செவ்வாய், 2 செப்டம்பர், 2025

கிரகங்களின் திசை மொழி காயத்ரி மத்திரங்கள்

 

கிரகங்களின் மொழிகள் மற்றும் திசைகள்.

வணக்கம்.
கிரகங்களின் மொழிகள் மற்றும் திசைகள்.
கிரகங்கள். ------------------------மொழிகள்.

1.சூரியன் --------சமஸ்கிருதம்,தெலுங்கு மொழி.
2.சந்திரன் ------------தமிழ் மொழி.
3.செவ்வாய் ----------பாஷாண-மந்திர மொழி .
4.புதன் ---------------------கணிதம்.ஜோதிடம்.
5.குரு-------------சமஸ்கிருதம்,தெலுங்கு மொழி
6.சுக்கிரன-------------சமஸ்கிருதம்,தெலுங்கு மொழி.
7.சனி -------------------------துளுகு------அன்னிய மொழி.
8.ராகு ----------------------------------அன்னிய மொழி.
9.கேது ---------------------------------அன்னிய மொழி.
கிரகங்கள் ------------------------- திசைகள்.
1.சூரியன் --------------------------.கிழக்கு மித்ரன்
2.சந்திரன் --------------------------மேற்கு வருணன்
3.செவ்வாய் -----------------------தெற்கு.
4.புதன் --------------------------------வட கிழக்கு.
5.குரு -----------------------------------வடக்கு.
6.சுக்கிரன் --------------------------தென்கிழக்கு
7.சனி -----------------------------------மேற்கு.
8.ராகு -----------------------------------தென் மேற்கு.
9.கேது ----------------------------------வட மேற்கு


1..கிரகம்: சூரியன் (ஞாயிறு)
ஸ்தலம்: சூரியனார் கோவில் 
நிறம்: சிவப்பு 
தானியம்: கோதுமை 
வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர் 
மலர்: செந்தாமரை 
உலோகம்: தாமிரம் செம்பு
நாள்: ஞாயிறு 
ராசிகற்கள்: மாணிக்கம் 
பலன்கள்: காரிய சித்தி. 
 
2. கிரகம்: சந்திரன் (திங்கள்)
ஸ்தலம்: திங்களூர் 
நிறம்: வெள்ளை 
தானியம்: அரிசி 
வாகனம்: வெள்ளை குதிரை 
மலர்: வெள்ளரளி 
உலோகம்: ஈயம் 
நாள்: திங்கள் 
ராசிகற்கள்: முத்து 
பலன்கள்: தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.
 

3. கிரகம்: செவ்வாய் 
ஸ்தலம்: வைதீஸ்வரன் கோவில் 
நிறம்: சிவப்பு 
தானியம்: துவரை 
வாகனம்: ஆட்டுக்கடா 
மலர்: செண்பகம் 
உலோகம்: செம்பு 
நாள்: செவ்வாய் 
ராசிகற்கள்: பவழம் பவளம்
பலன்கள்: பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம்.
 
4. கிரகம்: புதன் 
ஸ்தலம்: திருவென்காடு 
நிறம்: பச்சை 
தானியம்: பச்சைபயிர் 
வாகனம்: குதிரை 
மலர்: வெண்காந்தல் 
உலோகம்: பித்தளை 
நாள்: புதன் 
ராசிகற்கள்: மரகதம் 
பலன்கள்: சகல சாஸ்திரம் மற்றும் ஞானம். 
 
5. கிரகம்: குரு (வியாழன்)
ஸ்தலம்: ஆலங்குடி 
நிறம்: மஞ்சள் 
தானியம்: கொண்டை கடலை 
வாகனம்: அன்னம் 
மலர்: வெண்முல்லை 
உலோகம்: பொன் 
நாள்: வியாழன் 
ராசிகற்கள்: புஷ்பராகம் 
பலன்கள்: சகல சம்பந்துக்கள், மற்றும் வித்தைகள் தேர்ச்சி.
 
6. கிரகம்: சுக்கிரன் (வெள்ளி)
ஸ்தலம்: கஞ்சனூர் 
நிறம்: வெள்ளை 
தானியம்: மொச்சை 
வாகனம்: கருடன் 
மலர்: வெண்தாமரை 
உலோகம்: வெள்ளி 
நாள்: வெள்ளி 
ராசிகற்கள்: வைரம் 
பலன்கள்: விவாகம் மற்றும் பிராப்தம் செளபாக்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்.
 
7. கிரகம்: சனி 
ஸ்தலம்: திருநள்ளாறு 
நிறம்: கருப்பு 
தானியம்: எள் 
வாகனம்: காகம் 
மலர்: கருங்குவளை 
உலோகம்: இரும்பு 
நாள்: சனி 
ராசிகற்கள்: நீலம் 
பலன்கள்: வியாதிகள், பயம், மற்றும் தீராத கடன்கள் நீங்கும்.  
 
8. கிரகம்: ராகு 
ஸ்தலம்: திருநாகேஸ்வரம் 
நிறம்: கரு நிறம் 
தானியம்: உளுந்து 
வாகனம்: ஆடு 
மலர்: மந்தாரை 
உலோகம்: தாமிரம் மற்றும் கருங்கல் 
நாள்: ஞாயிறு (அமாவாசை) 
ராசிகற்கள்: கோமேதகம் 
பலன்கள்: எந்த காரியத்திலும் ஜெயம் அடைதல்.
 
