வெள்ளி, 23 ஜனவரி, 2026

மீனாட்சி அம்மன் போற்றிகள்

 மீனாட்சி போற்றிகள். துதிகள்




ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி

ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி

ஓம் அருமறையின் வரம்பே போற்றி

ஓம் அறம்வளர்க்கும் அம்மையே போற்றி

ஓம் அரசிளங் குமரியே போற்றி

ஓம் அப்பர் பிணிமருந்தே போற்றி

ஓம் அமுத நாயகியே போற்றி

ஓம் அருந்தவ நாயகியே போற்றி

ஓம் அருள் நிறை அம்மையே போற்றி

ஓம் ஆலவாய்க் கரசியே போற்றி

ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி

ஓம் ஆதியின் பாதியே போற்றி

ஓம் ஆலால சுந்தரியே போற்றி

ஓம் அநந்த வல்லியே போற்றி

ஒம் இளவஞ்சிக் கொடியே போற்றி

ஓம் இமயத் தரசியே போற்றி

ஓம் இடபத்தோன் துணையே போற்றி

ஓம் ஈசுவரியே போற்றி

ஓம் உயிர் ஓவியமே போற்றி

ஓம் உலகம்மையே போற்றி

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி

ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி

ஓம் ஏகன் துணையே போற்றி

ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி

ஓம் ஐயந் தீர்ப்பாய் போற்றி

ஓம் ஒப்பில்லா அமுதே போற்றி

ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி

ஓம் கற்றோர்க் கினியோய் போற்றி

ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி

ஓம் கடம்பவன் சுந்தரியே போற்றி
ஓம் கலியாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக் குன்றே போற்றி
ஓம் கற்பின் அரசியே போற்றி
ஓம் கருணையூற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக் கினியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி
ஓம் கிளியேந்திய கரத்தோய் போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடற்கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் சித்தந் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவானந்த வல்லியே போற்றி
ஓம் சிங்கார வல்லியே போற்றி
ஓம் செந்தமிழ்த் தாயே போற்றி
ஓம் செல்வத்துக் கரசியே போற்றி
ஓம் சேனைத் தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி
ஓம் தமிழர்குலச் சுடரே போற்றி
ஓம் தண்டமிழ்த தாயே போற்றி
ஓம் திருவுடை யம்மையே போற்றி
ஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுர சுந்தரியே போற்றி
ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ்ச சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி
ஓம் தேன்மொழி யம்மையே போற்றி
ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம் பிகையே போற்றி
ஓம் நீதிகரசியே போற்றி
ஓம் பக்தர்தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி
ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
ஓம் பாண்டியரின் தேவியே போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப்பிணியே போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன்மயி லம்மையே போற்றி
ஓம் பொற்கொடி அன்னையே போற்றி
ஓம் மலையத்துவசன் மகளே போற்றி
ஓம் மங்கல நாயகியே போற்றி
ஓம் மழலைக் கிளியே போற்றி
ஓம் மனோன்மணித் தாயே போற்றி
ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி
ஓம் மீனவர்க்கோன் மகனே போற்றி
ஓம் மீனாட்சி யம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி
ஓம் முக்கண்சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ்மொழி யம்மையே போற்றி
ஓம் வடிவழ கம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல்ஈந்தோய் போற்றி
ஓம் வேத நாயகியே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்போய் போற்றி
ஓம்அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
ஓம்அங்கயற்கண் அம்மையே போற்றி





        


        மதுரை மீனாட்சி அம்மை பதிகம்!


         (பதினான்கு சீர் ஆசிரிய விருத்தம்)


(விளம், விளம்,விளம், விளம், விளம்,மா,தேமா- அரையடிக்கு)

    

உறக்கமும் உண்டியும் ஓய்வதும், சாய்வதும்  

   உண்மையில் வாழ்க்கை யாமோ?

   ஊக்கமும் உரமெனும் உள்வலித் திறமையும்

   ஒழிவதை ஏற்க லாமோ?

வறக்குமோ உன்னருள் வான்முகில் கண்களின்

   வண்மையும் அற்றுப் போமோ? 

   வளர்பயிர் மண்ணுயிர் வாடினால் தாயுளம்

   மற்றதைப் பொறுக்கு மோசொல்!

திறக்குமோ கதவுகள்? தெய்வமுன் காட்சியில்

    திளைக்கநான் வேண்டும் அம்மா!

    செந்தமிழ்ச் செழுஞ்சுவை சிந்துநற் கவிதைகள்

    சிறியனும் செய்ய வேண்டும்.

புறக்கணிக் காமலிப் புவியினில் என்துயர்

    போக்கிநீ அருள வேண்டும். 

    புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்

    பூங்கயற் கண்ணி தாயே!




உறுபொருள் செல்வமும் உற்றறி கல்வியும் 

   உயர்ந்தநல் பதவி எல்லாம் 

   ஒருநொடிப் பொழுதினில் இலவென ஆதலை 

   உலகினில் கண்ட பின்னும் 

கறுவிய உளத்தொடு களம்புகு கரியெனக்

    கனிவினைத் துறப்போர் உண்டு

    கடையெழு வள்ளலின் கதைபல கேட்டபின்

    கடிதினில் மறப்போர் உண்டு

பொறிசெலும் வழியினில், புலன்நுகர் சுகங்களைப்

     புவிதனில் விழைவோர் எல்லாம் 

     புலியென, அரியென, பொருபல விலங்கெனப்

      பொலிவற அழியக் கண்டேன்.

புறங்கடை நல்லிசை நாட்டுமோர் பண்பினைப்

      புலவனுக் கருள வேண்டும்

      புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்

      பூங்கயற் கண்ணி தாயே!



எத்தனை பிறவிகள், இத்தரை மீதினில்? 

    ஏனெனக் கீந்தாய் அம்மா?

    இதுவரை செய்பிழை யாவையும் போக்குதற் 

    கெழில்மிகு கடைக்கண் காட்டு

பித்தனின் இடப்புறப் பெற்றியைப் பெற்றனை, 

    பிள்ளையை மறந்தாய் போலும் 

    பெற்றவள் உன்னையே முற்றுமாய்ப் பற்றினேன்

    பேரருள் புரிவாய் சற்று.

கொத்தலர் மாலையும் முத்தொளிர் மகுடமும் 

    கொழுமணித் தொடியும் மின்னும்

    கோடியாம் பரிதியின் கேழொளி முகத்தினில்

    குளிர்ந்தபுன் னகையே மன்னும்

பொத்திய அல்வழி போகவே எண்ணுமென்

     புன்மையைத் தடுத்துக் காப்பாய்

     புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்

     பூங்கயற் கண்ணி தாயே

                  


        





அங்கயற்கன்னி பாமாலை  
அங்கயற்கன்னி எங்கள் மங்களச் செல்வி
அங்கயற்கன்னி எங்கள் மங்களச் செல்வி

தங்கரதம் ஏறி வரும் அங்கயற்கன்னி-தமிழ்
சங்கம் வைத்த மதுரையிலே அங்கயற்கன்னி
எங்கிருந்து நினைத்தாலும் அங்கு வருவாய்-அம்மா
எப்பொழுது என் நாவில் பொங்கி எழுவாய்.

