புதன், 29 அக்டோபர், 2025

கோவில் மணி தத்துவம்

கோவில் மணியின் தத்துவம் 

அறிவியல் மற்றும் ஆன்மீக காரணங்களை அடிப்படையாகக் கொண்டது மணி ஒசை. இது எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கு அமைதியையும், நேர்மறை சக்தியையும் அளிக்கிறது. மணியின் ஓசை மூளைக்கு உற்சாகமளிக்கிறது என்றும், பூஜையின் போது இறைவனை அழைப்பதற்கும், தீய சக்திகளை விலக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்றும் ஆகமங்கள் கூறுகின்றன. 
தத்துவங்கள் மற்றும் நன்மைகள்:

  • ஆன்மிக ரீதியான காரணங்கள்:
    • இறை அழைப்பு: மணியோசை மூலம் இறைவனை அழைப்பதற்க்காக மணி ஒலிக்கப்படுகிறது.
    • தீய சக்திகள் விலகல்: 'தீய சக்திகள் விலகி, இறைசாந்நித்தியம் பெருகட்டும்' என்ற மந்திரத்துடன் மணியோசை எழுப்பப்படுகிறது.
  • அறிவியல் ரீதியான காரணங்கள்:
    • மூளை செயல்பாடு: மணியோசை மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது.
    • மன அமைதி: மணியோசை எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதில் அமைதியையும், நேர்மறை சக்தியையும் உருவாக்குகின்றது.
    • ஒலி மற்றும் கவனம்: மணியின் ஓசை நம்மை துர்மந்திரம் கட்டுகளில் இருந்து விடுபடச் செய்கிறது.
  • முன்னோர்களின் செயல்: ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் ஒரு அறிவியல் காரணம் மறைந்திருக்கிறது என்பதை நிரூபிக்கும் ஒரு உன்னதமான உதாரணம் கோவில் மணி. 

கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம், தூபம் தீபம், நைவேத்யம், கற்பூர ஆரத்தி காட்டும் போதும், வீட்டில் பூஜையிலும் மணியடிப்பது அவசியம். அப்போது, “ஆக மார்தம்து தேவானாம் கமநார்தம் து ரக்ஷஸாம்குர்வே கண்டா ரவம் தத்ர தேவதா ஆஹ்வான லாஞ்சனம்” என்னும் மந்திரத்தை சொல்ல வேண்டும். சமஸ்கிருதம் தெரியாதவர்கள், “தேவர்களை வரவேற்பதற்காகவும், பூஜை செய்யுமிடத்தில் இருக்கும் கண்களுக்குப் புலப்படாத தீய அல்லது அசுர சக்திகளை விலக்குவதற்காகவும் இந்த மணியோசையை எழுப்புகிறேன்,” என்று சொல்ல வேண்டும். பெருமாளுக்குரிய மணியின் உச்சியில் கருடாழ்வாரும், சிவனுக்குரிய மணியில் நந்தியும் இடம் பெற்றிருக்கும்.

பொதுவான மணி மந்திரங்கள்


ஓம் மணி பத்மே ஹூம் (பௌத்தம்): இது பௌத்தத்தின் மிகவும் பிரபலமான மந்திரங்களில் ஒன்றாகும். இது இரக்கம் மற்றும் ஞானத்தை வளர்க்க உதவுகிறது.

சமஸ்கிருதத்தில்: வடமொழியில்

ஆக மார்தம்து தேவானாம் கமநார்தம் து ரக்ஷஸாம்குர்வே கண்டா ரவம் தத்ர தேவதா ஆஹ்வான லாஞ்சனம் 


 செய்யும் போது மணி அடிக்கும்போது இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். இதன் பொருள், "தேவர்களை வரவேற்பதற்காகவும், தீய சக்திகளை விலக்குவதற்காகவும் இந்த மணியோசையை எழுப்புகிறேன்" என்பதாகும்.

சமஸ்கிருதத்தில்: ஆக மார்தம்து தேவானாம் கமநார்தம் து ரக்ஷஸாம்குர்வே கண்டா ரவம் தத்ர தேவதா ஆஹ்வான லாஞ்சனம் 

 ஆலயத்தில் ஒலிக்கும் ஆலயமணி நம்மில் ஏதோ மாற்றத்தை உண்டு பண்ணும். வீட்டிலும், கோவிலிலும் ஒலிக்கும் மணி ஏதோ ஒரு உலோகத்தால் செய்யப்படுவது கிடையாது. கேட்மியம் , லெட் , ஜின்க் , நிக்கல் , குரோமியம் மற்றும் மாங்கனீஸ் ஆகிய இந்த ஏழுஉலோகங்களின் கலவையே இந்த மணி.

மணியின் தயாரிப்பில் ஒவ்வொரு உலோகத்தின் சேர்க்கை அளவினை பொறுத்து நிகழும் அறிவியல் மாற்றம் வியக்கத்தக்கதாய் இருக்கும். ஆகம விதிகளின்படி, மணிகள் பஞ்சலோகத்திலும் தயாரிக்கப்படும். தாமிரம், வெள்ளி, தங்கம், வெண்கலம் மற்றும் இரும்பு என்ற ஐந்துவகை உலோக சேர்க்கை பஞ்ச பூதங்களை குறிப்பிடுகிறது.