9. கிரகம்: கேது 
ஸ்தலம்: கீழ்பெரும் பள்ளம் 
நிறம்: பல நிறம் 
தானியம்: கொள்ளு 
வாகனம்: சிங்கம் 
மலர்: செவ்வள்ளி 
உலோகம்: கருங்கல் 
நாள்: ஞாயிறு (பெளர்ணமி)
ராசிகற்கள்: வைடூரியம் பலன்கள்: வறுமை, வியாதிகள் நீங்கும்

நட்சத்திர காயத்ரி மந்திரம்

1. அஸ்வினி: 
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்
 
2. பரணி: 
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்

 
3. கிருத்திகை:
 ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்
 
4. ரோஹிணி: 
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்
 
5. மிருகசீரிடம்: 
ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்
 
6. திருவாதிரை: 
 ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

 
7. புனர்பூசம்:
 ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்
8. பூசம்: 
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்
 
9. ஆயில்யம்: 
ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்
 
10. மகம்:
 ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்
 
11. பூரம்:
 ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்
 
12. உத்திரம்
: ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

13. அஸ்தம்: 
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்
 
14. சித்திரை:
 ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்
 
15. சுவாதி: 
ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்
 
16. விசாகம்: 
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்
 
17. அனுஷம்: 
ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்
 
18. கேட்டை: 
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்
 
19. மூலம்: 
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்
 
20.பூராடம்: 
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்
 
21. உத்திராடம்: 
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

22. திருவோணம்:
 ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்
 
23. அவிட்டம்: 
ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்
 
24. சதயம்: 
ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்
 
25. பூரட்டாதி: 
ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
 
26. உத்திரட்டாதி:
 ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
 
27. ரேவதி:
 ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்



நட்சத்திரங்கள் பொருள்


அசுவினி ..குதிரைத்தலை
பரணி ..தாங்கிப்பிடிப்பது
கிருத்திகை ..வெட்டுவது
உரோகிணி. .சிவப்பானது
மிருகசீரிடம்.. மான் தலை
திருவாதிரை ..ஈரமானது
புனர்பூசம் ..திரும்ப கிடைத்த ஒளி
பூசம் ...வளம் பெருக்குவது
ஆயில்யம்.... தழுவிக்கொள்வது
மகம்.... மகத்தானது
பூரம் ...பாராட்டத் தகுந்தது
உத்திரம் ..சிறப்பானது
அசுதம்... கை
சித்திரை ...ஒளி வீசுவது
சுவாதி... சுதந்தரமானது
விசாகம்... பிளவுபட்டது
அனுடம் .....வெற்றி
கேட்டை.... மூத்தது
மூலம்... வேர்
பூராடம் ...முந்தைய வெற்றி
உத்திராடம் ...பிந்தைய வெற்றி
திருவோணம் ...படிப்பறிவு உடையது, காது
அவிட்டம் ...பணக்காரன்
சதயம்.... நூறு மருத்துவர்கள்
பூரட்டாதி ....முன் மங்கள பாதம்
உத்திரட்டாதி.... பின் மங்கள பாதம்
இரேவதி .....செல்வம் மிகுந்தது

சூர்ய காயத்ரி மந்திரம்:-

ஓம் அச்வ த்வஜாய வித்மஹே

பாச ஹஸ்தாய தீமஹி

தன்னோ சூர்ய ப்ரசோதயாத்

சந்திர காயத்ரி மந்திரம்:-

பத்மத்வஜாய வித்மஹே

ஹேமரூபாய தீமஹி

தன்னோ ஸோமப் பிரசோதயாத்

அங்காரக காயத்ரி மந்திரம்:-

ஓம் வீர த்வஜாய வித்மஹே

விக்ன ஹஸ்தாய தீமஹி

தன்னோ பெளம ப்ரசோதயாத்

புத காயத்ரி மந்திரம்:-

ஓம் கஜத் வஜாய வித்மஹே

சுக ஹஸ்தாய தீமஹி

தன்னோ புத ப்ரசோதயாத்

குரு காயத்ரி மந்திரம்:-

ஓம் விருஷபத்வஜாய வித்மஹே

க்ருணி ஹஸ்தாய தீமஹி

தன்னோ குரு ப்ரசோதயாத்

சுக்ர காயத்ரி மந்திரம்:-

ஓம் அச்வ த்வஜாய வித்மஹே

தனுர் ஹஸ்தாய தீமஹி

தன்னோ சுக்ர ப்ரசோதயாத்

சனீஸ்வர காயத்ரி மந்திரம்:-

ஓம் காக த்வஜாய வித்மஹே

கட்க ஹஸ்தாய தீமஹி

தன்னோ மந்த ப்ரசோதயாத்

ராகு காயத்ரி மந்திரம்:-

ஓம் நகத் வஜாய வித்மஹே

பத்ம ஹஸ்தாய தீமஹி

தன்னோ மந்த ப்ரசோதயாத்

கேது காயத்ரி மந்திரம்:-

ஓம் அச்வத் வஜாய வித்மஹே

சூல ஹஸ்தாய தீமஹி

தன்னோ கேது ப்ரசோதயாத்

1.சூரியன்: உலகத்தில் உள்ள அனைத்திற்கும் மூலகாரணாய் சூரியன் இருக்கிறான். அவன் கொடைக்கு நிகரில்லை. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அவன் உதவியின்றி பிராணன் கிடைப்பதில்லை. ஆகவே சூரியன் சிவனானார். 

 
2. சந்திரன்: பரமன் மனைவி பார்வதி, சந்திரனுக்கு அதிதேவதை. பூமியை தாயைப் போல் குளிரூட்டும் கிரகம். சூரியனிடத்தில் வெப்பத்தை பெற்று குளிர்ந்த ஒளியாய் தந்து நீர் நிலைகளை பொங்க வைக்கும்.
 
3. செவ்வாய்: சுப்ரமண்யர் ஜாதகத்தில் வீரத்திற்கு இன்றியமையாதது செவ்வாய் பலம். இரும்பு கிரகம் பாஷாணம் எரிமலை குழம்பு. உடல் பலத்திற்கு இன்றியமையாதது செவ்வாயின் நிலை. வீரத்தில் சிறந்த தெய்வம் முருகன்.
 
