வந்திரி மற்றும் அகத்தியர் முதலான சித்தர்கள் மூல பிரணவம் முருகன்
வடக்கு தெற்கு வள்ளி தெய்வானை
வருண ஆற்றலாக வருணமகா சித்த லிங்கம்
தூய வடிவம் பல சக்தி சங்கம மேரு மனோன்மணி என வாலை வீட்டில் இடம் பெற்ற தெய்வங்கள் எல்லாம் ஒரு மருத்துவ குழு லேபராட்டரி
வாலை இல்லையேல் பகுக்க பட முடியாது அது பாம்பின் விஷத்தை ஒத்த கரியமில வாயுவை வெளியேற்றி தூய ஆவி எனப்படும் பிரவணவத்தை தரும் ஒரு தலைவி வாலை
அதனால் மானுடத்தை காப்பாற்ற வந்த சித்தர்கள் தங்களின் குலதெய்வமாக தாயாக குருவாக தெய்வமாக போற்றினர் வாலையை
காடி தயாரிப்பு விஷம் எனும் பாகம் நீக்கபட வேண்டும் இதற்கு பாம்புகளின் தாயான வாசுகி நாக அருள் வேண்டும் வாலை வீட்டில் ஈசான்ய பாகத்தில் வாசுகி என்ற ஐந்தலை பாம்பை பிரதிஷ்டை செய்து வழிபடுவதோடு
வாசுகி என்ற பெயரில் வாழ்ந்த அன்னைக்கு ஒருபிதுர் ஸ்தானமளித்து வாலை வீட்டில் லிங்க ரூபமாக வைத்து கொண்டதும் குரு அருள் விண்ணப்பமே
வாயு மற்றும் ஈசான்ய பாகம் காடி க்கு பலம் தருவன வாயு மலம் மருந்திலிருந்து வெளியேறி செரித்து தூய வடிவம் பெறவேண்டும்
மலம் எனும் கழிவு அதனால் உண்டாகி விஷகாற்று எனும் பாம்பின் வீரியம் நீக்க ரீசைக்கலின் எனும் தன் வாலை யே உண்ணும் பாம்பு வாலை ஆபரணாமாக இருப்பது நூதனம்
மருந்தின் மூல பொருள் அனைத்திலும் விஷம் அமிர்தம் கலந்தே இருக்கும் இதனை இரண்டு எதிர்குண பாம்பாக மருத்துவ அடையாள சின்னம் காட்டும் அதில் எதிர்வினை பாம்பு விட்டு கொடுத்தால் மட்டுமே மருந்து மருந்தாகும் மருந்து தயாரிப்பிற்கு கார்கோடக தட்சக வாசுகி நாகம் ஆசிவேண்டும்
முந்திரி பயன்பாடுகள்
தன்வந்தரி அருள்
ஆயுர்வேத விதி
முந்திரிக்கை எனும் வித்து இந்தின் இளம்பிறை போன்றதும் தந்தி முகத்தவன் தந்தத்தை ஒத்ததும் உக்கிர தெய்வங்களின் கோர பற்களை ஒத்து வலம் இடம் ஓரளவாய் வளைந்த குணமுடைய முந்திரி சத்து ஊட்டம் நிறைந்த வித்ததாம் வெப்ப மண்டல வனபயிராம்
வித்தின் குணமது உரைக்க மதுரம் குணமுடைய மித இனிப்பு சுவை கொண்டது.
சீதளமெனும் குளிர்ச்சி குணம் ஒத்த முந்திரி விருஷ்யம் குணம் நினைவு ஆற்றலை மேம்படுத்தும்
அஸ்தி பலம் ஓங்குவிக்கும். தேகவலிமை தரும். தேகவனப்பு பொலி வாக்கும்
சருமம் மிளிரும் முடி கருக்கும்
நினைவு மேம்படும் நல்லதொரு நெய் நிணம் நிறைந்த சத்துளது முந்திரி பயனே
ஆயுர் வேதத்தின் முக்குண செயல்களில் இயற்கை முந்திரியில் ரவி உலர்வில் உள்ளதில்
வாதம் சமநிலை
பித்தம் சமநிலை
கபத்தை ஊட்டமளிக்கும்
குணமதால் கபம் ஒங்கும் கபகுணமொத்தோர்க்கு முந்திரியில் கபம் சமனம் சாந்தி செய்து உண்ணவேண்டும்
முந்திரி நெய்யுடன் வறுக்கப்பட்டாலும் நெய் பரியந்தமாகி கபகுணம் ஊட்டமாகும்
உப்பிட்டு வறுத்தெடுக்க வாதம் சமமாகும்
பித்தம் ஊட்டமளிக்கும்
கபம் ஊட்டமளிக்கும்
எண்ணெய் உப்பு சேர்த்து வறுத்தெடுக்க
வாதம் சமமாகும்
பித்தம் ஊட்டமளிக்கும்
கபம் அதிகரிக்கும் வெண்ணெய் உடன் சேர்க்கும் போது
வாதம் சமமாகும்
பித்தம் ஊட்டமளிக்கும்
கபம் அதிகரிக்கும்
முந்திரி பருப்பு நல் கொழுப்பு புரதம் நார்சத்து நிறைந்த ஆற்றலால் சடுதி செரிமான சிக்கலால் நேரடியாக உலர்நிலை வித்தாய் உண்பது குடல் அழற்சி மற்றும் செரிமான நீட்சிக்கு காரணியாய் இருப்பதால்