சோலையிலே ஆடிவரும் நீலமயிலே-எங்கும்
சொக்கத் தங்கம் பூசி வரும் மாலை வெயிலே
பாலையிலே ஓடிவரும் ஜீவநதியே-என்
பாடலிலே ஏறிவரும் ஞான ஒளியே.

பூவிருந்த இடம் கூட கமகமக்கும்-பசும்
பொன்னிருந்த இடம் கூட பளபளக்கும்
நீ இருக்கும் இடம் எனது மனம் இல்லையா-அது
நெக்கு விடும் வண்ணம் இறீங்கே தினம் தொல்லையா.

பார்வையிலே காப்பாற்று மீன்போலே – அதிக
பாரமம்மா நீ தாங்கு தூண்போலே
வேர்வையைத் துடைத்து விடுதாய் போலே -என்
வீட்டில் வந்து விளையாடு சேய் போலே

அன்னையை அழைத்தல்

அன்னையே வருக... (மெட்டு : பிருந்தாவனமும்)  
அன்னையே வருக அமுதே வருக
பொன்னே வருக பொலிவாய் வருக
அம்பிகையே உன் அழகுடன் வருக
நம்பின பேருக்கு நாயகி வருக
எங்கும் நிறைந்தொளிர் இறைவீ வருக
பொங்கும் அருள்மொழி புங்கவி வருக
சங்கரி வருக சாம்பவி வருக
மங்களமே தர மாண்பாய் வருக
திவ்விய மாயவன் தேவீ வருக
செவ்விய ஒளிதர சீருடன் வருக
குசுமாம்கையாம் குணமலை வருக
வசுமுதலோர் தொழும் வாசவி வருக
எங்கள் பராபரி ஈஸ்வரி வருக
தங்கிடும் இன்பம் தருவோய் வருக
கலைமகளே நீ சடுதியில் வருக
மலைமகளே நீ மகிழ்வுடன் வருக
நிலைமகளே நீ நேர்த்தியாய் வருக
அலர்மகளே நீ அன்புடன் வருக
எங்குல மணியே எழிலுடன் வருக
எண்ணில் நலம் தரும் இன்பமே வருக (அன்



அம்மன் பாடல்  

கோடிக்கண்கள் போதுமோ தாயே உந்தன்
கோலாகல காக்ஷிகாண
பாடிப்பணியும் தொண்டருடன் உந்தன்
பரப்ரம்ம ஸ்வரூபத்தைக் காணக் காணக் காண (கோடி)
தேடித் தெவிட்டாத தேனே உந்தன்
தேஜோமய ஜோதிகாண
வாடி அலையுது என்நெஞ்சம் இனி
வருந்தேல் என வரம்தா தேவீ
நீடித்திருக்கும் செல்வம் நீயே
நித்ய ரூபமதருள்வாயே
ஓடித்திரியும் வேலனுடன் உன்னை
ஒய்யாரமாக எங்கும் காணக் காணக் காண (கோடி)
பீடித்திருக்கும் வினைபோகும்
கொடும்பேதன்ம புத்தி தூரத்தேகும்
ஆடும் மயில்மீது வரும் அந்த
ஆனந்த முருகனைக் காண்பார்க்கு
சூடியமதி முடியாளே
சைதன்ய ரூபி லலிதேஸ்வரி
சுருதிமறையிடும் பாலே உன்னை
சுந்திர முருகனுடன் காணக் காணக் காண (கோடி


அராளகேசி ஊஞ்சல் பாட்டு  
அருளோடு பொருள் தந்து ஆதரிக்கும் அம்மா
அழகான பொன்னூஞ்சல் ஆடிடுவாய் அம்மா (லாலி)
இருள் நீக்கி ஒளிதந்து எமைகாக்கும் அம்மா
இனிதான பொன்னூஞ்சல் ஆடிடுவாய் அம்மா (லாலி)
அவமாயை அகற்றும்நல அம்பிகையே நீதான்
அழகான பொன்னூஞ்சல் ஆடிடுவாய் அம்மா (லாலி)
நவ இரவில் நாங்கள் கண்டுகளித்திடவே அம்மா
நவரத்ன பொன்னூஞ்சல் ஆடிடுவாய் அம்மா (லாலி)
நாமகளாய் முதல் மூன்று நாளிரவில் வந்து
நற்கல்விகலை யெல்லாம் நல்கிடுவாய் அம்மா (லாலி)
இடைமூன்று நாளிரவில் இலக்குமியாய் வந்து
இகபோக செல்வங்களை எமக்களிப்பாய் அம்மா (லாலி)
வெற்றி தரும் செல்வியாய் வீரசுகுமாரியாய்
கடைமூன்று இரவினிலே காட்சி தரும் அம்மா (லாலி)
ஒருபாதி சிவனாக மறுபாதி உமையாக
சிவகாமி தேவி பொன்னூஞ்சல் ஆடு (லாலி)
விண்ணோரும் மண்ணோரும் விரும்பி உனைத்துதிக்க
வண்ணமலர் பொன்னூஞ்சல் வந்தாடு அம்மா (லாலி)
பாரிஜாதம் மணக்க பவளக்கொடி ஊஞ்சலிலே
பார்வதியே பாலாம்பா பாங்குடனே ஆடு (லாலி)
நம்புமடியார்கள் வினை நாளும் தீர்ப்பவளே
செம்பவளக்கொடி ஊஞ்சல் தனிலாடு அம்மா (லாலி)
அருட்பெருஞ்ஜோதியே அராளகேசி உமையே
ரத்னகிரீசருடன் பொன்னூஞ்சல் ஆடு (லாலி)


