புதன், 15 மே, 2019

லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திர சுலோகங்கள் மொத்தம் 1008. அவற்றில் 108 நாமம்


ஓம் ஸ்ரீமாத்ரே நம;
ஓம் சீர்மிகு அன்னையே போற்றி சுவாகா

ஓமோம் தே(3)வகார்ய-ஸமுத்(4)யதாயை நம:
ஓம் தாருறு தேவர்க்குச் செயல்பட முனைவோளே போற்றி சுவாகா

ஓம் தே(3)வர்ஷிக(3)ண ஸங்கா(4)த ஸ்தூயமானாத்ம வைப(4)வாயை நம 
ஓம் தேவமுனிக் கூட்டங்கள் துதிசெய்யும் சிறப்புடையாளே போற்றி 


ஓம் ப(4)க்தஸௌபா(4)க்(3)யதா(3)யின்யை நம:
ஓம் அன்பருக்கு நல்லவெல்லாம் அருள்செய வல்லாளே போற்றி


ஓம் ப(4)க்தி ப்ரியாயை நம:
ஓம் பக்திதனை விரும்புவாளே போற்றி

ஓம் ப(4)யாபஹாயை நம:
ஓம் பயத்தினைப் போக்குவாளே போற்றி

ஓம் ராக(3)மத(2)ன்யை நம:
ஓம் ஆசை தன்னைக் கெடுப்பவளே போற்றி

ஓம் மத(3)நாசின்யை நம:
ஓம் செருக்கெலாம் ஒழிப்பவளே போற்றி

ஓம் மோஹநாசி(H)ன்யை நம:
ஓம் மதிமயக்கம் போக்குவாளே போற்றி

ஓம் மமதாஹந்த்ர்யை நம
ஓம் மமதையை அழிப்பவளே போற்றி

ஓம் பாபநாசி(h)ன்யை நம:
ஓம் பாபங்களை ஒழிப்பவளே போற்றி

ஓம் க்ரோத(4)சமன்யை நம:
ஓம் கோபங்களை அடக்குவாளே போற்றி

ஓம் லோப(4)நாசி(h)ன்யை நம:
ஓம் பேராசை அழிப்பவளே போற்றி

ஓம் ஸம்சயக்(4)ன்யை நம:
ஓம் ஐயங்களைப் போக்குவாளே போற்ற

ஓம் ப(4)வநாசி(h)ன்யை நம:
ஓம் பிறவிகளை நீக்குவாளே போற்றி

ஓம் ம்ருத்யுமத(2)ன்யை நம:
ஓம் மரணத்தைப் போக்குவாளே போற்றி

ஓம் து(3)ர்கா(3)யை நம:
ஓம் துர்கா தேவியே போற்றி

ஓம் து(3):கக(2)ஹந்த்ர்யை நம:
ஓம் அன்பர் துக்கம் துடைப்பவளே போற்றி

ஓம் ஸுக(2)ப்ரதா(3)யை நம:
ஓம் சுகம்பல அருளுபவளே போற்றி

ஓம் து(3)ஷ்டதூ(3)ராயை நம:
ஓம் கெட்டவர்க்கு எட்டாதவளே போற்றி

ஓம் து(3)ராசாரச(h)மன்யை நம:
ஓம் தீயொழுக்கம் அடக்குவாளே போற்றி

ஓம் தோ(3)ஷவர்ஜிதாயை நம:
ஓம் தேரும் குற்றமற்றவளே போற்றி

ஓம் ஸர்வக்ஞாயை நம:
ஓம் எல்லாமும் அறிந்தவளே போற்றி

ஓம் ஸமானாதி(4)கவர்ஜிதாயை நம:
ஓம் ஒப்பாரும் மிக்காரும் ஓரிடத்தும் இல்லாதாளே போற்றி 

