வெள்ளி, 5 செப்டம்பர், 2025

மகா லட்சுமி அருள் பெற


 மகா லட்சுமி ஆந்தை வாகனத்துடன்  ஆசி


மகா லட்சுமியை வழிபட, உங்கள் பூஜையறையை சுத்தமாக வைத்து, அவருக்கு விருப்பமான தாமரை, சங்கு, சந்தனம் போன்றவற்றை வைத்து, நெய் விளக்கேற்றி, துளசி, வெற்றிலை பாக்கு மற்றும் பச்சை கற்பூரமும் ஏலக்காய் கிராம்பு ஜாதிபத்ரி கலந்த நீரில் சிறிது துளசியுடன். கற்கண்டு பால் பாயாசம் இதில் ஏதாவது ஒன்றை வைத்து படைத்து, மந்திரங்களை உச்சரித்து, தினசரி அல்லது வெள்ளிக்கிழமைகளில் வழிபடுவது சிறந்தது.

செல்வ வளம், சொத்துக்கள், அதிகாரம், அழகு, குழந்தைப்பேறு ஆகியவற்றிற்கு காரணமான தெய்வமாக மகாலட்சுமி கருதப்படுகிறாள். 

 விநாயகருக்கு அடுத்தபடியாக மகாலட்சுமி வழிபாட்டிற்கு முக்கிய இடம் அளிக்கப்படுகிறது. ஒரு வீட்டில் அனைத்து விதமான செல்வங்களும் நிறைந்திருக்க அஷ்டலட்சுமிகளின் அருளும் கிடைக்க வேண்டும்.

 எங்கெல்லாம் லட்சுமி தேவி இருக்கிறாளோ அந்த இடங்களில் துன்பம், வறுமை என்பது இருக்கவே இருக்காது. அதனால் அனைத்து வீடுகளிலும் லட்சுமி தேவியின் வழிபாட்டை அவசியம் செய்வதுண்டு.

திருமறு மார்பன் விஷ்ணுவின் மார்பில் பாதசுவடாக நித்யமாக வாசம் செய்வதாக திருமறை புகழ்கிறது

 மகாலட்சுமியை வீட்டிற்கு அழைப்பதற்கு பூஜை அறையில் அவரது திருபாதங்களை வரைந்து வைக்கலாம். வெள்ளியில் இரு பாதங்களை வாங்கி வைத்து வழிபடலாம்.

மகாவிஷ்ணுவின் திருமார்பில் நிரந்தரமாக வாசம் செய்யக் கூடியவள் திருமகள். அதனால் இது மகாவிஷ்ணுவையும் நம்மடைய வீட்டிற்கு அழைத்து வர வைக்கும். இவர்கள் இருவரின் ஆசிகளும் கிடைத்து விட்டால் அனைத்து விதமான பாவங்களும், சாபங்களும் நீங்கி விடும். செல்வ வளமும், அமைதியும் வீட்டில் நிலவும்.

ஸ்ரீம் மகாலட்சுமியின் பீஜாட்சரம் ஆகும் ஸ்ரீம் (Shreem)  சக்தி மார்க்கத்தில் செல்வம், செழிப்பு மற்றும் மிகுதியின் தெய்வமான மகாலட்சுமி தேவிக்கான சக்திவாய்ந்த பீஜ மந்திரம் ஆகும். இது ஒரு எழுத்து ஓசை வடிவிலான "விதை" மந்திரம், இது அண்ட ஆற்றலுடன் நம்மை இணைத்து, மனதை ஒருமுகப்படுத்தி, உலகளாவிய உணர்வை அடைய உதவுகிறது. 

ஸ்ரீம் மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் செல்வம் பெருகும் மற்றும் பொருள் ஆதாயம் கிடைக்கும் என்பது பக்தி ஞான நம்பிக்கை
  • மன அமைதி:
    தியானத்தின் போது மனதை அமைதிப்படுத்தவும், ஒருமுகப்படுத்தவும் இந்த மந்திரம் உதவுகிறது.
  • வியாதிகள் மற்றும் கவலை நீக்கம்:
    இந்த மந்திரத்தை ஜபிப்பது வியாதிகளையும் கவலைகளையும் நீக்கும் ஆற்றல் கொண்டது. 

அஷ்ட லட்சுமி துதி :

தன லட்சுமி:

யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

பொருள் - எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் செல்வத்தின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்,வணங்குகிறேன்,
வணங்குகிறேன்

வித்யா லட்சுமி:

யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

பொருள் - எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் கலை, கல்வியின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

தான்ய லட்சுமி:

யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

பொருள் - எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

வீர லட்சுமி:

யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

பொருள் - எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் வீரம், வெற்றியின் அம்சமாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

ஸௌபாக்ய லட்சுமி:

யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

பொருள் - எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சுகம், நிம்மதியின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

சந்தான லட்சுமி :

யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

பொருள் - எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் தாயாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

காருண்ய லட்சுமி:

யா தேவி ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

பொருள் - எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

ஆதி லட்சுமி:

யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

பொருள் - எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்

மகாலட்சுமி வடமொழி துதி

ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

#மகாலட்சுமி_ஸ்துதி

1. சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

2. வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

3. தநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

4. க்ருஹலக்ஷ்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

5. சாந்திலக்ஷ்ம்யை தாந்திலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வாத்மாநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

6. ஸத்யலக்ஷ்ம்யை தயாலக்ஷ்ம்யை ஸெளக்கிய லக்ஷ்ம்யைநமோ நம:
நம: பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

7. கஜலக்ஷ்ம்யை ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

8. ஸத்வலக்ஷ்ம்யை தத்வலக்ஷ்ம்யை போதலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே விஜ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

9.ஸ்தைர்யலக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தைர்ய லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வெளதார்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யைநமோ நம:

10. ஸித்திலக்ஷ்ம்யை ருத்திலக்ஷ்ம்யை வித்யாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

11. கீர்த்திலக்ஷ்ம்யை மூர்த்திலக்ஷ்ம்யை வர்ச்சோலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

12. ஜபலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை வ்ரதலக்ஷ்ம்யை லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைராக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

13. மந்த்ரலக்ஷ்ம்யை தந்த்ரலக்ஷ்ம்யை யந்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே குருக்ருபாலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

14. ஸபாலக்ஷ்ம்யை ப்ரபாலக்ஷ்ம்யை கலாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே லாவண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

15. வேதலக்ஷ்ம்யை நாதலக்ஷ்ம்யை சாஸ்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வேதாந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

16. சேத்ரலக்ஷ்ம்யை தீர்த்தலக்ஷ்ம்யை வேதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸந்தானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

17. யோகலக்ஷ்ம்யை போகலக்ஷ்ம்யை யக்ஞலக்ஷ்ம்யை நமோ நம:
க்ஷீரார்ணவ புண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

18. அன்னலக்ஷ்ம்யை மநோலக்ஷ்ம்யை ப்ரக்ஞாலக்ஷ்ம்யை நமோ நம:
விஷ்ணுவக்ஷேபூஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

19. தர்மலக்ஷ்ம்யை அர்த்தலக்ஷ்ம்யை காமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