4. புதன்:   விஷ்ணு ஒரே நேரத்தில் இருவேறு குணத்தைக் கொண்ட கிரகம். தற்சுழற்சி குறைவானது. தெய்வத்தில் இரு நிறம் கொண்ட தெய்வம் விஷ்ணு. அதுபோலவே ஒருபுறம் கடும் வெப்பமும் மறுபுறம் கடும் குளிரும் கொண்டது.

5.குரு:    பிரம்மா, தட்சிணாமூர்த்தி (குரு) ஜாதகத்தில் கல்வி, கேள்வி, கீர்த்திக்கு வழிவகுக்கும் கிரகம். தற்சுழற்சி அதிகம் உள்ளது. இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடமே விருத்தியாகும். ஆசிரியர் போன்ற குணத்தை உடையது. 
 
6.சுக்கிரன்..களத்திர காரகன். லக்ஷ்மியை போல் ஐஸ்வர்யத்தை கொடுக்கக் கூடிய கிரகம். ராஜயோகத்தையும், சுகபோக வாழ்க்கையையும், மனைவி வழி சொத்து சேர்க்கையையும் மனைவியின் குண நலத்தையும் கொடுக்கும். திருமணம் காதலுக்கு உரிய கிரகம்.
 
7. சனி: எமன், சாஸ்தா உஷ்ணத்தை பிரதிபலிக்கும் கிரகம். ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும். சனி  காவல் மற்றும் குல தெய்வங்களுக்கு அம்சம் அதனால் சாஸ்தாவிற்கு நிகராக சொல்லப்பட்து. ஆனால் பார்வை உக்கிரமானது. கொடுப்பதிலும், அழிப்பதிலும் சனிக்கு நிகர் சனியே வேறு கிரகம் இல்லை (ஆயுள் காரகன்). 
 
8. ராகு: காளி, துர்கை கருமாரியின் நிழல் கிரகம். சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் இதன் 0 பாகையில் சாதகத்தில் வரும்போது பலன் தருவது அரிது. கருமை நிறம் உடையது. ராகு, கேதுக்கு இடையில் மற்ற கிரகங்கள் உடைபட்டு விட்டால் கால சர்ப்ப யோகம், தோஷம் என்று கூறுவதுண்டு.
 
9. கேது: விநாயகர், சண்டிகேஸ்வரர் ஞானத்தை கொடுக்கும் கிரகம். ஒரு ஜாதகன் பிறக்கும்போது 0 பாகை ஜன்மத்திலிருந்தால் அந்த ஜாதகனுக்கு சித்தியையும் முக்தியையும் கொடுக்கும். நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாமலிருந்து பணி செய்வதில் வல்லமையைத் தரும். சோம்பல் சேர்ந்த திடீர் மாற்றத்தை தரவல்ல கிரகம்
நிழல் கிரகம்

சரி 🙏. பிளாக் பதிவுக்கேற்றபடி வடிவமைத்து தருகிறேன். இதை நேரடியாக உங்கள் பிளாகில் போடலாம்.

---

# நவகிரகங்கள் மனிதர்களை ஆளும் ஆன்மீக உண்மை

பிரபஞ்சம் முழுவதும் ஓர் அற்புதமான சக்தி இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த சக்தியின் பிரதிபலிப்பே நம்மால் “**நவகிரகங்கள்**” என்று அழைக்கப்படும் ஒன்பது கிரகங்கள். இவை வெறும் விண்மீன்களாக மட்டும் இல்லாமல், மனித வாழ்வின் உள் ஆற்றல்களை இயக்கும் **ஆன்மீக சக்திகளாக** ஜோதிடம் கருதுகிறது.

நவகிரகங்கள் மற்றும் அவற்றின் தாக்கம்

* **சூரியன்** : ஆன்மா, ஆட்சி, தந்தைபோன்ற அதிகாரம்.

* **சந்திரன்** : மனம், உணர்ச்சி, அமைதி.

* **செவ்வாய்** : துணிவு, வீரியம், உற்சாகம்
.
* **புதன்** : அறிவு, வாணிபம், சிந்தனைத் திறன்.

**குரு** : ஞானம், ஆசீர்வாதம், வளர்ச்சி.

**சுக்கிரன்** : அன்பு, கலை, இன்பம்.

**சனி** : ஒழுக்கம், பாடம், துன்பத்தின் மூலம் ஆன்மிக முன்னேற்றம்.

**ராகு** : ஆசை, மாயை, உலகப் புகழ்.

**கேது** : ஆன்மிகம், விடுதலை, கர்ம விளைவு.

கர்ம விதி மற்றும் கிரகங்கள்

ஒவ்வொருவரின் பிறப்பில் கடந்த **நல்வினை – தீவினைகள்** தங்கள் பாதையைத் தீர்மானிக்கின்றன. அந்த கர்ம விளைவுகளை வெளிப்படுத்தும் சக்திகளே நவகிரகங்கள். அதனால், கிரகங்கள் நம்மை தண்டிக்கவில்லை; ஆனால் **நம்மால் விதைக்கப்பட்ட விதைகளை அறுவடையாக்குகின்றன**.

## ஆன்மீக உணர்வு

நவகிரகங்கள் மனிதனை உயர்த்தும் நோக்கத்துடன் செயல்படுகின்றன.

* சனி சோதனை கொடுப்பது தண்டனைக்காக அல்ல; **ஒழுக்கம் கற்றுக்கொடுக்க**.
* குரு அறிவு தருவது நம் உள்ளத்தை **ஒளியூட்ட**.
* ராகு, கேது போன்றவை மாயையையும் ஆன்மீகத்தையும் சேர்த்துக் காட்டி, **வாழ்க்கை சமநிலையை** கற்பிக்கின்றன.