ஏதேனும் ஊற வைத்து உண்ணுதல் செரிமான நிலைக்கு எளிதாகும்
முந்திரி கபம் குணம் விலக பொறித்த முந்திரியில் மிளகு அல்லது திரிகடுகம் சிறிது சேர்க்க கபகுணம் சமமாகும்
ஊற வைப்பது அதன் கடின செரிமானத்தை எளிதாக்கும்
பாலில் வேகவைத்துன்பது
அரிசி பருப்பு மிளகு சீரகம் நெய் அளவில் பொங்கலில் சேர்த்து சமைத்துண்பது நளபாக முறையாம்
முந்திரி பூவூறல் எனும் குல்கந்து மாதுளை சாறு கலந்து உண்ணுவது குருதி சோகைக்கு கை கண்ட பலனாகும்
பூவிலிருக்கும் ஓர் மதுரதிரவத்தையும் ( நெக்டார்) மகரந்தம் உடனாய தன்னில் சுரக்கும் சுப காடி நொதியம்(என்சைம்) சேர்ந்த கலவை தேனீ சேர்க்கும் தேன்
ஆக சிறந்த மதுரமும் நொதியம் சேர்ந்த கலவை தேன்
முந்திரி பருப்பு சுட்டெடுத்ததை தேனில் ஊறவைத்து பின்னர் அதனை அரைத்த விழுதுகளை தேனுடன் உண்பது சிறந்த கலவை
பூவூறல் எனும் குல்கந்து தேன் சுட்ட முந்திரி கூட்டி ஊறல் செய்து உண்பது தாது பலம் பெருமாம்
பச்சை முந்திரி பாலில் பிட்டவியலாக அவித்து அரைத்து நெய்யுடன் சேர்த்து நீர் பாகம் தீர காய்ச்சிய கிருதமும் மழலை இளஞ்சேய்களின் நினைவாற்றல் மற்றும் தேக தேற்றம் தரும்
[க்ஷ சக்கரை பிற்கால நொதியம் ஆனதால் நீர்ம சர்க்கரையில் நொதியம் செய்து கொள்ள தற்கால அவுஷத முறை இளகங்களுக்கு அனுமதிக்கிறது
முந்திரியை சில நோயுடையோர் நீக்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்
அதிக நிண கொழுப்பு எடையுள்ளவர்கள் முந்திரி எண்ணெய் கூட்டி வறுத்து உண்பது தவிர்க்க வேண்டும்
செம்பு சத்து உள்ளதால் கல்லீரல் மஞ்சள் காமாலை தாக்குதல் நேரம் முந்திரி தவிர்க்க வேண்டும்
சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக கல்
ஒவ்வாமை செரியாமை
கபம் பாதித்தவர்கள்
நுரையீரல் அழற்சி உள்ளவர்களும் பச்சையாகவோ தனி உணவாக அதிகம் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்
புற்றுநோய் உள்ளவர்களுக்கு மிகவும் வலு தரும் முந்திரி
நோயின் வீரியம் பரவாமல் தசைகளில் பரவி ஒரு நெய் குணம் தசைக்கு தந்து பாதுகாக்கும் ஒரு பயன் தரும் வித்து
தசைகள் போஷாக்கு அடையவும் இறுக்கம் தளர்வு தருவதும் எலும்பு பல் போன்ற வெண்தாது சுக்ல பெருக்கத்திற்கும் ஆரோக்கியமான மூளை தூய எண்ண உற்பத்திக்கு மதிஎனும் சந்திர சோம குணம் கொண்டது முந்திரி
இந்தின் குணம் சீதளம்
இந்தின் உடல் குணம் கபம்
இந்தின் குணம் சுக்கிலம்
இந்தின் குணம் இளமை மற்றும் தேக பளப்பபு
இரவில் பச்சை முந்திரி சாப்பிட கூடாது
அதுவும் கபம் கூறு உடையோர் முந்திரி பருப்பு இரவில் பயன்படுத்த தவிர்க்க வேண்டும்
காலை மாலை மதியம் என பகலில் மட்டும் முந்திரி பருப்பு நேரடியாக உண்பது நல்லது. சூடான பால் வெந்நீர் அருந்துவது சமப்படுமாம்
1 அவுன்ஸ் மூல முந்திரி (28.35 கிராம்) இவ்வித தாதுக்களை கொண்டுள்ளது:
157 கலோரிகள்
8.56 கிராம் (கிராம்) கார்போஹைட்ரேட்
1.68 கிராம் சர்க்கரை
0.9 கிராம் நார்ச்சத்து
5.17 கிராம் புரதம்
மொத்த கொழுப்பு 12.43 கிராம்
10 மில்லிகிராம்கள் (மிகி) கால்சியம்
இரும்புச்சத்து 1.89 மி.கி
மெக்னீசியம் 83 மி.கி
பாஸ்பரஸ் 168 மி.கி
பொட்டாசியம் 187 மி.கி
சோடியம் 3 மி.கி
துத்தநாகம் 1.64 மி.கி
திரிபலா சூரணம்
.திரிபலா அளவு விகிதம்...