20. புண்யலக்ஷ்ம்யை சேமலக்ஷ்ம்யை ச்ரத்தாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சைதன்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

21. பூலக்ஷ்ம்யை தே புவர்லக்ஷ்ம்யை ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

22. மஹாலக்ஷ்ம்யை ஜனலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

19. தர்மலக்ஷ்ம்யை அர்த்தலக்ஷ்ம்யை காமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

20. புண்யலக்ஷ்ம்யை சேமலக்ஷ்ம்யை ச்ரத்தாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சைதன்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

21. பூலக்ஷ்ம்யை தே புவர்லக்ஷ்ம்யை ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:


22. மஹாலக்ஷ்ம்யை ஜனலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

23. பாவலக்ஷ்ம்யை வ்ருத்திலக்ஷ்ம்யை பவ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைகுண்டலக்ஷம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

24. நித்யலக்ஷ்ம்யை ஸத்யலக்ஷ்ம்யை வம்சலக்ஷம்யை நமோ நம:
நமஸ்தே கைலாஸலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

25. ப்ரகிருதிலக்ஷ்ம்யை ஸ்ரீலக்ஷ்ம்யை ஸ்வஸ்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கோலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

26. சக்திலக்ஷ்ம்யை பக்திலக்ஷ்ம்யை முக்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரிமூர்த்தி லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

27. நமச்சக்ராரஜ லக்ஷ்ம்யை
ஆதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமோ ப்ரும்மானந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:



 மகாலக்ஷ்மி பாடல் விருத்தம் (சுருக்க வடிவம்)

🌺
சுத்தமும் புத்தியும் செல்வமும் தந்திடும்,
சௌபாக்ய வளம் தரும் தாயே லக்ஷ்மி!
அஷ்டைசுவர்ய அருள் பரவாய்,
மஹாலக்ஷ்மி உனை நமஸ்கரிக்கிறேன்!

🌺
வசனமும் கவிதையும் கலைப்பெரும் தந்திடும்,
அன்பருள் அன்பான லக்ஷ்மி தாயே!
ராஜ்யமும் கீர்த்தியும் தேஜமும் கொடுக்கும்,
மஹாலக்ஷ்மி உனை புகழ்ந்து பாடுவேன்!

🌺
தான்யமும் அன்னமும் தர்மமும் காப்பவள்,
மனம் நிறை ஆனந்த லக்ஷ்மி தாயே!
வேதாந்த ஞானமும், சந்தான வளமும்,
மஹாலக்ஷ்மி உனை வணங்குகின்றேன்!

🌺
யோகம் தரும் புண்யமும்,  பார்கடலில்,
விளங்கும் மங்கையாய் மகாலக்ஷ்மி தாயே!
மூவுலக அரசியும், நிதிபலம் தருவளே,
மஹாலக்ஷ்மி உனை நமஸ்கரிக்கிறேன்!


மகா லட்சுமி மகா மந்திரம் ஜபத்திற்கானது

மகாலட்சுமி காயத்ரியை 108 முறை ஜபிக்கவும்

ஓம் மஹாதேவ்யைச்ச வித்மஹே
விஷ்ணு பத்நியைச்ச தீமஹே
தன்னோ லக்ஷ்மி பிரச்சோதயாத்.


மகாலட்சுமி மூல மந்திரத்தை 108 முறை சொல்லவும்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸகல சௌபாக்யம் தேஹி தேஹி ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மஹா லக்ஷ்மியை நம: 

திருமகள் துதி ( பாரதியார் )

ராகம்-சக்கரவாகம் தாளம்-திஸ்ரஏகம்

நித்தமுனை வேண்டி மனம்
நினைப்ப தெல்லாம் நீயாய்ப்
பித்தனைப்போல் வாழ்வதிலே
பெருமையுண்டோ? திருவே!
சித்தவுறுதி கொண்டிருந்தார்
செய்கை யெல்லாம் வெற்றி கொண்டே
உத்தமநிலை சேர்வ ரென்றே
உயர்ந்த வேதமுரைப்ப தெல்லாம்,
சுத்த வெறும் பொய்யோடீ?
சுடர் மணியே!திருவே!
மெத்த மையல் கொண்டு விட்டேன்
மேவிடுவாய்,திருவே!

உன்னையன்றி இன்ப முண்டோ
உலகமிசை வேறே!
பொன்னை வடிவென் றுடையாய்
புத்தமுதே,திருவே!
மின்னொளி தருநன் மணிகள்
மேடை யுயர்ந்த மாளிகைகள்
வன்ன முடைய தாமரைப் பூ
மணிக்குள முள்ள சோலைகளும்,
அன்ன நறு நெய் பாலும்
அதிசயமாத் தருவாய்!
நின்னருளை வாழ்த்தி என்றும்
நிலைத்திருப்பேன்,திருவே!

ஆடுகளும் மாடுகளும்
அழகுடைய பரியும்
வீடுகளும் நெடுநிலமும்
விரைவினிலே தருவாய்!
ஈடு நினக்கோர் தெய்வமுண்டோ?
எனக்குனை யன்றிச் சரணுமுண்டோ?
வாடு நிலத்தைக் கண் டிரங்கா
மழையினைப் போல் உள்ள முண்டோ
நாடு மணிச் செல்வ மேல்லாம்
நன்கருள்வாய், திருவே!
பீடுடைய வான் பொருளே
பெருங் களியே, திருவே!