## பரிகாரங்கள்

கிரகங்களின் தாக்கத்தை சமநிலைப்படுத்த,

* **நவகிரக வழிபாடு*
* **மந்திர ஜபம்**
* **தானம் மற்றும் யாகம்**
  போன்ற ஆன்மிக முறைகள் செய்யப்படுகின்றன. இவை மனதில் அமைதியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன.

## முடிவுரை

நவகிரகங்கள் மனிதரை ஆளுகின்றன என்று சொல்லப்படுவதின் உண்மை, அவை நம்மை **வழிநடத்தி, நமது கர்ம பலன்களை வெளிப்படுத்தும்** ஆன்மீக சக்திகளாக இருப்பதுதான். அவற்றின் சோதனைகளும் அருளும் ஒரே நோக்கத்திற்காகவே — மனிதனை **உயர்ந்த ஆன்மீக நிலைக்கு** உயர்த்துவதற்காக.

---
கோள்கள் நம்மை குறி வைத்து வஞ்சம் தீர்க்க வேண்டும் என்றே தீங்கு செய்வதில்லை. அது இயங்கும் போது அதன் வீச்சுகளை நமது உடல் மனம் உள்வாங்கும் போது மனம் அதற்கு ஏற்ப மாறி அது உடலில் தாக்கத்தை தரும் அச்சமயங்களில் மனத்தை இறை அனுபூதியால் நிரப்ப மனம் கோள் வீச்சங்களின் எதிர்வினைகளை உள்வாங்காது அது ஒரு ஆன்மீக ஆற்றலால் நிரப்பட்டு நிறைவாக இருக்கும் ஒருநிரம்பிய நீர்தொட்டி வெளியிலிருந்து வரும் நீரை உள்வாங்காது வழிந்தோட செய்வது போல நமக்கு வெளியிலிருந்து வரும் அசுப இடையூறுகளை ஏற்காது

தீர்க்க வழிபாடு வைராக்கிய வழிபாடு நீரை பனிகட்டியாக்கும் நிலைபோல திடபடுத்தி வைத்து இருக்கும் பனிகட்டி இடத்தை நிறப்பி பிற நீரை ஏற்கவிடாது செய்யும் 

இறைவனின் கருணை குளிர்ச்சி இமயமலை பனி சூழ்ந்து கயிலை பனி மூடி இருப்பதை ஒரு தத்துவம்

இறைவனின் குளிர்ந்த ஆசியால் நிலையான வடிவமில்லாத நீர் (மனம்)
ஒரு நிலையான வடிவம் பெற்று திடமாகிறது அது சுத்தமான நிலைமாறாது அணுகூறு திரிபு எற்படாமல் இருக்கிறது

நீர் ஓர் உவமை
நீர் ஒருமுறை உரைந்து பனிகட்டியாகி நிலை பெற்றாலும் அந்த பனிகட்டி என்ற நிலையை தக்கவைக்க குளிர்ச்சி என்ற ஆற்றலோடு தொடர்பில் இருக்கவேண்டும்.அது போல நாம் பக்குவம் அடைந்து திடசித்தம் பெற்றாலும் அதை தக்க வைக்க ஒவ்வொரு கணமும் இறை என்ற மகா சக்தியோடு தொடர்பில் இருக்கவேண்டும்

நம் முன்னோர்கள் மகரிஷிகள் ஞான சித்தர்கள் கிரக ஆதிக்கத்தை மக்களோடு தொடர்பு கொள்ளும் விதமாக வாரம் திதி நட்சத்திரம் கரணம் யோகம் என்று பஞ்சங்க கணிதம் செய்து அதனை ஆளும் கிரகங்களின் அதி தேவதை பிரதி அதி தேவதை என்று சலிப்பில்லாமல் இறைவனை வணங்கும் உபாயத்தை உபதேசித்தார்கள்

இறைவன் ஒருவனே அவன் கயிலைமலையின் வடிவம் போன்றவர் அனாதி பெரும் தலைவன் ஏகன் 

இறைவன் பல இடங்களில் பரவி மக்களுக்கு உதவி செய்ய அறுசமய உருவதெய்வமாய்
பல் சமய கடவுளாய் வந்து உதவுவார்

நாம் பால் நீர் என்ற வடிவம் அதை எப்படி பனிகட்டி ஓரளவுக்கு கெடாமல் பாதுகாப்பது போல பல தெய்வங்கள் நாமம் ரூபம் தாங்கி நம்மை காக்கும்

அதற்கு ஒரு முயற்சி வழிபாடு

இமயலை கயிலாயம் சென்றால் குளிர்சாதன பெட்டி பனிகட்டிகளும் தேவைபடாது
அங்கே இயற்கை எத்தனை பேருக்கும் குளிர்ச்சி யை தரும் இமயம் பெரும் தெய்வமான உயிர் தலைவன் ஈசன் இருக்கிறார் என்ற முன்னோர் ஒப்பீடும் சரியாக இருக்கும்

இமயம் பாலையும் நீரையும் பல ஆண்டு கெடாது தன்னியல்பை ஒத்து அருள் செய்யும் அது கைவல்யம் ஆகும் வரை மனதிற்கு இதமான தெய்வங்களை குருமார்களை விக்ரக மந்திர ஜோதி ரூபமாக வணங்குவதும் ஒரு தீர்வு

குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு உருவம் பொம்மை சாதனம் ஈர்க்கும்அந்த சாதனத்தோடு விளையாடி ஒன்றி குறும்பு குணத்தை குறைத்து ஒரு இடத்தில் நிலைபெற்றிருக்கும் அதற்கு பாதுகாப்பும் இதில் உண்டு

மனிதருக்கும் அதே நியதியில் தனக்கு இஷ்டமான மனதிற்கு லயமான இறை ரூபத்தை தேர்ந்தெடுத்து அதில் ஊன்றிட செய்து பின்பு வளர்ந்து முதிர்ச்சி ஆனபிறகு பெரும்வழியில் பயணித்து பெரும்பேரு அடைய தலைமை இறைவனோடு ஒன்ற நித்திய நலம் உண்டாகும் என்பதே குருமார்களின் நுண்ணிய உபதேசம்