நெல்லிக்காய் - 4 பங்கு, தான்றிக்காய் - 2 பங்கு, கடுக்காய் - 1 பங்கு அளவில் எடுத்துகொள்ள வேண்டும். நெல்லிக்காய், கடுக்காயை விதை நீக்கி பயன்படுத்த வேண்டும். இந்த மூன்றையும் வெயிலில் ஈரம் இன்றி காயவைத்து அரைத்து பொடியாக்கவும்.
நெல்லிகாய் பால் ஆவியில் அவித்து விதை நீக்கி காயவைத்து கொள்வது நெல்லிமுள்ளி 400 கிராம்
தான்றிக்காய் கழுவி காயவைத்து தோலை மட்டும் எடுத்துகொள்ள வேண்டும் 200 கிராம்
நல்ல முற்றிய கடுக்காயை விதையை நீக்கி சதை பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் 100 கிராம்
கடுக்காய் தான்றிகாயை உப்பு மஞ்சள் கலந்த நீரில் இரண்டு முறை கழுவி பின்னர் சுத்த நீரில் கழுவி உலர்த்தி பின்னர் விதை நீக்கம் செய்ய வேண்டும்
4 பங்கு நெல்லி
2 பங்கு தான்றிக்காய்
1 பங்கு கடுக்காய்
என கலந்து அரைத்து பொடி ஆக்கி கொள்வது
இதை தேன் நெய் இதில் கலந்து சாப்பிடலாம்
ஊறவைத்து இளஞ்சூட்டில் தேன் கலந்து காபி போன்று பயன் படுத்தலாம்திரிபலா திரிபலா பொடியில் உள்ள அமிலங்கள்
திரிபலா தூளில் கேலிக் அமிலம் , மெத்தில் கேலேட் , செபுலாஜிக் அமிலம் , செபுலினிக் அமிலம், செபுலனின் அமிலம், செபுலிக் அமிலம், கொரிலாஜின் , பெல்லரிகனின், பீட்டா-சிட்டோஸ்டெரால், சிரிங்கிக் அமிலம் , லுடோலின் , ருடின் , ரம்னோஸ் , கேம்கான்பெரோல் , க்லூகிலிக் அமிலம் , க்லூக்லிக் அமிலம் க்வெர்செடின் , ஃபைலான்டிடின், சர்பிடால் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் டானின்கள் , சபோனின்கள் , கேலிக் அமில வழித்தோன்றல்கள் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது , மேலும் கேலிக் அமிலத்தின் செறிவு உள்ளது.
திரிபலா
திரிபலா டெர்மினாலியா பெலரிகா (செபுலிக் மைரோபாலன்). திரிபலாவின் கலவையில் அஸ்கார்பிக், எலாஜிக், கேலிக் போன்ற பல்வேறு ஆக்ஸிஜனேற்றங்கள், செபுலினிக் அமிலங்கள் மற்றும் பல வகை ஃபிளாவனாய்டுகள் உள்ளன . நுண்ணுயிர் தொற்றுகள், மலச்சிக்கல், இரத்த சோகை , சோர்வு, காசநோய், நிமோனியா, போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க இந்த மூலிகை கலவை பரிந்துரைக்கப்படுகிறது[24/11/2024, 5:55 pm] Thamaraiselvan Ramaiya: திரிபலா செரிமான மண்டலத்தை சுத்தம் செய்வதற்கும், டோனிங் செய்வதற்கும், புத்துயிர் பெறுவதற்கும் ஒரு சக்திவாய்ந்த டானிக் ஆகும்; இது கல்லீரல், குடல் மற்றும் இரத்தத்தை நச்சு நீக்குகிறது மற்றும் சிறுநீர் பாதை ஆரோக்கியத்தை. விட்ரோ காற்றில்லா மனித மல கலாச்சாரங்கள் பற்றிய ஆய்வில் குடல் மைக்ரோபயோட்டாவை மாற்றியமைக்க திரிபலா ஒரு ப்ரீபயாடிக் விளைவைக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டது. ப்யூட்ரேட்-உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உட்பட பல ஃபைலோஜெனட்டிகல் பல்வேறு குடல் இனங்களின் ஒப்பீட்டளவில் ஏராளமான மாற்றங்களை திரிபலா கொண்டு உள்ளது
திரிபலா சூரணம்: ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்கள் திரிபலா சூரணத்தை சாப்பிட்டு வரும்போது, ரத்தவிருத்தி கிடைக்கும். ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களும் நீங்கும்..