ஓம் ஸர்வமந்த்ரஸ்வரூபிண்யை நம:
ஓம் எல்லாமந்திரவடிவாயும் இருப்பவளே போற்றி

ஓம் ஸர்வயந்த்ராத்மிகாயை நம:
ஓம் எல்லா இயந்திரத்துள்ளுற்று ஓங்குவாளே போற்றி

ஓம் ஸர்வதந்த்ர-ரூபாயை நம:
ஓம் எல்லா தந்திரமும் ஆனவளே போற்றி

ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
ஓம் மஹாலக்ஷ்மியே போற்றி

ஓம் மஹாபாதக-நாசி(h)ன்யை நம:
ஓம் மாபாதகம் தீர்ப்பாளே போற்றி

ஓம் மஹாத்ரிபுரஸுந்த(3)ர்யை நம:
ஓம் முப்புரம் போற்றும் ஒப்பற்ற பேரழகியே போற்றி

ஓம் சராசர-ஜகந்நாதாயை நம:
ஓம் அசையும் அசையா உலகுகளின் தலைவியே போற்றி

ஓம் பார்வத்யை நம:
ஓம் மலைமகளே போற்றி

ஓம் ஸ்ருஷ்டிகர்த்ர்யை நம:
ஓம் படைப்பின் தொழிற்குரியாளே போற்றி

ஓம் கோ(3)ப்த்ர்யை நம:
ஓம் காக்கும் செயல்புரிவாளே போற்

ஓம் ஸம்ஹாரிண்யை நம:
ஓம் ஒடுக்கும் வினையுடையாளே போற்றி

ஓம் திரோதா(4)னகர்யை நம:
ஓம் மறைத்தலைச் செய்திடுபவளே போற்றி 

ஓம் அனுக்(3)ரஹதா(3)யை நம:
ஓம் பேரருள் செய்திடுவாளே போற்றி

ஓம் ஆப்(3)ரஹ்மகீட-ஜனன்யை நம:
ஓம் பிரமன் முதலாகப் புழுக்கள் ஈறாக அனைத்தையும் ஈன்றவளே போற்றி

ஓம் வர்ணாச்(H)ரம-விதா(4)யின்யை நம:
ஓம் வருணாசிரமம் வகுத்தவளே போற்றி

ஓம் நிஜாஜ்ஞாரூப-நிக(3)மாயை நம:
ஓம் தன் ஆணை வடிவுடைய மறைகளைத் தந்தவளே போற்றி

ஓம் புண்யாபுண்ய-ப(2)லப்ரதா(3)யை நம:
ஓம் அறப்பவச் செயல்களில் பயன் தருபவளே போற்ற

ஓம் ராக்ஷஸக்(4)ன்யை நம:
ஓம் அரக்கரை அழிப்பவளே போற்றி

ஓம் கருணாரஸ-ஸாக(3)ராயை நம:
ஓம் கருணை வெள்ளப் பெருங்கடல் ஆனாளே போற்றி

ஓம் வேத(3)வேத்(4)யாயை நம:
ஓம் அருமறையால் புலப்படுவாளே போற்றி

ஓம் ஸதா(3)சாரப்ரவர்த்திகாயை நம:
ஓம் நன்னெறியதனில் நடத்திட வைப்பாளே போற்றி

ஓம் ஸத்ய:-ப்ரஸாதின்யை நம:
ஓம் உடனருள் புரிபவளே போற்றி

ஓம் சி(h)வங்கர்யை நம:
ஓம் மங்கலம் செய்பவளே போற்றி

ஓம் சி(h)ஷ்டேஷ்டாயை நம:
ஓம் முறைவழி நடப்பவர் திறத்து அன்பு உடையவளே போற்றி 

ஓம் சி(h)ஷ்டபூஜிதாயை நம:
ஓம் முறைவழி நடப்போரால் வழிபடப் பெற்றவளே போற்றி

ஓம் காயத்ர்யை நம:
ஓம் காயத்திரியாளே போற்றி 

ஓம் நிஸ்ஸீம-மஹிம்னே நம:
ஓம் எல்லையே இல்லாத பெருமைகள் படைத்தவளே போற்றி

ஓம் ஸமஸ்த-ப(4)க்த-ஸுகதா(3)யை நம:
ஓம் அனைத்தான பக்தர்க்கும் நற்சுகங்கள் தந்திடுவாளே போற்றி

ஓம் புண்யலப்(4)யாயை நம:
ஓம் புண்ணியத்தால் உறற்குரியாளே போற்றி

ஓம் ப(3)ந்த(4)மோசன்யை நம:
ஓம் பிறவியாம் கட்டினை அறுப்பவளே போற்றி

ஓம் ஸர்வவ்யாதி(4)ப்ரச(h)மன்யை நம:
ஓம் நோயனைத்தும் அடக்குவாய் போற்ற

ஓம் ஸர்வம்ருத்யு-நிவாரிண்யை நம:
ஓம் மரணமெலாம் தடுப்பவளே போற்றி

ஓம் கலிகல்மஷ-நாசின்யை நம:
ஓம் கலியின் குற்றம் கடிவாய் போற்றி

ஓம் நித்யத்ருப்தாயை நம:
ஓம் யாண்டும் மனநிறைவுடையவளே போற்றி

ஓம் மைத்ர்யாதி(3)-வாஸநாலப்(4)யாயை நம:
ஓம் மைத்திரீ முதலான நினைப்பருபாஸனையால் அடைதற்குரியோய் போற்றி