அம்மன் - அருள் வேண்டற் பதிகம்  
கூடல் மாநகராளும் கொற்றவை புகழ்பாடக்
குழந்தை நானோடி வந்தேன்!
குறைவிலா அருளோடு குணமிகு கற்பகம்
கூர்மதி தந்து அருள்க!
ஆடல்புரி சிவனாரின் அகமாளும் என்தாயை
அன்புடன் பாட வந்தேன்!
அற்பனென் கவிதையை அற்புதம் என்றாக்கி
அருள்புரிய வேணு மைய்யா!
தேடுமுயர் ஞானமும் தெவிட்டாத யோகமும்
தேவியுன் அருளே என்று
தெளிந்திடும் சித்தமும் தேர்ந்திடும் புத்தியும்
தேவி நீ தந்து அருள்க!
பாடுமென் பாடலைப் பாமாலை ஆக்கியுன்
பாதமலர் சூடு கின்றேன்!
பரிவோடு உன்மகன் பாடலைக் கேட்டுஎன்
பாடுகள் போக்கி அருள்க!
சிறுமடல் மல்லிகை அதன் மணம்போல என்
சித்தத்தில் மணக்கும் தாயே!
ஒருமடல் வரைகிறேன் எனதிடர் யாவையும்
ஒருகணம் கேளு நீயே!
ஒருவழிப் பாதையில் நெடுவழிப் பயணமாய்
ஓய்வின்றி உழலு கின்றேன்!
நடுவழிப் பாதையில் நான்சோர்ந்து போயில்
நலமுடன் வந்து காப்பாய்!
அறிவிலா மூடனாய் அன்பிலா மூர்க்கனாய்
அவனியில் வாழு கின்றேன்!
தெளிவிலா வேதாந்தம் பலபேசி என்வாழ்வைத்
தேய்பிறை ஆக்கி விட்டேன்!
பலதுயர் பட்டபின் அவைபோக்கும் மருந்து உன்
பாதமலர் என்று கண்டேன்!
பரிவோடு உன்பாதம் என்நெஞ்சில் வைத்துஎன்
பாவங்கள் போக்கு தாயே!
மடிதனில் உதைத்தாலும் மாரிலே மிதித்தாலும்
மகிழ்வோடு கொஞ்சும் தாயாய்
மனதிலே நினைத்தாலும் மகிழ்வோடு துதித்தாலும்
மகிமைகள் அருளும் தாயே!
கொடிதான ஊழ்வினைத் தொடராலே உலகினில்
குமுறியே வாடுகின் றேன்!
கொற்றவை உன்பாதம் பற்றியே அழுகிறேன்
குறைகளைப் போக்கி அருள்க!
மடிகின்ற காயத்துள் மாயாயாம் ஆசைகள்
மலைபோல வளரு தம்மா!
மமதையாம் ஆணவப் பேய்களும் மனதுள்ளே
மகிழ்வோடு ஆடுதம்மா!
தொடர்கின்ற பிறவியும் தொலையாத வினைகளும்
தொடர்ந்துமே பின்னுதம்மா!
தூயநின் பாதத்தைச் சேய்நானும் பற்றினேன்
துலங்கிட அருளு மம்மா!
இதயமும் கசிந்தோடி இருவிழி நதியாகி,
இவைகூடும் சங்கமத்தில்
உதயத்தின் ஒளிபோல் வினையிருள் நீக்கிடு
ஒப்பிலா எந்தன் தாயே!
அழுதிடும் பிள்ளையின் அழுகையின் தரங்கொண்டு
அதுபோக்கும் அன்னை போலத்
தொழுதிடும் உன்மகன் தொழுகையின் தரங்கண்டு
துயரங்கள் போக்கு தாயே!
வேரின்றி மரமில்லை! விலையின்றிப் பொருளில்லை!
விதிவென்ற மனிதரில்லை!
நீரின்றி உலகில்லை! நிலவின்றி வானில்லை!
நின்னருட் கிணை யுமில்லை!
நினைவின்றி மனமில்லை! நீயின்றி நானில்லை!
நேரிலே வருவ தென்று?
தாயின்றித் தவிக்கின்ற சேயாக அழுகின்றேன்!
தயவோடு வந்து காப்பாய்!
கருவளர் நிலையிலும் மடிவளர் நிலையிலும்
குழவிதன் தாயை உணரும்!
தரைதவழ் நிலையிலும் தளிர்நடை அசைவிலும்
பிறசுற்றம் கண்டு அறியும்!
மதிவளர் நிலையிலும் மனைமாட்சி வரவிலும்
உலகியல் மோகம் வளரும்!
விதிவளர் நிலையிலும் வினைபடு நிலையிலும்
உனதருள் தேடி அலையும்!
கடைவழி திரியுமோர் தெருவழி நாயெனக்
கடையனும் அலையு முன்னர் (உன்)
கடைவிழி அசைவினால் எனக்கருள் வழங்குவாய்
கடையூரில் வாழும் தாயே!
விடைவழி அறியாத துயர்நிலை ஒழியவும்
விரைவினில் வருக தாயே!
விடைதனில் ஏறிடும் சிவனுடன் கூடிநீ
விரைவுடன் அருள்க தாயே!
வலைகளாய் உறவுகள் - அலைகளாய்ப் பிறவிகள்
முடிவுநான் காண்ப தென்று?
மலைகளாய் ஆசைகள் - தளைகளாய் என்வினை
இவைகளை வெல்வ தென்று?
நிலையிலா மனத்துடன் துணிவிலா குணத்துடன்
எனைநீயும் படைத்த தேனோ?
அழிவிலா உன்பதம் அடையநான் சம்மதம்
அதற்கொரு வழியு மென்ன?
அறிவிலா உன்மகன் படும்துயர் கண்டுநீ
அசைவிலா திருக்கலாமோ?
ஒருசிறு நொடியேனும் உன் மகன் எனை நினை
என்நொடி யாவும் தீரும்!
இருவினை மும்மலம் இவையெலாம் ஒழிந்திட
உனதருள் ஒன்று போதும்!
இருகரம் கூப்பியே அழுகிறேன் உன்மகன்
இறைவி நீ அருள வருக!
நிதிகேட்டு வந்தாலும் கதிகேட்டு வந்தாலும்
நிறைவோடு அருளும் தாயே!
மதிகெட்டுப் போனவன் மனம்விட்டு அழுகிறேன்
மனம்கனிய வேணும் தாயே!
கதிகெட்டுப் போனாலும் லயம் கெட்டுப் போனாலும்
இசைகெட்டுப் போகும் தாயே!
விதிவிட்ட வழியென்று வினைமுற்ற வாழ்வதால்
விளையுமோ நன்மை தாயே?
பரிவட்டம் பல்லக்கு பகட்டான பெருவாழ்வு
பாரினில் மாயை அம்மா!
இளவட்டம் மாறியும் நரைவட்டம் கூடியும்
மனமாற்றம் இல்லை அம்மா!
தொடரட்டும் உன்னருள் ! தொலையட்டும் என்வினை!
துரிதமாய்ச் செயல்படு அம்மா!