நீரிழிவு நோயாளிகளும் இந்த திரிபலா சூரணத்தை பயன்படுத்தலாம்.. திரிபலாவிலுள்ள கசப்பு குணமானது, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்க செய்து, கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. திரிபலாவை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் பார்வை கோளாறுகள் ஏற்படுவதில்லை.[24/11/2024, 5:55 pm] Thamaraiselvan Ramaiya: திரிபலா செரிமான மண்டலத்தை சுத்தம் செய்வதற்கும், டோனிங் செய்வதற்கும், புத்துயிர் பெறுவதற்கும் ஒரு சக்திவாய்ந்த டானிக் ஆகும்; இது கல்லீரல், குடல் மற்றும் இரத்தத்தை நச்சு நீக்குகிறது மற்றும் சிறுநீர் பாதை ஆரோக்கியத்தை. விட்ரோ காற்றில்லா மனித மல கலாச்சாரங்கள் பற்றிய ஆய்வில் குடல் மைக்ரோபயோட்டாவை மாற்றியமைக்க திரிபலா ஒரு ப்ரீபயாடிக் விளைவைக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டது. ப்யூட்ரேட்-உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உட்பட பல ஃபைலோஜெனட்டிகல் பல்வேறு குடல் இனங்களின் ஒப்பீட்டளவில் ஏராளமான மாற்றங்களை திரிபலா கொண்டு உள்ளது
திரிபலா சூரணம்: ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்கள் திரிபலா சூரணத்தை சாப்பிட்டு வரும்போது, ரத்தவிருத்தி கிடைக்கும். ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களும் நீங்கும்..
நீரிழிவு நோயாளிகளும் இந்த திரிபலா சூரணத்தை பயன்படுத்தலாம்.. திரிபலாவிலுள்ள கசப்பு குணமானது, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்க செய்து, கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. திரிபலாவை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் பார்வை கோளாறுகள் ஏற்படுவதில்லை..
திரிபலா சூரணம்: ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்கள் திரிபலா சூரணத்தை சாப்பிட்டு வரும்போது, ரத்தவிருத்தி கிடைக்கும். ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களும் நீங்கும்..
நீரிழிவு நோயாளிகளும் இந்த திரிபலா சூரணத்தை பயன்படுத்தலாம்.. திரிபலாவிலுள்ள கசப்பு குணமானது, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்க செய்து, கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. திரிபலாவை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் பார்வை கோளாறுகள் ஏற்படுவதில்லை..
உடல் எடை: உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், 2 கிளாஸ் தண்ணீரில், ஒரு ஸ்பூன் திரிபலா சூரணத்தை சேர்த்து மூடிவைத்துவிட வேண்டும். மறுநாள் காலை, 2 டம்ளர் நீரை, ஒரு டம்பர் வரும்வரை சுண்டகாய்ச்சி குடித்தாலே, உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைய துவங்கும், தேவையற்ற கிருமிகளும் வெளியேறி, உடல் எடை குறைய துவங்கும்.. அதிக உதிரப்போக்கு உள்ள பெண்கள், இந்த பொடியை பயன்படுத்தலாம்..
அளவு எவ்வளவு: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது இந்த திரிபலா சூரணத்துக்கும் உள்ளது.. எனவே அளவோடு சாப்பிட வேண்டும். அதிகமாக எடுத்துக்கொண்டால் வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு கிராம் முதல் இரண்டு கிராம் வரை எடுத்துக்கொண்டால் பக்கவிளைவுகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை
இது ஒரு திரட்டு.... நன்றி சித்தர் பெருமக்களுக்கு
பத்ர பூசை. இறைவனுக்குஇலை அர்ச்சனை
இலைகளைக்கொண்டு அர்ச்சிப்பதனால், அடையக்கூடிய பலன்கள் பற்றிய விபரங்கள்:
1. முல்லை இலை பலன்: அறம் வளரும்.
2. கரிசலாங்கண்ணி இலை பலன்: இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
3. வில்வம் இலை பலன்: இன்பம். ஜவிரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.ஸ
4. அறுகம்புல் பலன்: அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அறுகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது
5. இலந்தை இலை பலன்: கல்வியில் மேன்மையை அடையலாம்.
6. ஊமத்தை இலை பலன்: பெருந்தன்மை கைவரப்பெறும்.
7. வன்னி இலை பலன்: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.8. நாயுருவி பலன்: முகப் பொலிவும், அழகும் கூடும்.
9. கண்டங்கத்தரி பலன்: வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
10. அரளி இலை பலன்: எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.
11. எருக்கம் இலை பலன்: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும். 12. மருதம் இலை பலன்: மகப்பேறு கிட்டும்.
13. விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணிவு கைவரப்பெறும்.
14. மாதுளை இலை பலன்: பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.
15. தேவதாரு இலை பலன்: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.
16. மருக்கொழுந்து இலை பலன்: இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.
17. அரசம் இலை பலன்: உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.
18. ஜாதிமல்லி இலை பலன்: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்
19. தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.
20. அகத்தி இலை பலன்: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
21. தவனம் இலை பலன்: நல்ல கணவன் மனைவி அமையப்பெறும்
அதாவது அரச மரம் ஆகாயத்தையும், வாதராயண மரம் காற்றையும், வன்னி மரம் அக்னியையும், நெல்லி மரம் தண்ணீரையும், ஆலமரம் மண்ணையும் குறிக்கும். இந்த ஐந்து மரத்தடியில் விநாயகரை பிரதிஷ்டை செய்து வணங்கும் படி செய்தது பஞ்சபூத குணங்களை அடைவதற்கு இயற்கை இறை வழிபாடு
மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு ஆகிய 21 இலைகள் கணபதி வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவை.