ஓம் ஹ்ருதயஸ்தாயை நம:
ஓம் இதயத்தே நிற்பவளே போற்றி 

ஓம் தை(3)த்யஹந்த்ர்யை நம:
ஓம் அரக்கரை அழித்திடுவோய் போற்றி

ஓம் கு(3)ருமூர்த்யை நம:
ஓம் குருவின் திருவடிவே போற்றி

ஓம் கோ(3)மாத்ரே நம:
ஓம் காமதேனு வடிவத்தோய் போற்றி

ஓம் கைவல்யபத(3)-தா(3)யின்யை நம:
ஓம் நாற்பதமும் அருள்பவளே போற்றி

ஓம் த்ரிஜக(3)த்(3)-வந்த்(3)யை நம:
ஓம் மூவுலகும் வழிபடத் தக்கவளே போற்றி

ஓம் வாக(3)தீ(4)ச்(h)வர்யை நம:
ஓம் குலவு சொல் தலைவியே போற்றி

ஓம் ஜ்ஞாநதா(3)யை நம:
ஓம் பேரறிவைத் தந்திடுவாய் போற்றி

ஓம் ஸர்வவேதா(3)ந்த- ஸம்வேத்(3)யாயை நம:
ஓம் அனைத்தான மறைமுடிகளால் அறிதற்குரியாளே போற்றி

ஓம் யோக(3)தா(3)யை நம:
ஓம் யோகத்தைத் தருபவளே போற்றி

ஓம் நிர்த்(3)வைதாயை நம:
ஓம் இரண்டற நிற்பவளே போற்றி

ஓம் த்(3)வைதவர்ஜிதாயை நம:
ஓம் இரண்டாம் நிலையினை இயல்பிலே நீக்கினோய் போற்றி

ஓம் அன்னதா(3)யை நம:
ஓம் அன்னமளிப்போய் போற்றி 

ஓம் வஸுதா(3)யை நம:
ஓம் பெருங்செல்வம் மிகத்தருவோய் போற்றி

ஓம் பா(4)ஷாரூபாயை நம:
ஓம் மொழிகளின் வடிவமே போற்றி

ஓம் ஸுகாராத்(4)யாயை நம:
ஓம் எளிதாய் வழிபடற்குரியாய் போற்றி

ஓம் ராஜராஜேச்(h)வர்யை நம:
ஓம் அரனைத் தரசாக்கும் மேலான தலைவியே போற்றி

ஓம் ஸாம்ராஜ்யதாயின்யை நம:
ஓம் சக்ரவர்த்தி பதவியை அடியார்க்கு அளிப்பவளே போற்றி

ஓம் ஸர்வார்த்த-தா(3)த்ர்யை நம:
ஓம் அறப்பயன் அனைத்தும் அளித்திட வல்லாய் போற்ற

ஓம் ஸச்சிதா(3)னந்த ரூபிண்யை நம:
ஓம் உண்மை அறிவானந்த வடிவினாய் போற்றி

ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் கலைமகள் வடிவினளே போற்றி

ஓம் த(3)க்ஷிணாமூர்த்தி-ரூபிண்யை நம:
ஓம் தென்முகக் கடவுளாய்த் திகழ்ந்திடும் தேவியே போற்றி

ஓம் ஸநகாதி(3)-ஸமராத்(4)யாயை நம:
ஓம் சனகர் முதலியோர் பூசிக்கும் வடிவினளே போற்றி

ஓம் நாமபாராயணப்ரீதாயை நம:
ஓம் தம்பெயர் ஆயிரம் ஒன்றியே கூறிட உளம் கசிவுறுவளே போற்றி

ஓம் மித்யாஜக(3)த(3)தி(4)ஷ்டானாயை நம:
ஓம் பொய்யான உலகுகளின் மெய்யான இருப்பிடமே போற்றி

ஓம் ஸ்வர்ககா(3)பவர்க(3)தா(3)யை நம:
ஓம் சொர்க்கமும் மோட்சமும் தந்திட வல்லவளே போற்றி 