குரு அருளால் கோள்களின் தாக்கம் தீர மந்திரம் ஜெபம் விரதம் தானம் தருமம் அன்பு செய்தல் என ஏதாவது ஒருவழியில் ஈடுபடுத்தி கொள்வதே பிறவி பெருந்துயர் கடக்கும் நல் உபாயம் நன்றி இறைவனுக்கு

கிரகங்கள் பலன் குன்றும் போது  நோய்
பலஹீனம் ஏற்படும் அந்த கிரக சத்தான தானியம் வைத்து வணங்கி அதை சாப்பிடுவது உடல் பலஹீனம் தீரும் இது கிரக தான்ய நன்மை

கிரகங்கள் பலன் குன்றும் போது மனதைர்யம் குறையும் சலனம் சோம்பல் கோபம் என மனம் தடுமாறும் அதற்கு மந்திர ஜெபம் இறைவிரதம் பயன்படும்

கிரகங்களின் பலம் ஆற்றலாக நிற்கு அதற்குரிய ரத்திணங்கள் ஒரு இயற்கை அணு தன்மையாய் சக்தி ஊட்டம் செய்யும்

இது ஞானிகளின் சமக சாந்தி விஞ்ஞானம் இதன் பயனுக்கு ஆழ்ந்த நம்பிக்கை அவசியம் இது ஞானம் இதற்கு உரியவர் ஞானிகள் ஞானாசிரியர்களின் உபதேசம் நமக்கு ஏதாவது ஒரு நன்மையே செய்யும்

இது குரு மொழிகளை திரட்டி சித்தர்களின் எளிமை உபதேசமான எளிமை நடையில் சொல்வதற்கு முற்படுவது குருகருணை

அடியேன் இராமய்யா. தாமரைச்செல்வன்

...,.,...........................சுபம்...............

அகத்தியர் காயத்ரி துதி

 ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி :

ஓம் அகத்தீஸ்வராய விதமஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்


அகத்தியர் மூல மந்திரம் :


ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே
சாப பாவ விமோட்சனம்
ரோக அகங்கார துர் விமோட்சனம்
சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம்
சற்குருவே ஓம் அகஸ்திய
கிரந்த கர்த்தாய நம
:

பதினாறு போற்றிகள்:
1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8. இசைஞான ஜோதியே போற்றி!
9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
10. காவேரி தந்த கருணையே போற்றி!
11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16. இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!

கொங்கணர் அருளிய அகத்தியர் துதி


அருண சடைமகுட அகத்தியர் வாலை தாய்வீடு

அகத்திய மகரிஷி நமா என்றென்றோது

அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்

அகத்தியரே காஷாய வேட மீவார்

அப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள்

அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல

யாருக்குந் தடையில்லை அரசே யென்பார்

அகத்தியர் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி

ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே"