. 1. காம பூதம் - ஒருவரைக் காமத்தில் மோகம் கொண்டு அலையச் செய்து வீணாக்கும். 2. ராட்சச பூதம் - மனிதனை ராட்சச குணம் கொள்ளச் செய்யும். 3. வேதாள பூதம் - அடுத்தவரை மதிக்காமல் இருத்தல், தன்னைத் தானே அழித்துக் கொள்ளல். 4. கிரண பூதம் - மதுவுக்கு அடிமையாக்கும், துற சகவாசம் ஏற்படுத்தும். 5. ஷூஸ்மாண்ட பூதம் - நற் சகவாசம், ஆன்மீகப் பிரியம் ஏற்படுத்தும். 6. யக்ஷ பூதம் - தற்கொலைக்குத் தூண்டும். 7. பைசாச பூதம் - தெய்வத்தை நிந்திக்கச் செய்யும். 8. சித்த பூதம் - ஞானமளிக்கும். 9. குரவ பூதம் - பிறருக்கு ஞானத்தைப் போதிக்கச் செய்யும். 10. கந்தர்வ பூதம் - அழகிய தேகத்தைத் தரும். 11. அசுர பூதம் - பிராமண துவேஷம், ஞானிகளை நிந்தித்தல், மாமிச பிரியம் கொள்ளச் செய்யும். 12. முனி பூதம் - சாஸ்திரத்தில் நாட்டம் கொள்ளச் செய்யும். 13. விருத்த பூதம் - உடல் கோணலைக் கொடுக்கும். 14. தேவ பூதம் - தேவர்கள், சித்தர்கள், மகான்கள், பெரியோர்களிடத்தில் நாட்டம் கொள்ளச் செய்யும். 15. வருண பூதம் - நீர் நிறைந்தப் பிரதேசத்தில் வாசம் கொள்ளச் செய்யும். 16. அர்த்தபிதா பூதம் - சோம்பலைக் கொடுக்கும். 17. ஈசுர பூதம் - சரித்திரத்தில் நாட்டம் கொள்ளச் செய்யும். 18. வித்தியுன்மாலி பூதம் - பயம் கொள்ளச் செய்யும். 19. நிகட பூதம் - பெண்கள் மீது நாட்டம் கொள்ளச் செய்யும். 20. மணிவரை பூதம் - எவற்றிற்கும் பயமில்லாத் தன்மையையும், அதீதக் கோபத்தையும் கொடுக்கும். 21. குபேர பூதம் - தன விருத்தி. 22. விருபாச பூதம் - தேகத்தில் வலிமையுண்டாக்கும். 23. சக பூதம் - பித்தம், சதா பயம் கொள்ளச் செய்யும். 24. சாகோர்த்த பூதம் - நிர்வாண நிலையில் தெருவெங்கும் ஓட்டம், ஞான நிலை. 25. யாகசேனா பூதம் - பெருமை, தற்புகழ்ச்சி கொள்ளச் செய்யும். 26. நிஸ்ததேச - பெண்களை இம்சித்துப் புசித்தல், குரோத எண்ணம் கொண்டு வரும். 27. இந்திர பூதம் - குறையாதத் தனத்தைத் தரும். 28. நாக பூதம் - மயான வாசம், மலை வாசம். 29. விசாக பூதம் - எல்லோரையும் எப்பொழுதும் குறை கூறிக் கொண்டிருத்தல். 30. கசுமால பூதம் - அதீத தீனி எண்ணம். 31. அசாத்திய பூதம் - வலிய சென்று மற்றவரை சண்டைக்கு இழுத்தல். 32. பித்த பூதம் - மனச் சுழற்சி, பைத்திய நிலை. 33. ப்ரம்ம ராக்ஷச பூதம் - தேவர்கள், முனிகள், பிராமணர்களிடம் விரோதம்.
முப்பது மூன்று பூத கணங்களும் நமக்கு எப்படிப்பட்ட சோதனைகளை தரும் எனப் பார்ப்போம்.
1. காம பூதம் - ஒருவரைக் காமத்தில் மோகம் கொண்டு அலையச் செய்து வீணாக்கும்.
2. ராட்சச பூதம் - மனிதனை ராட்சச குணம் கொள்ளச் செய்யும்.
3. வேதாள பூதம் - அடுத்தவரை மதிக்காமல் இருத்தல், தன்னைத் தானே அழித்துக் கொள்ளல்.
4. கிரண பூதம் - மதுவுக்கு அடிமையாக்கும், துற சகவாசம் ஏற்படுத்தும்.
5. ஷூஸ்மாண்ட பூதம் - நற் சகவாசம், ஆன்மீகப் பிரியம் ஏற்படுத்தும்.
6. யக்ஷ பூதம் - தற்கொலைக்குத் தூண்டும்.
7. பைசாச பூதம் - தெய்வத்தை நிந்திக்கச் செய்யும்.
8. சித்த பூதம் - ஞானமளிக்கும்.
9. குரவ பூதம் - பிறருக்கு ஞானத்தைப் போதிக்கச் செய்யும்.