மனித மூளையானது வலது , இடது என இருபகுதியாய் பிரிக்கப்பட்டிருக்கும். இரண்டும் இரு வேறு செயல்திறன்களை கொண்டது. இந்த இரண்டையும் ஒன்றாக இணைக்கும் தன்மை கோவில் மணியில் இருந்து எழும் ஒலிகளுக்கு உண்டாம். அப்படி செயல்படும் விதத்தில்தான் கோவில் மணி தயாரிக்கப்படுகிறது.


கோவில் மணியை அடித்ததும் எழும் ஒலியானது எதிரொலியுடன் கூடிய ஆழ்ந்த, இடைவிடாத ஒலியாக உரக்க ஒலிக்கும் .

ஒலியின் முடிவில் கேட்கும் எதிரொலிகள் நம் காதுகளில் 7 வினாடிகள் நீடிக்கிறது. இது மனித உடலிலுள்ள 7 சக்தி மையங்களான மூலாதாரம், சுவாதிஷ்டனா, மணிபுரம், அனாகதம், விசுத்தம், ஆக்கினை, சகஸ்ராரம் ஆகியவற்றைத் தாக்குகிறது.


மணியிலிருந்து எழும் ஓசையில் நாம் “ஓம்” என்ற மந்திரத்தை உணர முடியும். கர்ப்பகிரகத்திலிருக்கும் மணியை, இறைவனுக்கு தீபாராதனை காட்டும்போதும், இறைவனுக்கு அபிஷேகம் நடக்கும்போதும், உணவு படைக்கும் போதும் அடிப்பதுண்டு . அதில்லாமல் கோவிலுக்கு போவோர் தங்கள் பிரார்த்தனையை இறைவனுக்கு நினைவுப்படுத்தவும் கோவில்மணியை ஒலிக்கவிடுவதுண்டு. ஒவ்வொரு கோயிலிலும் கர்ப்பகிரகத்தில் உள்ள மணியை அடிப்பதற்காக ஒவ்வொரு சாஸ்திரம் பின்பற்றப்பட்டு வருகிறது.


பொதுவாக கோயில் வாசலில் கட்டியிருக்கும் மணியை கோயிலுக்குள் நுழையும்போது ஒலிக்கவிடுவதன் காரணம், நமது ஆழ்மனதை விழிக்க செய்வதற்காகவே செய்யப்படுகிறது. உடலால் தூங்குபவர்களை ஓசையின்மூலம் எழுப்புவதுபோல், மனதையும் எழுப்பவே இந்த முறையை பின்பற்றுகிறோம். இந்த ஒலியால் மனமும் உடலும் விழிப்படையும் நேரம் கோயிலில் இருந்து வரும் நறுமணமும் விளக்கின் ஒளியும் நம்மை மேலும் ஊக்குவிக்கின்றன.


கோவில் மணியின் ஒலியை கூர்ந்து கேட்பது ஒரு வகையில் தியானம் செய்வதற்கு ஈடாகும். கோவில் மணியிலிருந்து ஒலி எழும்பும் நேரம் நம் மூளையில் உள்ள தேவையற்ற நினைவுகள் அழிக்கப்படுகின்றன.


நாம் தன்னிலை இழந்த நிலைக்கு செல்ல தயாராகிறோம். மனம் விழிப்புணர்ச்சி அடைகிறது. இந்த நிலையிலிருந்து மீண்டுவர உங்களுக்கு சிறிது அவகாசம் தேவைப்படும்.


கோயில் மணிகளை அதன் தண்டை இழுத்து அடிப்பதால், அதன் ஒலி பல அலைவரிசைகளை வெளியேற்றுகிறது. இது வளிமண்டலத்தில் பரவுகிறது. ஒலிகள் வெளிப்படும்போது அதனுடன் சேர்த்து புனிதமான கதிர்களும் வெளி வருகின்றன . இவை வளிமண்டலத்தில் உள்ள தீய ஆற்றல்களை அழிக்கின்றன

பொதுவாக இந்துக்களின் வீடுகளில் பூஜையின்போது மணியோசை எழுப்பி இறைவனை வணங்குவது வழக்கம். மணியோசையால் இறைவனை அழைப்பதும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. மணியோசையின் ரீங்காரத்தால் தீய சக்திகள் வீட்டிலிருந்து நீங்கிவிடும் என்பதும் ஒரு எண்ணமாகும். இறைவனை வணங்கும்போது எந்த கெட்ட வார்த்தைகளும், கேட்டக்கூடாத ஓசைகளும் செவிகளில் விழக்கூடாது என்பதற்காகவும் இந்த ஒலியை எழுப்பி இறைவனை வணங்குவர்.

முன்னோர்கள் எல்லாவற்றையும் அர்த்தத்துடனும் மற்றும் ஆரோக்கியத்தை முன்னிறுத்தியே செய்தனர் என்பது இன்று அறிவியல் பூர்வமாக விளக்கப்படும்போது தான் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அதனால், அவர்களின் பழக்க வழக்கங்களை மாற்றாமல் பின்பற்ற முயற்சிப்போம். நிச்சயம் அது நமக்கு நன்மையையே தரும்


            காலதீபிகம் அஸ்ட்ரோ சர்வீஸ்


அடியேன். இராமய்யா. தாமரைச்செல்வன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சோடச உபசாரம், தெய்வ வழிபாட்டு முத்திரைகள்

  சோடஸஉபசாரம்   சோடஸ உபசாரம் என்பது   கோவில்களில் இறைவனுக்கு நைவேத்யத்தினை தொடர்ந்து செய்யப்படும் பதினாறு வகையான உபசாரங்களாகும். இதனை   சோடச...