வியாழன், 30 அக்டோபர், 2025

சோடச உபசாரம், தெய்வ வழிபாட்டு முத்திரைகள்

 

சோடஸஉபசாரம் 


சோடஸ உபசாரம் என்பது 

கோவில்களில் இறைவனுக்கு நைவேத்யத்தினை தொடர்ந்து செய்யப்படும் பதினாறு வகையான உபசாரங்களாகும். இதனை சோடச உபசார பூஜை, சோடச தீபாராதனை, சோடச தீபாராதனை உபசாரம் எனவும் அழைப்பர்.  சிவாகம ஆச்சார்யர்களில் ஒருவரான சிவானந்தம் என்பவர் இப்பூஜைக்கு நிருத்ய நியதிகளையும் முறைகளையும் உருவாக்கியவராக அறியப்பெறுகிறார்

இந்த உபசார முறைகள் பண்டைய இந்தியாவில்  இறைவனுக்கு செய்யப்பட்டு பின்பு அரசனுக்கும் ஜீவ சமாதி அடைந்ந ஞான குரு பீடாதிபதிகளுக்கும் செய்யப்பட்ட ஆன்மீக மரியாதை சோடச உபசாரம்


சோடச உபசாரங்களை தொடங்கும் முன்பு பூசைக்கான சில சுத்திகளைச் செய்ய வேண்டும்.

ஆத்ம சுத்தி - பூசை செய்பவரின் உடலை சுத்தப்படுத்தும் பணி

ஸ்தான சுத்தி - கருவறையை சுத்தப்படுத்தும் பணி

திரவிய சுத்தி - பூசை பாத்திரங்களை சுத்தப்படுத்தும் பணி

மந்திர சுத்தி - பூசைக்குறிய மூர்த்தியின் மூல மந்திரத்தை ஜெபிக்கும் பணி

லிங்க சுத்தி - விக்கிரகத்தை சுத்தப்படும் பணி

இந்த சுத்திமுறைகளை முடித்த பிறகே சோடச உபகார பூஜையைத் தொடங்க வேண்டும்.


சோட உபசார பட்டியல்


1 ஆவாகனம்

2 தாபனம்

3.சந்நிதானம்

4.சந்நிரோதனம்

5.அவகுண்டவம்

6.தேனுமுத்திரை

7.பாத்தியம்

8.அசமனீயம்

9.அருக்கியம்

10.புஷ்பதானம்

11.தூபம்

12.தீபம்

13.நைவேத்தியம்

14.பாணீயம்

15.செபசமர்ப்பணம்

16.ஆராத்திரிகை


சோடச உபசார தீபங்கள்

1..தூபம்



2..ஏகதீபம் (உருக்களி)


3..அலங்கார தீபம் (1,3,5,7,9 அல்லது 11 அடுக்குகள் கொண்ட தீபம்)




4.புஷ்ப தீபம் - மஹா தீபம் என்றும் அழைக்கப் படுவதுண்டு )


5...நாக தீபம்,




6..விருஷப தீபம் (நந்தி தீபம்)




7.புருஷாம்ருக தீபம்


புருஷ மிருக தீபம்



8...சூல தீபம்


9 கூர்ம தீபம் (ஆமை)



10..கஜ (யானை) தீபம்



11..ஸிம்ஹ தீபம்




வ்யாக்ர (புலி) தீபம்




கொடி தீபம்


மயூர தீபம்




பஞ்ச தட்டுடன் பூர்ண கும்ப தீபம்



நட்சத்திர தீபம் - 27 நட்சத்திரங்களுக்காக 27 திரிகள் இடக்கூடிய தீபம்.



மேரு தீபம்


மேரு தீபம் - மேரு மலை போன்ற தோற்றத்துடன் காணப்படுவது



பஞ்ச ஆரத்தி விளக்கு


கும்ப தீபம்


பஞ்ச தீபம் மயூர தீபம்

சோடச பொருள்களின் பட்டியல்


கண்ணாடி, குடை, ஆலவட்டம், சாமரம், விசிறி, கொடி ஆகியன

கண்ணாடி,

குடை,

ஆலவட்டம்,

சாமரம்,

விசிறி,

கொடி

இவற்றில் கண்ணாடி, குடை, ஆலவட்டம், விசிறி, கொடி ஆகியவை பித்தளையால் செய்யப்பட்டு பயன்படுத்தப் படுகின்றன. சாமரங்கள் வெண்பட்டால் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.



குடை

ஸ்தாபனம்

பாத்யம் கொடுத்தல்

ஆசனமளித்தல்

அர்க்கியம்

அபிஷேகம் வஸ்திரம்

சந்தனம்

புஷ்பாஞ்சலி

தூயதீபம்

நைவேத்தியம்

பலி போடுதல்

ஹோமம்

ஸ்ரீபலி

கேயம் வாத்தியம்

நர்த்தனம்

உத்வாஸனம்


பூஜை முத்திரைகள்



















  • இறைவனது கருவரையிலும் பூஜை காலங்களிலும் சோடஸ உபசாரங்கள் மற்றும் தெய்வீக முத்திரைகளை சிவாச்சர்யர்கள் பக்தியோடும் ஆகம நியமம் மாறாது செய்து வருவதை இன்றும் நித்ய வழக்கமாக கொண்டுள்ளனர்
  • சமய பெரியோர்கள் வகுத்த இக்கிரியைகள் பின்னணியில் இறைவனை எப்படி எல்லாம் மதிக்க வேண்டும். உயர்ந்த இடத்தில் வைத்து ஆராதிக்க வேண்டும் என்ற ஆத்ம சரணம் அன்பு பெருமதிப்பு ஆதாரமாக இருப்பதில் நம் முன்னோர்களின் ஆன்மீகம் எல்லை இல்லா அன்பை வெளிபடுத்தவும். இறைவனை இவ்வுடலாலும் பேரன்புடன் தன்னடக்கத்தோடு தத்துவார்த்தமாக வணங்குவதே அடிநாதமான விஷயம் என்பதை உணர்ந்து சமய மரபுகளை மதித்து ஆசார்யர்களை ஆசான்களை மதித்து அவர்கள் தங்கள் கடமைகளை பூரணமாக நிறைவேற்ற உறுதுணையாக நிற்க வேண்டும்


 காலதீபிகம் அஸ்ட்ரோ சர்வீஸ்





அடியேன். இராமய்யா. தாமரைச்செல்வன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சோடச உபசாரம், தெய்வ வழிபாட்டு முத்திரைகள்

  சோடஸஉபசாரம்   சோடஸ உபசாரம் என்பது   கோவில்களில் இறைவனுக்கு நைவேத்யத்தினை தொடர்ந்து செய்யப்படும் பதினாறு வகையான உபசாரங்களாகும். இதனை   சோடச...