மகா லட்சுமி நூற்றெட்டு தமிழ் நாமாவளி


1. ஓம் அகில லட்சுமியே போற்றி

2. ஓம் அன்ன லட்சுமியே போற்றி

3. ஓம் அலங்கார லட்சுமியே போற்றி

4. ஓம் அமிர்த லட்சுமியே போற்றி

5. ஓம் அமர லட்சுமியே போற்றி

6. ஓம் அம்ச லட்சுமியே போற்றி

7. ஓம் அபூர்வ லட்சுமியே போற்றி

8. ஓம் அரவிந்த லட்சுமியே போற்றி

9. ஓம் அனந்த லட்சுமியே போற்றி

10. ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி

11. ஓம் ஆதி லட்சுமியே போற்றி

12. ஓம் ஆத்ம லட்சுமியே போற்றி

13. ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி

14. ஓம் இஷ்ட லட்சுமியே போற்றி

15. ஓம் இன்ப லட்சுமியே போற்றி

16. ஓம் இதய லட்சுமியே போற்றி

17. ஓம் ஈகை லட்சுமியே போற்றி

18. ஓம் உதய லட்சுமியே போற்றி

19. ஓம் உத்தம லட்சுமியே போற்றி

20. ஓம் உபாசன லட்சுமியே போற்றி

21. . ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி

22. ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி

23. ஓம் ஒளஷத லட்சுமியே போற்றி

24. ஓம் கருணா லட்சுமியே போற்றி

25. ஓம் கனக லட்சுமியே போற்றி

26. ஓம் கபில லட்சுமியே போற்றி

27. ஓம் கமல லட்சுமியே போற்றி

28. ஓம் கற்பக லட்சுமியே போற்றி

29. ஓம் கஜ லட்சுமியே போற்றி

30. ஓம் கஸ்தூரி லட்சுமியே போற்றி

31. 31. ஓம் காருண்ய லட்சுமியே போற்றி

32. ஓம் குண லட்சுமியே போற்றி

33. ஓம் குரு லட்சுமியே போற்றி

34. ஓம் கோமள லட்சுமியே போற்றி

35. ஓம் கோமேதக லட்சுமியே போற்றி

36. ஓம் சந்தான லட்சுமியே போற்றி

37. ஓம் சங்கு லட்சுமியே போற்றி

38. ஓம் சக்கர லட்சுமியே போற்றி

39. ஓம் சர்வ லட்சுமியே போற்றி

40. ஓம் சந்தோஷ லட்சுமியே போற்றி

41. ஓம் சகல லட்சுமியே போற்றி

42. ஓம் சாந்த லட்சுமியே போற்றி

43. ஓம் சிங்கார லட்சுமியே போற்றி

44. ஓம் சிந்தாமணி லட்சுமியே போற்றி

45. ஓம் சீதா லட்சுமியே போற்றி

46. ஓம் செல்வ லட்சுமியே போற்றி

47. ஓம் சொர்ண லட்சுமியே போற்றி

48. ஓம் சுந்தர லட்சுமியே போற்றி

49. ஓம் சுப லட்சுமியே போற்றி

50. ஓம் ஜெய லட்சுமியே போற்றி

51. 51. ஓம் ஜோதி லட்சுமியே போற்றி

52. ஓம் ஞான லட்சுமியே போற்றி

53. ஓம் தங்க லட்சுமியே போற்றி

54. ஓம் தயா லட்சுமியே போற்றி

55. ஓம் தர்ம லட்சுமியே போற்றி

56. ஓம் தன லட்சுமியே போற்றி

57. ஓம் தவ லட்சுமியே போற்றி

58. ஓம் தான லட்சுமியே போற்றி

59. ஓம் தான்ய லட்சுமியே போற்றி

60. ஓம் தாமரை லட்சுமியே போற்றி

61. 

61. ஓம் தெய்வ லட்சுமியே போற்றி

62. ஓம் தீப லட்சுமியே போற்றி

63. ஓம் தீர்த்த லட்சுமியே போற்றி

64. ஓம் திவ்ய லட்சுமியே போற்றி

65. ஓம் நாக லட்சுமியே போற்றி

66. ஓம் நித்ய லட்சுமியே போற்றி

67. ஓம் நிர்மல லட்சுமியே போற்றி

68. ஓம் நீல லட்சுமியே போற்றி

69. ஓம் பதும ராக லட்சுமியே போற்றி

70. ஓம் பவள லட்சுமியே போற்றி

71. 71. ஓம் பக்த லட்சுமியே போற்றி

72. ஓம் பத்ம லட்சுமியே போற்றி

73. ஓம் பங்கஜ லட்சுமியே போற்றி

74. ஓம் பராக்கிரம லட்சுமியே போற்றி

75. ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி

76. ஓம் பாக்கிய லட்சுமியே போற்றி

77. ஓம் பால லட்சுமியே போற்றி

78. ஓம் புண்ணிய லட்சுமியே போற்றி

79. 79. ஓம் புவன லட்சுமியே போற்றி

80. ஓம் புனித லட்சுமியே போற்றி

81. ஓம் பொன் லட்சுமியே போற்றி

82. ஓம் போக லட்சுமியே போற்றி

83. ஓம் மகா லட்சுமியே போற்றி

84. ஓம் மதன லட்சுமியே போற்றி

85. ஓம் மதுர லட்சுமியே போற்றி

86. ஓம் மங்கள லட்சுமியே போற்றி

87. ஓம் மாதவ லட்சுமியே போற்றி

88. ஓம் மகா லட்சுமியே போற்றி

89. ஓம் மகுட லட்சுமியே போற்றி

90. ஓம் மரகத லட்சுமியே போற்றி

91. ஓம் மாணிக்க லட்சுமியே போற்றி

92. ஓம் மாதா லட்சுமியே போற்றி

93. ஓம் முத்து லட்சுமியே போற்றி

94. ஓம் மோட்ச லட்சுமியே போற்றி

95. ஓம் யோக லட்சுமியே போற்றி

96. ஓம் ரத்தின லட்சுமியே போற்றி

97. ஓம் ராம லட்சுமியே போற்றி

98. ஓம் ராஜ்ய லட்சுமியே போற்றி

99. ஓம் வரலட்சுமியே போற்றி

100. ஓம் வித்யா லட்சுமியே போற்றி

101. ஓம் விஜய லட்சுமியே போற்றி

102. ஓம் விமல லட்சுமியே போற்றி

103. ஓம் விஷ்ணு லட்சுமியே போற்றி

104. ஓம் வீர லட்சுமியே போற்றி

105. ஓம் வேங்கட லட்சுமியே போற்றி

106. ஓம் வேணு லட்சுமியே போற்றி

107. ஓம் வைடூர்ய லட்சுமியே போற்றி

108. ஓம் வைரலட்சுமியே போற்றி போற்றி!

...........................சுபம்............

மகாலட்சுமி பஜனை

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

முன்னோர்கள் செய்த பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க

நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க நித்ய சுமங்கலி பூஜையில் அழைக்க மத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

கனக வ்ருக்க்ஷமாய் தனமழை தருக மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக கனக வ்ருக்க்ஷமாய் தனமழை தருக மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக தினகரன் கோடி உன் மேனியில் உருக ஜனகராஜன் திரு கண்மணி வருக பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

சங்கநிதி முதல் நவநிதி தாராய் கங்கண கையால் மங்களம் செய்தாய் சங்கநிதி முதல் நவநிதி தாராய் கங்கண கையால் மங்களம் செய்தாய் குங்கும பூவாய் பங்கயப் பாவை வேங்கடரமனின் பூங்கொடி வாராய் பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம் நித்தம் மஹோத்சவம் நித்திய மங்களம் அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம் நித்தம் மஹோத்சவம் நித்திய மங்களம் சக்திக் ஏத்தபடி சாது போஜனம் சாப்பிட்டு தருவாய் அக்க்ஷதை சீதனம் பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த சுக்கிர வார பூஜையில் இருந்து சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த சுக்கிர வார பூஜையில் இருந்து அக்கறையோடு சந்தனம் குழைத்து சாற்றிட புரந்தர விட்டலனை அழைத்து பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா.. என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

மகா லட்சுமி வாசம் செய்யும் பொருட்கள் மகா லட்சுமி என்றாலே ஆரோக்யம் சுத்தம் நறுமனம் சுவை மணம் அழகு நல்நிறம் மங்களம் திருமகள்  எங்கும் நிறைந்திருக்கிறாள்.  திருமகள் வாசம் செய்யும் பொருட்களை வீணடிக்காமல் அவமதிப்பு செய்யாமல் மிகுந்த பவித்ரமாக கருதிட வேண்டும்