அம்மன் - அருள் வேண்டற் பதிகம்  
கூடல் மாநகராளும் கொற்றவை புகழ்பாடக்
குழந்தை நானோடி வந்தேன்!
குறைவிலா அருளோடு குணமிகு கற்பகம்
கூர்மதி தந்து அருள்க!
ஆடல்புரி சிவனாரின் அகமாளும் என்தாயை
அன்புடன் பாட வந்தேன்!
அற்பனென் கவிதையை அற்புதம் என்றாக்கி
அருள்புரிய வேணு மைய்யா!
தேடுமுயர் ஞானமும் தெவிட்டாத யோகமும்
தேவியுன் அருளே என்று
தெளிந்திடும் சித்தமும் தேர்ந்திடும் புத்தியும்
தேவி நீ தந்து அருள்க!
பாடுமென் பாடலைப் பாமாலை ஆக்கியுன்
பாதமலர் சூடு கின்றேன்!
பரிவோடு உன்மகன் பாடலைக் கேட்டுஎன்
பாடுகள் போக்கி அருள்க!
சிறுமடல் மல்லிகை அதன் மணம்போல என்
சித்தத்தில் மணக்கும் தாயே!
ஒருமடல் வரைகிறேன் எனதிடர் யாவையும்
ஒருகணம் கேளு நீயே!
ஒருவழிப் பாதையில் நெடுவழிப் பயணமாய்
ஓய்வின்றி உழலு கின்றேன்!
நடுவழிப் பாதையில் நான்சோர்ந்து போயில்
நலமுடன் வந்து காப்பாய்!
அறிவிலா மூடனாய் அன்பிலா மூர்க்கனாய்
அவனியில் வாழு கின்றேன்!
தெளிவிலா வேதாந்தம் பலபேசி என்வாழ்வைத்
தேய்பிறை ஆக்கி விட்டேன்!
பலதுயர் பட்டபின் அவைபோக்கும் மருந்து உன்
பாதமலர் என்று கண்டேன்!
பரிவோடு உன்பாதம் என்நெஞ்சில் வைத்துஎன்
பாவங்கள் போக்கு தாயே!
மடிதனில் உதைத்தாலும் மாரிலே மிதித்தாலும்
மகிழ்வோடு கொஞ்சும் தாயாய்
மனதிலே நினைத்தாலும் மகிழ்வோடு துதித்தாலும்
மகிமைகள் அருளும் தாயே!
கொடிதான ஊழ்வினைத் தொடராலே உலகினில்
குமுறியே வாடுகின் றேன்!
கொற்றவை உன்பாதம் பற்றியே அழுகிறேன்
குறைகளைப் போக்கி அருள்க!
மடிகின்ற காயத்துள் மாயாயாம் ஆசைகள்
மலைபோல வளரு தம்மா!
மமதையாம் ஆணவப் பேய்களும் மனதுள்ளே
மகிழ்வோடு ஆடுதம்மா!
தொடர்கின்ற பிறவியும் தொலையாத வினைகளும்
தொடர்ந்துமே பின்னுதம்மா!
தூயநின் பாதத்தைச் சேய்நானும் பற்றினேன்
துலங்கிட அருளு மம்மா!
இதயமும் கசிந்தோடி இருவிழி நதியாகி,
இவைகூடும் சங்கமத்தில்
உதயத்தின் ஒளிபோல் வினையிருள் நீக்கிடு
ஒப்பிலா எந்தன் தாயே!
அழுதிடும் பிள்ளையின் அழுகையின் தரங்கொண்டு
அதுபோக்கும் அன்னை போலத்
தொழுதிடும் உன்மகன் தொழுகையின் தரங்கண்டு
துயரங்கள் போக்கு தாயே!
வேரின்றி மரமில்லை! விலையின்றிப் பொருளில்லை!
விதிவென்ற மனிதரில்லை!
நீரின்றி உலகில்லை! நிலவின்றி வானில்லை!
நின்னருட் கிணை யுமில்லை!
நினைவின்றி மனமில்லை! நீயின்றி நானில்லை!
நேரிலே வருவ தென்று?
தாயின்றித் தவிக்கின்ற சேயாக அழுகின்றேன்!
தயவோடு வந்து காப்பாய்!
கருவளர் நிலையிலும் மடிவளர் நிலையிலும்
குழவிதன் தாயை உணரும்!
தரைதவழ் நிலையிலும் தளிர்நடை அசைவிலும்
பிறசுற்றம் கண்டு அறியும்!
மதிவளர் நிலையிலும் மனைமாட்சி வரவிலும்
உலகியல் மோகம் வளரும்!
விதிவளர் நிலையிலும் வினைபடு நிலையிலும்
உனதருள் தேடி அலையும்!
கடைவழி திரியுமோர் தெருவழி நாயெனக்
கடையனும் அலையு முன்னர் (உன்)
கடைவிழி அசைவினால் எனக்கருள் வழங்குவாய்
கடையூரில் வாழும் தாயே!
விடைவழி அறியாத துயர்நிலை ஒழியவும்
விரைவினில் வருக தாயே!
விடைதனில் ஏறிடும் சிவனுடன் கூடிநீ
விரைவுடன் அருள்க தாயே!
வலைகளாய் உறவுகள் - அலைகளாய்ப் பிறவிகள்
முடிவுநான் காண்ப தென்று?
மலைகளாய் ஆசைகள் - தளைகளாய் என்வினை
இவைகளை வெல்வ தென்று?
நிலையிலா மனத்துடன் துணிவிலா குணத்துடன்
எனைநீயும் படைத்த தேனோ?
அழிவிலா உன்பதம் அடையநான் சம்மதம்
அதற்கொரு வழியு மென்ன?
அறிவிலா உன்மகன் படும்துயர் கண்டுநீ
அசைவிலா திருக்கலாமோ?
ஒருசிறு நொடியேனும் உன் மகன் எனை நினை
என்நொடி யாவும் தீரும்!
இருவினை மும்மலம் இவையெலாம் ஒழிந்திட
உனதருள் ஒன்று போதும்!
இருகரம் கூப்பியே அழுகிறேன் உன்மகன்
இறைவி நீ அருள வருக!
நிதிகேட்டு வந்தாலும் கதிகேட்டு வந்தாலும்
நிறைவோடு அருளும் தாயே!
மதிகெட்டுப் போனவன் மனம்விட்டு அழுகிறேன்
மனம்கனிய வேணும் தாயே!
கதிகெட்டுப் போனாலும் லயம் கெட்டுப் போனாலும்
இசைகெட்டுப் போகும் தாயே!
விதிவிட்ட வழியென்று வினைமுற்ற வாழ்வதால்
விளையுமோ நன்மை தாயே?
பரிவட்டம் பல்லக்கு பகட்டான பெருவாழ்வு
பாரினில் மாயை அம்மா!
இளவட்டம் மாறியும் நரைவட்டம் கூடியும்
மனமாற்றம் இல்லை அம்மா!
தொடரட்டும் உன்னருள் ! தொலையட்டும் என்வினை!
துரிதமாய்ச் செயல்படு அம்மா!
மலரட்டும் என்மனம் ! படரட்டும் பேரொளி!
மகனெனக் கருள்புரி அம்மா!
ஒருமாரில் அமுதுண்டு மறுமாரில் கால்வைத்து
மகிழ்வோடு உதைத்தபோதும்
இருபாதம் தளிர்தொட்டு இதழாலே முத்தாரம்
தருகின்ற அன்னை போலப்
பலவாறு நான்கெட்டுப் பண்பாடு இல்லாமல்
பதராக அலைந்த போதும்
பரிவோடு எனைவாழ்த்திப் பாங்கோடு எனைக்காத்துப்
பாசத்தைப் பொழியும் தாயே!
திருவோடு கையேந்தும் ஈசற்கு அருள்கின்ற
திருவான அன்னை உமையே!
திருஏடு வைகையில் எதிர்நீச்சல் போடவும்
திறமோடு அருளும் தாயே!
மருளோடு மாயையில் மயங்கிடும் உன்மகன்
மனதிலே வந்து நீயும்
அருளோடு நலந்தந்து அன்போடு வளந்தந்து
அகந்தனை ஆளு வாயே!
காதோரம் நரைவிழும் காலங்கள் தாண்டியும்
கசடனாய் வாழ்ந்த போதும்
கருத்தினில் ஒன்றையும் வாக்கினில் ஒன்றையும்
கள்ளமாய்க் கொண்ட போதும்
வேதாளம் மரமேறும் கதைபோல வாழ்வினை
வீணாகக் கழித்த போதும்
விளையாட்டு போலவே வாழ்வினை நானெண்ணி
விதிவழி சென்ற போதும்
ஏதேனும் காரணம் பலசொல்லித் தோல்வியை
இயல்பாகக் கொண்ட போதும்
துணையாக வருகின்ற நட்பையும் உறவையும்
துச்சமாய மதித்தபோதும்
மாதாவுன் திருவடி மகிமையை உணர்ந்துநான்
மனதாரத் துதித்த போது
மகிழ்வான உன்பார்வை என்மீதில் படர்ந்திட
மங்களம் பெற்று உய்வேன்!
அன்பான அகந்தனை ஆலயம் ஆக்குவேன்!
அன்னையை அங்கு வைப்பேன்!
ஆதாரப் பூக்களை நாடியால் கட்டுவேன்!
அன்னையுன் பாதம் வைப்பேன்!
பண்பான கோசங்கள் ஐந்தையும் திருத்துவேன்!
பஞ்சமுக தீபம் செய்வேன்!
பாதார விந்தங்கள் போற்றியே உருகுவேன்!
புலன்களைப் பூட்டி வைப்பேன்!
நன்றான காயத்தை திரியாக ஆக்குவேன்!
நல்லன்பை நெய் ஆக்குவேன்!
நாவார மனதார என்தாயைப் போற்றுவேன்!
நற்றமிழ்க கவி பாடுவேன்!
ஒன்றான ஆன்மாவை ஒளியாக ஏற்றுவேன்!
உருகியே நானும் பணிவேன்!
உயிரான என்தாயை உணர்வாலே கண்டுநான்
ஒன்றாகித் கலந் திருப்பேன்!
உயிர்மூச்சு எனைவிட்டு ஓடிடும் வேளையில்
உன்நாமம் கூற வேண்டும்!
உடல்விட்டு உணர்வுகள் ஒடுங்கிடும் வேளையில்
உன்னருள் நாட வேண்டும்!
உறவெனும் வலைகளில் சிக்கியே தவிக்கையில்
உன்பாதம் பற்ற வேண்டும்!
உத்தமப் பத்தினி மனையாளின் கூட்டிலும்
உன்அருள் எண்ண வேண்டும்!
உலகியல் வாழ்வினில் ஒவ்வொரு நிலையிலும்
உன்புகழ் பாட வேண்டும்!
உன்மத்தம் கொண்டாலும் ஊழ்வினை வந்தாலும்
உன்னையே போற்ற வேண்டும்!
உடலாலும் மனத்தாலும் உணர்வாலும் செயலாலும்
உன்னையே கதியாய் எண்ணி,
உருகிடும் நிலைதந்து ஒளியாக நீ வந்து
உளமெலாம் நிறைய வேண்டும் !
உடலென்ற கூட்டுக்குள் உயிரென்ற ஒருபறவை
ஓயாது வந்து போகும்!
உணர்வென்ற காட்டுக்குள் உளமென்ற ஒருயானை
ஓயாது நொந்து வாழும்!
கடலென்ற பிறவிக்குள் கணக்கின்றி வீழ்ந்துமே
காயமும் நைந்து சாகும்!
கன்மமாம் வினைகளும் கவனமாய்ச் சூழ்ந்துமே
கடைசிவரை சிந்துபாடும்!
கடமைகள் மறந்துமே கானலில் உழன்றுமே
கவலையில் மனமும் வாழும்!
கனிவான உன்னருள் அதைமட்டும் நாடாமல்
காலங்கள் பறந்து போகும்!
தடம்மாற வைக்கின்ற ஆணவச் சிந்தனை
தடையாக வந்து சேரும்!
தயவோடு உன்பாதம் அதைமட்டும் நாடினால்
இவையாவும் மாய்ந்து போகும்!
மழைவளம் செழிக்கவும் மனையறம் நிலைக்கவும்
மாதரசி அருள வேண்டும்!
மொழிவளம் சிறக்கவும் முயற்சிகள் பலிக்கவும்
முக்கண்ணி அருள வேண்டும்!
வழிவழி வருகின்ற வாழ்வியல் மேன்மைகள்
வற்றாது பெருக வேண்டும்!
வருந்துயர் போகவும் வளமைகள் பெருகவும்
வடிவரசி அருள வேண்டும்!
மதவெறி இனவெறி மொழிவெறி இவையெலாம்
மடிந்துமே போக வேண்டும்!
மானுடம் உயரவும் மாநிலம் செழிக்கவும்
மங்கைநீ அருள வேண்டும்!
வேணுமுன் திருவடி என்னெஞ்சில் என்றுநான்
வேண்டியே வாழ வேண்டும்!
வேணுகோபாலனின் சோதரி வந்துநல்
வெற்றிகள் அருள வேண்டும்


