ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

கணபதி துதி நட்சத்திர கணபதி பெயர்கள்

 கணபதி துதி


திகட சக்கரச் 

செம்முகம் ஐந்துளான்


சகட சக்கரத் தாமரை நாயகன்

அகட   சக்கர வின்மணி யாவுரை

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்


ஐந்து கரத்தனை 

ஆனை முகத்தனை

இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

 அமாவாசை திதி முதல்.... 

ஓம் ஸ்ரீ நிருத்த கணபதியே போற்றி 


1. பிரதமை திதி ஓம் ஸ்ரீ பால கணபதியே போற்றி

2. த்விதியை திதி ஓம் ஸ்ரீ தருண கணபதியே போற்றி


3. திருதியை திதி ஓம் ஸ்ரீ பக்தி கணபதியே போற்றி


4. சதுர்த்தி திதி ஓம் ஸ்ரீ வீர கணபதியே போற்றி 


5. பஞ்சமி திதி ஓம்ஸ்ரீ சக்தி கணபதியே போற்றி 


6. சஷ்டி திதி 

ஓம்ஸ்ரீ த்விஜ கணபதியே போற்றி

 

7. சப்தமி திதி 

 ஓம் ஸ்ரீ சித்தி கணபதியே போற்றி


8. அஷ்டமி திதி ஓம்ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியே போற்றி 


9. நவமி திதி 

ஓம் ஸ்ரீ விக்ன கணபதியே போற்றி 


10. தசமி திதி 

ஓம் க்ஷிப்ர கணபதியே போற்றி


11. ஏகாதசி திதி 

ஓம் ஸ்ரீ ஹேரம்ப கணபதி போற்றி


12. துவாதசி திதி ஓம் ஸ்ரீ லக்ஷ்மி கணபதியே போற்றி


13. திரயோதசி திதி ஓம் ஸ்ரீ மஹா கணபதியே போற்றி


14. சதுர்த்தசி திதி  

ஓம் ஸ்ரீ விஜய கணபதியே போற்றி 


15. பௌர்ணமி திதி ஸ்ரீ நிருத்த கணபதி.[8/8 ...

கணபதி உயிர் எழுத்து போற்றி

 ..


ஓம் அகர முதலே அத்திமுகனே போற்றி

ஓம் அனைத்திலும் நிறைந்த ஒளியே போற்றி 


ஓம் ஆனை முகனே போற்றி

ஓம் ஆகம மாமறை ஆனாய் போற்றி 


ஓம் இடையூறு நீக்குபவரே

 போற்றி

ஓம் இளங்களிர் வடிவே போற்றி


ஓம் ஈசன் மகனே போற்றி

ஓம் ஈஸ்வரி மேனி சந்தன உருவே போற்றி


ஓம் உயிரின் மூலமே போற்றி

ஓம் உண்மைப் பொருளே போற்றி


ஓம் ஊழ்வினை களைவாய் போற்றி

ஓம் ஊக்கம் அளிப்பாய் போற்றி


ஓம் எண்ணும், எழுத்தும் கருத்துமானாய் போற்றி

ஓம் எங்கும் நிறைந்த இறைவ போற்றி


ஓம் ஏழைக்கருளும் எளியோன் போற்றி

ஓம் ஏற்றமும் அளிப்பாய் போற்றி


ஓம் ஐயமெல்லாம் போக்கும்

ஐங்கரா போற்றி

ஓம் ஐஸ்வரியம் அளிப்பாய் போற்றி


ஓம் ஒலி, ஒளி நாதா போற்றி

ஓம் ஒரு பொருள் உணர்த்துவாய் போற்றி 


ஓம் ஓங்கார ரூபா போற்றி

ஓம் எனும் வடிவே போற்றி 


ஓம் ஔவைக்கு முதிர்ந்த ஞானமீந்த

கரிமுகனே போற்றி 

ஓம் கொற்றவை மகனே போற்றி 

பணிந்தார் பாவம் தீர்க்கும்

பஞ்சமுகன் தாள் வாழ்க!

துணிந்தார் மனதில் என்றும்

துணையாய் இருப்பான் வாழ்க!

கனிந்தார் மனதில்

கருணைக் கடவுளே வாழ்க!

விரிந்த மலரில்

தேனாய், மணமாயிருப்பவன் வாழ்க

பரந்த உலகைக்

காக்கும் நாதன் வாழ்க!

காவிரித் தலைவன் வாழ்க! பாரதம்

காவிய மியற்றியவன் வாழ்க!

முப்பாலின் பொருளாய்

மூவுலகை ஆள்பவன் வாழ்க!

மூஞ்சுறு வாகனன் வாழ்க!

முத்தமிழ் நாயகன் வாழ்க!

அனுவில் அனுவாய்

கனவில் கனவாய்

வானகமாய் கானகமாய்

இயற்கைப் மண் பெருநிதியாய்

இகம் பரம் ஆகிய

இன்ப துனபக் கருவாய்

விளங்கும் விளம்பித சூத்ரன்

விக்ன விநாயகன் பாதம்

விரைந்து சரணடைவோம்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விவசாய குடியின் இயற்கை பழமொழிகள்

    நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடைநிலம் எருக்கு. நல்ல நிலத்தில் கொழுஞ்சி விளையும். நடுத்தர வளமான நிலத்தில் கரந்தை விளையும். தரமற்ற ...