வணக்கம் அகத்தியர் அடியார்களுக்கும் அனைத்துசித்தர் அடியார்களுக்கும்அனந்த கோடி நமஸ்காரம் .காலதீபிகம் (காலத்தைபற்றியவெளிச்சம் )பலஆராய்ச்சிகள்கட்டுரைகள் ஆன்மிக தகவல்கள், இசை ,விவசாயம் ,மற்றும் பொது தகவல்களை தரும் ஒரு தகவல் சேவையாக மட்டும் பயன்பட்டு வந்தது .இது நாள் வரையில் பலவிதமான வேலை பளுவினாலும் அகத்தியரின் கட்டளை படி இணையத்தில் கவணம் செலுத்த முடியவில்லை
காலத்தின் ஓட்டத்தோடு பயணிக்க அகத்தியரின் ஆசி யும் உத்தரவும்கிட்டியதால் நிகழும் துர்முகி ஆண்டு சித்திரை மாதம் 11ம் (24-4-2016) முதல் அகத்தியரின் ஆணைப்படியும் பிருகுவின் ஆசியாலும் காலதீபிகம் இனி அறிய சித்தர்கள் வழியில் ஸ்ரீ அகத்தியர் நந்தி பிருகு ஜீவ நாடி நிலையம் சார்பில் சித்தர்கள் சார்ந்த தகவல்களும் பாரம்பரிய ஆகமமும் நாடி தகவல்களை பகிரும் ஒரு தளமாக இருக்கும்
என் பார்வைக்கு அப்பாற்பட்ட தகலவல்கள் இனி காலதீபிகத்தில் வராது
காலதீபிகம் பிருகு முனிவரின் ஆசிரமம் தொடர்பானது இல்லை .இதில் பதியப்படும் அனைத்து தகவல்களும் பிருகு ஜீவ நாடி நிலையத்தின் பதிவாகும் .இதுசம்பந்தம்மான அனைத்து தகவல் தொடர்பிற்கு bjnaadi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை பயன் கொள்ளலாம் .
தங்களின் எந்த வித ஆலோசனையும் ஏற்றுகொள்ளபடும் .-----------
கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
கலைகள் நூல்கள் ஞானமுங் கருத்தில்வந்து உதிக்கவே
பெரியபேர்கள் சிறிய பேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.
செய்யதெங்கி இளநீர் சேர்ந்தகார ணங்கள் போல்
ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே.
மாறுபட்ட மணிதுலக்கி வண்டின்எச்சில் கொண்டு போய்
ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே.
கடன் தொல்லை தீர அகத்தியர் அருளிய பாடல்
(தினமும் காலை 5 மணிக்கு எழுந்து விளக்கேற்றி இந்தப் பாடலைப் படிக்கவும்.)
செல்வம் பெருகவும், கடன் தொல்லை தீரவும் உதவும் வகையில்
பாடல் ஒன்றை அகத்திய மாமுனி எழுதி இருக்கிறார். இந்தப் பாடலை தினமும்
பக்தியுடன் பாடி வந்தால் இல்லத்தில் சுபிட்சம் பெருகும். இந்தப் பாடல்
எழுதிய ஏடுகள் வீட்டில் இருந்தால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும்
நிலவுகிறது. இதைத் தனது பாடலிலேயே அகத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
கி.பி.1564 முதல் 1604ம் ஆண்டு வரை தென்பாண்டி நாட்டை ஆண்ட அதிவீரராம
பாண்டியர் என்பவரால் இந்தப் பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டதாக வரலாறு
கூறுகிறது. சிறப்புமிக்க அந்தப் பாடல் வருமாறு:
மூவுலகும் இடரியற்றும் அடலவுணர் உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவை உறழ் திருமேனி அருட்கடவுள் அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர் உலகினும் விளங்கும் புகழ்க்கொல்லா புரந்தினிது சேர்ந்து வைகும்
பாவை இருதாள் தொழுது பழமறைதேர் குறுமுனிவர் பழிச்சுகின்றார்
கொழுதியிசை அளிமுரலும் தாமரையென் பொகுட்டிலுறை கொள்கைபோல
மழையுறழுந் திருமேனி மணிவண்ணன் இதயமலர் வைகு மானே!
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே கரகமலம் முகிழ்ந்தெந் நாளுங்
கழிபெருங்காதலில் தொழுவோர் வினைதீர அருள்கொழிக்குங் கமலக்கண்ணாய்!
கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி செழுங்கமலக் கையாய் செய்ய
விமலைபசுங் கழைகுழைக்கும் வேனிலான் தனையீன்ற விந்தை தூய
அழுதகும்ப மலர்க் கரத்தாய் பாற்கடலுள் அவதரித்தோய் அன்பர் நெஞ்சத்
திமிரகன்றிட வொளிருஞ் செஞ்சுடரே என வணக்கம் செய்வான் மன்னோ.