அர்ச்சனை  


குங்கும அர்ச்சனை செய்தவர்க்கு அம்பாள்
கோடி கோடி பொன்னைக் கொடுப்பவளாம்
சந்தனத்தால் அலங்காரம் செய்தவர்க்கு
அம்பாள் சர்வாபீஷ்டங்களும் கொடுப்பவளாம்
தேனால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்
திவ்ய தரிசனம் கொடுப்பவளாம்
பாலால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்
பலஜன்ம பாபத்தைப் போக்குபவளாம்
கனியால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்
கண்முன்னே வந்து நிற்பவளாம்
தீராத வினைகளைத் தீர்ப்பவளாம் தேவி
திருவடி சரணம் சரணம் அம்மா
பவபய ஹாரிணி அம்பா பவானியே
வ்யாபாரியிடத்தில் - மீனாக்ஷிக்கு
வாங்கிரொம் பக்கொடுத்தாள் -


உடமை சீர் கொடுத்த கும்மி
(நொண்டிச் சிந்து மெட்டு)
 
 
சா யக் கு ருச் சி க ளாம் - மீ னா க்ஷிக்கு
1. கா கா ரி க ரி ஸ ஸா - ஸா ஸா ஸஸ -
சா யக் கு ருச் சி க ளாம் - மீ னா க்ஷிக்கு -
ஸரி கா ரி கா ரி ஸ ஸரி ஸரி
ச ய னக்க மிச் சு க ளா ... ம்
சந்திர குலத்தரசி - மீனாக்ஷிக்கு
சாந்திக்குச் சீரெடுத்தாள்....

