சனி, 30 ஆகஸ்ட், 2025

ராம பஜனை பாடல்கள்

 வணக்கம் குருவழி சொந்தங்களுக்கு ராம நாம பஜனை பாடல்கள் சிலவற்றைஇங்கே பதிவு செய்துள்ளோம் பயன்படுத்தி இராமனின் வல்லப ஆசியை பெற்று கொள்ளுங்கள் அன்பர்களே..... வாலைதாய் வீடு

ராம பஜனை பாடல்கள் 

ராம பஜனை பாடல்கள்
=============================
ஆத்மா ராம ஆனந்த ரமண
அச்சுத கேஷவ ஹரி நாராயண
பவ பய ஹரண வந்தித சரணா
ரகு குல பூஷன ராஜீவ லோசன
ஆதி நாராயண ஆனந்த ஷயன
சச்சிதானந்த ஸ்ரீ சத்ய நாராயண

================================

தசரத நந்தன ராம ராம்
தயா சாகர ராம ராம் (2)
பசுபதி ரஞ்சன ராம ராம்
பாபா விமோசன ராம ராம் (2)
லக்ஷ்மண சேவித்த ராம ராம்
லக்ஷ்மி மனோஹர ராம ராம் (2)
சூக்ஷ்மா ஸ்வரூப ராம ராம்
சுந்தரா வதன ராம ராம் (2)

ராகவா சுந்தரா ராம ரகுவரா

பரம பாவனா ஹே ஜகத் வந்தன

பதிதோ தாரண பக்த பரயண

ராவண மர்த்தன விக்ன பஞ்சன

===============================

ரகுபதி ராகவா ராஜா ராம்

பதீத்த பாவனா சீதா ராம்

ரகுபதி ராகவா ராஜா ராம்

பதீத்த பாவனா சீதா ராம்

....,.,...,....... சுபம்............

 ராமா ராமா ராமா வென்று நாமம் சொல்லி

பாடணும் நாமம் சொல்லி பாடணும்
நாமம் சொல்லத் தெரியாவிட்டால் நல்லவரோடுசேரணும்
எண்ணி எண்ணிப் பார்க்கணும் ஏகாந்தமாய் இருக்கணும்
என்றும அவன் சொரூபத்தில் ஈடுபட்டே இருக்கணும்

கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்று பஜனை பண்ணி பார்க்கணும்
பஜனை பண்ணத் தெரியாவிட்டால் பக்தர்களோடு சேரணும்
விட்டல் விட்டல் விட்டல் என்று கையைத் தட்டி பாடணும்
கையைத் தட்டத் தெரியாவிட்டால் கவனம் வைத்து கேட்கணும்

................... சுபம்..............

ராம ராம ராம ராம ராம நாம தரகம்

ராம க்ருஷ்ண வாசுதேவ பக்தி முக்தி தாயகம்

ஜானகி மனோஹாரம் சர்வ லோக நாயகம்

சங்கராதி செவியா மான திவ்யா நாம கீர்த்தனம்


ராமச்சந்திர ரகுவீர ராமச்சந்திர ரன தீர

ராமச்சந்திர ரகு ராம ராமச்சந்திர பரந்தாமா

ராமச்சந்திர ரகு நாதா ராமச்சந்திர ஜகன் நாதா

ராமச்சந்திர மம பந்தோ ராமச்சந்திர தயா சிந்தோ

ராமச்சந்திர மம தெய்வம் ராமசந்திர குல தெய்வம்

........................ சுபம்.............

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத நாதன் தந்த நல்ல வேதமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத சங் கடங் கள் தூர ஓடுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத துயரம் யாவும் தூசு ஆகுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத நற் பலன் கள் வந்து சேருமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத நம்மைக் காக்கும் காவ லாகுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத கோடி நன்மை யாவும் கூடுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத இம்மை மறுமை இன்றி தீருமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத வாயு மைந்தன் அன்பு மீறுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத நெஞ்சம் பாடும் இன்ப கீதமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே

நாளும் ஓத உள்ளம் அன்பு வெள்ள மாகுமே

......................சுபம்.......

சிவவாக்கியம்


அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்

சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்

சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்

எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே. –சிவவாக்கியர்


பொருள்:

அதிகாலை, மதியம், மாலை என்று மூன்று நேரங்களிலும் நீராடி குளித்து விட்டு இயம நியமங்களுடன் இருந்து சந்தியா வந்தனம் தர்ப்பணங்கள் போன்றவைகளை செய்வதும், பெறற்கரிய தவங்கள் புரிந்து காயத்ரி செபம் செய்வதும், இதனால் வரும் பலன்களால் சிந்தையில் எப்போதும் ஞானம் ஒன்றையே வைத்து தியானம் செய்வதினால் வரும் பலன்களும் எந்தையாகிய ஸ்ரீ இராமனின் ராம மந்திர செபத்தை செய்வதனாலே கிடைக்கும்.


கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்

இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்

சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்

இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே. -சிவவாக்கியர்


பொருள்:

செய்த பாவங்கள் யாவும் அகலவும், பஞ்சமா பாதகங்களை செய்யா வண்ணம் காப்பதற்கும் ஒதுவதற்குரிய அறிய மந்திரம் இதுவாக இருக்குமோ அல்லது அதுவாக இருக்குமோ என்று பற்பல மந்திரங்களை ஓதி உச்சரித்து வையகத்தில் வாழ்ந்து உழன்று வரும் ஏழை பக்தர்களே! இதோ சர்வ நேரந்த்திலும் சர்வ காலங்களிலும் உச்சரித்து ஒதுவ்த்ர்குரிய அறிய நல்ல மந்திரம் இதுதான் என்பதனை உணர்ந்து எப்போதும் இராம ராம ராம என்னும் நாமத்தை என்றும் மறவாது ஓதி உயர்வடையுங்கள்.

நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?

கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!

ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்

ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே! –சிவவாக்கியர்


பொருள்:

நான் என்று ஆனது எது? நீ என்பது எது? ஞாமாகி நமக்குள் நடுவாக நின்றது என்ன? கோனாகி இவ்வுடலை ஆட்சி செய்வது எது? குருவாக அமைந்திருப்பது எது? அது என்பதை எதுவென்று கூறிடுங்கள் எமக்குள மக்களே! ஆதியாக ஆனது எது? அது நம் உடம்பில் அழியாத பொருளாய் நின்றது எது? அது நம் உடம்பிலேயே அப்புரத்துக்கும் அப்புறமாய் வெளியாக நின்று உடல் அழிந்த பிறகும் கூட வருவது எது என்பதை நன்கு சிந்தித்து அறிந்து கூறுங்கள். இவை யாவும் ஒன்றே என அறிவை அறியவைத்து நம் பிறவியை ஈடேற்ற சரியானது இராம நாமமே என்பதை உணர்ந்து இராம மந்திரத்தை ஓதுங்கள்.















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உமாமகேஸ்வர பூஜை

              உமாமகேஸ்வர லகு பூஜை விக்நேச்வர பூஜை (மூத்தபிள்ளை நினைவு) ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை நந்தி மகன்...