10. கந்தர்வ பூதம் - அழகிய தேகத்தைத் தரும்.
11. அசுர பூதம் - பிராமண துவேஷம், ஞானிகளை நிந்தித்தல், மாமிச பிரியம் கொள்ளச் செய்யும்.
12. முனி பூதம் - சாஸ்திரத்தில் நாட்டம் கொள்ளச் செய்யும்.
13. விருத்த பூதம் - உடல் கோணலைக் கொடுக்கும்.
14. தேவ பூதம் - தேவர்கள், சித்தர்கள், மகான்கள், பெரியோர்களிடத்தில் நாட்டம் கொள்ளச் செய்யும்.
15. வருண பூதம் - நீர் நிறைந்தப் பிரதேசத்தில் வாசம் கொள்ளச் செய்யும்.
16. அர்த்தபிதா பூதம் - சோம்பலைக் கொடுக்கும்.
17. ஈசுர பூதம் - சரித்திரத்தில் நாட்டம் கொள்ளச் செய்யும்.
18. வித்தியுன்மாலி பூதம் - பயம் கொள்ளச் செய்யும்.
19. நிகட பூதம் - பெண்கள் மீது நாட்டம் கொள்ளச் செய்யும். 20. மணிவரை பூதம் - எவற்றிற்கும் பயமில்லாத் தன்மையையும், அதீதக் கோபத்தையும் கொடுக்கும்.
21. குபேர பூதம் - தன விருத்தி.
22. விருபாச பூதம் - தேகத்தில் வலிமையுண்டாக்கும்.
23. சக பூதம் - பித்தம், சதா பயம் கொள்ளச் செய்யும்.
24. சாகோர்த்த பூதம் - நிர்வாண நிலையில் தெருவெங்கும் ஓட்டம், ஞான நிலை.
25. யாகசேனா பூதம் - பெருமை, தற்புகழ்ச்சி கொள்ளச் செய்யும்.
26. நிஸ்ததேச - பெண்களை இம்சித்துப் புசித்தல், குரோத எண்ணம் கொண்டு வரும்.
27. இந்திர பூதம் - குறையாதத் தனத்தைத் தரும்.
28. நாக பூதம் - மயான வாசம், மலை வாசம்.
29. விசாக பூதம் - எல்லோரையும் எப்பொழுதும் குறை கூறிக் கொண்டிருத்தல்.
30. கசுமால பூதம் - அதீத தீனி எண்ணம்.
31. அசாத்திய பூதம் - வலிய சென்று மற்றவரை சண்டைக்கு இழுத்தல்.
32. பித்த பூதம் - மனச் சுழற்சி, பைத்திய நிலை.
33. ப்ரம்ம ராக்ஷச பூதம் - தேவர்கள், முனிகள், பிராமணர்களிடம் விரோதம்.
ஜாதகத்தில் கிரகங்கள் சரியாக இருந்தாலும் சிலருக்கு ஒரே மாதிரியான பீடிப்புகள் இருக்கும். அதன் பின்னணியை ஆராயும் போது இறையருளால் பூதகணங்களை பற்றிய ஒரு அறிமுகத்தை அகத்தியர் மற்றும் இடியாப்ப சித்தர் ஆசியால் கிடைக்க பெற்றது
இந்த பூதகணங்கள் ஒருவரை பீடிக்கும் போது அவர்கள் அந்த பூத கணங்களின் ஆசைகளை தங்கள் ஆசைகளாக கொள்கிறார்கள் என்கிறது நிகண்டு
சிவனுக்கும் வாலை மனோண்பணிக்கும் அங்காளிக்கு மட்டுமே கட்டுபடும் பூதங்களை
வாலை தாய் வீட்டில் இவ்வகை பூதங்களை அதன் சேட்டை தீர்ந்து விலகி நின்று ஆதரவை தரும் விதமாகவே இருபெரும் சிவ சக்தியின் அம்சமாக சிவனையும் அங்காளி உடனான சக்திகளை குருவருள் வருவித்தது
இங்கு தன்னிச்சையாக இயங்கும் பூதங்களை கட்டுபடுத்தி சிவ சக்தி கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதனால் நன்மையை அடைய செய்யும் விதமாக தொடர்ந்து நடக்கின்றது
ஆக ஒருவர் செயலுக்கு அவரே கூட காரணமாக இருப்பதில்லை. அவர்களை பீட வாகனமாக பயன்படுத்தி இந்த பூதங்கள் இயங்கும் இது அந்த நபருக்கே கூட தெரியாமல் இருக்கலாம். ஜாதகத்திலும் இதை கணிக்க முடியாது...... ஆக இந்த பூதங்களை கட்டுபடுத்திட வாலை ஆசி செய்யட்டும்
வாலை வழிபாட்டு நோக்கங்கள் மக்களை ஆட்டி படைக்கும் மது மற்றும் பிற இடையூறு தரும் பூதங்களை மனித இனம் புரியாத இருப்பதாலே அனேக இயற்கை விதிமீறல் இருக்கிறது இதற்கு ஒரு தனி வழியாக சித்த சார்பாக சிவன் அங்காளி மூலம் கட்டுபடுத்தி பூதங்களை நல்வழிக்கு பயன்படுத்தி டும் முறையால் உலகில் மக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்
இது ஒரு போராட்டம் இதற்கு பெரிய சக்தி உடைய தெய்வங்களே குருமார்கள் துணையாக இருக்கும்.