2. பனாரிஸ் பட்டுக்களாம் - மீனாக்ஷிக்கு
பச்சை சுருட்டுக்களாம்
பாண்டிய ரிடபாரி - மீனாக்ஷிக்கு
வேண்டிய சீர் கொடுத்தாள் -

3. பொன்னால் ஸரிகைகளாம் - மீனாக்ஷிக்கு
புதுமை ரவிக்கைகளாம் -
புண்ணிய வதிமகிழ்ந்து - மீனாக்ஷிக்கு
பூரித்துமே கொடுத்தாள் -

4. ச்ருங்கார பீலிகளாம் - மீனாக்ஷிக்கு
தங்கநாற் காலிகளாம் -
சீமையெல்லாம் ஜயித்த - மீனாக்ஷிக்கு
ஸ்ரீதனமாய் கொடுத்தாள் -

5. வெள்ளி பெட்டிகளாம் - மீனாக்ஷிக்கு
விசித்ர மெட்டிகளாம் -
விவேககுண ஸம்பன்னி - மீனாக்ஷிக்கு
வெகுவிதமாய் கொடுத்தாள்
 -
6. முத்துக் கொண்டைகளாம் - மீனாக்ஷிக்கு
ரத்ந தண்டைகளாம் -
மோஹநா அவதார - மீனாக்ஷிக்கு
முச்சீர் வைத்துக் கொடுத்தாள் -

7. தங்கத் தோடாவாம் - மீனாக்ஷிக்கு
திங்கப் பேடாவாம் -
தாயார் மன - மகிழ்ந்து - மீனாக்ஷிக்கு
தானே ரொம்பக் கொடுத்தாள் -

8. காப்புக் கொலுஸுகளாம் - மீனாக்ஷிக்கு
செகப்பு தினுஸு களாம் -
ச்ருங்காரமாகவே - மீனாக்ஷிக்கு
செய்துரொம்பக் கொடுத்தாள் -

9. அற்புத வங்கிகளாம் - மீனாக்ஷிக்கு
ஆயிரம் பாங்கிகளாம் -
அன்னை மனம் மகிழ்ந்து - மீனாக்ஷிக்கு
உன்னித மாய்க் கொடுத்தாள் -
10. காரை கண்டிகளாம் - மீனாக்ஷிக்கு
ஏறப்பொன் வண்டிகளாம் -
காஞ்சன மாலையப்போ - மீனாக்ஷிக்கு
கணிச மாகக் கொடுத்தாள் -

11. நக்ஷத்ர மாலைகளாம் - மீனாக்ஷிக்கு
நவரத்ந ஓலைகளாம் -
நாகரீ - கமாக - மீனாக்ஷிக்கு
நாலாவிதம் கொடுத்தாள் -

12. வைர முருகுகளாம் - மீனாக்ஷிக்கு
வாளித் திருகுகளாம் -
வ்யாபாரியிடத்தில் - மீனாக்ஷிக்கு
வாங்கிரொம் பக்கொடுத்தாள் -


13. ஸூரத்து முத்துக்களாம் - மீனாக்ஷிக்கு
சுழித்த நத்துக்களாம் -
சூரஸேனன் ஸுதநி - மீனாக்ஷிக்கு
ஸொந்தமா - கக் கொடுத்தாள் -

14. அத்தர்பூ செண்டுகளாம் - மீனாக்ஷிக்கு
மெத்தைகள் திண்டுகளாம் -
சுற்றிகந் தம் வீச - மீனாக்ஷிக்கு
நித்யநித்யம் கொடுத்தாள் -

15. மாணிக்க புல்லாக்காம் - மீனாக்ஷிக்கு
ஆனிப்பொன் பல்லக்காம் -
மீனாக்ஷி ப்ரியாள் மகிழ - மீனாக்ஷிக்கு
மேலின்னமும் கொடுத்தாள்