இறைவனை சிந்தித்து வாழும் மக்கள் அனைவரும் விரும்புவது, லட்சுமி கடாட்சத்தைத் தான். லட்சுமியின் அருள் கிடைத்து விட்டால், அனைத்து செல்வங்களும் வந்து சேர்ந்து விடும் என்பது ஐதீகம். விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் லட்சுமிதேவியானவள், 108 இடங்களில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த 108 இடங்கள் எவை என்பதை இங்கே பார்க்கலாம். வெற்றிலை மேற்புறம், விபூதி, வில்வம், மஞ்சள், அட்சதை, பூரணகும்பம், தாமரை, தாமரைமணி, ஜெபமாலை, வலம்புரி சங்கு, மாவிலை, தர்ப்பை, குலை வாழை, துளசி, தாழம்பூ, ருத்ராட்சம், சந்தனம், தேவ தாரு, அகில், பஞ்சபாத்திரம், கொப்பரைக்காய், பாக்கு, பச்சைக்கற்பூரம், கலசம், சிருக் சுருவம், கமண்டலநீர், நிறைகுடம், காய்ச்சிய பால், காராம்பசு நெய், குங்கிலியப் புகை, கஸ்தூரி, புனுகு, பூணூல், சாளக்கிராமம், பாணலிங்கம், பஞ்ச கவ்யம், திருமாங்கல்யம், கிரீடம், பூலாங் கிழங்கு, ஆல விழுது. தேங்காய்க்கண், தென்னம் பாளை, சங்கு புஷ்பம், இலந்தை, நெல்லி, எள், கடுக்காய், கொம்பரக்கு, பவளமல்லி, மாதுளை. திருநீற்று பச்சை, அத்திக் கட்டை, ஆகாசகருடன், வெட்டிவேர், அருகம்புல், விளாமிச்சுவேர், நன்னாரிவேர், களாக்காய், விளாம்பழம், வரகு.

நெற்கதிர், மாவடு, புற்றுத்தேன், எலுமிச்சை, மணிநாக்கு, சோளக்கதிர், பாகற்காய், அகத்திக்கீரை, காசினிக்கீரை, பசலைக்கீரை, கூந்தல்பனை, மலைத்தேன், வெள்ளி, தங்கம், வைரம், உப்பு, யானை, மூங்கில், பசு நீர்த்தாரை, குளவிக்கூட்டு மண், நண்டுவளை மண், காளை கொம்பு மண், யானை கொம்பு மண், ஆல அடி மண், வில்வ அடி மண், வெள்ளரிப்பழம், மோதகம், அவல், காதோலை, கடல்நுரை, கண்ணாடி, மோதிரம் (தந்தம்), பட்டு, தையல் இல்லாத புதுத் துணி, பெண்ணின் கழுத்து, ஆணின் நெற்றி, கோவில் நிலை மண், வெயிலுடன் கூடிய மழைநீர், கீரிப்பிள்ளை, நுனிமுடிந்த கூந்தல், படிகாரம், அரச சமித்து, பன்றிக்கொம்பு, சந்திர காந்தக்கல், பிரம்பு, நாயுருவி, வாசல் நிலை, நெற்றி.



வெள்ளிகிழமை சுக்ரனின் உலக நலம் தரும் சுக்கிரனை திருமகளோடு வணங்க நன்னமை உண்டாகும்


சுக்கிர பகவான் மந்திரம்

"ஹிமிகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்.

ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்"

சுக்கிர மூர்த்தி சுபம் மிக ஈவாய்

வக்கிரமின்றி வரம்மிகத் தருவாய்!

வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே

அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!!

சுக்ர காயத்ரீ மந்திரம்

ஓம் அச்வ த்வஜாய வித்மஹே

தநுர் ஹஸ்தாய தீமஹி

தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

வெள்ளிகிழமை வழிபாடு சுக்ரவழிபாடாக புனிதமான இறைவணக்க நாளாக பிறமத மார்க்கமும் பிரார்த்தனை செய்வதை அறிவோம்

வெள்ளத்தனையது மலர்நீட்டம் மாந்தர் உள்ளத்தனையது உயர்வு நீரின் உயர்வுக்கு ஒப்ப தாமரை உயர்வதுபோல உள்ளத்தில் எண்ணும் எண்ணத்திற்கேற்ப உலகியல் வாழ்வில் உயர்வு உண்டாகும் இதனை தாரணா என்பர்

திருமகளின் பீஜ மந்திரம் ஸ்ரீம் அதை உச்சரிக்கும் போதே முகத்தில் ஒரு சிரிப்பு இழையோடும்

சிரிப்பு ஆழ்மனத்தின் அமைதி ஆனந்த அனுபவம் அது நிறைவு பூரணம்

திருமகளை வெள்ளிகிழமை தீபம் ஏற்றி வணங்கி அன்னையின் பேரருளை பெற்று வாழ்வாங்கு வாழ அந்த பார்க்கவி தேவி ஆசி செய்யட்டும்

எல்லாம் இறைசெயல்

அடியேன். 

இராமய்யா. தாமரைச்செல்வன்

அன்பான வேண்டுகோள் பிறகுழுமங்களில் பதிவிடுவதை தவிர்க்கவும் நன்றி





புதன், 3 செப்டம்பர், 2025

நவகிரகங்களின் காரகத்துவம் மற்றும் சனீஸ்வரர் அருள் தரும் பதிகம் துதிகள்

 



          நவகிரகங்களின்                       காரகத்துவங்கள்      

☀️ சூரியன் – நவகிரக தலைவன்

சூரியன் எல்லா கிரகங்களுக்கும் தலைவராக விளங்குகிறார். இவர் அரசின் பிரதமர், ஜனாதிபதி போன்று அதிகாரமும், ஆட்சியும், நிர்வாகத் திறமையும் வழங்குபவர்.
வீட்டில் தந்தை, மகன், தாய் ஆகியோரின் நிலையை வெளிப்படுத்துபவர். பதவி, கருணை, இறக்கம் ஆகியவற்றை அருள்பவர்.

சிவப்பு நிறத்தோடு விளங்கும் இவர் சத்திரிய வம்சத்தைச் சேர்ந்தவர் என்று கூறுவர்.
ஆதவன், பகலவன், வெய்யோன், தினகரன், கதிரவன், ரவி எனப் பல நாமங்களால் புகழப்படுகிறார்.

தாய், மனைவி, மாமியார், பெண்கள், கலைஞர் முதலியவர்களை குறிப்பதோடு, உணவகம், பால் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள் இவரது ஆட்சிக்குள் வருகின்றன.
கவிதை, கற்பனை, கலைநயம், புகழ், சாந்தம், காதல் ஆகியவை இவரது அருளால் பெருகும்.

இடது கண், கற்பு, மனம், ஜோதிடம், வேதம், மருத்துவம், ஒளி, மழை, வெண்மை, முத்து, மலர்கள் ஆகியவற்றுக்கும் இவர் காரணன்.
சந்திரன் இவரது துணைவனாய் நிலா, அம்புலி, மதி, திங்கள், சோமன் எனப் பல பெயரால் அறியப்படுகிறான்.