அகத்தியர் துதி

ஓம் நெஞ்சார நினைப்பவர்க்கு நிழலாவானை

நீங்காதார் குலம் தழைக்க நிதியாவானை

செஞ்சாலி வயற்பொழிற் சூழ் தில்லைமூதூர்

சிலம்பொலிபோல் பாடுகின்ற சித்தன் தன்னை

வெஞ்சாபமும் இல்லை ஒரு வினையுமில்லை

வேலுண்டு துணைவருங்கால் வெற்றி உண்டாம்

அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும் 

அகத்தியரை அருள் குருவை மனதில் வைப்பாம்


ஸ்ரீ அகத்திய முனிவர் போற்றி மாலை

  1. ஸ்ரீ அகத்திய பெருமான் போற்றி

  2. ஓம் அகத்தீசாய நமஹ: போற்றி

  3. ஓம் சத்குருவே போற்றி

  4. ஓம் குறுமுனியே போற்றி

  5. ஓம் அகத்தீசா போற்றி

  6. ஓம் ஒளிரூபமே போற்றி

  7. ஓம் விபூதி பிரியரே போற்றி

  8. ஓம் பொதிகை வேந்தே போற்றி

  9. ஓம் இடரைக் களைவாய் போற்றி

  10. ஓம் அருள் செய்பவரே போற்றி

  11. ஓம் அட்டமா சித்தி அடைந்தவரே போற்றி

  12. ஓம் தீபச்சுடரே போற்றி

  13. ஓம் சிவ சக்தி பிரியரே போற்றி

  14. ஓம் குறுவடி மகனே போற்றி

  15. ஓம் லோபமுத்திரை மணாளரே போற்றி

  16. ஓம் அகத்தீயை அகற்றுபவரே போற்றி

  17. ஓம் சொற்பெரிய புண்ணியரே போற்றி

  18. ஓம் கமண்டலதாரியே போற்றி

  19. ஓம் ஆறுமுகரின் சீடரே போற்றி

  20. ஓம் செந்தமிழ் முனியே போற்றி

  21. ஓம் கற்பனைக்கெட்டா அற்புதமே போற்றி

  22. ஓம் ருத்ராட்ச விரும்பியே போற்றி

  23. ஓம் காவி ஆடை தரித்தோய் போற்றி

  24. ஓம் முற்றுணர்ந்த மூர்த்தியே போற்றி

  25. ஓம் மறை நான்கும் அறிந்தோய் போற்றி

  26. ஓம் ஆதி சக்தியின் அன்பா போற்றி

  27. ஓம் வீடுபேறு அளிப்பாய் போற்றி

  28. ஓம் ஞான ரூபமே போற்றி

  29. ஓம் ஈடில்லா பெருமையரே போற்றி

  30. ஓம் சருவாந்தர் யாமியே போற்றி

  31. ஓம் காவேரி அன்னை கருவம் களைந்தோய் போற்றி

  32. ஓம் தத்துவமானவரே போற்றி

  33. ஓம் குற்றாலத்து பெருமகானே போற்றி

  34. ஓம் மங்களம் அளிப்பவரே போற்றி

  35. ஓம் அண்டமாறும் வேந்தே போற்றி

  36. ஓம் கருவம் அகற்றுபவரே போற்றி

  37. ஓம் மந்திரத்தின் சொரூபமே போற்றி

  38. ஓம் மாசற்ற மணியே போற்றி

  39. ஓம் பிறவிப் பிணிக்கோர் மருந்தே போற்றி

  40. ஓம் நற்கதி அருள்வாய் போற்றி

  41. ஓம் நறுமண விரும்பியே போற்றி

  42. ஓம் ஈசனுக்கொப்பானோய் போற்றி

  43. ஓம் இனிமையுடையோய் போற்றி

  44. ஓம் இன்சொல்லில் உறைபவரே போற்றி

  45. ஓம் தயாளம் நிறைந்தவரே போற்றி

  46. ஓம் தருமத்தின் வடிவே போற்றி

  47. ஓம் தன்னிகரில்லா புண்ணியா போற்றி

  48. ஓம் கும்ப வடிவானவனே போற்றி

  49. ஓம் நீதி வழங்குபவனே போற்றி

  50. ஓம் சீவன்கள் துயர் களைவாய் போற்றி

  51. ஓம் புகழுருவே போற்றி

  52. ஓம் புலமைக்கு வித்தே போற்றி

  53. ஓம் புன்முறுவல் முகத்தோய் போற்றி

  54. ஓம் பரமானந்தமே போற்றி

  55. ஓம் தில்லை நடனம் கண்டோய் போற்றி

  56. ஓம் கரை கண்டோரே போற்றி

  57. ஓம் எண்திக்கும் பணிந்தோரே போற்றி

  58. ஓம் புலத்தியருக்கு ஆசி தந்தோய் போற்றி

  59. ஓம் நல்வாழ்வு அளிப்போய் போற்றி

  60. ஓம் பிரணவத்தில் கலந்தோய் போற்றி

  61. ஓம் பகை பஞ்சம் முறிப்போரே போற்றி

  62. ஓம் நீதி வழி நிற்போரே போற்றி

  63. ஓம் விந்தியனின் கருவமழித்தோய் போற்றி

  64. ஓம் பார்வதி யுமை பர நேசரே போற்றி

  65. ஓம் பரிதி நிகர் ஒளியே போற்றி

  66. ஓம் இசையில் இலங்கை வேந்தனை வென்றோய் போற்றி

  67. ஓம் வாதத்தில் வென்றோய் போற்றி

  68. ஓம் வாதாபியை சீரணமாக்கி அழித்தோய் போற்றி

  69. ஓம் கலைமகளின் அருள் பெற்றோய் போற்றி

  70. ஓம் ஆதித்ய இருதயம் உரைத்தோய் போற்றி

  71. ஓம் தஞ்சமடைந்தோரை காப்பாய் போற்றி

  72. ஓம் வித்தையின் கடலே போற்றி

  73. ஓம் காட்சிக்கினியோய் போற்றி

  74. ஓம் கரும்பின் சுவையே போற்றி

  75. ஓம் நற்சுகம் தருவோய் போற்றி

  76. ஓம் சிற்சபை கண்டோய் போற்றி

  77. ஓம் யீர்நவத்தில் முதல்வனே போற்றி

  78. ஓம் நித்ய செல்வம் அளிப்போய் போற்றி

  79. ஓம் பிறவிப் பிணி அறுப்போய் போற்றி

  80. ஓம் சிவதத்துவம் மலரச் செய்தோய் போற்றி

  81. ஓம் தன்னடக்கம் பெற்றோய் போற்றி

  82. ஓம் நன்னெறி உரைத்திட்டோய் போற்றி

  83. ஓம் மருத்துவ மாமணியே போற்றி

  84. ஓம் பஞ்சாட்சர ரூபமே போற்றி

  85. ஓம் பரிவு காட்டுபவரே போற்றி

  86. ஓம் சுந்தர நல்மனத்தோய் போற்றி

  87. ஓம் நீள் முடி தரித்தோய் போற்றி

  88. ஓம் வெற்றியை அருள்வோய் போற்றி

  89. ஓம் தீட்சிதம் அருள்வோய் போற்றி

  90. ஓம் மகிமையை அருள்வோய் போற்றி

  91. ஓம் அன்பே சிவம் என கண்டோய் போற்றி

  92. ஓம் சாந்தத்தை அளிப்பாய் போற்றி

  93. ஓம் எல்லையில்லா கருணையே போற்றி

  94. ஓம் யுகங்கள் பல கண்டாய் போற்றி

  95. ஓம் தேவரும் வணங்கும் தேவே போற்றி

  96. ஓம் பெரு வழி அருள்வோய் போற்றி

  97. ஓம் அல்லல் அறுப்போய் போற்றி

  98. ஓம் அருட்பெருந்தீயே போற்றி

  99. ஓம் அமுதே ஆனாய் போற்றி

  100. ஓம் ஒன்றே பல் பொருள் ஆனாய் போற்றி

  101. ஓம் இன்பதுன்பம் கடந்தோய் போற்றி

  102. ஓம் நித்யமடைந்தாய் போற்றி

  103. ஓம் அகத்தியர் அன்னை லோபாமித்ரை திருவடிகள் போற்றி போற்றி


✨ இதுவே அகத்திய முனிவர் போற்றி மாலை – 103 போற்றிகள்

இதை தினமும் ஓதினால்,

  • மன அமைதி,

  • உடல் ஆரோக்கியம்,

  • அறிவு வளர்ச்சி,

  • பகவத் அருள்
    பெறலாம் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.

