திங்கள், 25 ஏப்ரல், 2016

ஸ்ரீ கொங்கணர் குருவிழா ஜீவ நாடி வாக்கு
துர்முகி வருடம் சித்திரை மாதம் 16 நாள் வெள்ளி கிழமை (29-4-2016)
 

 
ஸ்ரீ பிருகு அருள்  நிலையம் -மருதேரி
 
 
 
1) ஓங்கார ஒளியுருவே வணங்கி உன்னை
    ஒதிடுவேன் பிருகுயான் சீவ வாக்கு
    பாங்குடன் ராதாகிருஷ்ணன் அறியமேலாய்
    பற்றி வரும் சன்மார்க்க குடிலம் தொட்டு

2)தொட்டுவரும் கயல் திங்கள் இருபானை பாகை
   தக்கவே பூசைவிழா விளக்கம் கூற
   சூட்சமமாய் கதிருட்சம் காலம் தன்னில்
   சித்தர்களை வரவேற்கும் பொருட்டுமே தான்

3)தானுயர்வாய் நின்றதொரு சீவ சித்தன்
   தரணியிலே அயகலைகள் கற்றோன் தான்
   மேன்மைப்பட போகனுடைய பூரண சீடன்
   மனமழகாய் கொங்கணரின் சோதி கொள்வீர்

4) சோதியது சித்திரையாம் திங்கள் தன்னில்
    சிறப்புடைய உத்திராடம் பளிங்கன் வாரம்
    ஆதியந்தம் இல்லாத அருணை தலத்தான்
    அற்புதமாய் கௌதமனின் ஆசி கொண்டான்

5) கொண்டதொரு தவனிஷ்டை சித்தி கொண்டான்
    குருபக்தி மேலோங்கிய சித்து தானே
    பின்னமில்லா அரிவிட்னு மலையானும் தானும்
    பூரணமாய் கிரிகாப்பு கொண்டோன் தானே

6) தானென்ற அகந்தையது மயக்கம் தொட்டு
    தர்கித்து நின்றோர்க்கு அகந்தை நீக்கி
    ஊனமில்லா அருள்ஞானம் அளிக்க வல்ல
    உயர்கதியாம் வருவோர்க்கு அருள் பொருளும்

7) பொருளான விக்கினத்தை விளக்கி வைத்து
     பூஷணங்கள் தான் அளித்து அலங்காரமாய்
     விருத்தியதை தானளிக்க வல்லதாய் இருக்க
     வகையான சுகந்தநீர் துளசி கூட்டி

8) கூட்டியே ரசிதமதில் நீர்பாத்திரம் கொண்டு
     சுகமான நீர்பாத்திரம் வைத்து ஆசி
    மாட்சிமையாய் தனம்பொருளும் விருத்தி காண
    மங்களமாய் தாமரை திரி கொண்டு ஏற்றி

9) ஏற்றியுமே நெய்யதுவால் வேங்கடேசன் நாமம்கூறி
    இயம்பினோம் முத்தேவர் ஆசி யுடன்
    குற்றமற அன்னஔஷத தர்மம் நிலைக்க
    குறைவாரா சதபேர்க்கு குன்றா அன்னம்

10) அன்னமது சித்திரஅன்னம் வகையிலே
      அருள்நிலையில் இணைந்துமே ஆசி ஈய
      உன்னதமாய் வாலையுடன் பராபரை ஆசி
      ஒருசேர வாய்க்கும்அப்போ சீவம் முற்றே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.