வாலை தாய் திருவடிகளை போற்றி
வாலைதாய் அம்மானை
: தேனமரும் சோலைத் திருவரங்கர் எப்பொருளும்
ஆனவர்தாம் ஆண்பெண் அலியலார்காண் அம்மானை
ஆனவர்தாம் ஆண்பெண் அலியலரே ஆமாகில்
சானகியைக் கொள்வாரோ தாரமாய் அம்மானை?
தாரமாய்க் கொண்டதுமோர் சாபத்தால் அம்மானை!
.மூவருக்கும் முன்பிறந்த மூத்தவளாம் பராசக்தி
முத்தி தரும் தாயவட்கு பேருமென்ன அம்மானை? பேரு என்ன அம்மானை?
2.முந்தி ஜெகம் பிறந்த மனோன்மணி தாயவளின் மகளாய் வந்தவள் பேர் வாலைகன்னி அம்மானை
வாலைகன்னி அம்மானை
3.மாதா குமரியிவள் மகிழ்ந்தமர்ந்த தாய் வீட்டில் மாதவங்கள் சித்திக்கும் வாலை அருள் அம்மானை
வாலையருள் அம்மானை
.சத்திய பேருருவாம் சித்தர்களின் தாய் வாலை
சித்தி என்ன அம்மானை
சித்தி என்ன அம்மானை
2.சிரித்து புரமெரித்தாள் சின்ன கன்னி ஆக வந்து
சென்ம வினையறுப்பா வாலைகன்னி அம்மானை வாலைகன்னி அம்மானை
3.சிங்க வாகினியாய் மும்மலத்தை வேறருத்து சின்மய ரூபம் காட்டும் சித்தகத்தி அம்மானை
சித்தகத்தி அம்மானை
: 1.மூன்று சத்தி ஓருவாய் முளைத்தெழுந்த வாலைக்கு நாதமென்ன அம்மானை நாதமென்ன அம்மானை
2.ஓமெனவும் ஆமெனவும் ஊமை எழுத்துடனே ஆமென்று அழைப்பதுவே அன்னை நாதம்அம்மானை
அன்னை நாதம் அம்மானை
3.முச்சத்தி ஆனவட்கு முப்பீஜம் பிரணவமும்
மகாமந்திரமே அம்மானை
மகா மந்திரமே அம்மானை
1.கன்னியாக நின்றவளை குவலயத்தில் சித்தர் எல்லாம் தாயாக ஏற்றதொரு தன்மை என்ன அம்மானை
தன்மை என்ன அம்மானை
2.கருபிறந்த கர்மத்தை கட்டறுத்து நின்றவளை கண்டவராம் சித்தர்களின் கன்னி வாலை அம்மானை
கன்னி வாலை அம்மானை
3.காலமெல்லாம் அறிந்தவளை காலைனையும் உதைத்தவளை சித்தர்கள் கழல்பணிந்தார் அம்மானை
கழல் பணிந்தார் அம்மானை
1.ஏடேந்தும் பாரதியாள் தத்துவமாய் நின்றதனால் வாலைக்கு ஆதி பீஜம் ஐம் என்பார் அம்மானை
ஐம் என்பார் அம்மானை
2.சிரித்து புரமெரித்த வாலை திரிபுரசுந்தரிக்கு
கிலியும் ஈராம் பீஜமென்பார் அம்மானை
ஈராம் பீஜமென்பார் அம்மானை
3.அல்லி மலர் தானமர்ந்த வாலை மனோன்மணிக்கு சவ்வுமே திரி பீஜம் அம்மானை
சவ்வுமே திருஅம்மானை
: 1.ஐயம் திரிபு நீக்கும் ஆயி மகமாயி வாலை அமர்ந்த இடம் பேருமென்ன அம்மானை
பேருமென்ன அம்மானை
2.ஆதியந்த சோதிவீடு அருந்தவத்தார் கூடும் வீடு எங்கு இருக்கும் அம்மானை
எங்கு இருக்கும் அம்மானை
3.கோட்டை கட்டி நின்றவீடு கோடி சித்தர் கூடும் வீடு
உச்சிலே ஜோதி மேரு ஒளி வீசும் தாயீ வீடு அம்மானை
தாயி வீடு அம்மானை
1.மாற்றி பிறக்க செய்யும் மாதா வாலை கன்னிகையை சார்ந்தவர்க்கு என்னபயன் அம்மானை என்னபயன் அம்மானை
2.மாளா பிறவி தொடர்ந்துழன்று மறலிவாய் வீழாமல் மானுடர் கரை சேர வழி செய்வாள் அம்மானை
வழி செய்வாள் அம்மானை
3.ஊத்தை சடலமதில் உள்ளார்ந்த ஜோதி வாலை உள்ளமர்ந்து ஞானம் சொல்லி உயர்த்துவாள் அம்மானை
உயர்த்துவாள் அம்மானை
1.தேமல் உடலழகி தேன்மொழிச்சி வாலைகன்னிய தொடர என்ன பயன் அம்மானை
தொடர என்ன பயன் அம்மானை
2.முந்தை பிறவியதில் விட்டகுறை தொட்டகுறை வாசனை காரணமே அம்மானை வாசனை
காரணமே அம்மானை
