வெள்ளி, 5 செப்டம்பர், 2025

சந்திரகிரகணம் 2025


     சந்திரகிரகணம் 07.09.2025

        



இந்த ஆண்டின் இரண்டாவதும், கடைசியுமான சந்திர கிரகணம் செப்டம்பர் 07ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிகழ உள்ளது

இந்த சந்திர கிரகண முழுமையான சந்திர கிரகணமாக நிகழ உள்ளது.

 செப்டம்பர் 07ம் தேதியன்று இரவு 10.59  துவங்கி, நள்ளிரவு 01. 26 வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. 

பவுர்ணமி நாளில் தான் நிகழும். இந்த முறை ஆவணி பவுர்ணமி நாளில் சந்திர கிரகணம் நிகழ உள்ளது.

இந்த கிரகணத்தின் சூதக் காலம் செப்டம்பர் 7, 2025 அன்று மதியம் 12:57 மணிக்கு தொடங்கி கிரகணம் முடியும் வரை தொடரும்.

07.09.2025ஞாயிறு அன்று பௌர்ணமி (45.59) இரவு 12.24 வரை

விசுவாவசு வருஷம் ஆவணி 22ம் தேதி ஞாயிற்று கிழமை

சதயம் (42.43) இரவு (11.05) க்குமேல் பூரட்டாதி நட்சத்திரம் கும்ப இராசியில் சந்திரன் வரும் போது பூரண சந்திர கிரகணம்  சதயம் நாலாம் பாதத்தில் தொடங்கி பூரட்டாதி முதல்பாதம் வரை தொடர்கிறது

🌕 **சந்திர கிரகணம் (ஆன்மீக பார்வையில்)**

சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே கோட்டில் வந்தால், பூமியின் நிழல் சந்திரன் மீது படுகிறது. இதுவே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

ஆன்மீக ரீதியில் பார்த்தால் 

* சூரியன் அறிவையும், உண்மையையும் குறிக்கிறது.

* சந்திரன் மனதையும், உணர்ச்சிகளையும் குறிக்கிறது.

* பூமி கர்மா (வினை) யைக் குறிக்கிறது.

கர்மா (பூமி) நம்முடைய மனதை (சந்திரன்) உண்மையின் ஒளியிலிருந்து (சூரியன்) தற்காலிகமாக மறைக்கிறது. ஆனால் அது எப்போதும் தற்காலிகமே. நிழல் நீங்கியதும், சந்திரன் மீண்டும் ஒளிர்வது போல நமது மனமும் இறைவன் அருளால் மீண்டும் தெளிவடைகிறது.



சந்திர கிரகண ஆசி


அண்டமுழுவதும் அருளொளி பாய,

அகிலம் முழுதும் இயற்கை தாள,

சந்திரன் மங்கும் நன்நிசி நேரம்,

சக்தியின் மாயை யாவரும் காண.


இருள் திரையினில் ஒளி மறைந்தும்,

ஈசன் லீலையில் அருள் நிறைந்தும்,

கர்ம பிரமைகள் களைந்து செல்லும்,

கிரகண வேளையாம் யோகமாய் மாறும்


பூமி நிழலினில் நன்னிலை பெருக

புண்ணிய தேவர்கள் சிந்தையில் ஞான

மந்திர ஓசைகள் விண்வரை ஓங்க,

மானுட வாழ்வினில் மாற்றம்  ஓங்கவும்


சந்திரன் இருளினில் தோன்றும் வேளையில்,

சக்தி பெருக்கிடும் ஜபதப மலர்களில்,

பாவபிணிகள் அனைத்தும் கழியும்,

பக்தியுடன் உள்ளம் பூரணமாய் நிறையும்


அண்ட கோடிகள்  விளங்கொலி சூழ

அருள்சக்தி ஒளியாய் எங்கும் மிளிரும்

சந்திர கிரகணம் சக்தியின் காட்சி,

சதாசிவன் அருள்பெற ஜோதியும் ஏற்றி


ஜோதியை கண்டு சிவ செபம் புறிக

ஜோதியே நன்மை தோத்திரமே சித்தி

ஆதியை போற்றும் அரியதிருநாள்

அகத்தியன் ஆசி அருள்வழி வாக்கிதுவே

............................சுபம்...........................


                           சந்திரபகவான்


சந்திர பகவானுக்கு உரிய காயத்ரியை மனதுக்குள் உச்சரித்து, சந்திரனைப் பிரார்ர்த்தனை செய்வது, இன்னும் இன்னும் மனதிலும் புத்தியிலும் தெளிவைக் கொடுக்கும். தெளிவுடன் இருந்து செயலாற்றினால், எல்லாக் காரியமும் வீரியமாகும். காரியம் வீரியமானால், சகலமும் வெற்றியே... சகலமும் நிம்மதியே... என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!