அகத்தியரின் நாமம் மகிமை பெற்றது அகத்தியர் நாமம் தீவினை அகற்றவல்லது அழியாத ஞான அனுபூதி தரவல்லபமானது

அகத்தீசா என்ற நாமத்தில் ஒவ்வொரு எழுத்தும் நாதபலம் உடையது மந்திர பூர்வமான நாமம் ஓம் அகத்தீசாய நம

ஓம் அகத்தீசாய நம என்று சொல்லும் போதே அகத்தில் ஞான ஒளி தோன்றி வழிகாட்டும்

அகத்தியருக்கு அஷ்டலஷ்மி கடாக்ஷாய என்ற சிறப்பு நாமம் உண்டு எண்ணணையாள் எனும் அஷ்டலட்சுமிகளின் அருளை பெற்றவர் அகத்தியர் 

அகத்தியர் தன்னை நாடி நாமம் ஜபம் செய்பவர்களை அருள் பொருள் இரண்டிலும் உயர்த்துவார்

முருகனின் அம்சம் அகத்தியர் ஆதலால் பச்சை நிற ஆடை அவருடைய பகதர்கள் பச்சை உடுத்தி அடியவர் அடையாளபடுத்துகிறார்கள்

உலகத்தில் அறமும் ஒழுக்கமும் தருமம் தாழும் போதெல்லாம் அகத்தியர் புவனம் வந்து உலக தாழ்வை போக்கி அருள்செய்வார் என்கிறது குருஞான நிகண்டு

அகத்தியர் ராஜகுரு பல அரச தருமத்தை அறிந்து தலைமை ஏற்று அரசர்களுக்கு ஞானமும் நிதியையும் அளித்தவர் அகத்தியர் என்கிறது அகத்தியர் பிரபந்தம்

வழிபாடு 

 கிழக்கு நோக்கி  அகலில் நெய் தீபமேற்றி தீபத்திற்கு முன்பு அமர்ந்து மிதமான சப்தத்தில் ஓம் அகத்தீசாய நம என்று நிதானத்துடன் இருபத்தோரு முறை தொடங்கி படிப்படியாக உயர்த்தி நூற்றெட்டு முறை செபிக்கலாம்

பசுந்தொழுவம் நதிகரை சமுத்திரகரை நல்வனம் ஆலயம் ஆசிரமம் என்று பொது சாலைகளில் செபிக்க பெரும்பயன் உண்டு என்கிறது ஜெபவிதி

ஆயில்யம் சதயம்.... ஞாயிறு. வியாழ கிழமைகளில் காலை நேரம் பூஜை ஜபம் பலனளிக்க வல்லது

அறம் செய்பவரை அகத்தியர் உயர்த்திட ஆசி செய்வார்

  1. சாலை அமைத்தல்,
  2. ஓதுவார்க்கு உணவு,
  3. அறுசமயத்தாருக்கும் உணவு,
  4. பசுவுக்குத் தீனி,
  5. சிறைச் சோறு,
  6. ஐயம்,
  7. தின்பண்டம் நல்கல்,
  8. அநாதைகளுக்கு உணவு,
  9. மகப்பெறுவித்தல்,
  10. மகவு வளர்த்தல்,
  11. சிசுக்களுக்குப் பால் நல்கல்,
  12. அநாதைப் பிணம் சுடுதல்,
  13. அநாதைகளுக்கு உடை,
  14. சுண்ணாம்பு பூசல்,
  15. நோய்க்கு மருந்து,
  16. வண்ணார் தொழில்,
  17. நாவிதத் தொழில்,
  18. கண்ணாடி அணிவித்தல்,
  19. காதோலை போடுதல்,
  20. கண் மருந்து,
  21. தலைக்கு எண்ணெய்,
  22. ஒத்தடம் தருதல்,
  23. பிறர் துயர் காத்தல்,
  24. தண்ணீர்ப் பந்தல்,
  25. மடம் கட்டுதல்,
  26. தடாகம் அமைத்தல்,
  27. சோலை வளர்த்தல்,
  28. தோல் பதனிடல்,
  29. மிருகங்களுக்கு உணவு,
  30. ஏர் உழுதல்,
  31. உயிர் காத்தல்,
  32. கன்னிகாதானம்

இதில் ஏதாவது ஒரு அறத்தோடு அன்பு பூண்டு செய்யும் பூஜையே பலிதமான பூஜை

ஓம் லோபமித்ரை சமேத அகத்தியர் திருவடிகளே போற்றி

அகத்திய முனிவர் விருத்தம்

அகத்தியரே ஆனந்த வடிவம் – அருள் ஒளி பரவும் தவமாமுனியே
சகலாகலைக் கற்றுத் தந்தார் – சித்த மருந்தின் தலைவனுமானார்.

தமிழ் மொழியின் இலக்கணம் தந்தார் இவர் – தாய் மொழிக்கு உயிர் புகுத்தி,
யோக விதியின் விளக்கமாகி – உயிர் குணமளிக்கும் குருமருந்துஆனார்.

வேத சாஸ்திரம் விளக்கிய முனிவர்– விண்ணகமெல்லாம் புகழ்ந்து போற்றும்
சித்த மரபின் சிகரமாகி – சிவனருள் பெற்ற தெய்வம் ஆனார்.

அவர் பெரிய திருவடி போற்றி தொழுவோம்


அகத்தியர் துதி 

கற்றைவார் சடையான் பெற்ற கற்றைவார் சடையன் நீயே ...!

நற்றவச் சிவனார் பெற்ற நற்றவ முனிவன் நீயே ...!

பெற்றவன் தமிழைப் பெற்றான் பிள்ளைநீ தமிழ் வளர்த்தாய்

கொற்றவன் அவன் இமயம் குடமுனி பொதிகை வேந்தே ....!