ஒன்றாகி நூறாகி  

1. ஒன்றாகி நூறாகி ஒவ்வொன்றும் தானாகி ஊர்காக்கும் எங்கள் மாரி!
தொண்டர்க்கு தாயாகி தூயார்க்கு வாழ்வாகும் உன்பாதம் போற்றி! போற்றி!
2. முன்னுக்கும் பின்னுக்கும் முதலாகி முடிவாகி முகம் காட்டும் அன்பு மாரி
அன்புக்கும் தாய்மைக்கும் அடையாளம் நானென்றும் அருளாட்சி போற்றி! போற்றி!
3. நெடுந்தில்லை நகரத்தின் மாகாளி நீயாகி நலமிட்ட அழகு மாரி!
நிலையான கலைவாழ இயலோடு, இசை வாழ நின்பாதம் போற்றி! போற்றி!
4. அறிந்தார்க்கு உறவாகி அறியார்க்கும் துணையாகும் திருமயத்தின் முத்து மாரி!
நெறிவாழ அறம்வாழ நிலம்வாழ குலம்வாழ அருள்மேன்மை போற்றி! போற்றி!
ஓம் சக்தியே! ஓங்காரியே! மாகாளியே! திரிசூலியே!
5. அம்பைமா நகர்தன்னில் உச்சிமா காளி என அமைந்தாளும் ஆற்றில் மாரி!
இன்பங்கள் எல்லாமும் எல்லார்க்கும் தரவந்த மகமாயி போற்றி! போற்றி!
6. செங்கையாம் தலம் தன்னில் அங்காளம்மன் என்று சிறப்போடு விளங்கும் மாரி!
மங்கையர்தம் நிலவாழ்வில் மங்கலங்கள் தரவந்த மகமாயி போற்றி! போற்றி!
7. அருள்சார்ந்த பரமக்குடி முத்தாலம்மன் என்று அழகாகத் தோன்றும் மாரி!
கருவான நாள்தொட்டு உயிர்வாழ் அருள்கின்ற கவின் பாதம் போற்றி! போற்றி!
8. வில்லிவாக் கம்தன்னில் தாந்தோணித் தாயாக வீறுபெறத் துலங்கும் மாரி!
நல்லார்கள் நெஞ்சத்தில் எந்நாளும் வாழ்கின்ற பெருந்தன்மை போற்றி! போற்றி!
ஓம் சக்தியே! ஓங்காரியே! மாகாளியே! திரிசூலியே!
9. வக்கரையில் காளி என உருவாகி அன்பர் பிணி வந்தவுடன் தீர்க்கும் மாரி!
முக்காலும் நன்மைதர எக்காலும் காத்திருக்கும் நற்பாதம் போற்றி! போற்றி!
10. தலையான சென்னைதனில் காளிகாம்பாள் என்று பெயர்கொண்ட எல்லை மாரி!
உலகோடு உயிர்யாவும் படைத்தேபின் காக்கின்ற பெருந்தேவி போற்றி! போற்றி!
11. புவனகிரித் தலம்தன்னில் பூங்காவனத்தம்மன் வடிவாகி காக்கும் மாரி!
உவமைக்கு வேற்றில்லை அருளுக்கு நிகரில்லை உயிர்பாதம் போற்றி! போற்றி!
12. திண்ணனூர் மன்னில் பிடாரிஎன் றேவந்து திருக்காட்சி அருளும் மாரி!
மண்ணுருக பொன்னுருக மாற்றார்க்கும் நெஞ்சுருகும் அன்புமனம் போற்றி! போற்றி!
ஓம் சக்தியே! ஓங்காரியே! மாகாளியே! திரிசூலியே!
13. திருமேவும் உறையூரின் வெஃகாளி வடிவாகி வளம்கோடி பொழியும் மாரி!
இருநான்கு திசையாள தடைபோடும் தாயேநின் இணைப்பாதம் போற்றி! போற்றி!
14. பாகோடு எனும் ஊரில் ஸ்ரீதேவி வடிவாகிப் பரிந்தெம்மைப் பார்க்கும் மாரி!
பகையாகி நின்றார்க்கும் மன்னிப்பைத் தருகின்ற பண்பாடு! போற்றி! போற்றி!
15. ஈரோட்டில் நீ பெரிய மாரிஎன எமை ஆண்டு இணைந்தோங்கும் சின்ன மாரி!
ஆறோடும் நீராக ஊர்செழிக்க நடக்கின்ற அருட்பாதம் போற்றி! போற்றி!
16. ஆம்பூரின் திருக்கோவில் காளிகாம்பாள் என்றுஅமைந்திட்ட அமுதமாரி!
அலைவாணி மலைவாயி கலைவாணி என மாறும் வடிவங்கள் போற்றி! போற்றி!
ஓம் சக்தியே! ஓங்காரியே! மாகாளியே! திரிசூலியே!
17. வினைதீர்க்கும் பதியாகும் பல ஊர்க்கு நடுவாகும் விழுப்புரத்தின் முத்து மாரி!
குணமாகும் ஓரெட்டும் நெறிகாண உலவிவரும் மணிப்பாதம் போற்றி! போற்றி!
18. பட்டணத்துப் பட்டாளம் எல்லைஅம்மன் என்று எட்டுத்திசை ஆளும் மாரி!
வெட்டுகின்ற இடி, மின்னல், புயல், மழையும் தென்றலுமுன் விளைவாகும் போற்றி! போற்றி!
19. கொல்லங்கோட் டெல்லைதனில் மாகாளி நீயாகி குலம்காக்கக் கனிந்த மாரி!
அல்லல்கள் தீர்த்தாண்டு நன்மைக்கு துணை நிற்கும் அணிப்பாதம் போற்றி! போற்றி!
20. பல்லடத்துப் பொங்காளி அம்மன் என அன்பர்களின் காணிக்கை ஏற்கும் மாரி!
பசுமைக்கு நிலம்ஏங்க பருவத்தின் ஊற்றாகும் அருள்நெஞ்சம்போற்றி! போற்றி!
ஓம் சக்தியே! ஓங்காரியே! மாகாளியே! திரிசூலியே!
21. ஆமாத்தூர் நகர்வட்டப் பாறையம்மன் என்று அணிகொண்ட அன்னை மாரி!
அறத்தோடு பொருள் இன்பம், வீடுதனைப் பரிசாக்கும் புகழ்ப்பாதம் போற்றி! போற்றி!
22. மணச்ச நல் லூர்தன்னில் அங்காளம்மன் என்று மலர்கின்ற காவல்மாரி
அனைத்துலகும் நெறிநிற்க அனைத்துயிரும் தாம் செழிக்க அருள்வெள்ளம் போற்றி! போற்றி!
23. கொங்குமணித் திருநாட்டில் கோவைநகர் ஆலயத்தில் கொலுவிருக்கும் தண்டு மாரி!
சங்கெடுத்த மாயவனின் தங்கை என விளங்கும் நின் மலர்ப்பாதம் போற்றி! போற்றி!
24. அழகுமேல் மருத்தூர் ஆதிப ராசக்தி வடிவான தெய்வ மாரி!
அணிமணிகள் மின்னிவர மணிமுடியும் நின்னொளிரும் திருக்காட்சி போற்றி! போற்றி!
ஓம் சக்தியே! ஓங்காரியே! மாகாளியே! திரிசூலியே!
25. அவனியா புரம் தன்னில் காளி என உருக்காட்டி அரசாட்சி நடத்தும் மாரி
ஆன்மீகமும் நல்லறமும் தன்தழைக்க நிழலாகும் சீர்ப்பாதம் போற்றி! போற்றி!
26. காஞ்சிபுர மூதூரில் கடுக்காளி என வந்து கலைகண்ட நல்ல மாரி!
கண்காக்கும் இமைபோல் மண்காக்கும் சிலையான திருமேனி போற்றி! போற்றி!
27. மலைசூழும் சேலத்தில் நடுவாக இடம் கொண்ட மலைத்தேவி கோட்டை மாரி
படியேறி வந்தார்க்கு கடலாக வளம் சேர்க்கும் பொற்பாதம் போற்றி! போற்றி!
28. நஞ்சையுடன் புஞ்சை நன்றாக விளையும் நாடாகும் தஞ்சை மாரி!
அஞ்சேல் என் றே எம்மைக் கண்பார்க்க மண்வந்த திருத்தோற்றம் போற்றி! போற்றி!
ஓம் சக்தியே! ஓங்காரியே! மாகாளியே! திரிசூலியே!
29. வேலூரில் ஸ்ரீகனக துர்க்கைஎனப் பகைமுடிக்க வீடுபெறு வீரமாரி!
பாலாற்று நீராக ஊற்றாக உயர்புரக்கும் திருப்பாதம் போற்றி! போற்றி!
30. நாள்தோறும் நல்லாரின் துயர்நீக்கும் கடன்ஏற்றி காப்பாற்றும் வெற்றி மாரி!
வாளோடு படைக்கலங்கள் தோளேந்தி வருகின்ற வல்லமையும் போற்றி! போற்றி!
31. தணந்தார்க்கும் பணிந்தார்க்கும் துணையாகி அருள்செய்யத் தலம் கண்ட தேவி மாரி!
தவறாமல் எளியோர்க்கு உறவாகி வாழ்வுதரும் தாய்ப்பாதம் போற்றி! போற்றி!
32. ஓம்கார ஒலியாக உயிரில் மூச்சாக உறைகின்ற சக்தி மாரி! நீர், நெருப்பு, காற்று, வெளி, நிலம் யாவும் தீயாகும்


சித்திரை தேரோடும்... 