மடற்கமல நறும்பொருட்டில் அரசிருக்கும் செந்துவர்வாய் மயிலே மற்றுன்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன் உலகமெலாங் காவல் பூண்டான்
யடைத்தனன் நான்முகக் கிழவன் பசுங்குழவி மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன் நின் பெருங்கீர்த்தி எம்மனோரால எடுத்துச் சொல்லற் பாற்றோ
மல்லல் நெடும் புவியனைத்தும் பொதுநீக்கித் தனிபுரக்கு மன்னர் தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில் நிகரில்லாக் காட்சியோடும்
வெல் படையில் பகை துரந்து வெஞ்சமரில் வாகை புனை வீரர் தாமும்
அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின் அருள்நோக்கம் அடைந்துளாரே!
செங்கமலப் பொலந்தாதில் திகழ்தொளிரும் எழில் மேனித் திருவே வேலை
அங்கன்உல கிருள்துலக்கும் அலர்கதிராய் வெண் மதியாய் அமரர்க்கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே நெடுங் கானில் யொருப்பில் மண்ணில்
எங்குலை நீ அவனன்றோ மல்லல்வளம் சிறந்தோங்கி இருப்பதம்மா!
கங்கையின் பாவத்தை போக்கிய “குப்த கங்கை” !!!
நன்னிலத்திற்கு
அருகில் உள்ளது திருவாஞ்சியம் என்ற திருத்தலம். திருமகள் திருமாலை
வாஞ்சித்து(விரும்பி) மணந்ததால் இத்தலத்தைத் திருவாஞ்சியம் என்று
அழைத்தனர்.
மயிலாடுதுறை – பேரளம் தொடர்வண்டிப் பாதையில், நன்னிலம்
தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கே 9 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு
வாழவந்தநாயகி உடனுறை வாஞ்சியநாதர் திருக்கோயில். காவிரித் தென்கரைத்
தலங்களுள் 70-ஆவது தலம்.
இங்குள்ள இறைவன் வாஞ்சியநாதர். இறைவி வாழவந்த நாயகி, மங்கள நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
ஸ்ரீ வாஞ்சியம் திருத்தலத்திலுள்ள “குப்த கங்கை’ என்னும் தீர்த்தக்
குளத்தில் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடினால் கங்கையில்
நீராடிய பலன் கிட்டும். கங்கையில் மூழ்கி தங்கள் பாவத்தைப் போக்குவதால்
தனக்கு ஏற்படும் பாவத்தைப் போக்க என்ன செய்யலாம் என்று சிவபெருமானிடம்
கங்கை வேண்டினாள். அவரும், தான் மிகவும் விரும்பி இருக்கும் இடமும், பிரளய
காலத்திலும் அழிவில்லாத தலமுமான ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு வந்து உன்
பாவங்களைப் போக்கிக் கொள்ளலாம் என்றார். கங்கையும் இத்தலத்தில் குப்த கங்கை
என்னும் தீர்த்தமாக எழுந்தருளியுள்ளாள். எனவே, இத்தலத்திற்கு வந்து குப்த
கங்கையில் நீராடி, இறைவனுக்கு ஆயுள் விருத்தி ஹோமம் செய்து நெய் தீபம்
ஏற்றி அன்னதானம் வழங்கினால் சகல பாவங்களும் தீரும் என்பது ஐதீகம்.
உலக உயிர்களைக் கொள்வதால் தனக்கு ஏற்படும் பாவம் நீங்க வழி தேடி தலங்கள்
தோறும் சென்றார் இயமதர்மராஜன். இறுதியில் திருவாரூர் தியாகேசப் பெருமானிடம்
வேண்டினார். அருட்காட்சியளித்த ஈசன் ஸ்ரீவாஞ்சியம் வா என்று கூற,
இயமதர்மனும் அங்கு சென்று ஸ்ரீவாஞ்சிநாதரை தரிசித்து பாவச்சுமையில் இருந்து
விடுபட வேண்டினார். உலகத்தை இயக்குபவன் நானே! இதில் உன் செயல் ஒன்றும்
இல்லை. எனவே, உன்னை பாவம் வந்து சேராது என்று கூறினார்.
மகிழ்ந்த
இயமதர்மன் இத்தலத்தில் தான் எப்போதும் சேத்திர பாலகராக இருக்க வேண்டும்
என்றும், மாசி மாதம் பரணி நட்சத்திரத்தன்று தன்னையே வாகனமாகக் கொண்டு
இறைவன் உலா வந்தால், உலக உயிர்களைக் கொல்லும் பாவம் நீங்கும் என்றும்
இத்திருத்தலத்துக்கு வந்து வழிபடுவோர் மோட்சம் அடைய வேண்டும் என்றும்
வேண்டினார். தன்னை வழிபட வருபவர்கள் முதலில் குப்த கங்கையில் நீராடி
எமதர்மனை வழிபடலாம் என்று அருளினார் இறைவன்.
தலவிருட்சம் சந்தனமரம்.
இயமன் பூசித்துப் பேறு பெற்றதால், இறப்பவர்களுக்கு இயமவாதனை இல்லை.
இயமனுக்குத் தனிக் கோயிலும் இருக்கின்றது. இது முத்தியளிக்கும் தலங்களுள்
ஒன்றாகும். இங்கு மூவராலும் பதிகங்கள் பாடப் பெற்ற திருத்தலம்.