3.விதியில் இல்லாவிடில் தாயை மதி காண ஒன்னாது விதி சதி செய்யாது காத்தருள்வாள் அம்மானை
காத்தருள்வாள் அம்மானை
: சிறுபிள்ளை ஆனவளை சித்தர்கள் தொழுது நிற்கும் சித்தம் என்ன அம்மானை சித்தம் என்ன அம்மானை
சிதறும் மனம் ஒருமித்து சீவகலை பெற்றாளும் சதாகதியாய் சுழுமுனை தாயை சார்ந்த நெறி அம்மானை
சார்ந்த நெறி அம்மானை
குளத்தில் நிறைந்த பாசி நீரை மறைக்கும் கும்பத்தை உள்ளமிழ்த்த குளபாசி விலகும் போல கும்பக வாலை தாய் அம்மானை
வாலை தாய் அம்மானை
1.ஜோதி மணிவிளக்காம் வாலை சிரசதிலே சூரிய சந்திரரை சூடியதேன் அம்மானை
சூடியதேன் அம்மானை
2. வாசி வடிவமவள் வாமி சுழுமுனையே இடக்கலை பிங்களையாம் ரவி மதிசுடர் அம்மானை. ரவிமதி சுடர் அம்மானை
3. முச்சுடர் ஆனவளாம் முப்புடம் செய்பளாம் ஞான த்தை முழுமையாக்கும் வாலைதாய் அம்மானை
முழுமையாக்கும் வாலை தாய் அம்மானை
: வாலை தாயவளை வரித்துமே பூசிக்க வருபவர் யார் அம்மானை
வருபவர் யார் அம்மானை
தாமரை தாது தேனை உண்ண தேடி வரும் தேன் குருவி போல் தானுணர்வாய் கூடுவார்கள் அம்மானை
கூடுவார்கள் அம்மானை
தேனிருக்கும் இடத்தையே தேனீக்கள் தானறியும் முன்னை வாசனையால் முயன்று வருவார் அம்மானை
முயன்று வருவார் அம்மானை
வல்லமை காரியான வாலை கன்னி தாயவளை வழிபடும் முறைகள் என்ன அம்மானை
முறைகள் என்ன அம்மானை
சிந்து கவிகள் பாடி சிறுகையால் கொம்மி தட்டி பாடி பரவிடவே வாலைதாய் மகிழ்வாள் அம்மானை
வாலை தாய்மகிழ்வாள் அம்மானை
மனதை ஒப்படைக்க மமகாரம் அண்டாது தன்னை அறிவதர்க்கு தாய் தயை செய்வாள் அம்மான
தயை செய்வாள் அம்மானை
: சிறுபிள்ளையாக வந்து சிரித்து விளையாடும் சின்மயத்தை காண்பரிதோ அம்மானை
காண்பரிதோ அம்மானை
சிந்தனையால் நினையாத சடத்தவர்க்கு தூரமவள் சிந்தனை செய்தோர்க்கு சிறுகன்னி மடியமர்வாள் அம்மானை
மடியமர்வாள் அம்மானை
ஒற்றை சடை போட்டு ஒய்யார நடைநடந்து தாம்பூல வாயழகி தான் வருவாள் அம்மானை
தான் வருவாள் அம்மானை
:
கருத்த நாகமதை ஆபணமாய் பூண்டவளை காண்பரிதோ அம்மானை
காண்பரிதோ அம்மானை
அன்னைஎன்று அழைத்தவுடன் ஆனந்தமாய் ஓடிவரும் அருள்வடிவம் தாய்வாலை அம்மானை
தாய்வாலை அம்மானை
பணிந்தரை நிமிரவைக்கும் பராபரை வாலை தாய் பக்திக்கு இணங்கிடுவாள் அம்மானை
இணங்கிடுவாள் அம்மானை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
திருமூலர் சூனிய சம்பாஷணை
பூசணி பூவும் மஞ்சள் வர்ணம் ஒரு ஞானம் விழிப்புணர்வு திருமந்திரம்.2868. ”வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்...
-
அரகரா முருகையா என்ற சந்தம் அனுதினமும் முருகையா நான் மறவேன் சிவ சிவா முருகையா என்ற சந்தம் சிந்தையிலே முருகையா நான்மறவேன் ஓதிவைத்தமுருகை...
-
ஸ்ரீவாலைதாய்வீடு வாலை போற்றிகள் ஸ்ரீவாலைதாய்வீடு.. வாலையம்மன் ஓம் அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றிய அன்னையே போற்றி ஓம் ஓம் ஆசை வ...
-
பிருகு முனி - ஒரு தொகுப்பு -1 பிருகு முனி அய்யன் சப்தரிஷிகளில் ஒருவர். இந்த 7 வர் உலகத்தின் அவயன்களாய் படைப்பிலும், க...