 
சித்திரை தேரோடும் மதுரையிலே
ஒரு பத்தரை மாற்று தங்கம் இருக்குதம்மா
இத்தரை மீதினிலே கண்கண்ட தேவியம்மா
முத்திரை தேரோடும் மீனாட்சி தெய்வமம்மா
முத்தமிழும் வளர்ந்துவரும் நகரமம்மா
அங்கே நித்தமும் ஓடிவரும் வைகை நதி வளமம்மா
வித்தாகி விளைவாகி வடிவான அம்பிகையும்
சத்தான பொருள் அனைத்தும் சொத்தாக தந்திடுவாள்
பாண்டிய மண்ணிலே பிட்டுக்கு மண்சுமந்த
முக்கண்ணன் சொற்றீசா புகழோங்கி நிறைந்திருக்கும்
மூக்குத்தி அணிந்திருக்கும் அருளையெல்லாம் அள்ளி தருக
அன்னையாம் மீனாட்சி கருணையும் நிறைந்திருக்கும்

மங்களம்  
அன்னை அன்னை அன்னை அன்னை அன்பினுக்கு மங்களம்
ஆதிசக்தி அம்பிகைக் கனந்த கோடி மங்களம்
என்னுள்ளே விளங்கும் எங்கள் ஈஸ்வரிக்கு மங்களம்
இச்சையாவும் முற்றுவிக்கும் சிற்சபைக்கு மங்களம்
நாமகீர்த்தனம் பரந்து நாடெல்லாம் செழிக்கவும்
வேறிடாத இன்பம் பொங்கி வீடெலாம் விளங்கவும்
ஞானதீபம் ஏற்றி என்றும் நாமகீதம் பாடுவோம்
தர்மசக்தி வாழ்க என்று சந்ததம் கொண்டாடுவோம் (அன்னை)
சங்கரி சங்கரன் தேவி மனோஹரி
சந்த்ர கலாதரி அம்பிகையே
எங்கும் நிறைந்த உன் இணையடியை
தொழும் பேர் எனக்கே அருள் பைரவியே
மரகத ச்யாமள ரூபிணியே
மஹிஷாஸுர பார்வதியே
பரமேச்வரி ஜகதாம்பிகையே
மங்களமே தந்து எங்களைக் காத்திட
மனமுவந்தே உடன் வருவாயே
ஐங்கரனைப் பெற்ற அன்னையே
உன்னையே நம்பிடும் எம்மையே காப்பாயே.

மதுரை மீனாட்சி அம்மன் ஸ்துதி  
அம்மா மதுரை மீனாக்ஷி
அருள்வாய் காஞ்சி காமாட்சி
அன்பாய் எனையே ஆதரித்து
அல்லல் களைந்தே காப்பாற்று
அன்னை தேவி பராசக்தி
என்னை படைத்தது உன்சக்தி
வாழ்வைத் தந்து வளம் தந்து
வாழ்க்கைக் கடலின் கரையேற்று
தில்லை சிதம்பரம் பத்தினியே
நெல்லையில் வாழும் பத்தினியே
திருவடி மலரினைத் தொழுதிடுவேன்
திருவருள் புரிந்தெனைக் காப்பாற்று
ஓங்காரப் பொருள் நீதானே
உலகம் என்பதும் நீதானே
காணும் இயற்கைக் காட்சிகளும்
காற்றும் மழையும் நீதானே
அம்மா தாயே உனைவேண்டி
அழுதிடும் என்னைத் தாலாட்டி
அன்புடன் ஞானப் பாலூட்டி
அகத்தின் இருளைப் போக்கிடுவாய்
உள்ளக் கோயில் உன்கோயில்
உயிரும் மூச்சும் உன் வடிவம்
பேச்சும் செயலும் உன்செயலே
பெருகட்டும் உன் பேரருளே

ராஜ ராஜேஸ்வரி ஸ்தோத்திரம்  
1. ஸ்ரீ சக்ர வாஸி நி ஸ்ரீ தேவி நமஸ்தே
சிவகாமசுந்தரி ஸ்ரீ தேவி நமஸ்தே
ஸ்ரீ கிருஷ்ண ஸோதரி ஸ்ரீ தேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீ தேவி நமஸ்தே
2. பத்மதளலோசனி ஸ்ரீதேவி நமஸ்தே
பக்தபரிபாலினி ஸ்ரீதேவி நமஸ்தே
பர்வத வர்த்தினி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
3. கருணாவிலாஸினி ஸ்ரீதேவி நமஸ்தே
காத்யாயினி கௌரி ஸ்ரீதேவி நமஸ்தே
கதம்பவன வாஸினி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
4. சக்தி பரமேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
சம்புண மோஹினி ஸ்ரீதேவி நமஸ்தே
சங்கரி மஹேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜ ராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
5. அன்னபூர்ணேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
அகிலாண்ட நாயகி ஸ்ரீதேவி நமஸ்தே
அபயப்ரதாயினி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
6. ஸத்யஸ்வரூபிணி ஸ்ரீதேவி நமஸ்தே
ஸத்குருரூபிணி ஸ்ரீதேவி நமஸ்தே
தர்மஸ்வரூபிணி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
7. அகண்ட பரிபூரணி ஸ்ரீதேவி நமஸ்தே
ஆதிபராசக்தி ஸ்ரீதேவி நமஸ்தே
அகில பரிபாலிணி ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
8. அனாதரக்ஷகி ஸ்ரீதேவி நமஸ்தே
ஸெளபாக்கிய தாயினி ஸ்ரீதேவி நமஸ்தே
ஸந்தான பலப்ரதே ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
9. பாஹி புவனேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே
ஸ்ரீ வித்யா ரூபிணி ஸ்ரீதேவி நமஸ்தே
சக்தி ஸ்ரீ சாரதே ஸ்ரீதேவி நமஸ்தே
ராஜ ராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மீனாட்சி அம்மன் போற்றிகள்

 மீனாட்சி போற்றிகள். துதிகள் ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி ஓம் அருமறையின் வரம்பே போற்றி ஓம் அறம்வளர்க்கும் அம்மை...