🌙 சந்திரன் – மனதின் அரசன்

சந்திரன் மனம், கற்பனை, அமைதி, கலை, பெண்மை, அன்பு ஆகியவற்றின் காரகன்.
வீட்டின் குளியலறை, இடது பக்கம், ஜன்னல் முதலியவற்றை குறிக்கிறார்.
அம்புலி, மதி, தண்சுடர், சோமன், கலாநிதி, குழவி என அழைக்கப்படுகிறார்.


🔥 செவ்வாய் – வீரத்தின் காரகன்

செவ்வாய் கிரகம் வீரம், ஆணவம், முன்கோபம், ஆத்திரம் போன்ற குணங்களை அளிப்பவன்.
அதிகார உணர்வு, வாக்குவாதம், சண்டை, உணர்ச்சி வசப்படுதல் ஆகியன இவரது தன்மைகள்.

ராணுவம், காவல்துறை, சகோதரன், கணவன், விளையாட்டு வீரன், பொறியாளர், அறுவை சிகிச்சை, விவசாயம் ஆகியவற்றின் காரகன்.
தெற்கு திசையைச் சேர்ந்த இவர் செம்பு உலோகம், துவரை தானியம், செந்தாமரை முதலியவற்றுடன் தொடர்புடையவர்.
காயம், வெட்டுக்காயம், கத்தி, கோடாலி, துப்பாக்கி போன்றவற்றையும் குறிக்கிறார்.


🌿 புதன் – அறிவின் காரகன்

புதன் கல்வி, அறிவு, பேச்சாற்றல், நகைச்சுவை, தந்திரம், பொறுமை ஆகியவற்றின் அருள்காரன்.
ஜோதிட அறிவு, வேதாந்தம், கலை அறிவு, வாணிபம், கணக்கு ஆகியவற்றில் சிறந்து விளங்கச் செய்பவர்.

தாய்மாமன், பச்சை பயிறு, பித்தளை, பச்சை நிறம் ஆகியவற்றின் காரகன்.
நாக்கு, தொண்டை, கழுத்து, தோள்பட்டை ஆகிய உடல் பகுதிகளையும் குறிக்கிறார்.
செளமியன், கணக்கன், மாலவன் என அழைக்கப்படுகிறார்.


🌕 குரு – ஞானத்தின் காரகன்

குரு கிரகம் பக்தி, ஞானம், நீதி, ஒழுக்கம், தெய்வ நம்பிக்கை, கண்ணியம் ஆகியவற்றை அருள்பவர்.
புத்திர காரகன், ஆசிரியன், அமைச்சன், தேவகுரு எனப் போற்றப்படுகிறார்.

வீட்டில் பூஜை அறை, பசு, நிர்வாகம், பணமுடிச்சுகள் ஆகியவற்றின் காரகன்.
முல்லை மலர், மஞ்சள், கொண்டைக் கடலை, தங்கம், யானை இவரது அடையாளங்கள்.
பிரகஸ்பதி, வியாழன், அந்தணன், ஆசான், அரசகுரு எனப் பல பெயர் கொண்டவர்.

மூக்கு, குடல், தொடை உருப்புகளை ஆள்பவர்


🌸 சுக்கிரன் – இன்பத்தின் காரகன்

சுக்கிரன் காதல், கலை, அழகு, காமம், இன்பம், செல்வம், ஆடம்பரம் ஆகியவற்றின் காரகன்.
இவர் ஆசிரியன், கலைஞர், கவிஞர், இசைக்காரர், நடிகர் ஆகியோருக்கு அருள் புரிவார்.

மனைவி, பெண்கள், ஆடைகள், மணம், வாசனைப்பொருட்கள், நகை, பட்டு, கலைவாணிபம் முதலியவைகள் இவரது ஆட்சிக்குள் வருகின்றன.
வெள்ளை நிறம், வெள்ளி உலோகம், முருங்கை மலர், பருப்பு வகைகள் ஆகியவை இவரது அடையாளங்கள்.

உடலில் வீரியம், இனப்பெருக்கம், இடுப்பு, முக அழகு ஆகியவற்றை குறிக்கிறார்.
கவி, சுக்ரன், பூகவன், பவனன் எனப் பல நாமங்களால் போற்றப்படுகிறார்.


🪐 சனி – நீதியின் காரகன்

சனி கிரகம் ஒழுக்கம், துன்பம், சோதனை, பொறுமை, உழைப்பு, நீதி ஆகியவற்றின் காரகன்.
இவர் பழிச் சுமை, தாமதம், கர்ம பலன், உழைப்பின் மதிப்பு ஆகியவற்றைக் கற்பிப்பவர்.

பணியாளர், தொழிலாளர், ஏழை மக்கள், விவசாயம், உழைப்பு, உலோகம், நிலம் ஆகியவற்றின் காரகன்.
கருப்பு நிறம், எள், இரும்பு, கருங்கல், காகம் இவரது அடையாளங்கள்.

உடலில் பற்கள், எலும்பு, மூட்டு, நரம்பு ஆகியவற்றைக் குறிக்கிறார்.
மந்தன். சாயனன், சூரியபுத்திரன் எனப் பல பெயர் கொண்டவர்.


🐉 ராகு – ஆசையின் காரகன்

ராகு கிரகம் ஆசை, கபடம், மறைவு, புகழ், வெளிநாட்டு தொடர்பு, திடீர் மாற்றம் ஆகியவற்றை குறிக்கிறது.
இவர் இருள், பிம்பம், மாயை, சோதனை ஆகியவற்றின் காரகன்.

விஷம், பாம்பு, மந்திரம், நிழல், புகழ், உலகப் புகழ், அரசியல் ஆகியவற்றையும் சுட்டுகிறார்.
கருப்பு, நீலம், புகை, பாம்பு இவரது அடையாளங்கள்.

உடலில் கழுத்து, சுவாசம், நரம்பு, நோய் ஆகியவற்றுக்கு காரணன்.
ராகு, தாமோகிரகம், சாயாபுத்திரன் என அறியப்படுகிறார்.


🕉️ கேது – மெய்ஞானத்தின் காரகன்

கேது கிரகம் ஆன்மீகம், மெய்ஞானம், பக்தி, விடுபாடு, யோக சித்தி ஆகியவற்றின் காரகன்.
இவர் சந்நியாசம், துறவு, யோகம், ஜோதிடம், தியானம், தீர்த்தம் ஆகியவற்றை அருள்பவர்.

பாம்பு வால், புனிதம், ஹோமம், தீ, சிவபக்தி, கோயில் ஆகியவற்றின் காரகன்.
சிகப்பு, புகை, தீ, , மலை இவரது அடையாளங்கள்.

உடலில் மூளை, நரம்பு, மனவியல் ஆகியவற்றை குறிக்கிறார்.
கேது, சைவராசி, ஜ்யோதிர் கிரகம் எனப் போற்றப்படுகிறார்.

மேலே உள்ளகிரக விபரங்களில் அந்தந்த கிரகங்கள் ஆளும்போதும் அசுபமாய் அமரும் போதும்  நோய்களும் தோன்ற வாய்ப்பாகும் உறுப்புகளில் கவணமும் அவசியம்

தொழில் வாய்ப்பு நட்பு என உலகநல விஷயங்களில் ஓரளவு முன்னறிதலுக்கு பயன்படுவன கிரக காரகத்துவம்


          நவகிரக தமிழ்  துதி  

சூரியன்

சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி!
சூரியா போற்றி! சுந்தரா போற்றி!
வீரியா போற்றி! வினைகள் களைவாய்

சந்திரன்

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி! திருவருள் தருவாய்
சந்திரா போற்றி! சற்குணா போற்றி!
சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி!