ஓம் பரமந்த்ர-விபே(4)தி(3)ன்யை நம:
ஓம் பகைவர் ஏவிடும் மந்திரம் மாய்ப்பவளே போற்றி

ஓம் ஸர்வாந்தர்யாமிண்யை நம:
ஓம் அனைத்துயிர் உள்ளத்தும் உறைபவளே போற்றி

ஓம் ஜன்மம்ருத்யு-ஜ்ரா தப்த-ஜன-விச்(h)ராந்தி தா(3)யின்யை நம:
ஓம் பிறப்பொடு இறப்பும் மூப்பு முற்று இளைத்தார்க்கு ஓய்வினைத் தந்தவளே போற்றி

ஓம் ஸர்வோபநிஷது(3)த்(3) கு(4)ஷ்டாயை நம:
ஓம் உபநிட நூலெல்லாம் பறைசாற்றும் சிறப்புடையாளே போற்றி

ஓம் லீலாவிக்(3)ரஹ-தா(4)ரிண்யை நம:
ஓம் விளையாட்டாய்ப் பற்பல வடிவுகள் எடுப்போய் போற்றி

ஓம் அஜாயை நம:
ஓம் பிறவியில்லாதவளே போற்றி

ஓம் க்ஷயவிநிர்முக்தாயை நம:
ஓம் முடிவென்பதில்லாதவளே போற்றி

ஓம் க்ஷிப்ரப்ரஸாதி(3)ன்யை நம:
ஓம் விரைவினில் அருள்மிகத் தருபவளே போற்றி

ஓம் ஸம்ஸாரபங்க-நிர்மக்(3)ன ஸமுத்(3)த(4)ரண-பண்டி(4)தாயை நம:
ஓம் சம்சாரச் சேறழுந்தி மூழ்கினாரை மேலேற்றும் திறன் மிக்காள் போற்றி

ஓம் த(4)னதா(4)ன்ய-விவர்தி(4)ன்யை நம:
ஓம் செல்வமொடு தானியங்கள் வளர்த்திடுவாள் போற்றி

ஓம் தத்வமர்த்தஸ்வரூபிண்யை நம:
ஓம் அதுநீ ஆகிய ஐக்கியப் பொருளாய் ஆனவளே போற்றி

ஓம் ஸர்வாபத்(3)-விநிவாரிண்யை நம:
ஓம் அனைத்துத் துயரையும் அடியோடழிப்பவளே போற்றி 

ஓம் ஸ்வபா(4)வ-மது(4)ராயை நம:
ஓம் இயல்பினில் இனிமை மிக்கவளே போற்றி

ஓம் ஸதா(3)துஷ்டாயை நம:
ஓம் உவப்புடன் எப்போதும் திகழ்ந்திடும் தன்மையாளே போற்றி

ஓம் த(4)ர்மவர்ததி(4)ன்யை நம:
ஓம் அறம்வளர் செல்வியே போற்றி

ஓம் ஸுவாஸின்யை நம:
ஓம் நாயகனைப் பிரியாதாளே போற்றி

ஓம் ஸுவாஸின்யர்ச்சனப்ரீதாயை நம:
ஓம் சுவாசினிப் பெண்டிர் வழிபாட்டில் மிக மகிழ்பவளே போற்றி

ஓம் வாஞ்சிதார்த்தப்ரதா(3)யின்யை நம:
ஓம் வேண்டிய வேண்டியார்க்கு வேண்டியாங்கு அளிப்பவளெ போற்றி

ஓம் அவ்யாஜ- கருணா மூர்த்தயே நம:
ஓம் எதிர்பார்ப்பு இல்லாத பேரருளின் திருவுருவே போற்றி

ஓம் அஜ்ஞானத்(4)வாந்த-தீ(3)பிகாயை நம:
ஓம் அறியாமை இருளகற்றும் அழகுசுடர் நற்றீபமே போற்றி

ஓம் ஆபா(3)ல-கோ(3)ப-விதி(3)தாயை நம:
ஓம் இளையர் முதல் இடையர் வரை யாவரும் நன்கறிந்தவளே போற்றி

ஓம் ஸர்வானுல்லங்க்(4)ய-சா(h)ஸனாயை நம:
ஓம் மீறுதற்கு இயலாத அணைகள் இடவல்லாளே போற்றி

ஓம் ஓம் லலிதாம்பி(3)காயை நம:
ஓம் அழகுமிகு லலிதாவாம் அப்பிகையாய்த் திகழ்வாளே போற்றி

எல்லாம் வல்ல அன்னையே போற்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.