வேந்தன்நீ என்பதால் என் வேதனை தவிர்க்க கேட்டேன்

மாந்தர்தம் துயர் துடைத்தல் மன்னநின் கடமை அன்றோ ...!

பூந்தமிழ் வளர்த்த செல்வ புலவர்நற் குல முதல்வ

சாந்தநற் குருவே நின்தாள் சரணென அடைந்தேன் காவாய் !


காவாயேல் என்னை ஈங்கு காத்திட எவருமில்லை

நாவாயும் புயலிற் சிக்கி தவித்தற்போல் தவிக்கின்றேன் நான்

பேய்வாயினின்றும் மீட்ட பெருமானே - என்றும்

தாயாய் இருந்தே காப்பாய் ! தலைவைத்தேன் நினதுதாளே சரணம் !

குரு தட்சிணாமூர்த்தி துதி பொதுவான குருதுதி


கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.

(திருவிளையாடற் புராணம் - பாடல் - 13)

விளக்கம்

கல்லால மரத்தின் (ஆலமரம்) கீழ் இருந்து, நான்மறை, ஆறுஅங்கம் முதலானவற்றை கற்றுணர்ந்த கேட்டலில் வல்லுநர்கள் ஆகிய சநகர் முதலிய நான்குமுனிவர்கட்கும், வாக்கியலைக் கடந்த நிறைவாயும், வேதங்கட்கு அப்பாற்பட்டதாயும், எல்லாமாயும் அவற்றுள் ஒன்றும் அல்லதுமாயும் உள்ளதன் உண்மையை உள்ளபடி இருந்து காண்பித்து குறிப்பாலுணர்த்திய தட்சிணாமூர்த்தியை இடையறாமல் நினைந்து பிறவிக் கட்டாகிய பகையை வெல்வாம்

---


பாடல் பொருள்


இப்பாடலில், இறைவனின் அருளும், அவரின் பரிபூரண ஞானமும் விளக்கப்படுகிறது.


* நான்கு வேதங்களும் ஆறு வேதாங்கங்களும் கற்ற பாண்டிதர்களுக்கும் இறைவன் தம் கருணையால் **அதிகமான அறிவை** அளிக்கின்றான்.

* அவர் மறைவுகளுக்குப் புறம்பானவராய், எல்லாவற்றையும் ஆகியும், எதுவுமல்லாதவராய், இயல்பாகவே இருந்து கொண்டு காண்பிக்கிறார்.

* சொல்லாமல் சொல்லுபவர்; நினைக்காமல் நினைக்க வைப்பவர்.

* இவ்வாறான தெய்வீக சத்தியத்தை உணர்ந்தால், பவத்தொடக்கமான பிறவி வேதனைகளைக் கடந்து வெல்லலாம்.


---


இறைவனே குருவாக வந்து மௌன உபதேசம் செய்கிறார்


* **இறை அருள் அறிவுக்கு எல்லை இல்லை**: எவ்வளவு வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றாலும், அது மனுஷ்ய அறிவின் வரம்புக்குள் தான். ஆனால் இறைவனின் கருணை வரும்போது, நம்முடைய உள்ளம் அதற்கும் அப்பாற்பட்டு உண்மையை அறிகிறது.

* **இறைவன் சொல்லாமல் சொல்லுபவர்**: எவ்வித வார்த்தைகளும் தேவையில்லை; அவர் இருக்கும் நிலையையே உணர்ந்தால், மனம் விழித்து விடுகிறது. இதுவே ஆன்மீகத்தில் "அனுபவம்" எனப்படுகிறது.

* **அனைத்தும் அவரே; எதுவுமல்ல அவரே**: உலகிலுள்ள அனைத்தும் அவர் வடிவே; அதே நேரத்தில், எந்த வடிவிலும் சிக்கிக் கொள்ளாதவரும் அவர் தான். இந்த உண்மை நமக்கு வாழ்வில் சமநிலை, அமைதி, வலிமை தருகிறது.

* **நினைவின் ஆழம்**: இறைவனை நினைக்காமல் இருந்தாலும், உள்ளுக்குள் நினைவாகும். அது நம்முடைய ஆன்மாவின் இயல்பு என்பதைக் காட்டுகிறது.

* **பவத்தொடக்கம் வெல்லும் பாதை**: இவ்வுண்மையை உணர்ந்தவுடன், பிறவிப் பந்தங்கள் கட்டுப்படுத்த முடியாது. நாம் விடுதலையையும் ஆனந்தத்தையும் அடைய முடியும்.

---

– **அறிவும், அனுபவமும், விடுதலையும், எல்லாம் இறை அருளாலே பெறப்படும். அவரை நினைவில் வைத்தால், வாழ்க்கையின் துன்பங்களை கடந்து, ஆனந்தத்தை அடையலாம்.**

---

இறை அருளாலே அறிவும் விடுதலையும் பெறுகிறேன்.”

இதுவே முடிவான பிரார்த்தனை


அகத்தியர் வழிபாட்டின் அங்கமே மனம் முழுவதும் வணங்கபடும் அகத்திய குருவின் கீர்த்திகளை சிந்தித்து உள்வாங்கி செய்வது ஒரு தபஸ் தமிழில் வாழ்த்துக்கள் துதிகளால் குருவின் பரிபூரண ஆசியை இந்த தேகம் ஏற்கும்


எல்லாம் இறை செயல்

அடியேன் இராமய்யா. தாமரைச்செல்வன்

திரு ஒற்றியூர் வடிவுடைஅம்மை திருவந்தாதி

வடிவுடையம்மை திருஅந்தாதி –  முகவுரை திருச்சிற்றம்பலம் அருள்மிகு திருவொற்றியூர் திருத்தலத்தில் எழுந்தருளி, அடியார்களுக்கு அன்பும் அருளும் வழங...