அங்காரகன் (செவ்வாய்)

சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்கள செவ்வாய் மலரடி போற்றி!
அங்காரகனே அவதிகள் நீக்கு!

புதன்

இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி!
பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி!

குரு

குணமிகு வியாழக் குருபகவானே
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ;
பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய்

சுக்கிரன்

சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய்
வக்ரமின்றி வரமிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே

சனி

சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே!
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே
இச்சகம் வாழ இன்னருள் தா தா

ராகு

அரவெனும் ராகு அய்யனே போற்றி!
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆகஅருள் புரி அனைத்திலும் வெற்றி
ராகுக்கனியே ரம்மியா போற்றி!

கேது

கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி! பாவம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி
கேதுத்தேவே கேண்மையாய் ரஷி

...........................சுபம்............



       திருநள்ளாற்று தலமூர்த்தி ஈஸ்வரவர்


                    தர்ப்ப ஆரண்யேஸ்வரர்


        சனீஸ்வரருக்கு சிறப்பு                       வழிபாட்டு துதி 

தர்ப்ப ஆரண்யேஸ்வரர் 

ஈசனின் குணரகிதங்களை சர்வாங்கங்க பெருமைகளை உணர்ந்து அவர் அருளை தியானித்து திருநீறு அணிந்து உள்ளம் உருகி வேண்ட ஈசனருள் நன்மை செய்யும்

திருநீறு அணியும்போது நெற்றி ஸ்பரிசபட்டு மெய்யறிவை துலங்க செய்யும் இதனை சுழுமுனை தூண்டுதல் நெற்றி கண்ணை தொடதல் தீண்டிடுதல் அகதீபம் ஏற்றுதல் என்று பலநலம் தரும் திருநீறு அணிதல் சூட்சமமாம்

## ✨ திருநள்ளாற்று பெருமானின் தத்துவச் சின்னங்கள் ✨


### 1. **அரைமுறை (உமையம்மை பாகம்)**

சிவபெருமான் தனது திருமேனியில் உமையம்மையை அரைமுறையாக வைத்திருப்பது,

* **புருஷ–பிரகிருதி** இணைப்பைக் குறிக்கிறது.

* ஆணும் பெண்ணும் இரண்டும் பிரிந்த சக்திகள் அல்ல; ஒரே அண்டத் தத்துவத்தின் இரு முகங்கள் என்பதை உணர்த்துகிறது.

* இதன் மூலம் *இரண்டும் ஒன்றினைந்து தான் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் நிகழ்கிறது* என்கிற ஞானத்தை காட்டுகிறது.


### 2. **விடை வாகனம் (நந்தி)**

சிவபெருமானின் வாகனமான விடை,

தரும விடை நந்தி

* **தர்மம்** மற்றும் **நிஷ்காம ப்ரவ்ருத்தி** (பயன்விரும்பாத செயல்) என்பதைக் குறிக்கிறது.

* விடை எப்போதும் இறைவனை நோக்கி நிற்பது போல, *மனமும் என்றும் இறை நோக்காக இருக்க வேண்டும்* எனப் பாடம் புகட்டுகிறது.


### 3. **மிருகச்சர்ம ஆடை**

சிவன் உடலில் போர்த்தியிருக்கும் மிருகச்சர்மம்,புலியாடை

* **ஆசைகளையும் விலங்கு சுபாவத்தையும் வென்று அடக்கி விடும் நிலையை** குறிக்கிறது.

* உலக ஆசைகளால் கட்டுப்படாமல் தன்னை வென்று கொண்டவன் தான் பரமபதத்தைக் கைகொள்ள முடியும் என்று அறிவுறுத்துகிறது.

### 4. **நாகம் (கச்சம்)**

இடையினில் கட்டியிருக்கும் நாகம்,

* **காலத்தையும் மரணத்தையும் வெல்வ சக்தி** என்பதைக் குறிக்கிறது.

* பாம்பு போல் ஊர்ந்து செல்லும் *காலம்* யாரையும் காத்திருக்காது; ஆனால் இறைவன் காலத்தின் ஆண்டவன் என்கிற சின்னமாகும்.


### 5. **மழு, சூலம், மான்**

சிவபெருமான் ஏந்தியிருக்கும் ஆயுதங்கள்,

* **மழு (பரசு)** – அகங்காரத்தை அழிக்கும் சக்தி.

* **சூலம் (திரிசூலம்)** – மூன்று குணங்கள் (சத்துவம், ரஜஸ், தமஸ்) அனைத்தையும் ஆட்சி செய்கிறவன்.

* **மான்** – மனத்தின் வேகத்தை அடக்கிச் செலுத்தும் தன்னடக்கம்.

### 6. **கங்கை, கொன்றை, பிறைமதி**

சிவனின் சடைமுடியில் விளங்கும் மூன்று அழகிய சின்னங்கள்:

* **கங்கை** – புனிதம், பாவநாசம், ஆன்மா சுத்திகரிப்பு.

* **கொன்றை மலர்** – பக்தியின் எளிமை, இயற்கையின் தெய்வீகத் தன்மை.

* **பிறைமதி** – மன அமைதி, சாந்தம், ஆன்ம ஞானத்தின் நிலவு.

### 7. **வெண்நீறு (திருநீறு)**

சிவபெருமானின் திருமேனியில் பூசப்பட்டிருக்கும் வெண்நீறு,

* *உடல் அழிந்தாலும் ஆத்மா நிலைத்திருக்கிறது* என்பதைச் சொல்லும் சின்னம்.

* பிறப்பு–இறப்பு சுழற்சியைத் தாண்டி **மோட்சம்** அடையும் தத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

🌸 இவ்வாறு, திருநள்ளாற்றுத் தலப்பாடல்களில் சிவபெருமான் சின்னங்களுடன் விளங்குவது வெறும் அலங்காரம் அல்ல;

**ஒவ்வொன்றும் ஒரு ஆன்மீகப் பாடமாக, வாழ்வை நடத்தும் வழிகாட்டியாக நமக்குத் தந்த வரப்பிரசாதம்** ஆகும்.


திருநள்ளாறு பச்சைபதிகம் சனீஸ்வரர் தீங்கு குறைந்து இறை அருள் பெற

           அப்பன் திருநள்ளாற்றீசர்.அம்மை

               போகமார்த்த பூண் முலையாள்

பாடல் எண் : 01

போகமார்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண் வெள் ஏற்று அண்ணல் பரமேட்டி,
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின் மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

பாடல் விளக்கம்:

இன்பத்துக்கு நிலைக்களனாயுள்ளனவும் அணிகலன்கள் பொருந்தியனவுமான தனங்களை உடைய உமையம்மையைத் தன்னோடு அழகிய திருமேனியின் இடப்பாகமாக ஒன்றாக இருக்கச் செய்தவனும், பசிய கண்களையும் வெண்மையான நிறத்தையும் உடைய ஆனேற்றைத் தனது ஊர்தியாகக் கொண்ட தலைவனும், மேலானவனும், திருமேனியின் மேல் போர்த்த தோலாடையுடையவனும், இடையிற் கட்டிய கோவண ஆடையின் மேல் நாகத்தைக் கச்சாக அணிந்தவனுமான நம் பெருமான் எழுந்தருளி இருக்கும் தலம் திருநள்ளாறு.