சந்திர பகவானுக்கு உரிய காயத்ரி 

ஓம் பத்மவத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி

தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்


அன்றைய தினம், அதாவது சந்திர கிரகண வேளையில், இந்த ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டே இருங்கள். ஏற்கெனவே குளிர்ந்த நிலையில் இருக்கும் சந்திரன், இன்னும் இன்னும் குளிர்ந்து போவார். நம்மையும் நம் மனதையும் குளிரச்செய்வார்


நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5

வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10

ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15

ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் 20

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35

வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40

ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95 

.............திருசிற்றம்பலம்.....

பிரம்ம முகூர்த்தம் அல்லது சூரிய உதய காலத்தில் குளித்து நீராடி தூய ஆடைஉடுத்தி வீட்டை பெருக்கி மஞ்சள் நீர் தெளித்து மாக்கோலம் இட்டு சாம்பிராணி குங்கிலியம் தூபமிட்டு பின்பு நெய்தீபம் ஒன்று ஏற்றிவைத்து சிவசக்தியாக பாவித்து விளக்கினை கயிலை சிவசக்தியாக அண்ணாமலை உண்ணாமுலையாக கருதி பக்தியோடு நிதானமாக சிவபுராணத்தை ஓதுக இருள் விலகி 


அகல் ஒளி ஏற்றி ஈசனை போற்றுங்கள் மனமாற ஈசனை வாழ்க வாழ்க என்னுள் வாழ்க என்று சங்கரா சங்கரா சங்கரா என்று கைகூப்பி தொழ நன்மை உண்டாகும்


மாசில் வீணையும்

  மாலை மதியமும்

வீசு தென்றலும்

  வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை

  பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை

  இணையடி நீழலே.  


 நமச்சி வாயவே

  ஞானமுங் கல்வியும்

நமச்சி வாயவே

  நானறி விச்சையும்

நமச்சி வாயவே

  நாநவின் றேத்துமே

நமச்சி வாயவே

  நன்னெறி காட்டுமே.  


 ஆளா காராளா

  னாரை அடைந்துய்யார்

மீளா வாட்செய்து

மெய்ம்மையுள் நிற்கிலார்

தோளா தசுரை

  யோதொழும் பர்செவி

வாளா மாய்ந்துமண்

  ணாகிக் கழிவரே.  


நடலை வாழ்வுகொண்

  டென்செய்திர் நாணிலீர்

சுடலை சேர்வது

  சொற்பிர மாணமே

கடலின் நஞ்சமு

  துண்டவர் கைவிட்டால்

உடலி னார்கிடந்

  தூர்முனி பண்டமே.  


பூக்கைக் கொண்டரன்

  பொன்னடி போற்றிலார்

நாக்கைக் கொண்டரன்

  நாமம் நவில்கிலார்

ஆக்கைக் கேயிரை

  தேடி அலமந்து

காக்கைக் கேயிரை

  யாகிக் கழிவரே.  


குறிக ளுமடை

  யாளமுங் கோயிலும்

நெறிக ளுமவர்

  நின்றதோர் நேர்மையும்

அறிய ஆயிரம்

  ஆரணம் ஓதிலும்

பொறியி லீர்மன

  மென்கொல் புகாததே.  


வாழ்த்த வாயும்

  நினைக்க மடநெஞ்சும்

தாழ்த்தச் சென்னியுந்

  தந்த தலைவனைச்

சூழ்த்த மாமலர்

  தூவித் துதியாதே

வீழ்த்த வாவினை

  யேன்நெடுங் காலமே.  


எழுது பாவைநல்

  லார்திறம் விட்டுநான்

தொழுது போற்றிநின்

  றேனையுஞ் சூழ்ந்துகொண்

டுழுத சால்வழி

  யேயுழு வான்பொருட்

டிழுதை நெஞ்சமி

  தென்படு கின்றதே.   


நெக்கு நெக்கு

  நினைபவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும்பொன்

  னார்சடைப் புண்ணியன்

பொக்க மிக்கவர்

  பூவுநீ ருங்கண்டு

நக்கு நிற்ப

  ரவர்தம்மை நாணியே. 

 

விறகிற் றீயினன்

  பாலிற் படுநெய்போல்

மறைய நின்றுளன்

  மாமணிச் சோதியான்

உறவு கோல் நட்

  டுணர்வு கயிற்றினான்

முறுக வாங்கிக்

  கடையமுன் னிற்குமே.  


இறைவனை தொழுது நலம் பெற நல்லதே நடக்கும்

சர்வம் சிவார்ப்பனம்

அடியேன் இராமய்யா. தாமரைச்செல்வன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தெய்வம் தந்த சேய்கள்

  வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்றவரை கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்த...