பாடல் எண் : 02

தோடுடைய காதுடையன் தோல்டையன் தொலையாப்
பீடுடைய போர் விடையன் பெண்ணும் ஓர்பால் உடையன்
ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே.

பாடல் விளக்கம்:
அம்மை பாகத்தே உள்ள இடச்செவியில் தோடணிந்த காதினை உடையவனும் தோலை ஆடையாகக் கொண்டவனும், குன்றாப் புகழ் உடையதும் போர் செய்தலில் வல்லதுமான விடை ஊர்தியனும் மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவனும், அடுக்குகளாக அமைந்த மேல் உலகங்களோடு ஏழ்கடலாலும் சூழப்பட்ட நாடு என்னும் இந்நிலவுலகமும் உடையவனுமாகிய எம்பெருமான் விரும்பிய தலம் திருநள்ளாறு ஆகும்.


பாடல் எண் : 03

ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி அணியிழையோர்
பான்முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே.

பாடல் விளக்கம்:
பசுவிடமிருந்து முறையாக எடுக்கப்பட்ட திருவெண்ணீற்றை மேனி முழுதும் பூசி அழகிய அணிகலன்களைப் புனைந்த உமையம்மையை ஒரு பாகமாக வைத்துள்ள, தன் திருவடிகளைப் பக்தர்கள் பணிந்து போற்ற, இளமான், வெண்மையான மழு, சூலம் ஆகியவற்றை ஏந்திய கையினனாய் நான்மறைகளையும் அருளிய நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.


பாடல் எண் : 04

புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்தயலே
மல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன்சூடிப்
பல்க வல்ல தொண்டர் தம் பொன்பாத நிழல் சேர
நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.

பாடல் விளக்கம்:
பொருந்திய நீண்ட சடையின் மேல் கங்கையை அணிந்து, அதன் அருகில் கொன்றை மாலையையும் பிறைமதியையும் ஒருசேரச் சூடித் தன்னைச் சார்ந்து வாழும் தொண்டர்கட்குத் தனது திருவடி நிழலைச் சேரும்பேற்றை நல்கும் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.
 

பாடல் எண் : 05

ஏறு தாங்கி ஊர்தி பேணி ஏர் கொள் இளமதியம்

ஆறு தாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம் சூடி

நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை

நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.


பாடல் விளக்கம்:

ஆன் ஏற்றைக் கொடியாகத் தாங்கியும் அதனையே ஊர்தியாக விரும்பி ஏற்றும் அழகிய இளம்பிறை கங்கை ஆகியன பொருந்திய சடை முடியின்மேல் ஆடும் பாம்பைச் சூடியும் திருநீறு பூசிப் பூணூலோடு விளங்கும் மார்பில் கொன்றை மாலையின் மணம் கொண்டவனுமான நம் பெருமான் மேவியதலம் திருநள்ளாறு ஆகும்.



பாடல் எண் : 06

திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன் இமையோர்கள்

எங்கள் உச்சி எம் இறைவன் என்று அடியே இறைஞ்ச

தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்

நங்கள் உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே.


பாடல் விளக்கம்:

திங்கள் திருமுடியின் உச்சி மீது விளங்கும் தேவனாய், தேவர்கள் எங்கள் உச்சியாய் உள்ள எம்பெருமானே! என்று அடிபரவவும், தலையால் தன்னை வணங்கும் அடியவர்களும் எங்கள் முடிமீது விளங்கும் நம் பெருமான் என்று போற்றவும் விளங்கும் சிவபிரான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.



பாடல் எண் : 07

வெஞ்சுடர்த் தீ அங்கை ஏந்தி விண்கொண் முழவு அதிர

அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்

செஞ்சடைக்கோர் திங்கள் சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே

நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.


பாடல் விளக்கம்:

கொடிய ஒளி பொருந்திய நெருப்பைக் கையில் ஏந்தி விண்ணளவும் ஒலிக்கும் முழவு முழங்கப் பலரும் அஞ்சும் சுடுகாட்டில் ஆடல் பாடலுடன் ஓர் இளம்பிறையைச் சூடி, விளங்கும் கண்டத்தில் நஞ்சினை நிறுத்திய நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.



பாடல் எண் : 08

சிட்டமார்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீ அம்பினால்

சுட்டுமாட்டி சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும் போய்ப்

பட்டமார்ந்த சென்னிமேலோர் பால் மதியம் சூடி

நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.


பாடல் விளக்கம்:

பெருமை மிக்க முப்புரங்களையும் வரை சிலையில் பொருந்திய தீயாகிய அம்பினால் சுட்டு அழித்து, திருவெண்ணீற்றுப் பொடியில் திளைத்து ஆடி, பட்டம் என்னும் அணிகலன் கட்டிய சென்னியின் மேல் பால்போலும் நிறமுடையதொரு பிறைமதியைச் சூடி நடனம் ஆடும் நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.

பாடல் எண் : 08

சிட்டமார்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீ அம்பினால்

சுட்டுமாட்டி சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும் போய்ப்

பட்டமார்ந்த சென்னிமேலோர் பால் மதியம் சூடி

நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.


பாடல் விளக்கம்:

பெருமை மிக்க முப்புரங்களையும் வரை சிலையில் பொருந்திய தீயாகிய அம்பினால் சுட்டு அழித்து, திருவெண்ணீற்றுப் பொடியில் திளைத்து ஆடி, பட்டம் என்னும் அணிகலன் கட்டிய சென்னியின் மேல் பால்போலும் நிறமுடையதொரு பிறைமதியைச் சூடி நடனம் ஆடும் நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.



பாடல் எண் : 09

உண்ணலாகா நஞ்சு கண்டத்து உண்டு உடனே ஒடுக்கி

அண்ணலாகா அண்ணல் நீழல் ஆரழல் போலுருவம்

எண்ணலாகா உள் வினை என்று எள்க வலித்து இருவர்

நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே.


பாடல் விளக்கம்:

யாராலும் உண்ண முடியாத நஞ்சினை உண்டு அதனைத் தம் கண்டத்தில் நிறுத்தியவரும், யாராலும் அணுக இயலாத தலைவரும் ஒளி பொருந்திய அழல் போன்ற திருவுருவினரும் அநாதியாகவே உள்ள வினையால் எண்ண இயலவில்லையே என மனம் வருந்திய திருமால் பிரமர்களால் நணுக முடியாதவருமான நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.



பாடல் எண் : 10

மாசு மெய்யர் மண்டைத் தேரர், குண்டர் குணம் இலிகள்

பேசும் பேச்சை மெய் என்று எண்ணி அந்நெறி செல்லன்மின்

மூசுவண்டார் கொன்றை சூடி மும்மதிலும் உடனே

நாசம் செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே.


பாடல் விளக்கம்:

அழுக்கேறிய உடலினராகிய சமணரும், கையில் மண்டை என்னும் உண்கலத்தை ஏந்தித் திரியும் புத்தர்களும் ஆகிய குண்டர்களும் நற்குணம் இல்லாதவர்கள். அவர்கள் பேசும் பேச்சை மெய்யென்று எண்ணி அவர்கள் சமயங்களைச் சாராதீர். வண்டுகள் மொய்த்துப் பொருந்தும் கொன்றை மலர் மாலையைச் சூடி மும்மதில்களையும் ஒருசேர அழித்துத் தேவர்களைக் காத்தருளிய நம்பெருமான் மேவிய திருநள்ளாற்றைச் சென்று வழிபடுமின்.



பாடல் எண் : 11

தண் புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்

நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன் நல்ல

பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார்

உண்பு நீங்கி வானவரோடு உலகில் உறைவாரே


பாடல் விளக்கம்:

நட்புக்கு ஏற்ற நல்லோர் வாழும் சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், குளிர்ந்த கங்கையையும் வெண்மையான பிறையையும் தாங்கிய தாழ்ந்த சடைமுடியை உடைய சிவபிரான் எழுந்தருளிய, நல்லியல்பு வாய்ந்தோர் வாழும் திருநள்ளாற்றைப் போற்றிப் பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர் பிராரத்த கன்ம வலிமை குறையப் பெற்று வானவர்களோடு தேவருலகில் வாழ்வர்

.........................சுபம்....................


திருநள்ளாறு செல்லும் அன்பர்கள் மூலஸ்தானத்தில் இருக்கும் சிவபெருமானுக்கு தீபமிட்டு முதல் வணக்கம் செய்து பின்பு அம்பாளை தரிசித்து பின்பு சனீஸ்வவரை தரிசிக்க வேண்டும் என்பதை குருநாதர் பலமுறை உபதேசித்து இருக்கிறார்கள்






சனி துதி ஸ்தோத்திரம்

தமிழ் எழுத்து:

நீலாஞ்சன சமாபாஸம்
ரவி புத்திரம் யமாக்ரஜம் ।
சாயாமார்த்தாண்ட சம்பூதம்
தம் நமாமி சனைச்சரம் ॥

Transliteration:

Nīlāñjana samābhāsam
Ravi-putram yamāgrajam ।
Chhāyā-mārtāṇḍa sambhūtam
Tam namāmi śanaiścaram ॥

 

சனிஸ்வரர் காயத்ரி மந்திரம் 

தமிழ் எழுத்து:

॥ சனி காயத்ரி ॥

காகத்வஜாய வித்மஹே ।
கட்கஹஸ்தாய தீமஹி ।
தந்நோ மந்தஃ ப்ரசோதயாத் ॥

Transliteration:

॥ Śani Gāyatrī ॥

Kāgadhvajāya vidmahe ।
Khaḍgahastāya dhīmahi ।
Tanno mandaḥ pracodayāt ॥


🌑 பயன்பாடு:

  • சனிக்கிழமை காலையில் அல்லது மாலை நேரத்தில் தியானமாய் ஜபிக்கலாம்.

  • எண்ணிக்கை: 9 முறை, 27 முறை அல்லது 108 முறை.

  • நீல நிற உடை அணிந்து, எள் எண்ணெய் தீபம் ஏற்றி, மன அமைதியுடன் ஜபிப்பது சிறப்பாகும்.


சனிஸ்வரர் அறம் செய்பவர்களை அனுகிரகம் செய்வார். வீடற்ற எளியோருக்கு அன்னதானம் ஆடைதானம் மருந்துதானம் 

நோயாளிகளுக்கு வயோதிகர்களுக்கு பாதரட்சை (செருப்பு )ஊன்றுகோல் 

வசதி இருந்தால் சக்கரநாற்காலிவாங்கி தரலாம்

முதலாளி ஸ்தானத்தில் இருந்தால் தொழிலாளிகளுக்கு ஆதரவு செய்வது நல்லது

வறுமை நிலையில் இருக்கும் விவசாயிகளுக்கு இரும்பு ஆயுதங்கள்

பெண்களுக்கு தையல் எந்திரம் என இரும்பு உபகரணம் தானமும் சனீஸ்வர பிரீதியாகும்

சனி கிரகம் வேற்றுமதத்தவர்களை குறிக்கும் நபி குலம் சிலுவை அணிபவர்கள் மற்றும் பல் சமயத்தில் பிறந்து ஞானமுக்தி பெற்ற ஜீவசமாதி ஸ்தலங்களுக்கு சென்று மரியாதை வணக்கம் புறிவது நலம் சாய்நாதர் குனங்குடி மஸ்தான் யாக்கோபு போன்ற ஞான சித்தர்களை வணங்குவதும் நல்லது

சனீஸ்வரர் ஆளும் காலத்தில் தர்மசாஸ்தா கருப்பசாமி இன்னும் பிற ஆயுதம் ஏந்தும்

தெய்வ வழிபாடு மற்றும் பொங்கல் இட்டு வணங்குதலும் நன்மையாகும்

பித்ரு வழிபாடு முன்னோர்கள் ஆசியை பெருவதும் சனீஸ்வர பீரீதி

பெருமாள் ஆஞ்சநேயர் வழிபாடு ராம மந்திர ஜபமும் விஷ்ணு வழிபாடும் நன்மையைதரும்

சனி கிரகத்தை அலி கிரகம் என்பார்கள் அலிகள் எனும் திருநங்கை திருநம்பிகள் எனும் பிறவி மாற்று பாலினத்தவர்களை உதாசீனம் மனதாலும் நினைக்காமல் அவர்களுக்கு உடை உணவு தருமம் அன்புடன் நல்வார்த்தை முக்கியமாக புடவை மங்கள பொருள் Let's மகிழ்வித்தலும்  ஒரு எளிய அற பரிகாரமே

ஈஸ்வரார்ப்பணமே ஆக சிறந்த தீர்வு 

காலம் நமககு தரும் இடையூறுகள் தண்டனை அல்ல அது நமக்கு பல அனுபவ பக்குவத்தை சொல்லிதரும் என்பது குரு நாதர் உபதேசம்

நம் துயரத்திற்கு நம்முயற்சி பிரார்த்தனை சிறந்த தீர்வாகும் என்பதை ஏற்று அறமும் அன்பும் கொண்டு எல்லாம் வல்ல இறைவனை தொழுது இடர் களைந்து வளத்துடன் வாழ்வோம்



அடியேன்

 இராமய்யா. தாமரைச்செல்வன்



திரு ஒற்றியூர் வடிவுடைஅம்மை திருவந்தாதி

வடிவுடையம்மை திருஅந்தாதி –  முகவுரை திருச்சிற்றம்பலம் அருள்மிகு திருவொற்றியூர் திருத்தலத்தில் எழுந்தருளி, அடியார்களுக்கு அன்பும் அருளும் வழங...